இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!!

இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk Job) பணிபுரிபவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் நாட்டில் சுமார் 1.83 மில்லியன் பணியாளர்களின் தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இலங்கையில் பணிபுரியும் மக்களில் சுமார் 22.8% பேர் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் வேலை இழந்துள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

உலக சந்தை வரலாற்றில் உச்சம் தொட்டிருந்த தங்க விலையில் திடீர் மாற்றம் : இலங்கையில் பதிவான நிலவரம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (22.01.2026) காலை 4790 டொலர்களாக பதிவாகியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 4800 என்ற எல்லையைத் தாண்டிய உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று இந்த சரிவு நிலை பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, நேற்று (21) ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்திருந்தது. இருப்பினும், இன்று (22) தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 381,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் (21.01.2026) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 385,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 356,125 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் விற்கும் விலையில் நகைக் கடையில் நூதன திருட்டு : காட்டிக்கொடுத்த சிசிடிவி!!

ஹட்டன் நகரில் இயங்கும் தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் வந்த நபர் ஒருவர் 2,85,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பித்துச் சென்ற சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள நகை கடையொன்றில் வியாழக்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டுள்ளார்.

பின்னர் ஒரு சங்கிலியை பார்த்து கொண்டிருப்பது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென கடையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த மர்ம நபரின் செயற்பாடுகளும் தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புகாரின் பேரில் சிசிடிவி காட்சியை வைத்து திருட்டு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணமான 2 வாரத்தில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

லக்னோ மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், சட்டங்கள் பல இருந்தாலும் இன்னும் வேரூன்றி இருக்கும் வரதட்சணை என்னும் சமூக அவலத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஜந்தம்பூர் பகுதியைச் சேர்ந்த நேஹா (20) என்ற இளம்பெண்ணிற்கும், விவேக் (24) என்பவருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்த நிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, நேஹாவின் கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

கணவர் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் நெருக்கடியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நேஹா, நேற்று மாலை தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நேஹாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் விவேக், மாமியார் மீனா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேஹாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (Dowry Prohibition Act) கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 வயதுக் குழந்தை தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்–பவானி தம்பதியரின் மகன் சஞ்சீவ் மித்ரன் (3).

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலையடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சஞ்சீவ் மித்ரன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியை உருக்கச் செய்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிளிநொச்சியில் தலை கீழாக கவிழ்ந்த வேன்!!

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய கனரக வாகனம்!!

கிளிநொச்சி ஏ-09 வீதியின் மத்திய கல்லூரிக்கு முன்பாக கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம் (20.1.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த நவம்பர் மாதம் திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்க முற்பட்ட இளம் குடும்பஸ்தரை மோதி விபத்துக்குள்ளாக்கி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் நேற்று முன்தினம்(19) நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பிணைமுறியில் விடுவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கனரக வாகனத்தை இன்று காலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மற்றுமொரு கனரக வாகனத்தில் இழுத்துச் சென்ற சமயம் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரன் மீது இந்த வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். குறித்த விபத்தானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலை முயற்சியாக இருக்கலாம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஒன்றின் பின் ஒன்றாக அழைத்து வரப்பட்ட கனரக வாகனங்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் பொதுமக்கள் இணைந்து வாகனங்களை வழிமறித்தனர்.

அத்துடன்அங்கு அமைதியின்மை ஏற்பட்டத்துடன் நீண்ட நேரத்துக்கு பின்னர் பொலிஸார் குறித்த கனரக வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆரம்பகட்ட விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

தங்க நகை அணிந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை : தமிழ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கேகாலை – தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 25 வயதுடைய பெண், ஹெட்டிமுல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த தனது சகோதரரின் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர் ஒருவரால் இவர் வழிமறிக்கப்பட்டுள்ளார்.

எவுங்கல்ல பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை வைத்து வீதியை மறைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது.

போது, காட்டு பகுதியில் இருந்து வந்த இளைஞன் ஒருவன் நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இரண்டு பவுண் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பென்டன் ஆகியவையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழியாக வரும் போது முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் தன்னைச் சந்தேகத்திற்கிடமான முறையில் முந்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக சந்தையில் வரலாற்று சாதனையை பதிவு செய்த தங்கத்தின் விலை : இலங்கையிலும் திடீர் மாற்றம்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையிலும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, தங்கத்தின் விலை இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாவால் அதிகரித்த நிலையில் இரண்டாவது முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 5,000 ரூபாவால் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 385,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,125 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இன்று (21) 4,800 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து வரலாற்று சாதனை அளவை தாண்டியுள்ளது.

 

நேற்றைய தின இறுதியில் 4,730 டொலர்களாகக் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் 4,800 டொலர்களை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நாடுவதால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இன்று காலை தங்கத்தின் மொத்த விலையில் 10,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இன்று, ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 351,500 ஆகவும், “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 380,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெருவில் பிச்சைக்காரர், பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி : அதிகாரிகள் அதிர்ச்சி!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான “பிச்சைக்காரர்” ஒருவர் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர் வீதிகளில் பிச்சை எடுப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு ரிக்சா வண்டி ஒன்றில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த “மங்கிலால்” (Mangilal) என்ற மாற்றுத்திறனாளியை மீட்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த உண்மைகள் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அதாவது, மங்கிலாலுக்கு பகத்சிங் நகரில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்றும், சிவ் நகரில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட மற்றொரு வீடும் சொந்தமாக உள்ளன.

அதுமட்டுமல்லாது , மங்கிலால் ஒரு Swift Dzire சிற்றூந்தை சொந்தமாக வைத்துள்ளார். இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தச் சிற்றூந்தை ஓட்டுவதற்கு அவர் மாதாந்த வேதனத்திற்கு ஒரு ஓட்டுநரையும் பணியமர்த்தியுள்ளார்.

பிச்சை எடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு (இந்திய மதிப்பில்) 500 முதல் 1000 ரூபாய் வரை ஈட்டும் இவர், அந்தப் பணத்தைக் கொண்டு அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

இதற்காக வாராந்திர மற்றும் தினசரி வட்டியை வசூலித்து வந்துள்ளார். ஏற்கனவே பல வீடுகள் இருந்தும், தனது உடல் ஊனத்தைக் காட்டி “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் மற்றொரு வீட்டையும் பெற்றுள்ளார். மேலும் மூன்று முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், தகுதியற்ற ஒருவருக்கு எவ்வாறு அரசுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டது என்பது குறித்தும், அவரது சட்டவிரோத வருமானம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , அவர் குறித்த தகவல்கள் பேசுபொருளாகியுள்ளது.

சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த உயர் பதவி : குவியும் வாழ்த்துக்கள்!!

சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர், செயின்ட் கேலன்(St. Gallen) நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

நாடாளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கியுரைத்துடன் தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது.

திருமதி உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கைப் பெண்!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த அழகிப் போட்டியானது, உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் பங்கேற்புடன் நாளை (22) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சபீனா யூசுப்பை வழியனுப்பி வைக்க உறவினர்கள் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திருமணமான அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமந்தா உள்ளிட்ட பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக கூறப்படுகின்றது.

பிக்பாஸ் பிரபல நடிகை சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா : கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை Shefali Jariwala சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி ஜரிவாலா, இவர் ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து Shefali Jariwala , Bigg Boss 13-ல் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் ஹர்மீத் சிங்கை திருமணம் செய்த ஷெபாலி, குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2008 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர், நடிகர் Parag Tyagi உடன் நான்கு ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர், 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி, Mumbai யில் உள்ள தனது இல்லத்தில் ஷெபாலிக்கு திடீரென ரத்த அழுத்தம் மிகவும் குறைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேவேளை ஷெபாலி முதுமையைத் தடுப்பதற்கான ஊசிகளை பயன்படுத்தி வந்ததாகவும், சம்பவ நாளில் பூஜைக்காக உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், தற்போது கணவர் பராக் டயாகி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை சிலர் சூனியம் வைத்து கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “கடவுள் உள்ள உலகில் பிசாசும் உள்ளது. சிலர் தங்களின் துன்பங்களை விட, பிறரின் மகிழ்ச்சியைப் பார்த்து அதிக வேதனைப்படுவார்கள்.

என் மனைவி ஷெபாலிக்கு யார் சூனியம் வைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை இப்போது வெளியே சொல்ல முடியாது,” என கூறியுள்ளார். எங்களுக்கு இரண்டு முறை சூனியம் வைத்தார்கள்.

முதல்முறையை எங்களால் சமாளித்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இரண்டாவது முறை மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாகன சந்தையில் புதிய மாற்றம் : வாகனங்களின் தேவை அதிகரிப்பு!!

இலங்கையின் வாகன சந்தையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன.

சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளன.

இதன்படி நவம்பரில் 43,810 ஆக இருந்த வாகனப் பதிவுகள், டிசம்பரில் 48,525 ஆக உயர்ந்துள்ளன. மொத்தப் பதிவுகளில் 93.9% வாகனங்கள் 1,000 cc க்கும் குறைவான இயந்திர திறன் கொண்டவை அல்லது 100 kW க்கும் குறைவான மின்சார மோட்டார் திறன் கொண்ட சிறிய வாகனங்களாகும்.

அத்துடன் புதிய சிற்றூந்து பதிவு நவம்பரில் 781 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 1,150 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் BYD 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது. இதனையடுத்து BAW இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது டிசம்பரில் 247 E7 சிற்றூந்துகளைப் பதிவு செய்ததே இதற்குக் காரணம். மேலும் Toyota மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. Wigo சிற்றூந்துகளின் (185) பெரும் பங்களிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளின் பதிவு நவம்பரில் 2,910 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 3,857 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 95% ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இந்த வாகனங்களுக்காக நிதி வசதி (Leasing) பெற்றவர்களின் விகிதம் 52.8% ஆகும். இதன்படி Suzuki 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அத்துடன் வேகன் ஆர் (Wagon R) 1,026, ஸ்பேசியா (Spacia) 227 மற்றும் ஆல்டோ (Alto) 115 பதிவு செய்துள்ளது. மேலும் டொயோட்டா (Toyota) 1,021 வாகனங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, எச்சரிக்கையை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன.

பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், கூட்டு மின்சார சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதேவேளை இலங்கை மின்சார சபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதாகவும் மின்சாரசபை சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமான நிலையத்தில் சிக்கிய லண்டன் வாழ் இலங்கை வர்த்தகர் : ஆள்மாறாட்டம் அம்பலம்!!

இந்திய விமான நிலையத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பெங்களுர் விமான நிலையம் ஊடாக பயணிக்க முற்பட்ட வேளையில் 52 மற்றும் 25 வயதான இலங்கைத் தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தனித்தனி டிக்கெட்டுகளில் பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

குடிவரவு மற்றும் பாதுகாப்புச் சோதனைகளைத் தனித்தனியாக முடித்த பிறகு, ஆண்கள் கழிவறையில் வைத்து லண்டன் போர்டிங் பாஸை சருசனிடம் இரகசியமாக வழங்கியுள்ளார்.

பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் இருந்த நிலையில், 25 வயதான மற்றைய இளைஞனின் அவரின் போர்டிங் பாஸினை கொண்டு லண்டன் செல்லும் விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியுள்ளார்.

இதனையடுத்து பெங்களுரில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்காக 8 மணிநேரம் விமான நிலையத்தில் பிரித்தானிய வாழ் இலங்கையர் காத்திருந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகி உள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 25 வயதான இளைஞன் தரையிறங்கிய நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.