வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ காணி அபகரிப்புக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கென ஒதுக்கப்பட்ட சுமார் 12 ஏக்கர் காணியொன்றை இராணுவத்தினர் சுவீகரித்திருந்தமையை எதிர்த்து அப்பிரதேச வாசிகளான முஸ்லீம் மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கிறார்கள்.

ஆரம்ப பாடசாலை மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றனவற்றினை அமைப்பதற்காக ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்த இந்தக் காணியைச் சுற்றி இராணுவத்தினர் இரவோடிரவாக எல்லை வேலிகளை இட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மதவாச்சி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் மக்கள், ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவ நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்ததுடன் “காணி அதிகாரம் இராணுவத்திற்கா, பிரதேச செயலகத்திற்கா”, “ஒதுக்கப்பட்ட காணி எமக்கா, இராணுவத்திற்கா” “காணி விடயத்தில் வடபகுதியில் இராணுவத்தினர் காட்டுமிராண்டித் தனமாக நடப்பது அரசிற்குத் தெரியாதா” என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிய போதிலும் பலனேதும் கிட்டாத நிலையில் அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் என்.கமலநாதன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் ஏ.அந்தோனிப்பிள்ளை மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்து காணியைப் பார்வையிட்டதுடன் இராணுவத்தினருடனும் கலந்துரையாடியிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர், அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் இணைப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இரு வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்குவதாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகளும் பிரதேச செயலாளரும் உறுதி வழங்கியதையடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

1211

தேனிலவில் மனைவி கொலை வழக்கில் தப்பிய இந்திய கோடீஸ்வரர்!!

Murder

தென்னாப்பிரிக்காவில் மனைவியை கொன்ற வழக்கில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன்வாழ் இந்தியத் தொழிலதிபரான ஷ்ரைன் தேவானி, கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மனைவி அன்னி ஹிண்டோச்சா என்பவருடன் தேனிலவு கொண்டாட தென்னாப்பிரிக்க நாட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவரது மனைவி அன்னி, மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், தேவானிதான் தனது மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவானியை பிரிட்டிஷ் பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் தேவானியை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டனிடம் தென்னாப்பிரிக்க அரசு கோரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிடம் அவரை ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அதிகாரிகளிடம் தேவானி ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டனில் இருந்து தனியார் விமானத்தில் கேப்டவுன் நகருக்கு அழைத்து வரப்பட்ட அவர், வெஸ்டர்ன் கேப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தேவானி மீது கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறைக்கு எதிராகச் செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட்டன.

இந்நிலையில், அன்னியின் மரணம் தொடர்பான இந்த வழக்கில் இருந்து ஷ்ரைன் தேவானி விடுவித்து வெஸ்டர்ன் கேப் உயர் நீதிமன்ற துணை நீதிபதி ஜேனட் ட்ராவர்ஸோ இன்று உத்தரவிட்டார்.

ஷ்ரைன் தேவானி தான் கூலிப்படையை ஏவி தனது மனைவியை கொன்றார் என்பதை நிரூபிக்கத் தக்கவையாக பொலிசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லை.

இவற்றை வைத்து இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு இந்த நீதிமன்றம் தண்டனை அளித்துவிட முடியாது.

எனவே, அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி ஜேனட் ட்ராவர்ஸோ உத்தரவிட்டுள்ளார்.

பார்வையற்றோர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன்!!

IND

பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. தென் ஆபிரிக்காவில் பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 389 ஓட்டங்கள் குவித்தது.

பின் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 39.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 392 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிண்ணத்தை கைப்பற்றியது.

வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் சேகர் நாயக் கூறுகையில், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.,) திகழ்கிறது. ஆனாலும், பார்வையற்ற வீரர்களுக்கு எவ்வித உதவியும் அளிப்பதில்லை.

இந்திய விளையாட்டு அமைச்சகம் தான் 25 லட்சம் அளித்தது. இதன் காரணமாகவே தென் ஆபிரிக்காவுக்கு வந்து போட்டிகளில் கலந்து கொண்டு, கிண்ணம் வெல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.

புகழின் உச்சியில் 9 வயது மொடல் அழகி!!

ரஷ்யாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிறிஸ்டினா பிமெனோவா சூப்பர் மொடலாக பல ஆண்டுகளாக வலம் வருகிறார். மொஸ்கோவில் கால்பந்து வீரரான தந்தைக்கும் மொடல் அம்மாவுக்கும் பிறந்த கிறிஸ்டினா பிமெனோவா என்ற சிறுமிக்கு 3 வயதிலேயே மொடலாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து மொடலிங்கில் தொடர்ந்து கலக்க தொடங்கிய கிறிஸ்டினாவிற்கு தற்போது 9 வயது தான் ஆகின்றது.

இந்நிலையில் இந்த இளம் வயதில் அவர் 20, 30 வயதாகும் மொடல்களைப் போல புகழின் உச்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மொடலுக்குரிய மேக்-அப், சிகை அலங்காரம் என எதுவும் செய்து கொள்ளாமலேயே கிறிஸ்டினா உலகின் மிக அழகான மொடலாக வலம் வருகிறார்.

இணைய உலகில் பிரபலமாக இருக்கும் இவருக்கு, ஃபேஸ்புக்கில் 20 லட்சம் விசிறிகள் இருக்கிறார்கள். மேலும், இவரது தாய் இத்தனைப் புகழோடு இருக்கும் தன் மகளைக் கண்டு பெருமிதம் கொண்டாலும், குழந்தை என்றும் பாராமல், ஆண்கள் மிக மோசமான கருத்துகளை அவரது ஃபேஸ்புக்கில் பதிகிறார்கள் என்ற கவலையும் இருக்கிறது.

1 2 3 4 5

 

லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆளில்லா விமானம்!!

Flight

லண்டன் ஹீத்ரூ விமான நிலையப் பகுதியில் பறந்த ஆளில்லா விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பிரித்தானிய விமான நிலையம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஹீத்ரூ விமான நிலையத்தில் ஏர்பஸ் 320 விமானமொன்று 700 அடி உயரத்தில் பறக்கும் போது, அதன் பைலட், அப்பகுதியில் ஆளில்லா விமானம் பறப்பதைக் கண்டார், இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

இது குறித்து அவர் உடனடியாக, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கியுள்ளார். ஆளில்லா விமானம், அப்பகுதிக்குள் நுழைந்ததை விமான நிலையத்தின் ரேடார் கருவி கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் பின்னர் அந்த ஆளில்லா விமானம் சுவடின்றி மறைந்து விட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

பயணிகள் விமானங்களுக்கு ஆளில்லா விமானங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஏற்கெனவே பல தரப்பிலிருந்தும் கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆளில்லா விமானங்களை கிறிஸ்துமஸ் பரிசாக அளிப்பது புதிய வழக்கமாகி வருகிறது.

பிரித்தானியாவில் ஆளில்லா விமானங்கள் 35 பவுண்ட் முதல் 3,350 பவுண்ட் வரை விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்கார, ஜெயவர்த்தன ஜோடி!!

Jayawardene-with-Sangakkara

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 266 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஜெயவர்த்தன, சங்கக்கார ஜோடி அசத்தலாக ஓட்டங்கள் சேர்த்தது.

சங்கக்கார 86 ஓட்டங்களும், ஜெயவர்த்தன 44 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாய் இருந்தனர்.

இந்தப் போட்டியில் சங்கக்கார இந்த ஆண்டு ஆயிரம் ஓட்டங்கள் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இந்த வருடம் 1020 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஏற்கனவே கோஹ்லி (1054), மத்யூஸ் (1183) ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011 (1127 ஓட்டங்கள்), 2012 (1184), 2013 (1201), 2014 (1020) என தொடர்ந்து 4வது முறையாக ஆயிரம் ஓட்டங்களை கடந்து சங்கக்கார அசத்தியுள்ளார்.

அதேபோல் ஜெயவர்த்தனவும் நேற்றைய போட்டியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸ் (1619), ரிக்கி பொண்டிங் (1598) ஆகியோரை தொடர்ந்து 1500 ஓட்டங்களுக்கு மேல் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் மொத்தம் 1527 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர் : வருத்தத்தில் விபச்சாரத்தில் கைதான நடிகை!

swetha_basu

என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு, இவர் சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், நடைபெற்ற விசாரணைக்கு பிறகு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.

தற்போது காப்பக்கத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார், இந்நிலையில் விபச்சார வழக்கில் சிக்கியது குறித்து ஸ்வேதா பாசு மும்பையில் அளித்த பேட்டியொன்றில் கூறுகையில், சிலர் திட்டமிட்டு என்னை சிக்க வைத்து விட்டனர். எனது பெயரையும் களங்கப்படுத்தி விட்டார்கள்.

ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தேன். அப்போது இவையெல்லாம் நடந்து விட்டது. ஆனாலும் இறுதியில் உண்மையானதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதையில் ஊர்வலமாக அழைத்து வந்த ஊர் மக்கள்!!

Capture

ராஜஸ்தானில் கட்டப்பஞ்சாயத்து உத்தரவின்படி 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம், சவ்ஹானோன் கி கேமெரி கிராமத்தில் கடந்த வாரம் 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்யப்பட்டுள்ளார்.

80 வயதான மூதாட்டி குழந்தைகளை கொன்று திண்ணும் சூனியக்காரி என்று பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடத்தியவர்கள், மூதாட்டியை ஆடைகளை களையவைத்து, முகத்தில் கருப்பு வர்ணத்தை ஊற்றி, நிர்வாணமாக கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர செய்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்தில் மூதாட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் யாராவது பேசினால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 37 வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கிராமத்தில் சிறிய அளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் என்னை அவமானப்படுத்தியுள்ளனர் என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தை 6 விக்கட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி!!

SL

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொயீன் அலி, ஹால்ஸ் களமிறங்கினர். ஹால்ஸ் டக்-அவுட் ஆக வெளியேற மொயீன் அலி 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் டெய்லர், ரூட் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். ரூட் 36 ஓட்டங்களில் ஹேரத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக விளையாடிய டெய்லர் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் போப்பரா (22), மோர்கன் (62), பட்லர் (15) ஆகியோர்களும் தங்கள் பங்கிற்கு ஓட்டங்கள் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஒவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை தரப்பில், டில்ஷான், ஹேரத், அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தம்மிக்க பிரசாத் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டில்ஷான் (16) மற்றும் குசால் பெரேரா (31) ஆகியோர் நல்ல தொடக்க கொடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சங்கக்கார, ஜெயவத்தன அணியின் ஓட்டங்களை அதிகப்படுத்தினர். சங்கக்கார வழக்கம் போல் அரைசதம் கடந்தார். ஜெயவர்த்தன அரைசத வாய்ப்பை நழுவ விட்டார்.
சங்கக்காரா 86 ஓட்டங்களும், ஜெயவர்த்தன 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து அணித்தலைவர் மத்யூஸ், திரிமன்ன ஆகியோர் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். மத்யூஸ் 51 ஓட்டங்களும், திரிமன்ன 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இலங்கை அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியது.

இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டுகளையும், ஜோடன் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இவ் வெற்றியின் மூலம் இலங்கை அணி 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணியின் சங்கக்கார ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!!(படங்கள் )

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இந்த ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 06.12.2014 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் மைதிலி தயாபரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் வழங்கிவைத்தார். மேற்படி நிகழ்வில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

-பண்டிதர்-

1 02 204 4

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை உத்தேச அணி தெரிவு!!

SL1

உலகக்கிண்ண கிரிக்கெட் (2015) போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பந்து வீச தடை செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சசீதிர சேனநாயக்க ஐ.சி.சி.யின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல டில்ஹார பெனான்டோ, சாமர கப்புகெதர ஆகியோரும் காத்திருக்கின்றனர்.
புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர் லக்ஸ்ஹன் சந்தகன் இந்த உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

30 பேர் கொண்ட உத்தேச இலங்கை அணியின் விவரம் வருமாறு..

ஏஞ்சலோ மத்யூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், லஹிரு திரிமான, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, குசால் பெரேரா, உபுல் தரங்க, திமுத்து கருணாரத்ன, தினேஷ் சண்டிமால், அஷான் பிரியன்ஞன் , கித்துருவான் விதானகே, நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, சசீதிர சேனநாயக்க, அஜந்த மெண்டீஸ்,தரிந்து காஸ்ஹல், ஜீவன் மெண்டீஸ், ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மால், நுவன் குலசேகர, லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத், சமிந்த எரங்க, திசரா பெரேரா, பர்ரூஸ் மகரூப், நுவான் பிரதீப், லஹிரு கமகே, லக்ஸ்ஹன் சந்தகன்.

பேஸ்புக்கில் ஆபாசப் படத்தைப் போட்டு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது!!

FB

பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றி, பெண்கள் இருவருக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் யாழ். நெல்லியடி பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை வரணியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அதற்கு அப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதையடுத்து குறித்த இளைஞன் அப்பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் ஆபாசப் படம் பகிரப்பட்டது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் நெல்லியடி பொலிசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதேவேளை மனைவியின் தங்கையின் புகைப்படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார் எனும் குற்றசாட்டில் வடமாரட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் சனிக்கிழமை நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணினால் சனிக்கிழமை நெல்லியடி பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் தனது திருமணத்தை குழப்பும் நடவடிக்கைகளில் பல காலமாக ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களை திங்கள்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!!

Gas-cylinder

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலைகளை 250 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 2146 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 1896 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருளுக்கான விலைகளும் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!

Sangakara

 

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கார, களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா, அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்கார இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 8 அரைச்சதங்கள் மட்டுமே உள்ளது. உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன் இலங்கை குறைந்தது 15 போட்டிகளில் விளையாடும். இதனால் சச்சின் சாதனை சங்கக்காராவால் முறியடிக்கப்படும் என நம்பப்படுகின்றது.

கலிஸ் (86), டிராவிட் (83), இன்சமாம் (83), பொண்டிங் (82), ஜெயவர்த்தன (76), கங்குலி (72), ஜெயசூரிய (68), முகமது யூசுப் (64) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

நடிகர் கொலையில் பிணையில் வெளிவந்த நடிகை சுருதி!!

Act

நடிகரை கொலை செய்த வழக்கில் நடிகை சுருதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போனார்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சென்னை மதுரவாயல் பொலிசிற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த பொலிசார், ரொனால்ட் பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். அவருடன், மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமா சந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18ம் திகதி ரொனால்டை கொலை செய்ததாக வழக்குப்பதிந்து, சுருதியை பொலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சுருதி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ரொனால்டுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரொனால்ட், உமா சந்திரன், ஜான் பிரின்சன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ஆன்லைன் தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.

பின்னர், ஆபாச படங்களில் நடிக்கவேண்டும் என்று எனக்கு தொல்லை கொடுத்தனர். நான் சம்மதிக்காததால், கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், ரொனால்டிடம் இருந்து ஒன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரின்சன் மற்றும் பலர் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதில் என்னையும் சிக்க வைத்துவிட்டனர்.

நான் அப்பாவி, எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜரானார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, பொலிசார், இதுவரை வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஒரே இதயம், உடல் வேறு : ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்!!

அட்லாண்டாவில் தம்பதியினருக்கு ஒரே இதயம், இரு வேறு உடல்களை கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.

அட்லாண்டாவில் உள்ள வடக்கு பகுதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்த குழந்தைகள் ஒரே கைகள், கால்கள் மற்றும் உடல் என ஒட்டிப்பிறந்த இரட்டையர் ஆகும். இந்த குழந்தைகளுக்கு ஆஷா மற்றும் எலி ஹாம்பே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிறந்த போது 9 பவுண்டுகள், 10 அவுன்ஸ் எடையுடன் இருந்த இந்த இரட்டையர்கள் பிரிக்க முடியாது.

தற்போது நலமாக உள்ள இந்த குழந்தைகளுக்கு ஒரே இதயம், மூன்று நுரையீரல்கள் உள்ளன, மூன்றாவது நுரையீரல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

t t1