காதலியை பார்க்க சென்ற காதலன் பரிதாபமாக உயிரிழப்பு!!

சிலாபத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ள காதலியை சந்திப்பதற்காக சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நீர்கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்.

சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் தொடுவாவ வீட்டுக்கு வந்த அவர், கடையொன்றின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காதலியை சந்திப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

காதலன் வந்திருப்பதாக வீட்டின் உரிமையாளரிடம் காதலி கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார். காதலி உரிமையாளரிடம் கூரிய விடயத்தை அறியாத காதலன் தவறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

 

இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாகக் காட்டிக்கொண்டு வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது நடித்து மோசடி செய்யும் கும்பலின் செயற்பாடு என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, உங்கள் பேஸ்புக் பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் அல்லது செயலிழக்க செய்யப்பட்டால், பேஸ்புக் பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க அல்லது உங்கள் தகவலை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கிற்கான அணுகல் வெளி தரப்பினருக்கு அனுமதிக்கப்படும்.

இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முறைப்பாடுகள் பெரும்பாலும் Facebook பக்கங்களை கொண்டிருக்கும் சில வணிகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

வர்த்தக முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றார். அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து மிரள வைத்தார்.

அவற்றில் Juggling Tricks, Juggling Balls, அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல் போன்ற சாதனைகள் அடங்கும்.

அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது உள்ளிட்ட சாதனைகளையும் ரஷ் ஒரே நாளில் முறியடித்தார்.

டேவிட் ரஷ் (David Rush) தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். இதன்மூலம் அவர் “Serial Record Breaker” எனும் பெயரைப் பெற்றார்.

 

காலையில் காதல் திருமணம்.. மாலையில் இருவரும் கொலை.. நடந்த விபரீதம்!!

திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் உறவினர்களுடன் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர்.

இதனையடுத்து தனி அறையில் புதுமண தம்பதி இருவர் மட்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. பின்னர் ஒருவரையொருவர் கத்தியால் குத்தியுள்ளனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அனுமதிக்கப்பட்டஅவரும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற 7ம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து மரணம்!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற போது, மாணவி ​​கீழே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கிறிஸ்டலுக்கு வென்டிலேட்டர் ஆதரவில் சிகிச்சை தரப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி கிரிஸ்டல் உயிரிழந்தார்

மொட்டை மாடியில் பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன்(35).

இவரது மனைவி புவனேஸ்வரி(28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றநிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை, இவர்களின் வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் சென்றுக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி சடலமாகக் கிடந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடதிற்கு வந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

விபத்தில் சிக்கிய தம்பதி… குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த இளம்பெண்!!

தம்பதியர் விபத்தில் சிக்கிய நிலையில், கர்ப்பிணியாக இருந்த மனைவி, குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருவுக்கு தம்பதியர் திரும்பி சென்றுக் கொண்டிருந்தபோது, ​​விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுநாத் லேசான காயம் அடைந்தார். அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து விபத்தைத் தவிர்ப்பதற்காக திடீரென நிறுத்தப்பட்டதால், மஞ்சுநாத் பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் சென்ற ஸ்கூட்டரை பின்னால் இருந்து எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. டிரக் டிரைவர் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஸ்கூட்டர் கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்தில் சிஞ்சனா விழுந்தார். பலத்த காயங்களுக்கு உள்ளான போதிலும், அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் அவரும் பிறந்த குழந்தையும் சில நிமிடங்களில் இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெலமங்களா போலீசார், லாரி டிரைவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.விபத்து நடந்த இடத்தை காவல் கண்காணிப்பாளர் சி.கே.பாபா பார்வையிட்டு நிலைமையை பார்வையிட்டார். இந்த இடம் அதிக ஆபத்துள்ள பகுதியாகும், கடந்த ஆறு மாதங்களில் 90க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.

மருத்துவமனையின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சுநாத், சிஞ்சனாவின் பிரசவ தேதி ஆகஸ்ட் 17ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். “எங்கள் நிறுவனத்திற்கு மற்றொரு கிளை உள்ளது, மேலும் நான் வீட்டை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருக்கக்கூடாது என்பதற்காக நான் அங்கு வேலை செய்யும்படி அவர் பரிந்துரைத்தார்.

இன்று நாங்கள் ஒன்றாக இருந்த கடைசி நாள், இரவு 9.30 மணிக்கு பேருந்தில் செல்வதற்கு முன், கோவிலில் அவருடன் சிறிது நேரம் செலவிட விரும்பினேன். யெடேஹள்ளிக்குப் பிறகு ஒரு தாபா அருகே நாங்கள் மெதுவாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​லாரி டிரைவர் வேகமாக வந்து எங்கள் மீது மோதிவிட்டார் என உருக்கமாக கூறினார்.

பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!!

சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பிரகாஷ். லாரி ஓட்டுநர்.

இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதன் பிறகு அதிசயாவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அதிசயா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ந்து போன அதிசயாவின் தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி அதிசயாவை அக்கிராமத்தில் உள்ள கிணறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தில் அன்றைய தினம் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் சிறுமி அதிசயா காணாமல் போனதால் எங்கு பார்த்தாலும் அழுகை குரலும் அலறல் சத்தமாக காணப்பட்டது. அக்கிராமமே சோகத்தில் மூழ்கி தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், மோப்பநாயை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிசயாவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பூட்டை கிராமத்துக்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார், சல்லடை போட்டு சிறுமி அதிசயாவை தேடி வந்தனர். பின்னர் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தான் அதே கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்களுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், அதில் ஒருவர் சம்பவத்தன்று தன்னை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார் என கூறினார். இதற்கு போலீசார், வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் தொடர்பான அடையாளத்தை கூறியுள்ளார்.

பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தபோது, சத்யா கூறிய தகவலுக்கும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளுக்கும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததை உறுதி செய்தனர்.

அதில் சத்தியா தான், அவரது மகளை அழைத்து சென்றது அதில் பதிவாகியிருந்தது. பின்னர் சத்தியாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தன் மகளை தானே கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தான் அதே ஊரில் உள்ள பல்வேறு நபர்களிடம் சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடன் வாங்கிய விவரம் தனது கணவருக்கோ, தனது குடும்பத்தினருக்கோ தெரியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

கடன் வாங்கியவர்களிடம் தான் கூறியிருந்த காலக்கெடுவும் முடிவடைய உள்ள நிலையில் குழந்தையை கொன்று விட்டால், கடன் கொடுத்தவர்கள் தன் மீது அனுதாபப்படுவார்கள், கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து, சம்பவத்தன்று எனது மகளை தானே அரசம்பட்டு சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்து எப்படி மகளை கொன்றார் என்பதை நடித்து காட்ட சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் போலீசாருக்கு நடித்து காட்டினார். பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை தவிக்கவிட்டு இளம் தம்பதி உயிரிழப்பு : அதிர்ச்சியில் அயலவர்கள்!!

காலி, அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அயல் வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதிகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் குழந்தையை தவிக்க விட்டு இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரத்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி :இலங்கையில் இப்படி ஓர் சம்பவம்!!

இலங்கையின் ஒரு பகுதியில் தொடருந்து சாரதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்திலே தொடருந்தை நிறுத்தி விட்டு கடையில் உணவு வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலே வெளியாகி வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் புகையிரத்தை கடவையில் நிறுத்தி வைத்து விட்டு பொது மக்கள் காத்திருக்க தொடருந்து செலுத்துபவர் உணவை வாங்கிச் செல்வதாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த செயலானது பொது மக்களிடையே தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி களனி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன், தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி, பெத்தியகொட, மாவெல்ல வீதியில் வசித்து வந்த தனிது சஸ்மித ரவிஹன்ச என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவிக்கையில்,

களனி தர்மலோக வித்தியாலயத்தில் உயர்தரம் வரை வர்த்தகம் கற்று, பின்னர் ஜப்பானிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த குறித்த இளைஞன், ஜப்பானின் நகோயாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அண்மையில் சென்றுள்ளார்.

“எனது மகன் இலங்கையிலிருந்து ஜப்பான் சென்று நான்கு மாதங்கள் ஐந்து நாட்கள் ஆகின்றன. சட்டரீதியாகவே அவர் சென்றார். ஜப்பானிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். மகனை இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு அனுப்ப 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

கடனுக்கு பணம் பெற்றே அவரை ஜப்பானுக்கு அனுப்பினோம். மகன் முல்லேரியா பகுதியில் உள்ள முகவர் ஊடாக ஜப்பான் சென்றுள்ளார்.

மகன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. மகன் உயிரிழப்பதற்கு முன்னர் 45 நிமிடங்கள் என்னிடம் பேசினார். எனது மகன் தனது முந்தைய வேலையை இழந்தார். மற்றுமொரு வேலைக்கான நேர்முகத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த ஐந்தாம் திகதி அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன். எனினும் எனது அழைப்பிற்கு பதில் இல்லை. அதன் பிறகு அவரே எனக்கு அழைப்பேற்படுத்தி நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றதாக கூறினார்.

கடந்த 6ஆம் திகதி ஜப்பானில் வாழும் எங்கள் அயல்வீட்டு பெண், மகன் உயிரை மாய்த்து கொள்வதாக தன்னிடம் கூறியதாக கூறினார்.

வட்அப்பில் பதிவிட்டிருந்தார், அதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார் என கூறிய நிலையில் அவரை மகனின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறினேின் அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மகனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்தேன். மகனின் சடலத்தைப் பார்க்க அரசாங்கம் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தாயார் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்!!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மன்னார், நாவற்குழி செல்லும் A-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

கம்பளை – அம்புலுவாவ மலைக்கு தவறான பாதையில் ஏறிச்சென்ற நபரொருவர் கல் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியோவிட்ட, முருத்தெட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த தமிந்த சமரதுங்க என்ற 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாயினால் வந்த சோதனை : வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்!!

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

இதனையடுத்து காலியில் உள்ள ஒருவர் நாய்க்குட்டியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து நாய்க்குட்டிகளின் உரிமையாளர் போல் நடித்த நபரை அழைத்துள்ளார்.

இதன்போது 20000 ரூபாய் முன்பணம் தேவை எனவும் வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார். அதற்கமைய, நாய் வாங்குபவர் இருபதாயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

பணத்தை வைப்பு செய்த பிறகு, நாயின் உரிமையாளர் மீண்டும் அழைத்து, OTP உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் என கூறினார்.

அந்த எண்ணைக் கொடுத்த மூன்று நிமிடங்களில், நாய் உரிமையாளர், கொள்வனவாளரின் கணக்கில் இருந்து மூன்று முறை 172,280 ரூபா பணத்தை எடுத்துள்ளார்.

பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர், இந்த மோசடி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் இவ்வாறான ஒன்லை விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

OTP இலக்கங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை!!

தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 12,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 500 ரூபாவாகவும் உள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களுக்கு அறிவித்துள்ளது.