கனேடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!!

canada

கனேடிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பல நாடுகளிலும் உள்ள பயங்கரவாதம், இப்போது கனடாவிலும் அதன் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. உலகில் பயங்கதவாத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வது அதிருப்தி அளிக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுபல நாடுகள் தலைவர்கள் மாநாட்டினை பிரதமர் ஹார்பர் புறக்கணித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனேடிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கும் எயிட்ஸ் தொற்று!!

AIDS

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எயிட்ஸ் அச்சுறுத்தலின் ஒரு கட்டமாக எயிட்ஸ் நோய் தொற்றிய ஐந்து கர்ப்பிணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான மருத்துவப் போராட்டங்களின் பயனாக இவர்களில் நால்வர் எயிட்ஸ் தொற்று இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் எயிட்ஸ் தொற்றியுள்ளது.

இதனையடுத்து தற்போது நாடு தழுவிய ரீதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பின் ஒரு கட்டமாக எயிட்ஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதற்கான சாதனங்கள் சுகாதார அமைச்சினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப்பொறுத்தவரை ஏனைய நாடுகளைப்போன்று விலைமாதுகளின் மூலமாக எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. அதற்குப் பதிலாக ஆண்களின் மூலமாகவே எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி சர்வதேச ரீதியில் சாதனை!!

Rambaikulam

2014 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் தரம் எட்டில் கல்வி கற்கும் செல்வி சர்மிகா சர்வானந்தன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.

இதன் பின் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கனிஷ்ட பிரிவில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கும் இலங்கை திருநாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இம் மாணவி இந்தோனேசிய நாட்டின் கல்வி அமைச்சர் வெள்ளி பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இம்மாணவி வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசியரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய ரீதியில் பங்கு பற்றி வெற்றியும் பெற்றுள்ளார். எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த செல்வி சர்மிகா சர்வானந்தனை பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

கிளிநொச்சி விபத்தில் இரண்டரை வயதுச் சிறுவன் பலி!!

Accident

கிளிநொச்சி – இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது மகனும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுவன் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கக்கார, ஜெயவர்த்தனே மட்டும் இலங்கை அணி அல்ல : சனத் ஜெயசூரிய!!

Sanath

இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை பாதியிலே கைவிட்டதால் இந்திய அணி இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

இந்த தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் அணி தெரிவாளர்களின் தலைவராக உள்ள சனத் ஜெயசூரிய ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு கூறுகையில், சில பந்து வீச்சாளர்களுக்கு இந்தியா போன்ற வலிமையான அணியிடம் தன் திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

லகிரு திரிமன்ன, தினேஷ் சந்திமால் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல போன்ற இளம் துடுப்பாட்டக்காரர்கள் அணியில் இடம்பெறவுள்ளனர்.

இந்த அணி சங்கக்காரா, ஜெயவர்த்தனே மட்டுமே இலங்கை அணியில் இருக்கிறார் என்று நினைக்காமல் செயல்பட வேண்டும். ஓவ்வொருவரும் தனக்குரிய பொறுப்புணர்வை புரிந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பார்ப்போரை அதிர வைக்கும் பேய் மனிதன்!!

கொலம்பியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகத்தில் பச்சை மற்றும் தோடுகள் குத்திக்கொண்டு பேய் மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார்.

கொலம்பியாவை சேர்ந்த கெயிம் மோரிஸ் (41) முகம் முழுவதும் பச்சை மற்றும் தோடுகள் குத்தி தன்னை பேய் போல் தோற்றமளிக்க செய்துள்ளார்.

இதற்காக 11 ஆண்டுகள் செலவு செய்து கண்களை கருப்பு நிறத்தில் பச்சை குத்தியும், தலை மற்றும் கைகளில் கொம்புகளையும் வைத்துள்ளார். இவ்வாறு அவர் கொடூரமாக அலங்காரம் செய்ததால் இவர் குடும்பத்தினரை விட்டு மெக்சிக்கோ சென்றுள்ளார்.

இதுகுறித்து கெயிம் கூறுகையில், மக்கள் தன்னை பார்த்தவுடன் அதிர்ச்சியடைவர்கள் என்றும் எனக்கு மற்ற நபர்களை விட வித்தியசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டி.ஜே வாக பணியாற்றுவதுடன், அரங்கில் நடனங்களை அரங்கேற்றி வருகிறார்.

1 2 3 4

மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!!

Rajapaksha

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளிடம் 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு!!

WI

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையிடம் இருந்து 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று நடைபெறும் பிசிசிஐ செயற்குழுவில் முடிவெடுக்கப் படவுள்ளது.

இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு T20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் ஊதியத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை திடீரென குறைத்ததால் அவர்கள் விளையாட மறுத்துவிட்டனர். இதையடுத்து தர்மசாலாவில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியோடு தொடர் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கடைசி ஒருநாள் போட்டி, ஒரு T20, 3 டெஸ்ட் போட்டி என மொத்தம் 17 நாள் போட்டி நடைபெறவில்லை. எனினும் இந்தியா-இலங்கை இடை யிலான 5 ஒருநாள் போட்டி யின் மூலம் 5 நாட்கள் ஈடுகட்டப் பட்டாலும், எஞ்சிய 12 நாட்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியபோது ஒரு போட்டியின் மூலம் 33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதை அடிப்படை யாகக் கொண்டு 12 நாள் வரு வாய் இழப்பாக 396 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!!

Rain

இலங்கையின் மேல் வளிமண்டபத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாயு அமுக்க நிலை காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பரவலான மழை பெய்வதுடன் சில இடங்களில் 100மி. மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து வரும் இந்த அமுக்க நிலை அலை, அலையான நீரற்றதாகவே காணப்படும். இதனால் நாட்டில் இந்தப் பகுதியில்தான் மழை பெய்யும் எனக் கூற முடியாது. எனினும், அனைத்து இடங்களிலும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

கடும் மழை பெய்வதுடன் பலத்த இடிமின்னல் ஏற்படலாம். இடி மின்னலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வழிவகைகள் செய்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருநாள் பொலிஸ் கமிஷ்னரான 10 வயதுச் சிறுவன்!!

BOy

ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த சாதிக் என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவனுக்கு காவல்துறை ஆணையராக வரவேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

இதனை அறிந்த “ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை” முன் வந்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த கனவை மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி நிறைவேற்றியுள்ளார்.

எனவே நேற்று ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார்.

மேலும், காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரவுடிகளைப் பிடிக்க வேண்டும் என்று அந்த சிறுவன் மகிழ்ச்சியோடு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி புகையிரதம் மூலம் இரு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம்!!

Yarl

யாழ்தேவி ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார்.

24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார்.

அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன் கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் பிரதான புகையிரத அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு 52.60 சதம் பெறுமதியான பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் பிணை மனு மீது இன்று விசாரணை : பிணை கிடைப்பதில் சிக்கல்!!

Jeya

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனு மீதான விசாரணை இன்று வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா அல்லது தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு குறித்து முதன் முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் “ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவது குறித்து மனுதாரர் என்பதால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பிணை கோரினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று கூறிவந்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துவிட்டார்.

சுப்பிரமணிய சுவாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் ஆஜராக வேண்டும். இதுகுறித்து பவானிசிங் கூறியதாவது.

“சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக நான் நியமிக்கப்பட்டு இது தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறேன். பெங்களூர் தனி நீதிமன்றில் ஆஜரானேன். கர்நாடக மேல் நீதிமன்றில் ஆஜராகி வாதிட்டேன். இப்போது உயர் நீதிமன்றில் எதிர்தரப்பினர் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று 17ம் திகதி விசாரணைக்கு வருவதாக பத்திரிகைகளில் செய்தி படித்தேன். இதில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றத்தில் இருந்து இதுவரை (புதன்கிழமை மாலை வரை) எனக்கு நோட்டீசு வரவில்லை. வந்தால் உச்ச நீதிமன்றில் ஆஜராவேன். இவ்வாறு அரசு சிறப்பு சட்டத்தரணி பவானிசிங் கூறினார்.

தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய இளம் தலைமுறை!!

Job

பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர்.

வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே அல்லது தொழில் ரீதியான பணியிலேயே குறியாக இருந்தால் அவர்களின் குடும்ப, சமூக வாழ்க்கை ஆட்டம் காணலாம். ஒருவர் உழைக்கக்கூடிய பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்காக அல்லது வாழ்க்கைக்கா அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.

“குறிப்பிட்ட வயதிலேயே உழைக்க முடியும். அதனால் உழைக்கும் பருவத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என சிலர் கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் வேலையைவிட குடும்ப சமூக வாழ்க்கை முக்கியம் என்கின்றனர். தமது கருத்தை வலுப்படுத்துவதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் சில பின்வருமாறு..

* வேலையென்பது ஒருபோதும் முடிவுறும் செயன்முறை அல்ல. உங்களால் எப்போதுமே உங்களது வேலைகளை செய்து முடிக்க முடியாது.

* உங்கள் வாடிக்கையாளரின் நலன் என்பது உங்கள் குடும்பத்தின் நலன்களைவிட முக்கியமானதல்ல.

* நீங்கள் வாழ்க்கையில் தோல்வியை தழுவும் போது கைகொடுக்கும் உங்களுக்கு கைகொடுக்கப்போவது உங்களது முதலாளியோ தொழிலாளியோ அல்ல. ஆனால், குடும்பத்தினரும் நண்பர்களும் உதவுவார்கள்.

* வாழ்க்கை என்பது அலுவலகத்திற்கு தினம் வருவதும், வீட்டிற்கு செல்வதும் நித்திரை கொள்வதும் அல்ல. ஒரு வாழ்க்கையில் இதைவிட அதிகமான விடயங்கள் உள்ளன. சமூகமயமாகுவதற்கு, கேளிக்கை பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கு, உடற்பயிற்சிக்கு, ஓய்வுக்கு என உங்களுக்கு நேரம் வேண்டும். உங்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

* ஒரு நபர் கண்விழித்து இரவு முழுதும் வேலை செய்பவராக இருந்தால் அவர் கடுமையாக உழைப்பவரென்று அர்த்தமில்லை. அவர் தனது வேலையை குறிப்பிட்ட நேர வரையறையில் திட்டமிட்டு சரியாக நிர்வகித்துக்கொள்ள தெரியவில்லை என்று அர்த்தம். அவர் சொந்த மற்றும் சமூக வாழ்க்கை என்று எதுவுமில்லாத தோல்வியடைந்த ஒருவரென்று அர்த்தம்.

* நீங்கள் கடுமையாக படித்ததும் வாழ்க்கையில் போராடியதும் இயந்திரமயமான அர்த்தமற்ற ஒரு வாழ்க்கைக்காக அல்ல.
பணத்திற்காக குடும்பத்தினை இழப்பதா இல்லை தொழிலே குடும்பம் என எண்ணுகின்றீர்களா நல்ல முடிவை நீங்களே தீர்மானியுங்கள்.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் சாம்பியன்!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் 21வது ஆண்டினை முன்னிட்டு 14 வயதுப் பிரிவினருக்கு நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

IMG_0423 IMG_0426

மாணவியை துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த இளைஞர்கள் கைது!!

Abuse

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் அதனை ஒளிப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர்.

மாணவி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டி மாணவியை அச்சுறுத்தியுள்ள இளைஞர்கள் சிலர், அவரை தமது நண்பர்களுடன் இணைந்து விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதுடன் அதனை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

மாணவியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன், தந்தை பாடசாலை வான் சாரதியாக பணியாற்றி வருகிறார்.

மாணவி, தனது பாட்டியுடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மாணவியையும் இளைஞர்களையும் படம்பிடித்த இளைஞர், விடுதியின் முகாமையாளர் மற்றும் எடுக்கப்பட்ட விடியோவை வைத்திருந்த இளைஞர் ஆகியோர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தொடங்கொட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

முன்னாள் புலி உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு!!

ltte

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் தற்போது பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில் இணைந்து பணிபுரிவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.