வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை நிகழ்வுகள்!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர் நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு நேற்று (06.11) மதியம் 12.00 மணியளவில் கோவில்குளம் சிவன் கோவிலில் நடைபெற்றது.

உயிர் நீத்த மக்களின் ஆத்மா சாந்திக்கான இவ் பிரார்த்தனை நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் (விசு), நகர சபையின் செயலாளர் திரு சத்தியசீலன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மூத்த ஊடகவியலாளர் திரு மாணிக்கவாசகம், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகுமார்(கண்ணன்), மக்கள் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் திரு றோய் ஜெயக்குமார், கண்ணகி தேவராஜா ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_3278 IMG_3287 IMG_3288 IMG_3289 IMG_3291 IMG_3294 IMG_3305 IMG_3309 IMG_3321 IMG_3333 IMG_3335 IMG_3342

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் கொண்டாடப்பட்ட வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்!!

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையால் வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (05.11) நடைபெற்றது.

இன் நிகழ்வின்போது பல்கலைக் கழக மாணவன் அ.குகநாதனுக்கு கல்விச் செலவுகளிற்காக 20 000 ரூபா பணம் வழங்கப்பட்டது. அத்துடன் 90 வயதைத் தாண்டிய முதியவரான கல்மடுவைச் சேர்ந்த திரு.மரியதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நூலகங்களில் இருந்து இரண்டு சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பாடசாலை மானவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

20141105_111449 20141105_111612 20141105_111727 20141105_111840 20141105_112046 20141105_112631 20141105_112726 20141105_113137 20141105_113803

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற மீள் எழுச்சித்திட்ட 5ம் வருட நிறைவும், கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்!!

வவுனியா ஸ்ரீராமபுரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தில் உள்வாங்கபட்டு 5 வருட பூர்த்தி நிகழ்வு ஸ்ரீராமபுரம் சனசமுக நிலைய மண்டபத்தில் ஸ்ரீராமபுரம் மீள் எழுச்சி திட்ட தலைவர் திரு.ர.ராமச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது .

நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மீள் எழுச்சி பிரதி திட்ட பணிப்பாளர் திரு டி.எ.டி.ரஞ்சித் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட உத்தியோகத்தர்களான சந்திரகுமார் (கண்ணன் ), துளசிகன், சஜீவன், குணம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இவர்களுடன் ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.பி.நிசாந்தகுமார், ஸ்ரீராமபுரம் கிராம மாதர் சங்க தலைவி திருமதி எஸ்.ரஜனி, ஸ்ரீராமபுரம் மீள் எழுச்சி திட்ட செயலாளர் திரு எஸ்.ராமலிங்கம் உட்பட மீள் எழுச்சி திட்ட பயனாளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பம்பமாகின. பின்னர் நிகழ்வின் தலைவர் ராமச்சந்திரன் தனதுரையில் மீள் எழுச்சி திட்டம் மூலம் தமது வாழ்வை வளபடுத்தி இந்த 5 வருடத்தில் 125000 ரூபாய் சேமிப்பு செய்துள்ள எக்ஸ்ஓரா என்ற சிறு குழு உறுபினர்களுக்கு பிரதி திட்ட பணிப்பாளர் அவர்கள் தாம் அவர்களை ஊக்க படுத்த கொண்டுவந்த நினைவு பரிசை வழங்க வேண்டும் என்றும் மேலும் தாம் கேட்டு தாய், தந்தையை இழந்த ,மற்றும் வறிய 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க சம்மதித்த தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும், பொருளாதார அமைச்சின் உத்தியோகத்தருமான சந்திரகுமார் (கண்ணன் )அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார் .

பிரதி திட்ட பணிப்பாளர் தனது பிரதம உரையில் மீள் எழுச்சி திட்டம் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்கி கொண்டது மட்டுமல்லாமல் அதை ஒரு நிகழ்வாகவும் செய்தமை பாராடுதலுக்குறியது என்றும் மேலும் எக்ஸ் ஓரா சிறுகுழு போன்று மாணவர்களாகிய நீங்களும் சிறு வயத்தில் இருந்தே சேமிப்பை கற்று கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .

சந்திரகுமார் (கண்ணன் ) தனதுரையில் மாணவர்களிடம் சேமிப்பின் கட்டாயத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் கருப்பொருளாக கொண்டு உரை நிகழ்த்தினார். பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியில் மீள் எழுச்சி திட்ட செயலாளரின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

DSCN2325 DSCN2330 DSCN2346 DSCN2348 DSCN2350 DSCN2354 DSCN2360 IMG_5556 IMG_5544 IMG_5542 IMG_5540 DSCN2366

இலங்கை அணியை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது இந்திய அணி!!

IND

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி அபார வெற்றியிட்டியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான குசல் பெரேரா (0), திலஹரத்ன டில்ஷான் (35) ஆகியோர் கைகொடுக்காத போதும், மத்தியூஸ் மற்றும் சங்கக்கார வலுசேர்ந்தனர்.

குமார் சங்கக்கார இப் போட்டியில் தனது 87வது அரைச்சதத்தைப் பதிவு செய்ததோடு உமேஷ் யாதவின் பந்துவீச்சில் 61 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும் இறுதி வரை களத்தில் இருந்த அஞ்சலோ மத்தியூஸ் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களை விளாசினார்.

50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை 274 ஓட்டங்களை குவித்தது.

இதனை அடுத்து 275 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெஹானே 8 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும் சிறப்பாக ஆடிய ஷகீர் தவான் 79 ஓட்டங்களைக் குவித்ததோடு, அம்பட்டி ராயுடு 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.

44.3 ஓவர்களில் 275 எனும் இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது.

இதனால் 33 பந்துகள் கைவசம் இருக்க 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா வசமானது, இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!!

iLOVEmybody

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.

அதிக எடை இதற்கு முக்கியமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பரங்கள், தொலைக்காட்சியும், திரைப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மொடல்களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட்டது.

முதலில் உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு, ஓய்வு, தூக்கம், உடல் பயிற்சி இவைகளால் உங்கள் உடல் நலன் கூடும். அத்தோடு உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான, அழகாக உள்ள உணர்வை, பெறலாம்.

உடலின் பராமரிப்பு:- நமது உடல்கூறு அதிசயமான உள்ளங்களை உள்ளடக்கியது இதை நல்ல முறையில், பேணி காப்பது நம் கடமையாகும்.

உடலுக்கு சலுகைகள்:- உடலுக்கு அவ்வப்போது சலுகைகள் அவசியம். மஸாஜ் செய்து கொள்வது, புதிய உடை வாங்குவது, மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது. இது போன்ற சலுகைகளில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வும் ஏற்படும்.

உங்கள் தேவை:- உங்களுக்கு வாழ்வில் எது தேவை என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் தங்கள் அழகையும், உடலையும் பாதுகாப்பதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

உங்கள் பழக்கங்கள்:- கண்ணாடி முன் நின்று 100 முறை உங்கள் மூக்கை பார்ப்பதற்கு பதிலாக வேறு வேலைகளில் கவனத்தை செலுத்தவும். உங்கள் மூக்கு மட்டுமே நீங்கள் என்ற எண்ணத்தை முதலில் விடவும்.

உண்மையை ஒத்துக் கொள்ளவும்:- ஐஸ்வர்யாராய் போல் தோன்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அதை விட்டு விடுவது நல்லது. அவர் அவர் தான், நீங்கள் நீங்கள் தான். அவர் அழகு தான் ஆனால் அவர் மட்டுமே அழகு என்று நினைப்பது சரியல்ல.

சரியான பார்வை:- பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்துகொள்வது தான் அழகாக தோன்ற வழி என்று நினைப்பது தவறு. எது உங்களுக்கு சரி என்று முதலில் தீர்மானிக்கவும். தேவையான உடல் பயிற்சி, சரியான உணவு இவையெல்லாம் தான் அழகை மேம்படுத்தும்.

நீங்கள் தனி மனிதர் இல்லை:- இதே பிரச்சினை அதிகபட்சமான பெண்களுக்கு உண்டு என்பதை புரிந்துகொள்ளவும். இந்த பிரச்சினையில் மூழ்காமல் இருப்பது உங்களை கையில் உள்ளது.

எது அழகு, யார் சிறந்தவர் என்று மற்றவர் சொல்வதை நம்பாதீர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆடம்பர ஹோட்டலை ஆரம்பித்த டில்ஷான்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டில்ஷான், தான் கட்டிய ஆரம்பர ஹொட்டலை நேற்று ஆரம்பித்தார்.

டி பெவிலியன் விடுதி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஹொட்டலை திறந்து வைப்பதற்காக இலங்கை ஜனாபதி மஹிந்த ராஜபக்சக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இவரது அழைப்பை ஏற்ற ராஜபக்ச அந்த ஹொட்டலை நேற்று திறந்து வைத்தார்.

1 2 3

அமெரிக்காவில் மருத்துவருக்கு எபோலா வைரஸ்!!

Doctor

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா என்னும் உயிர்கொல்லி வைரஸ்.
இந்நோயினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மற்ற நாடுகளிலும் இந்நோய் பரவிவிடாத வண்ணம் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருபவர்களை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மருத்துவர் கிரேக் ஸ்பென்சர் என்பவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை மருத்துவமனையில் தனி வாட்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கினியா நாட்டில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேக், கடந்த 14ம் திகதி நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் வடக்கின் அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம்!!

Highways

யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

வடக்கிற்கான அதிவேகப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பை அண்மித்த மஹர பிரதேசத்தல் இருந்து இந்தப் பாதை ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து ரம்புக்கனை வரை செல்லும் பாதை, ரம்புக்கனையில் இருந்து கண்டி அதிவேகப் பாதையாகவும், யாழ். அதிவேகப் பாதையாகவும் இரண்டாகப் பிரியவுள்ளது.

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களில் வடக்கிற்கான அதிவேகப் பாதை செயற்திட்டத்திற்கே ஆகக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 350 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

குறித்த அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வடக்கு அதிவேகப் பாதையின் நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. குருநாகலை கலகெதர பிரதேசத்தில் ஜனாதிபதி இதனை நட்டு வைப்பார் என்று தெரிய வந்துள்ளது.

கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல் நவம்பர் 15ம் திகதி ரம்புக்கணையில் நடப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சை 26ம் திகதி!!

IT

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறும் என, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடுபூராகவுமுள்ள 1176 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில், ஒரு இலட்சத்து 49,784 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத மாணவர்கள் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இதேவேளை இந்தப் பரீட்சைகளுக்கு சிறைச்சாலையிலுள்ள 16 கைதிகளும் தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாதாரணதரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரைநடைபெறும்!!

OL

2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மாற்றங்கள் எதுவுமின்றி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்த நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று வெளியிடப்பட்டது.

இதேவேளை, 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறும் என, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடுபூராகவுமுள்ள 1176 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில், ஒரு இலட்சத்து 49,784 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத மாணவர்கள் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி!!

SL

புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க மேற்க்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மறுத்ததால் ஆத்திரமடைந்த மேற்க்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தை மேற்க்கிந்திய தீவுகள் திடீரென ரத்து செய்ததால், இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

கட்டாக், ஐதாராபாத், ராஞ்சி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வரும் நவம்பர் 2-14 வரை நடைபெறுகிறது. வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இடம் பெற்ற வீரர்கள் வருமாறு..

ஏஞ்சலோ மத்யூஸ் (தலைவர்), குசல் பெரேரா, தில்ஷான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, அஷன் பிரியஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திஷரா பெரேரா, நுவன் குலசேகர, தம்மிக்கா பிரசாத், லாகிரு, சதுரங்க டி சில்வா, எஸ்.பிரசன்ன, மற்றும் சுராஜ் ராந்திவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுராஜ் ரந்தீவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள குமார் சங்கக்கார ஒருவேளை தகுதி பெறவில்லை என்றால் நிரோஷன் டிக்வெல்ல அணிக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா அரசன்குளத்தில் 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய சுரேந்திரன் நற்பணி மன்றம்!!

யுத்தத்தின் பின் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாடும் 5 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் கனிசியஸ், மற்றும் சமுர்த்தி சங்க, மாதர் சங்க தலைவி நவரத்தினம் மீனாம்பிகை ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த உலர் உணவு பொதிகள் சுரேந்திரன் நற்பணி மன்ற ஸ்தாபகர் சுரேந்திரன் அவர்களால் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் மூலம் வழங்கி வைக்கப்பட்டன.

தாய் .தந்தையை இழந்து பேத்தி ஈஸ்வரியுடன் வாழும் சிறுவன் மகேந்திரன் லிதர்சன், அவர் தங்கை மதுசா ஆகியோருக்கும், 3 பிள்ளைகளுடன் மலசலகூடம், கிணறு உட்பட அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாழும் நீதிராசா சாந்தகுமாரிக்கும், ஒருகால், ஒரு கை ஊனமுற்ற தொழில் ஏதும் செய்ய இயலாத ஈஸ்வரநாதன் தவரூபனுக்கும், தாய், தந்தை இழந்து வாழ்வாதாரத்துக்கு கஷ்ட படும் தர்மராசா கார்த்திகாவுக்கும்

2009 தொடக்கம் 2011 பூசா முகாமில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கபட்ட முன்னாள் போராளியான நவரத்தினம் கிருபாகரனுக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன.

வே.சுரேந்திரனின் சுரேந்திரன் நற்பணி மன்ற இந்த உதவிகளை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன்), மாணிக்கம் ஜெகன் ஆகியோர் நேரடியாக சென்று வழங்கி இருந்தனர்.

004q1 004r1 DSCN2054 DSCN2063 DSCN2077 DSCN2085 DSCN2090 DSCN2091

கனேடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!!

canada

கனேடிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பல நாடுகளிலும் உள்ள பயங்கரவாதம், இப்போது கனடாவிலும் அதன் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. உலகில் பயங்கதவாத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வது அதிருப்தி அளிக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுபல நாடுகள் தலைவர்கள் மாநாட்டினை பிரதமர் ஹார்பர் புறக்கணித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனேடிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று!!

AIDS

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எயிட்ஸ் அச்சுறுத்தலின் ஒரு கட்டமாக எயிட்ஸ் நோய் தொற்றிய ஐந்து கர்ப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான மருத்துவப் போராட்டங்களின் பயனாக இவர்களில் நால்வர் எயிட்ஸ் தொற்று இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் எயிட்ஸ் தொற்றியுள்ளது.

இதனையடுத்து தற்போது நாடு தழுவிய ரீதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பின் ஒரு கட்டமாக எயிட்ஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதற்கான சாதனங்கள் சுகாதார அமைச்சினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப்பொறுத்தவரை ஏனைய நாடுகளைப்போன்று விலைமாதுகளின் மூலமாக எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பதிலாக ஆண்களின் மூலமாகவே எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி சர்வதேச ரீதியில் சாதனை!!

Rambaikulam

2014 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் தரம் எட்டில் கல்வி கற்கும் செல்வி சர்மிகா சர்வானந்தன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.

இதன் பின் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கனிஷ்ட பிரிவில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கும் இலங்கை திருநாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இம் மாணவி இந்தோனேசிய நாட்டின் கல்வி அமைச்சர் வெள்ளி பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இம்மாணவி வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசியரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய ரீதியில் பங்கு பற்றி வெற்றியும் பெற்றுள்ளார். எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த செல்வி சர்மிகா சர்வானந்தனை பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

கிளிநொச்சி விபத்தில் இரண்டரை வயதுச் சிறுவன் பலி!!

Accident

கிளிநொச்சி – இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது மகனும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுவன் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.