குறைந்து வரும் Y குரோமோசோம்கள் : இனி ஆண் குழந்தையே பிறக்காதா அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!!

மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். இந்நிலையில் எதிர்காலத்தில் ஆண் குழந்தைகள் பிற்றக்காத நிலை ஏற்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது.

தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர்.

அதாவது, ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறதாக ஆராய்ச்சியின் முடுவுகள் ஊடாக தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் விபரீத முடிவெடுத்த இலங்கைத் தமிழர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.

இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார்.  எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைதான போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகனுக்கு பிணை!!

போதைப்பொருள் வியாபாரி என கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக்கிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது STF அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் அலியின் மகன் நதின் பாசிக் அலி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் நேற்று (27) இரவு டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வருகை முன்னுரிமை அடிப்படையில் இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம்!!

நேரம் மற்றும் திகதியை முன்கூட்டியே பதிவு செய்து கடவுச்சீட்டுக்களை வழங்கும் முறை இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வருகை முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முறையின் மூலம் நாளொன்றுக்கு 750 கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் நேற்று (27) காலை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக திரண்ட பெருமளவான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதன் காரணமாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திரண்ட உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக இந்த கட்டுப்பாடு அவசியமானது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

மின்சாரம் தாக்கிய கணவரைக் காப்பாற்றி இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

ஆந்திர மாநிலம், பத்ராத்திரி மாவட்டம் கொத்தகுடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவரை காப்பாற்றிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கியதில் இருந்து கணவரை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் பத்ரதாரி கொத்தகுடேம் மாவட்டத்தில் பாண்டுரங்கபுரம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்வேஷ். இவருடைய மனைவி சம்மக்கா.

இந்த தம்பதியர் தங்களது மளிகைக் கடையில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, சர்வேஷ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்ற சம்மக்கா தனது கணவரை மீட்க முயன்றார்.

உடனடியாக சம்மக்காவையும் மின்சாரம் தாக்கியது. ஆனால், கட்டையால் தள்ளி விட முயன்றதில், சர்வேஷ் மின்சார தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

உடனடியாக சம்மக்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மனுகுரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, சம்மக்கா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் பேருந்தில் இளம்பெண் மாரடைப்பால் மரணம்!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நிட்டவோலுவைச் சேர்ந்த இளம்பெண் ஹர்ஷா.

இவர் படித்து முடித்து விட்டு மஸ்கட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் விஜயவாடாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கோதாவரி செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

தன்னுடைய மகள் நீண்ட நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறார் என்று ஹர்ஷாவின் பெற்றோரும், உறவினர்களும் அவரது வருகைக்காக காத்திருந்தனர். விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன்பாக தனதுச் செல்போனில் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

பேருந்தில் ஹர்ஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. இது குறித்து பேருந்தில் அமர்ந்திருந்த பிற பயணிகள் உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், சிறிது நேரத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேருந்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது, ஹர்ஷா மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.பேருந்தின் பயணிகளிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு மேய்த்துக் கொண்டே படித்து மருத்துவ கனவை நனவாக்கிய மாணவர்கள்!!

ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளனர்.

தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்களில் ஒரு மாணவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொரு மாணவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ந்து மருத்துவ கனவை நனவாக்கி வருகின்றனர்.

இதன்படி, கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 622 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒரே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ரவி மற்றும் நாகராஜ் ஆகியோர் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.

இதில் நாகராஜ் என்ற மாணவர் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த மாணவர் ஆடு மேய்த்துக் கொண்டே படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.

அதேபோல, ரவி என்ற மாணவர் நீட் தேர்வில் 592 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதே கல்லூரியில் தேர்வாகியுள்ளார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தருண் என்ற மாணவர் 633 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து : மூவர் படுகாயம்…!!!

மன்னார்(Mannar) உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (27.08.2024)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது காயமடைந்தவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரிய வருகிறது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

மீரிகம பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த போது தன்னை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பொலிஸாரிடம் பொய் முறைப்பாடு செய்த பெண் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல பதில் நீதவான் சமித லால் கொடிசிங்க உத்தரவிட்டார்.

மீரிகம பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றில் வசிக்கும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்த தன்னை பலவந்தமாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீரிகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்தப் முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, தனிப்பட்ட கோபத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பொய் முறைப்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.

இங்கு, குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பொய் முறைப்பாடு செய்தமைக்காக முறைப்பாட்டாளரைக் கைது செய்து விசாரணை அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மீரிகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதற்கமைய, பொய் புகார் அளித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கமைய, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

 

வெளிநாட்டில் மலர்ந்த காதல் : காதலியை தேடி இலங்கை வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை காதலியை பார்வையிட வந்த இந்திய பிரஜையான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மல்வானே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரேபிய நாடான துபாய்க்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைபெண் , அங்கு வேலை இந்திய வாலிபர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். சம்பவத்தில் மல்வானே – வல்கம பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஜூன் 20ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். பெண்ணின் காதலனான இந்திய பிரஜையும் அவருடன் இலங்கைக்கு வருகை தந்து மல்வானே– வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யவுள்ள இந்திய பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணையும் அவரது காதலனான இந்திய பிரஜையையும் பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது இலங்கையில் தங்கியிருந்த காதலனின் விசா செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர் விசா நீடிப்பை பெற்றிருந்த நிலையில் அக் காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் காதலன் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்திய பிரஜையை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

வவுனியாவில் சிறிசபாரத்தினத்தின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு!!

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 72வது பிறந்ததினம் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் குறித்தநிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவளார்கள் கலந்துகொண்டனர்.

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக ஐந்து நாட்களாக வீதியில் நிற்கும் மக்கள் : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா மன்னார் பிரதான வீதியில் அமைந்துள் பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக இன்று (28.08.2024) காலை 10.30 மணியளவில் நீடித்த அசாதாரண நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் சாதாரண சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக வரிசையில் நின்றும் தமக்கும் இதுவரை கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து திணைக்கள காரியாலயம் முன்பாக குழப்ப நிலமை ஏற்பட்டது.

அதனையடுத்து வவுனியா பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவ்விடத்தில் நிலவிய அசாதணை நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளை திணைக்கள வாயில் முன்பாக வரவழைத்து வரிசையில் நின்ற மக்களுக்கு தற்போதைய நிலமை தொடர்பில் தெளிவூட்டல் வழங்கப்பட்டமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் கடவுச்சீட்டினை நாளையதினம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் காத்திருக்கின்றமையுடன் சாதாரண சேவையின் கீழ் மார்ச் மாதம் விண்ணப்பித்து கடவுச்சீட்டு பெறாதவர்கள், வெளிநாட்டியிலிருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு கலாவதியானவர்கள்,

மாணவர்கள், சகோதரர்களின் திருமணத்திற்கு செல்லவுள்ளவர்கள், வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு ஆவணம் கிடைத்தும் கடவுச்சீட்டு இல்லாதவர்கள் என பலரும் இவ்வரிசையில் காத்திருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மாணவியை கடத்திய இளைஞனை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!

புத்தளத்தில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலுக்கட்டாயமாக 15 வயதான மாணவியை கடத்திச் சென்றதாக 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்மைல்புரம் பகுதியை சேர்ந்த ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற மகள் திரும்பி வரவில்லை என அவரது தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, செயற்பட்ட பொலிஸார், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவியையும் சந்தேக நபரான இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

காதல் உறவின் அடிப்படையில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த தம்பதியினர்!!

IAS தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தை அனைவரும் புகழ்ந்து பேசும்படி நடத்த வேண்டும் என்பது தான் பலரது எண்ணமாக இருக்கும். அதுவும், கடன் வாங்கியாவது பெரிய நிகழ்வாக சிலர் நடத்துகிறார்கள்.

திருமணத்திற்கு செய்யப்படும் செலவு தற்போதைய காலத்தில் மிகவும் அதிகமாக மாறிவிட்டது. கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர்.

ஆனால், இதற்கெல்லாம் மாற்றாக தம்பதியினர் ஒருவர் மிக குறைந்த செலவில் தங்களுடைய திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தியாவின் உயர்நிலை பதவியான ஐ.ஏ.எஸ். பதவியில் இருக்கும் தம்பதியினர் தான் மிக எளிமையான முறையிலும், குறைந்த செலவிலும் திருமணத்தை முடித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்ட். பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர் சலோனி சிதானா. இவர்கள் இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவர்.

இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கேயே தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இவர்கள், தங்களது குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். மாலையை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டதும் திருமண சடங்குகள் முடிந்தன.

மேலும், திருமணத்திற்காக இருவரும் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொண்டனர். மூன்றாவது நாள் இருவரும் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016 -ம் ஆண்டில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தகவல் பரவி வருகிறது.

 

தண்டவாளத்தில் குடை பிடித்து உறங்கிய நபர்!!

தண்டவாளத்தில் குடை பிடித்து அசந்து தூங்கிய நபரை கண்டதால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.

பொதுவாகவே அனைவரும் காலையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பதால் எங்காவது சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். அதற்காக அமைதியாக இருக்கும் இடத்தையும், அழகாக இடத்தையும் தேர்வு செய்து அங்கு செல்வோம்.

இதில், சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என்று பல்வேறு விடயங்கள் உள்ளன. ஆனால், இங்கு நபர் ஒருவர் தண்டவாளத்தில் அசந்து தூங்கியுள்ளார்.

ரயில்வே தண்டவாளத்தில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடை பிடித்தபடியே அசந்து தூங்கியுள்ளார். இதனை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர், ரயிலில் இருந்து கீழே இறங்கி சென்று உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். இதையடுத்து தான் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த நபரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.