திருமணத்திற்கு முன்னர் ஆணாக மாறிய மணப் பெண்ணால் திக்குமுக்காடிய மாப்பிள்ளை!!

WED

உத்திரபிரதேசத்தில் திருமணத்திற்கு முதல் நாள் பெண், ஆணாக மாறிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாலக் ராம் ( 37) என்பவர், நடன குழு தலைவர் ஹுகம் சிங்கிடம் 50 ஆயிரம் கொடுத்து தனக்கு பெண் பார்த்து தருமாறு கூறி உள்ளார். நடன குழு தலைவரும் அவருக்கு பெண் பார்த்து தருவதாக உறுதி அளித்து உள்ளார்.

சில நாட்கள் கழித்து ஹூகம் சிங், ராஜ் குமாரி ( 27) என்ற பெண்ணை பாலக் ராமுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அப்பெண் மனநலம் சரியில்லாதவர் என்றும் அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பாலக் ராம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய தொடங்கினார், அவர்கள் திருமணம் ஒரு வாரம் கழித்து நடைபெறுவதாக இருந்தது.

இதனால், பால ராம், ராஜ் குமாரியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் ராஜ குமாரி பெண் அல்ல என்றும் 15 வயது ராஜ் குமார் என்ற சிறுவன் என தெரிய வந்தது.

இதுகுறித்து பாலக்ராம் கூறுகையில், இது ஆச்சரியமாக இருந்த போதிலும் சேலை அணிந்த ராஜ் குமாரை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் பெண் ஆடையில், ஆண் இருப்பார் என எண்ணவில்லை எனக் கூறியுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நீக்கம்!!

WC

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நடைமுறையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தொடரில் இரண்டு அணிகளும் சமமான ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்று போட்டியை நிறைவு செய்யுமாயின் கிண்ணத்தினை இரு அணிகளுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒருநாள் அந்ததஸ்து பெற்ற 14 அணிகள் 2 குழுக்களாக பிரிந்து போட்டியிடவுள்ளன.

இதனடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் பிரவேசிக்கும் இரு அணிகளும் சம ஓட்ட எண்ணிக்கையினை பெறுமாயின் வழங்கப்படும் சூப்பர் ஓவர் நடைமுறை, இந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் வழங்கப்படமாட்டாது என ஐசிசி அறிவித்துள்ளது.

கேள்விக்குறியாகியுள்ள ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம்!!

sehwag_gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கௌதம் கம்பீர், 36 வயதான ஜகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படவில்லை.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராவதற்கு இந்த அவுஸ்திரேலிய தொடர் தான் அச்சாரமாகும்.

மோசமான ஆட்டங்களால் கழற்றி விடப்பட்ட இவர்களது இடத்தை இப்போது இளம் வீரர்கள் முழுமையாக ஆக்கிரமித்து விட்டனர்.

ஒரு காலத்தில் ஷேவாக்– கம்பீர் உலகின் சிறந்த தொடக்க ஜோடியாக வலம் வந்தது. தற்போது தொடக்க வரிசையில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே, முரளி விஜய் போன்ற வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றனர்.

ஷேவாக் கடைசியாக 2013ம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்டில் விளையாடியிருந்தார். காயத்தால் அவதிப்படும் ஜகீர்கானின் நிலைமையும் இதே தான்.

இவ்வாறு மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டித்தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று அடித்து சொல்லப்படுகிறது.

உலகக்கிண்ண போட்டி நெருங்கி விட்டதால் இனி அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ய இந்திய அணித்தலைவர் டோனி ஒரு போதும் விரும்பமாட்டார்.

அது மட்டமின்றி இவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே அவ்வளவு தான். இனி அணிக்குள் வரவே முடியாது என்ற கோணத்திலும் விமர்சிக்கப்படுகிறது.

வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)

வவுனியா இந்துக்கல்லூரியில் 2010 ம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் ஒன்று கூடல் 2014.11.09 ம் திகதி வவுனியா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் ஒன்று கூடல் நிகழ்வில் 2007 ம் ஆண்டு சாதாரண தரம்(O/L) பயின்ற மாணவர்கள், முன்னாள் பாடசாலை அதிபர் க.சிவஞானம், பழைய ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

ஆசிரியர் மாணவர் உறவை பலப்படுத்துவதற்காகவும், நினைவுகளை மீட்டிக் கொள்வதற்காகவும் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய உணவுடன் நிறைவடைந்த இவ் ஒன்று கூடலில் இனிவரும் காலங்களில் வருடத்திற்கு ஒரு முறை இப்படியானதொரு ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்துவதற்கும், பாடசாலைக்கு இயன்ற உதவிகளை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

DSC_0482 DSC_0568 DSC_0614

100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில் : இந்திய உள்துறை அமைச்சு!!

Ref

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக, அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் 1995ம் ஆண்டு வரை 99,469 பேர் திருப்பியனுப்பப்பட்ட போது, சில அகதிகள் வேறு நாடுகளுக்கு தாங்களாகவே சென்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

2014 பெப்ரவரி மாத தகவல்களின் படி 113 முகாம்களில், 65,570 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளதாவும், பொலிஸ் பதிவுகளின் பின்னர் 34788 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது : அவுஸ்திரேலியா!!

Aus

இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் சுமார் 1200 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதரக பிரதிநிதி கூறியுள்ளார்.

சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் சிறுமியை கொடுமைப்படுத்திய தாய் மற்றும் சிறிய தந்தை கைது!!

A6

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பின்லேடனை உண்மையில் கொன்றது யார் : வெடித்தது புதிய சர்ச்சை!!

Osama

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்கா இராணுவ வீரரான ராப் ஓ நீல்(Rob O’Neill Age-38) என்பவர் சுட்டதாக நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மேத்யூ பிசானேட் (Mathew Bissonnette) என்ற மற்றொரு வீரர் கூறுகையில், “ராப் ஓ நீல், பின்லேடன் அறைக்குள் செல்வதற்கு முன்பாகவே இரண்டு வீரர்கள் நுழைந்து விட்டனர் என்றும் அவர்களில் ஒருவர்தான் முதலில் பின்லேடனை சுட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பின்லேடனை வீழ்த்தியது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டில், ‘எளிதான நாளாக இல்லை’ (No Easy Day) என்ற பெயரில் புத்தகம் எழுதிய மேத்யூ பிசானேட், அதில் பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதை குறிப்பிடாததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

நெஞ்சை நெகிழவைத்த திருமணங்கள்!!

சென்னையில் மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.

சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று திறனாளிகள் திருமணத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் 58 ஜோடிகளை சுயம்வரம் மூலம் தெரிவு செய்தது. அவர்களுக்கான திருமணம் கீதா பவனில் நடந்தது.

எல்லா மணமக்களும் மண்டபத்தில் ஜோடி, ஜோடியாக அமர வைக்கப்பட்டனர்.

பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப்புடவையுடன் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்த ஜோடிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது.

இதில், மாற்று திறனாளிகள் இல்லாத 7 ஆண்களும், 21 பெண்களும் மாற்று திறனாளிகளை தங்கள் துணையாக ஏற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.

Wed wed1 wed2 wed3

பேய் என நினைத்து அப்பாவிப் பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்!!

Pei

பெரகுவே நாட்டில் பேய் என நினைத்து பெண் ஒருவர், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரகுவே நாட்டை சேர்ந்த அடோல்ஃபினா ஒகம்பஸ் (45) என்ற பெண்ணை பேய் என கூறிய கிராம மக்கள் அவரை நதியில் மூழ்கடித்துள்ளனர்.

இதன்பின் கம்பத்தில் கட்டி போட்டு அடித்து, அவரை உயிரிடன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்களில் ஒருவர் கூறுகையில், பெண்ணின் தங்கை ஒரு வருடத்திற்கு மேல் உடல்நலம் குறைவாக இருந்ததாகவும், அவரும் அதற்கு ஒகம்பாஸ் தான் காரணம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் செய்த இந்த காரியத்திற்காக சிறிதும் வருந்தவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவன் உட்பட 8 நபர்களை கைது செய்த பொலிசார், தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளுக்கு பிரேசிலில் குடியுரிமை!!

UAE

கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளில் கடைசி தொகுதியினர் பிரேசிலுக்கு செல்கின்றனர்.

பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான சபை உறுதி செய்துள்ளது.

4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக ஏழு பேர் பிரேசில் செல்லவுள்ளனர். இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வீடு ஒன்றை வழங்கியுள்ளது. சுமார் 45 இலங்கை அகதிகள் அடங்கிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டு துபாய் நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள், ஜெபால் அலி விமானத்தளத்தில் தங்க வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டனர்.

இந்தநிலையிலேயே கடைசியாக எஞ்சியிருந்த 7 இலங்கையர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை பிரேசிலுக்கு செல்லவுள்ளனர்.

நுவரெலியாவி​ல் கடும் குளிர்!!

Nu

கடந்த வருடங்களுக்கு பின் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த மாதம் கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

பகல் வேளையில் வெயிலும் காலையிலும் இரவிலும் கடும் குளிர் இருப்பதாகவும் நுவரெலியாவில் 11 செல்சியஸ், ஹோட்டன் தென்னவில் செல்சியஸ் 8 ஆக குறைந்திருப்பதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.

யாழில் குளிரூட்டப்பட்ட தயாரிப்புக்களுக்கு தீடீர் தடை காரணமாக 15 ஆயிரம் வியாபாரிகள் பாதிப்பு!!

ice cream

யாழில் ஐஸ்கிறீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட உணவு தயாரிப்புக்களுக்கு திடீர்த் தடை விதிக்கப்பட்டதால், 59 நிறுவனங்களைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமானவர்கள் நேரடியாக தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உப உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.உதயசிறி யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தங்களின் பிரச்சினை தொடர்பில் பூரணமாக எடுத்துக்கூறிய போதிலும், வட மாகாண சுகாதார அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!

Mansarivu

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும், நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய மூன்று பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பிள்ளைகளை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான செயற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்பொருட்டு விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடம்பெயர் முகாம்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீரியபெத்தயில் மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சீரான வானிலை நிலவுமிடத்து, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியுமென மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களின் தகவல்களுக்கு அமைய, மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் 11 சடலங்களும், மேலும் சில உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்ற கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!

கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன், நகரசபையின் முன்னாள் நகரபிதா திரு.எஸ்.நாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.

-சுகுமார்-

10377070_694597720647257_7381186427242565884_n10615397_694597417313954_280252241025943361_n1381389_694597653980597_9140473305574859775_n 10153944_694597457313950_1465170940861752172_n 10408740_694597430647286_5388200737430962747_n 10419508_694597473980615_7766038411527023791_n 10505394_694597477313948_1759749258645276479_n 10675769_694597480647281_1935034385226345024_n 10801552_694597497313946_2505076974520421248_n

 

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர்தின விழா!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் முதியோர் தின விழா  நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன், நகரசபையின் முன்னாள் நகரபிதா திரு.எஸ்.நாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்திய வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் முதியோர் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

-சுகுமார்-

1507730_694597570647272_323921492593015921_n 10269551_694597723980590_5578675616337465154_n 10685601_694597547313941_663208737622024600_n 10696232_694597697313926_7307820213259968966_n 10730973_694597730647256_7193859145989436050_n