யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற ரயில்வே விதியை மீறி, ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், நடுத்தர வயதுள்ள ஒரு பெண், ரயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார்.
அவர், இருக்கைக்கு அருகே உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து, நூடுல்ஸ் சமைக்கத் தொடங்கினார்.
இதனை உடனிருந்த சக பயணி ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோவில் அந்தப் பெண் மராத்தி மொழியில், “இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி நான் இதுவரை 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று பெருமையாகப் பேசுகிறார்.
ரயில்வே விதிகளை மீறி, பொதுப் பயணிகளுக்கு மத்தியில் பெண் சமையல் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண் பயணியின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, மத்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கும் போது, “இந்த வீடியோவில் இருக்கும் பெண் பயணியைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-இன் கீழ், பொதுச் சொத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய ரயில்வே நிர்வாகம் தங்களுடைய ‘எக்ஸ்’ (X) தளத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் பயணத்தின் போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள், தீ விபத்து உள்ளிட்ட பெரும் ஆபத்துகளை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் ரயில்வே சட்டதிட்டங்களைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நிர்வாகத்தின் வேண்டுகோளாக உள்ளது.
இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான்.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.
ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்.
தலையில் பலத்த காயம் ஏற்பட, தான் யார் என்பதே அவனுக்கு மறந்துபோனது.
பின்னர் மும்பைக்குச் சென்று அங்கு ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தான் ரிக்கி. அவனுக்கு அவனது பெயர் நினைவில் இல்லாததால், அவனது நண்பர்கள் அவனுக்கு ரவி சௌத்ரி என பெயர் வைத்துள்ளனர்.
தற்போது ரிக்கிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார் ரிக்கி.
மீண்டும் ரிக்கிக்கு தலையில் அடிபட்டுள்ளது. ஆனால், அந்த விபத்துக்குப் பிறகு, Sataun என்னும் ஒரு கிராமமும், அங்குள்ள தெருக்களும், ஒரு வீடும், அங்குள்ள மாமரமும் ரிக்கிக்கு கனவில் வரத் துவங்கியுள்ளன.
பின்னர்தான் ரிக்கி அவை கனவல்ல, தனது பழைய நினைவுகள் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறார்.
ஆக, Sataun என்னும் கிராமம் எங்குள்ளது என தான் வேலை செய்யும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் தேடத் துவங்கியுள்ளார் ரிக்கி.
அப்போது, கூகுள் மேப்பில், ஹிமாச்சலில் Sataun என்னும் ஒரு கிராமம் இருப்பது தெரியவரவே, அங்குள்ள ருத்ர பிரகாஷ் என்பவரை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் ரிக்கி.
அப்போது, ரிக்கி 1980ஆம் ஆண்டு காணாமல் போனது குறித்து அறிந்த MK சௌபே என்பவருக்கு ரிக்கி குறித்த செய்தி தெரியவர, அவரது உதவியுடன் தன் கிராமத்தை வந்தடைந்துள்ளார் ரிக்கி.
ரிக்கியை மேளதாளத்துடன் அவரது கிராமத்து மக்கள் வரவேற்க, தன் சகோதரிகளான துர்கா, ராம், சந்தர் மோகன், சந்திரா மணி, கௌசல்யா தேவி, கலா தேவி மற்றும் சுமித்ரா தேவி ஆகியோரை சந்தித்துள்ளார் ரிக்கி.
45 ஆண்டுகளுக்கு முன் கானாமல் போன தங்கள் சகோதரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் வாழ்ந்துவந்த நிலையில், அவர் உயிருடன் இருக்கிறார், அவர் தன் குடும்பத்துடன் நன்றாக இருக்கிறார் என்பது தெரியவரவே, ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்கள் அவரது சகோதரிகள்.
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து ஆணொருவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
முன்னதாக குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
கண்டியின் பஹல கடுகண்ணாவ அருகே உள்ள ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு பெண்ணை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் ஏற்கனவே அந்த இடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுகண்ணாவை நிலச்சரிவில் சுமார் 5 பேர் உள்ளே சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அந்த வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்கள்
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்த மற்றொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், கல்கட்டுயாய, கிரிந்தாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான சானக எரந்தா என்பவர் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை கடந்த சில தினங்களின் முன் இஸ்ரேலில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் சூடான் நாட்டவரால் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதன்படி, வெள்ளிக்கிழமை இன்று (21) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.303,000 ஆக குறைந்துள்ளது.
இதற்கமைய, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.330,000 ஆக குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் இன்றைய (21) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,259,681 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை மதற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் இருந்து பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டதாாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை புத்தல பொலிஸார் புத்தல நகரில் சோதனையிட்டனர்.
119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒரு சிறுவனின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தில் இருந்த சிறுவனின் தந்தையும், கஞ்சாவின் உரிமையாளருமான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பலஹருவா, குடா ஓயா பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராகும். சந்தேக நபருடன் வழக்குப் பொருட்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.ஜே. பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மறைந்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகளுக்குப் பிறகு, அனைவரும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் படி வரப்போகிற ஆண்டில் என்னென்ன நடக்கபோகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் உலகப்புகழ் பெற்றவர் என்றால் நோஸ்ட்ராடாமஸ்தான்.
புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பு தற்போது வைரலாகி வருவதால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வரப்போகிற ஆண்டு என்னென்ன நிகழ்வுகளைக் கொண்டுவரப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.
தேனீக்களின் பெரும் கூட்டம்
நோஸ்ட்ராடாமஸின் கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பின் படி “தேனீக்களின் பெரும் கூட்டம் எழும். இரவில் பதுங்கியிருந்து.” இது முற்றிலும் திகிலூட்டும் கணிப்பாகும், ஆனால் நிபுணர்கள் இதன் அர்த்தம் தேனீக்களின் கூட்டம் நம்மைத் தாக்கப் போகிறது என்று கூறவில்லை.
பண்டைய எகிப்திலும் நெப்போலியனின் ஏகாதிபத்திய சின்னத்திலும் காணப்படுவது போல், தேனீக்கள் சில நேரங்களில் ஒரு அரசியல் சின்னமாகவும், முடியாட்சி மற்றும் அரசாட்சியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே உலகளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம்.
செவ்வாய் வானத்தை ஆளும் மற்றும் கிழக்கிலிருந்து மூன்று நெருப்புகள் எழும்
செவ்வாய் போர், மோதல் மற்றும் நெருப்பின் கிரகம் என்று கூறப்படுகிறது, எனவே இது ‘மனித இரத்தம்’ என்று குறிப்பிடப்படுவதைப் போல மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக அடிவானத்தில் இருக்கக்கூடும் என்ற பிற கணிப்புகளுடன் இணைக்கிறது.
இதற்கிடையில், ‘கிழக்கு பக்கங்களிலிருந்து மூன்று நெருப்புகள் எழுகின்றன’ என்பது கிழக்கிலிருந்து வரும் புதிய சக்திகளான சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்றவை வளர்ச்சி அடையும்.
மேலும் ‘மேற்கு அதன் ஒளியை இழப்பது’ என்பது மேற்கத்திய உலகின் வெளிப்படையான வீழ்ச்சியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஏழு மாதங்கள், பெரும் போர்
2026 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய மற்றொரு குவாட்ரெய்ன்: “ஏழு மாதங்கள் பெரும் போர், தீமையால் இறந்த மக்கள் / ரூவன், எவ்ரூக்ஸ் மன்னர் தோல்வியடைய மாட்டார்.”
சில நிபுணர்கள் இதை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர், மற்றவர்கள் இதை மூன்றாம் உலகப் போருடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
டிசினோவுக்கான எச்சரிக்கை
டிசினோ சுவிட்சர்லாந்தின் தெற்கே உள்ள மண்டலமாகும், இதில் காடுகள், ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த பெரிய பகுதி உள்ளது.
இந்த கணிப்பில் இந்த மண்டலத்தைப் பற்றி ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை, ஆனால் இது மிகவும் ஆபத்தான கணிப்பாகும்.
2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்ப்பதற்கான பள்ளி வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk பார்க்க முடியும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமது பெறுபேறுகளுக்கு ஏற்ப தமக்குக் கிடைத்துள்ள பாடசாலை எது என்பதனை அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, தரம் 06 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், மேற்குறிப்பிட்ட இணையத்தளங்களைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று (21) காலை ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறையில் உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன், துவிச்சக்கர வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
தற்போது குறித்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்–மலர் தம்பதியினரின் மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
பள்ளி நாட்களிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்ற இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் திருமணம் பேசத் தொடங்கிய நிலையில், வினிஷ்கா காதலை கைவிட்டதாகவும் தெரிகிறது
இதன் பின்னர் விரக்தியடைந்த மாதேஷ், அடிக்கடி வினிஷ்காவின் வீட்டருகே வந்து தொல்லை கொடுத்து ‘லவ் டார்ச்சர்’ செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினிஷ்கா,
15ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட் உண்டதால் உணர்விழந்தார். உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இன்று உயிரிழந்தார்.
இளம்பெண் மரணத்திற்கு காரணமான மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய உறவினர்கள், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கலைக்கப்பட்டது.
பிரபல மராத்தி மற்றும் இந்தி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை அதிதி முகர்ஜி, விபத்தில் உயிரிழந்தார்.
மேடை நாடகங்களில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை அதிதி முகர்ஜி, குறுகிய காலத்தில் தனது திறமையால் நாடகத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமானார்.
தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், இயல்பான நடிப்பாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தார்.
திறமையுடனும் நாடக மேடை அனுபவங்களில் இருந்து திரைத்துறைக்கு வந்திருந்த அதிதி, தியேட்டர் நிறுவனத்தின் சிறந்த மாணவியாகவும் இருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் நொய்டா–கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இவர்களது கார் விபத்திற்குள்ளானது.
உடனடியாக அதிதி முகர்ஜியை மீட்டு, சாரதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கிரேட்டர் நொய்டாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால், தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்தம் பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் போராடியும் நடிகை அதிதி முகர்ஜி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
நாடக இயக்குநர் அரவிந்த் கவுர் நடிகை அதிதி முகர்ஜியின் இறப்பை துக்கத்துடன் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிதி ஒரு மிகுந்த திறமையுடனும், உற்சாகமுடனும் நடிக்கக்கூடிய நடிகை.
அவர் விரைவில் புகழ் வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பினோம்; ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அகன்றுள்ளார்” என்று பதிவேற்றியுள்ளார்.
டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 16 வயது மாணவர், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலான சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு பள்ளிக்குச் சென்ற மாணவர், அதே காலை 2-வது பிளாட்ஃபார்மில் இருந்து குதித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதியம் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தகவல் வழங்கியதும் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மரணத்திற்கு முன், தனது புத்தகப்பையில் மாணவர் ஒரு தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்தார். “சாரி மம்மி.. நான் பலமுறை உங்கள் இதயத்தை உடைத்துவிட்டேன்; இறுதியாக இதை செய்வதற்கு என்னை மன்னிக்கவும்.
என்னைப்போல் வேறு எந்த மாணவனும் இப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே என் கடைசி ஆசை.
என் உடல் பாகங்கள் ஏதாவது பயனுள்ளதாக இருந்தால், அவற்றைத் தேவையுடையோருக்கு தானம் செய்யுங்கள்” என்று அவர் எழுதியிருந்தது.
இந்த மாணவர் மீது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களும், முதல்வரும் நீண்டகாலமாக உளவியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நாடகப் பயிற்சியின்போது “ஓவரா நடிக்கிற” என்று இழிவுபடுத்தியதாகவும், அப்போது முதல்வர் இருந்தும் தடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேர்வுகள் நெருங்கி வருவதால், எழுதிவிட்டுப் பிறகு வேறு பள்ளியில் மாற்றிவிடுவோம் என்று பெற்றோர் சமாதானப்படுத்தியிருந்தும்,
அண்மையில் ஒரு ஆசிரியர் “பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவேன், இடமாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவேன்” என்று மிரட்டியதால் மாணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது.
பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் மாணவனின் தந்தை புகார் அளித்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.