ஒரு நாள் கிரிக்கெட்டில் உலக கிண்ணத்துடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் 37 வயதான மஹோல ஜெயவர்த்தன மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
என்னை தொடக்க ஆட்டக்காரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன்.
உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மிடில் வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஒவ்வொரு முறையும் நிலைத்து நின்று எனது மிகச்சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். உலக கிண்ணத்துக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ஜெயவர்த்தன கூறினார்.