விளையாட அனுமதிக்கும்படி மண்டியிட்டு கேட்க முடியாது : மஹேல ஜெயவர்தன!!

Mahela

ஒரு நாள் கிரிக்கெட்டில் உலக கிண்ணத்துடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் 37 வயதான மஹோல ஜெயவர்த்தன மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

என்னை தொடக்க ஆட்டக்காரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன்.

உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மிடில் வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஒவ்வொரு முறையும் நிலைத்து நின்று எனது மிகச்சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். உலக கிண்ணத்துக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ஜெயவர்த்தன கூறினார்.

மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!!

uni

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடுதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவித்து நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும் மாணவியர் விடுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், வெளியார் யாரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாத வகையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக நிர்வாகமும் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்த நிலையில் நிர்வாகத்திடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

தற்போது அவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்களை தனது அறைக்கு வரவழைத்த மாணவிக்கும் விடுதி வசதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி!!

shooting

மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (34) என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

மேசன் வேலை செய்து முடித்து விட்டு தனது வீட்டிற்குச் சென்று வீட்டு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது திடிரென அவரது காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகளால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் என்ன காரணத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப் படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வெடி விபத்தில் இராணுவ சிப்பாய் காயம்!!

Blast

வவுனியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அப்பகுதியில் அமைந்துள்ள 612 ஆவது பிரிகேட் இராணுவ தளத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய லான்ஸ் கோப்ரல் தரங்க என்ற இராணுவ சிப்பாய் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது ரி 56 ரக துப்பாக்கி வெடித்தமையினாலேயே காயமடைந்தார் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் புகையிரத கடவையை மோதித்தள்ளி புகையிரதம் முன்பு பாய்ந்த முச்சக்கரவண்டி!!

வவுனியா ஸ்ரேசன் வீதியில் உள்ள புகையிரத கடவையின் பாதுகாப்பு கடவையை மோதித் தள்ளியவாறு புகையிரதம் முன் பாய்ந்த ஆட்டோ சாரதி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நேற்று (11.11) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது வவுனியா வைரவபுளியங்குளம், ஸ்ரேசன் வீதியில் உள்ள புகையிரதக் கடவை மூடப்பட்டுள்ளது. இதன் போது அவ் வீதி வழியாக வவுனியா நகர் நோக்கி பயணித்த ஆட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு கடவையை உடைத்து கொண்டு தண்டவாளத்தில் போய் நின்றது.

இந் நிலையில் புகையிரத சாரதி ரயிலை நிறுத்தியதால் தெய்வாதீனமாக சாரதி தப்பினார். இச் சம்பத்தினால் பாதுகாப்பு கடவை மற்றும் ஆட்டோ என்பன சேதமடைந்துள்ளன.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 10808209_297685783758077_2041943285_n

 

மும்பையில் குப்பை பொறுக்கிய தமன்னா!!

Thamana

தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்று தற்போது பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டி விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்டர்டைமெண்ட் படம் ரசிகர்கள்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் நடிப்பது மட்டும் நம் கடமை இல்லை, நாட்டின் மீதும் அக்கறை வேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை தெருக்களில் கொட்டிக்  இருக்கும் குப்பைகளை அவரே சுத்தம் செய்தார். இதை தன் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அவர் தெரிவித்திருந்தார்.

ரஜினிக்கு இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது : மத்திய அரசு அறிவிப்பு!!

Rajani

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான 12ம் திகதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2014ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, இந்திய திரைப்பட நூற்றாண்டையொட்டி வழங்கப்படுகிறது.

கோவாவில் வரும் 20ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20ம் திகதி நடைபெறும் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்தார்.

அமிதாப்பச்சன் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகப்பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

75 நாடுகளில் இருந்து 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.

நடிகை பத்மபிரியா ரகசிய திருமணம்!!

Pathma priya

தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் பத்மபிரியா.

இவருக்கு இன்று மும்பையில் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

ஆராய்ச்சிப் படிப்பிற்காக நியூயோர்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட சந்திப்பில் அவருடன் காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மெக்கானிக்கல் இன்ஜியரிங் படித்துள்ள பத்மப்ரியாவின் காதலர் ஜாஸ்மின் தற்போது அரசுத்துறை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறுகிறார்கள்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்குப் பட கதாநாயகி கைது!!

IMG

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு பட நடிகைகள் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஹோட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது கையும் களவுமாக பொலிசார் இவரை பிடித்தனர். படவாய்ப்புகள் இன்றி பண கஷ்டம் ஏற்பட்டதால் விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் இன்னொரு பட கதாநாயகியும் பொலிசில் சிக்கியுள்ளார். புனேயில் பொலிசார் விபச்சார வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக பொலிசார் அந்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. எல்லோரையும் பொலிசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவர் தெலுங்கு படத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் என்பதை பொலிசார் அறிந்தனர். ஆனாலும் அவர் யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. அந்த நடிகையின் முகத்தை துணியால் மூடி போலிஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள்.

ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்த யுவன்சங்கர் ராஜா!!

ARR

யுவன் சில நாட்களாகவே சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் முன்பு போல் இவரால் ஹிட் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கும் பொருட்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் யுவன். சென்னையின் பிரபல வானொலி எடுத்த கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.ரகுமான் இசையில் ஐ, காவியத்தலைவன், அனிருத் இசையில் கத்தி என பிரம்மாண்ட படங்கள் வந்தாலும், இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி யுவன் இசையமைத்த திருடன் போலிஸ் படத்தில் வரும் ‘பேசாதே பார்வைகள் வீசாதே’ பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு : மகிந்த ராஜபக்ஷ!!

images

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை தயாராக உள்ளது என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

இதனை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சவும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து இந்தியா சார்பில் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய திருப்பமாக மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு தொலைதொடர்பு அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பு வழங்கபட்டால் 2 அல்லது 3 நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா சார்பில் மீனவர்களின் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் இருந்தால் மட்டுமே மன்னிப்பு சாத்தியம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெளிவுபடுத்தியதாக பிரபா கணேசன் கூறியுள்ளார்.

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை மாயமாகிவிட்டது : புதிய சர்ச்சை!!

fli

விபத்துக்குள்ளான மலேசிய விமானம் மாயமாகிவிட்டது என்று மலேசிய ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் மார்ச் 8ம் திகதி கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.

விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன.

இருந்தும் விமானத்தின் உதிரிப் பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை மலேசிய ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

இதை அறிந்ததும் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகள் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இணையத்தில் தீயாய் பரவும் குடிமகனின் சாகசம்!!(வீடியோ)

Capture

நபர் ஒருவர் ஒரு போத்தல் வொட்காவை சிறிது நேர இடைவெளியுமின்றி ஒரே தடைவையில் குடித்து முடித்துள்ளார். இந்த சாகச காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

சாதனை படைத்தது Facebook Messenger!!

FB

உலகில் அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் சட்டிங் செய்வதற்கென தனியாக அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனே Facebook Messenger ஆகும்.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் குறுஞ்செய்திகளை விரைவாக அனுப்பக்கூடியதாக இருப்பதுடன், ஸ்டிக்கர்கள், வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் காணப்படுகின்றது.

Facebook Messenger அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டமைக்கு விரைவான தொடர்பாடல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றனவே காரணமாக இருந்ததாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகெங்கிலும் 1.35 பில்லியன் பயனர்களை பேஸ்புக் கொண்டுள்ளதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்கினர் Facebook Messenger அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பெற்ற பெண்!!

LAdy

பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(40).

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது.

நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர்.

இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் : புத்தகத்தால் சர்ச்சை!!

book

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர் எனக் கூறி எழுதப்பட்டுள்ள புத்தகத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”.

இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த புத்தகம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டீஷ் நூலகம் கூறுகையில், அந்த புத்தகத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறியுள்ளார்.

“வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டொன் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும்.

ஏனெனில் டொன் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர்.

எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.