வெளிநாட்டு மோகம் : யாழில் 6 கோடிக்கும் அதிக மோசடி : பல்கலைக்கழக அலுவலர் கைது!!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் ஏமாந்த யாழ்ப்பாண மக்கள் இந்த மோசடி தொடர்பில் , பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்திருந்தனர்.

கைதான பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணினை வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண் , பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களிடையே வெளிநட்டு மோகம் தலைதூக்கியுள்ளநிலையில் , இவ்வாறானவர்களிடம் ஏமாறச்வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியும் , அதனை பொருட்படுத்தாது பெரும் தொகையை யாழ் மக்கள் பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்!!

அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார்.

விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிக்கின்ற விடயம் இதனூடாக வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார். ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருமணத்திற்குப் பின்னரும் காதலை மறக்க முடியவில்லை… புதுமணப்பெண் காதலனுடன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 19 வயது அனுஷா . இவர் அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வேணு என்ற இளைஞருடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அனுஷாவால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் விரைவில் ஆடி மாதம் பிறக்க இருப்பதால் அனுஷா தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.

அங்கு தனது காதலனை சந்தித்த அனுஷா தான் தற்கொலை செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞரும் தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறி இருவரும் சேர்ந்து திட்டமிட்டனர்.

அதன் பிறகு இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை என்பதால் இப்படி ஒரு விபரீத முடிவை இருவரும் எடுத்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வாடகை கொடுக்க முடியவில்லை… மகனை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகளும், 13 வயதில் பார்கவ் என்ற மகனும் இருந்தனர்.

அவர்கள் பெங்களூரு எலகங்காவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். 19 வயது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள விடுதியில் அவர் தங்கி உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து 13 வயது மகனுடன் ரம்யா குடியிருப்பில் வசித்து வந்தார். அவரால் வாடகை செலுத்த முடியாமல் போனது. மேலும் குடும்ப செலவுகளுக்கு போதிய அளவு வருவாய் கிடைக்காததால் ரம்யா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி விடுதியில் தங்கி உள்ள தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு ரம்யா பேசினார்.

பின்னர் அன்றைய தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையை கொண்டு தனது மகனை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அதே சேலையில், ரம்யாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தாய் தன்னை செல்போனில் அழைக்காததால் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதைப் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எலகங்கா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டில் சோதனை செய்தபோது ரம்யா கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தங்களது சாவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாய், மகன் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அவதூறு பரப்பிய உறவினர்கள்.. விரக்தியில் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பொட்டங்கல் பகுதியில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிப்பேட்டை மண்டலம், ஃபகிராபாத்-மிதாபூர் இடையே இளம் ஜோடி ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் அப்பகுதியில் உள்ள ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என்பது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்ஃபி வீடியோ எடுத்து உறவினர்கள் எங்கள் மீது தவறான தகவல்களை பரப்பி பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி கோத்தகிரி எஸ்ஐக்கு சைலஜா வீடியோ அனுப்பியுள்ளார்.

தம்பதி தற்கொலை செய்து கொள்ள கோதாவரி ஆற்றுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் பாசறை பாலத்திற்கு சென்றனர்.

ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால், போலீசார் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, பகீராபாத் மற்றும் மிதாபூர் கிராமத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் அவர்களது உடல்களை கண்டெடுத்தனர்.

மேலும், தங்கள் சாவுக்கு உறவினர் பினா என்பவர் தான் முக்கிய காரணம் என கூறிய நிலையி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனில்-சைலஜா தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறோம் என வீட்டில் கூறி விட்டு இருவரும் நேற்று வெளியே சென்றுள்ளனர்.

இருவரும் நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பகீராபாத் மற்றும் மிட்டாப்பூர் பகுதிகளுக்கு இடையே செல்ல கூடிய ரயில் முன் பாய்ந்து நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டனர்.

அதற்கு முன் கோத்தகிரி காவல் துணை ஆய்வாளர் சந்தீப்புக்கு வீடியோ செய்தி ஒன்றை சைலஜா அனுப்பியிருக்கிறார். அதில், நீண்ட காலத்திற்கு முன் அவர் ஒரு தவறு செய்து விட்டார் எனவும், அதனை அவருடைய கணவர் மன்னித்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

ஆனால், அவருடைய குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வந்தனர். இந்த துன்புறுத்தலை எங்களால் வெகுநாட்களாக தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால், கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்ததும், சந்தீப் உடனடியாக நவிபேட்டை காவல் துணை ஆய்வாளர் யாதகிரி கவுடை தொடர்பு கொண்டு உஷார்படுத்தினார். அவர்களுடைய தற்கொலையை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

உள்ளூர் போலீசாரும் கோதாவரி ஆற்று பகுதியில் இந்த ஜோடியை தேடியுள்ளனர். அவர்களின் மொபைல் போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு தேடினர். அதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த அவர்களுடைய உடல்களை போலீசார் மீட்டனர். அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதாரத்தைக் காட்டுறேன்.. என்னை அவமானப்படுத்த வேண்டாம்… 52 ஆண்களை காதலித்து ஏமாற்றிய பெண் கதறல்!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வந்த இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானவர்தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா. செல்போன் எண்ணை பரிமாறியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் காதல் மழை பொழிந்த சத்யா, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை அரங்கேற்றினார்.

தனது திருமணத்தை பார்ப்பதற்காக, தாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தற்போது தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் மகேஷ் அரவிந்துக்கும், சத்யாவுக்கும் பழனி அருகே உள்ள கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் தீவிர முயற்சி எடுத்தார்.

தனக்கு வரப்போகும் மருமகளுக்கு சேர்த்து வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை, மகேஷின் தாயார், சத்யாவுக்கு கொடுத்தார். இதைத் தொடர்ந்து திருமண வாழ்க்கையில் இணைந்த பின்புதான் சத்யாவின் அந்தரங்கம் அதிர்ந்து போக செய்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் அருண் என்பவரை திருமணம் செய்த சத்யா, கணவரிடம் சண்டையிட்டு பிரிந்தவர் ஆவார். முதல் திருமணத்துக்கு பிறகு அடுத்தடுத்த இளைஞர்களிடம் பேசிப் பழகிய சத்யாவுக்கு பணத்தாசை உருவானது.

முதலில் சமூகவலைதளங்கள், மேட்ரிமோனி செயலிகள் மூலம் வேவு பார்க்கும் சத்யா, திருமணமாகாத முதிர்கண்ணன்களை குறி வைத்து பேசுவது, போலியான முகவரி, போலியான தாய் தந்தையை அறிமுகப்படுத்துவது, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை நடத்துவது, திருமணத்துக்கு பின்பு கணவனை வேண்டுமென்றே கோபப்படுத்தி விவாகரத்து வரை கொண்டு செல்வது, இறுதியாக கணவரிடம் கணிசமாக பணத்தைப் பெற்றுக் கொண்டோ, அல்லது திருடிக் கொண்டோ தப்பியோடுவது சத்யாவின் கைவந்த கலை.

தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் மட்டுமல்லாமல் கரூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரியின் மகன், தொழிலதிபர், அரசியல்வாதி, பேக்கரி ஓனர், ஆடு மேய்ப்பவர் வரையிலும் சத்யாவின் வேட்டை தொடர்ந்தது.

திருமணத்துக்கு பின்பு தகராறை தொடங்கும் சத்யா, அடுத்த காதலனை வைத்து, தற்போதைய கணவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கை. இதே போல சத்யாவின் திருட்டுத் தனம் குறித்து மகேஷ் அரவிந்த் கேட்டதற்கு, நான் மைனராக இருக்கும் போதே திருமணம் செய்தவள் என்றும், என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுத்த கொடுமுடி சத்யா தலைமறைவானார்.

இந்த கல்யாணராணி சத்யாவின் லீலைகள் குறித்து மகேஷ் அரவிந்த் அளித்த தகவலின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய நிலையில் அவர் குறித்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி ட்ரெண்டானது.

மேலும் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சத்யாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து தப்பியோடி புதுச்சேரியில் பதுங்கியிருந்த சத்யாவை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் ஜூலை 14-ம் தேதியன்று விசாரணைக்காக சத்யா காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய சத்யா, நான் வெளியே வந்தவுடன் எல்லா ஆதாரங்களையும் காட்டுகிறேன் என்றும், தேவையில்லாமல் என்னை அசிங்கப்படுத்த வேண்டாம் என்றும் ஆவேசமாக கூறினார்.

8 வயதில் குழந்தை உள்ள நிலையிலும், இதுவரை 15 பேரை திருமணம் செய்ததோடு, 40-க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வதாக நம்ப வைத்து மோசடி செய்த சத்யா தற்போது கைதான நிலையில், இடைத்தரகர் தமிழ்ச்செல்விக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். தமிழ்ச்செல்வி சிக்கிய பின்னரே, சத்யாவின் மற்ற காதல் கதைகளும், கல்யாண மோசடிகளும் தெரியவரும் என்கிறது காவல்துறை வட்டாரம்.

 

பேச்சு குறைபாடுள்ள தாயார் : கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் தெவ்மி அமயா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது : அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் பலித்திருப்பது உலக நாடுகளை பீதியடைய செய்துள்ளது.

பல்கேரிய நாட்டை சேர்ந்த கண்பார்வையை சிறு வயதில் இழந்த பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது கணிப்புகளை உலக மக்கள் பெரிதும் நம்பி வருகின்றனர்.

பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு காலமானார். அவரது கணிப்புகள் தொடர்ந்து பலருக்கு எச்சரிக்கையாக உள்ளது.

குறிப்பாக அவரது கணிப்புகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என கணித்திருந்தார்.

பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும் அது அவரை காது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவதாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் இந்த குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கவில்லை எனினும் சமீபத்திய கொலை முயற்சி அவரது வாழ்க்கை ஆபத்தில் இருப்பதைப் பற்றிய அவரது தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்த விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் டொனால்ட் ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டார். ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்த மேடையில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேல் இருந்தபடி, ஏஆர்-15 ரக துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் முதல் சுற்றில் 3 குண்டுகள், 2வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றதில் ட்ரம்ப், ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் பாபா வங்கா ஏற்கனவே கணித்தப்படி 2024 ஆம் ஆண்டில் ட்ரம்பின் காதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணிப்பின்படி ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது மற்ற கணிப்புகளும் பலித்துவிடுமோ என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.

அதேவேளை 2016 இல் ஐரோப்பா அழிந்துவிடும் என்பதும், 2010 மற்றும் 2014 க்கு இடையில் ஒரு அணுசக்தி போர் போன்ற பிற கணிப்புகள் பலிக்கவில்லை என்பதால் உலக மக்களுக்கு சற்று நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.

எனினும் அவருடைய கணிப்புகளை சரிபார்க்க ஆவணங்கள் ஏதும் இல்லை என்றாலும் பாபா வங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இயங்குநிலை தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை!!

மொரட்டுவையில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் “பொடி அய்யா” என அழைக்கப்படும் ஹரேந்து குமார என்ற 41 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலைச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பு வைத்தியசாலையில் உயிருக்கு போராடிய பெண் வைத்தியர் மரணம்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் பணியாற்றிய 37 வயதான வைத்தியர் செபாலிகா வனமாலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்து சிலாபம் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வைத்தியர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த வைத்தியர் பேருந்தில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதில் அவரும் ஏனைய பயணிகளும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த வைத்தியர், சிகிச்சைக்காக அவர் பணிபுரிந்த சிலாபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

 

ஒருவாரம் காலம் சென்ற போதும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியரின் உயிரை காப்பாற்றும் வகையில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

உயிரிழந்த வைத்தியர் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு பணிவானர் என்றும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலட்சக்கணக்கில் நிகர வருமானம் பெறுபவர்களுக்கு சிக்கல்!!

புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் தனித்துவமான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏதேனும் ஒரு வழியில் வரி செலுத்துவதில் சிரமம் இருந்தால், அது குறித்து மேல்முறையீடு செய்யவும், நீதிமன்றத்தை நாடவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.

அவ்வாறு சிலரின் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைவதற்குள் அவர்கள் இறந்தும் விடுகின்றனர்.

மேலும், மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றும், வேறு இடத்தில் வரி செலுத்தியிருந்தால், மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறும், வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களை தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து விபத்து : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்தும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறி புற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பட்டதாரி மாணவி திடீரென உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்!!

கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே இந்த மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் தந்தை மகள் குறித்து தெரிவிக்கையில், “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம அதிகாரி பரீட்சையில் தோற்றி கிராம அதிகாரி பரீட்சையில் சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.