இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,900 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4900 அமெரிக்க டொலர்களை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,917.65 டொலர்களாக பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போதைய புவிசார் அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என சொல்லப்படுகிறது.

இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் விலைக்கு ஏற்ப, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 96.58 டொலர்களாக உயர்ந்துள்ளதுடன் பிளாட்டினத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை 5,000 டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நுவரெலியாவில் நிகழ்ந்துள்ள அதிசயிக்கத்தக்க மாற்றம் : குவியும் வெளிநாட்டவர்கள்!!

நுவரெலியாவில் வழக்கத்திற்கு மாறாக பொழியும் துகள் உறைபனி காரணமாக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் துகள் உறைபனி பொழிந்து வருகின்றது.

இன்றும்(23) மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையாக துகள் பனிப்பொழிந்துள்ளதுடன், அதிகாலை வேலைகளில் மாவட்டமும் முழுதும் பனியால் சூழப்பட்டு காணப்படுகின்றது.

இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த துகள் பனிப்பொழிவு காரணமாக மலையகத்தில் மரக்கறிச் செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தய திடல், கிரகரி வாவிக் கரையோரம் ஆகிய இடங்களில் அதிக துகள் பனிப்பொழிவு காணப்படுகின்றது.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் புகைப்படம் எடுத்தும் ரசித்தும் ஆச்சரியமாக பார்வையிட்டும் வருகின்றனர்.

இதேவேளை இந்த நாட்களில் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்து.

குறிப்பாக மாலை 5 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 9 மணி வரை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

டிக்டொக் உறவினால் வங்கி ஊழியருக்கு ஹோட்டலில் காத்திருந்த அதிர்ச்சி!!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட நெருங்கிய உறவில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் பெருந்தொகை பணம், நகைகளை இழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய, பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்த நண்பர், கடந்த 19 ஆம் திகதி இரவு, பொரலஸ்கமுவ, கட்டுவாவலவில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னை சந்தித்ததாகவும்,தன்னை ஒரு வகையான வாசனை திரவியத்தை சுவாசிக்க செய்து மயக்கமடைய செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறுநாள் கண் விழித்தெழுந்தபோது, ​​தான் அணிந்திருந்த மூன்றரை பவுண் தங்க நகைகள், வங்கி அட்டை மற்றும் 258,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டை, படுஹேன பகுதியில் வசிக்கும் முன்னணி தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை : வெளியான தகவல்!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) மாலை முதல் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவில் மற்ற பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலையில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம் : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நபர் ஒருவரின் மரணம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், அருகில் இருந்த ஆண், அவரிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்து காணொளி ஒன்றினை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, குறித்த ஆண் தொடர்பில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டிய நிலையில் அந்த நபர், தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்விடயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவதுடன் காணொளி வெளியிட்ட பெண் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விடயம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பகிரும் வகையில் வருகின்றத பின்வரும் காணொளி,

 

சிறையில் மலர்ந்த காதல் : இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம்!!

ராஜஸ்தானில் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் திறந்தவெளி சிறையில்(Open jail) கொடூரமான கொலை குற்றத்திற்காக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் மற்றும் ஹனுமன் பிரசாத் என்ற இரண்டு கைதிகளும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக முன்பு தொடங்கிய இவர்களது காதல் கதை தற்போது திருமணத்தில் முடிய உள்ளது. திருமணத்திற்காக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தற்போது இருவருக்கும் 15 நாட்கள் அவசரகால பரோல் வழங்கியுள்ளது.

இருவரும் அல்வார் மாவட்டத்தில் உள்ள பரோடமேவ் பகுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ள இருவரும் கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் மாடலான பிரியா சேத் மீது 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர கொலை குற்றமும், ஹனுமன் பிரசாத் மீது 2017ம் ஆண்டு 5 பேரை கொன்ற மோசமான கொலை குற்றமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொலை குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கி இருப்பது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் திறந்தவெளி சிறை விதிகளின்படி, கைதிகள் தங்களது சமூகத்துடன் இணைவதற்கும் மீண்டும் மறுவாழ்வு அமைத்து கொள்வதற்கும் சட்ட வாய்ப்புகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பரோலில் விடுவிக்கப்படும் இவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிறைக்கு திரும்பி ஆயுள் தண்டனையை கழிக்க வேண்டும்.

11ம் வகுப்பு மாணவி பாடசாலை விடுதியில் மர்ம மரணம் : பெற்றோர் புகார்!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கல்லேக்காடு பகுதியில் உள்ள பிரபல பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவி ருத்ராவின் மரணம், கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஒட்டப்பாலம் வரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷின் மகள் ருத்ரா (16). இவர் கல்லேக்காட்டில் உள்ள வியாச வித்யா பீடம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில், சக மாணவிகள் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்குத் திரும்பியுள்ளனர். அப்போது ருத்ரா அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று போலீசார் தெரிவித்தாலும், மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்யத் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ருத்ராவின் தந்தை ஊடகங்களிடம் பேசுகையில், “எனது மகள் விடுதியில் உள்ள மூத்த மாணவர்களின் (Seniors) ராகிங் கொடுமை குறித்துப் பயப்படுவதாக ஏற்கனவே எங்களிடம் கூறி வருத்தப்பட்டார்.

இது சாதாரண தற்கொலை அல்ல” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது மகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, கேரள முதலமைச்சருக்கு அவர் புகார் அளித்துள்ளார்.

குடும்பத்தினரின் ராகிங் புகார்களைப் பள்ளி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. பள்ளியில் அத்தகைய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

போதையில் தூங்கிய கணவர் : கயிற்றால் கொலை செய்து நாடகமாடிய மனைவி!!

ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்த சுதீர் ரெட்டிக்கும், அவரது மனைவி ஞான பிரசன்னாவுக்கும் இடையே சந்தேகத்தால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தினமும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுதீர் ரெட்டி, மனைவியின் நடத்தையைப் பற்றி தவறாக பேசி தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவர் தூங்கியதும், ஆத்திரமடைந்த ஞான பிரசன்னா கயிறால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, கணவர் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடி உறவினர்களை நம்ப வைக்க முயன்றுள்ளார்.

ஆனால், சுதீர் ரெட்டியின் சகோதரி அளித்த புகாரால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஞான பிரசன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றம்!!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையின் இன்றைய (23) குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா வானிலை நிலையத்தில் 5.0 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது. நேற்று அங்கு 3 பாகையாக செல்ஸியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இன்று அதிகாலை ஏனைய பகுதிகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையின் படி, பண்டாரவளை: 12.5°C, பதுளை: 14.8°C ஆக பதிவானது.

முதலாம் இணைப்பு : 25 ஆண்டுகளின் பின்னர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இவ்வளவு குறைந்தபட்ச மதிப்பு பதிவாகியுள்ளது. நுவரெலியாவில் நேற்று அதிகாலையில் கிரெகரி ஏரி, ரேஸ்கோர்ஸ், கோல்ப் மைதானம் மற்றும் விக்டோரியா பூங்கா, காய்கறி வயல்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உறைபனி விழுந்தது.

காற்றின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. மேலும் வடக்கிலிருந்து நாட்டிற்குள் நுழையும் குளிர்ந்த, வறண்ட காற்று இதற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானத்தில் மேகங்கள் இல்லாத போது பூமி பகலில் நன்றாக வெப்பமடைந்து. இரவில் நன்றாக குளிர்ச்சியடைகிறது. இது வெப்பநிலையை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இன்றைய தினம் காற்றின் வடிவம் மாற்றமடையும். கிழக்கில் இருந்து வீசும் காற்று காரணமாக இந்த நிலைமை மாறும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் கூறினார்.

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் எனவும் மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

 

காதல் விவகாரத்தால் உயிரை மாய்த்த இளைஞன் : தமிழர் பகுதியில் சம்பவம்!!

காதல் விவகாரத்தால் 24 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அம்பாறை காரைதீவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை காரைதீவு புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பூஜை அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன் புதன்கிழமை(21) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் புதன்கிழமை(21) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த 24 வயது இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இளைஞனின் மரணம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து : அரச உத்தியோகஸ்தர்களுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் பயணித்துள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைதுள்ளனர்.

இந் நிலையில் , விபத்து மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2026ல் உலகம் மாற்றம் : அதிர்ச்சியை கிளப்பிய பாபா வாங்காவின் கணிப்புகள்!!

2026- ஆம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 2026-ல் மிகப் பெரிய போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாபா வாங்கா கணித்து வைத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் AI தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியைக் காணும். ஆனால் அது மனித வாழ்க்கைக்கு ஒரு பெரிய சவாலாக மாறக்கூடும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவும் என்றும் கணித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்களுடன் மனிதர்கள் முதல் முறையாகத் தொடர்புகொள்வார்கள் என்று அவர் கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு பெரிய விண்கலம் பூமிக்குள் நுழையக்கூடும் என்பதும் இதில் அடங்கும்.

மனித வரலாற்றில் முதல் முறையாக, வேற்றுகிரகவாசிகளுடன் நேரடி தொடர்பு சாத்தியமாகும் என்பது அவரது மிகவும் வியக்கத்தக்க கணிப்பு. இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்று. மேலும், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.

எதிர்காலத்தில் மனிதர்கள் மிகவும் சிறியதாயினும், மிக சக்திவாய்ந்த ஒரு மின்னணு சாதனத்தை முழுமையாகச் சார்ந்து வாழத் தொடங்குவார்கள்.

அந்தச் சாதனம் மனிதர்களின் தினசரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல, ஒருவருடன் ஒருவர் பழகும் முறையையும், அவர்களின் மனநிலையையும் மாற்றும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

என் உயிரில் பாதியான உன்னை கொன்று விட்டேனே : மனைவியை கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!

தெலுங்கானாவில் மனைவியை கொன்று என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயுலு. கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 34). தம்பதிக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

சரஸ்வதி ஹைடெக் சிட்டி ப்குதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர்களது குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த சரஸ்வதி இனி உன்னுடன் வாழ முடியாது என கூறி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கணவன் தான் திருந்தி விட்டதாகவும், இனி தவறு செய்ய மாட்டேன் என வாக்குறுதி அளித்து மனைவி, குழந்தைகளை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சம்பவதினத்தன்று தூங்கிக் கொண்டு இருந்த மனைவியின் தலையில் பலமுறை கல்லால் தாக்கினார். இதில் சரஸ்வதியின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சரஸ்வதியின் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த அவரது குழந்தைகளின் உடைகளும் ரத்தத்தில் நனைந்தது. அப்போது குழந்தைகள் கண்விழித்த போது உங்களது தாய் தூங்கிக் கொண்டு இருக்கிறார்.நீங்களும் தூங்குங்கள் என தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.

தந்தையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குழந்தைகள் விளக்கை போட்டு பார்த்த போது, தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கதறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஆஞ்சநேயுலு என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆஞ்சநேயுலு வை தேடி வருகின்றனர்.

சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிசார்!!

காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பண்டாரகம , வீரகெப்பெத்திபொல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி 2025.12.19 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக பண்டாரகம கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெயர் – கரநாயக்ககே ஹசதி திவெத்மி, வயது – 15 , முகவரி – இல. 89/03/03, வீரகெப்பெத்திபொல மாவத்தை , பண்டாரகமை

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் 071 – 8591681 அல்லது 038 – 2290222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய நடிகை : விளாசும் இணையவாசிகள்!!

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya வை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

நடிகையின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்றும், இந்த சம்பவத்திற்கு நடைகை மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளிவந்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள மேடாரம் பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்தி கடனாக அம்மனுக்கு வெல்லத்தை எடைக்கு எடை துலா பாரம் செலுத்துவது ஐதீகம். இப்பண்டிகையை கொண்டாட தெலங்கானா அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

இவ்வளவு பிரசித்தி பெற்ற அம்மன் விழாவிற்கு “கமிட்டி குர்ரோள்ளு’ ‘ப்ரீ வெட்டிங் ஷோ’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை யான டீனா ஸ்ரவ்யாDeena Sravya , தனது தாயார் மற்றும் நாய்க்குட்டியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர், தனது செல்ல நாய்க்குட்டிக்கு எடைக்கு எடை வெல்லத்தை நேர்த்தி கடன் செலுத்தினார்.

இது தற்போது விவாதமாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதால், பக்தர்கள் நடிகையின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் நடிகையின் தாயார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளை தங்களின் பிள்ளைகளை போல் பாவித்து வளர்த்து வருவர். அதுவும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினர்தான்.

அதனால் தான் அதற்கு சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் போனது. அதனால் தான் அம்மனுக்கு எடைக்கு எடை வெல்லம் கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இது கோயிலையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் செயல் என நடிகையின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொடூரமாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய இலங்கையருக்கு விசா!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார்.

42 வயதான தரங்க எஹலபே கமகே என்ற இலங்கையரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தரங்க ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது ஐந்து வயது மகள் மற்றும் 70 வயதுடைய தாய் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 2022 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அவுஸ்திரேலியக் குடிவரவு சட்டத்திற்கமைய, அவரது வதிவிட விசா இரத்து செய்யப்பட்டது.

எனினும் இந்த விசா ரத்துக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர் ஜான் ராவ், இலங்கையரின் வதிவிட உரிமையை மீண்டும் வழங்கியுள்ளார்.

விபத்திற்கு மேலதிகமாக அவருக்கு எதிராக இருந்த குடும்ப வன்முறைப் பின்னணி இந்த வழக்கில் பெரும் சவாலாகியுள்ளது. அவர் தனது மனைவியைத் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியது மற்றும் முகத்தில் குத்தியது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் போது, தான் இனிமேல் வன்முறையில் ஈடுபடமாட்டேன் எனவும் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிலையில் அவரது மனைவியும் அவருக்கு ஆதரவாகக் கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாய உறுப்பினர், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன் எனக் கூறி, அவர் மீண்டும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு மிகக் குறைவு என்ற அடிப்படையில் விசா வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு அவுஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறைப் பின்னணி கொண்ட ஒருவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.