சென்னையில் விபரீத முடிவால் உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை சாஷ்வி பாலா எனும் சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், நாளையதினம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள், வெலிசரப் பொது மயானத்தில் நடைபெற உள்லதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் ஜா-எல்லாவில் அமைந்துள்ள அவரது குடும்ப இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் நடிகை சாஷ்வி பாலா விபரீத முடிவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (11) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (11.04.2026) தங்கத்தின் விலை சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,776.9 டொலராக காணப்பட்டது. அதேபோன்று, வெள்ளியின் விலையும் 75.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து தங்க விலையில் தளம்பல் நிலை பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ணம் காரணமாக சில குளங்களில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியின் சேனாவள்ளி குளத்தில் இவ்வாறாக நீர் மட்டம் குறைந்து வெறும் தரையாக ஒரு பகுதி காட்சியளிப்பதனையும் காணமுடிகிறது.
வறண்ட பிரதேசமாக உள்ள போதும் விவசாய நெற்செய்கைக்காக விவசாயிகள் குளத்து நீரை நம்பியே இருக்கின்றனர். தற்போது அடுத்த போக செய்கைக்காக தயாராகி வருகின்றனர். அதிக வெப்ப நிலையால் வறட்சி நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் உயிரிழப்பில் முடிந்துள்ளது.
அதிகாரிகளின் தகவல்படி, மாலை நேரத்தில் இருவரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது கடுமையாக வளர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மனைவி அருகிலிருந்த கல்லை எடுத்து கணவரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, கணவர் உயிரிழந்ததை உறுதிசெய்த மனைவி, அவரது உடலின் அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் தானாகவே பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் சரியான காரணம் இதுவரை தெளிவாகவில்லை என்றும், சம்பவம் கோபத்தினாலா அல்லது வேறு காரணங்களாலா ஏற்பட்டது என்பதைக் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
பராபவ தமிழ்ப் புத்தாண்டு (14.4.2026, செவ்வாய்) சதயம் நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் பிறக்கிறது. இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
சித்திரை மாதத்தில் உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் சுமாராக இருந்தாலும், பொறுமையும், பொறுப்புடன் செயல்படுதலும் அவசியம்.
மேஷம் : தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி வருடமாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் மீது இருப்பதால், இந்த ராசிக்கு சாதகமாக பலன்கள் கிடைக்கலாம், தடைப்பட்ட காரியங்கள் இப்போது கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பராபவ ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். மேலும் வியாபாரம் செய்யும் இந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சில முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பராபவ ஆண்டு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கப் போகும் சில முடிவுகள் நிதானமாக இருக்க வேண்டும். வேலையில் பணிச்சுமை கூடலாம், எனினும் சில அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் முடிந்துள்ளதால், இந்த ஆண்டின் மிக மிக சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன்-மனைவி இடையே புரிதல் மேம்படும்.
கன்னி :கன்னி ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். கண்டச்சனியின் தாக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக செலுத்த வேடனும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆண்டின் இறுதியில் நிலைமை சீராகும்.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு ஆண்டாக அமையப் போகிறது. தொட்டது அனைத்தும் துலங்கும். நீண்ட நாள் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும்.
விருச்சிகம் :விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாகனத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கலாம்.
மகரம் : இந்த ஆண்டு ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுவதால் மகர ராசிக்காரர்களுக்கு இனி மன நிம்மதி கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும்.
கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முதல் நிதானம் தேவைப்படும். தேவையற்ற அலைச்சல் இருக்கும், ஆனால் வருமானத்திற்கும் எந்த பஞ்சமும் இருக்காது. பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.
மீனம் : மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கப் போவதால், இனி வரும் காலம் கவனமாக இருக்க வேண்டும், நற்பலன்கள் கிட்டும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.
எதிர்வரும் மே 2ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறை மற்றும் மே 30ஆம் திகதி வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி கொண்டாட்டங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து,
தொழிலாளர் ஆணையாளர் நாயகம் என்.ஏ.பி.ரணவக்க, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை உறுதிசெய்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் தலைமை ஆணையர் வெளியிட்ட பட்டியலின்படி, வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளுக்கான வணிக விடுமுறையான மே 2, 2026 மாற்றமின்றி தொடரும்.
2026ஆம் ஆண்டிற்கான 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டில் பின்வரும் தினங்கள் மட்டுமே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
ஜனவரி 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் தினம்
பெப்ரவரி 04 புதன்கிழமை – சுதந்திர தினம் (தேசிய தினம்)
ஏப்ரல் 13 திங்கட்கிழமை – தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினம்
ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை – தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினம்
மே 01 வெள்ளிக்கிழமை – சர்வதேச தொழிலாளர் தினம்
மே 02 சனிக்கிழமை – வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள்
ஓகஸ்ட் 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (முகமது நபியின் பிறந்ததினம்)
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் தினம்
மேற்குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே 2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Niño) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை தீவிரமடையும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் நீண்ட வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
இவரது கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகளையும் உருவாகியுள்ளது.
நாடு தற்போது எல் நினோ அற்ற ஒரு நடுநிலையான நிலையில் உள்ள போதிலும் இதில் ஏற்படும் மாற்றங்கள் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தின் மழைவீழ்ச்சியை கணிசமாகக் குறைக்கக்கூடும்.
இதன்மூலம் விவசாயம் நீர் விநியோகம் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும் இந்த முன்னறிவிப்பின் நிச்சயமற்ற தன்மை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் இத்தகைய எச்சரிக்கைகளின் துல்லியம் மற்றும் காலம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இடைப் பருவ பெயர்ச்சி காலம் மே மாத நடுப்பகுதியில் முடிவடையும். தென்மேற்கு பருவக்காற்று தற்காலிக நிவாரணத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 50 வயதுடைய தொழிலதிபர் இவ்வாறான செயலை செய்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஹோரண நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் கே.பி.ஆர். லக்மினி விதானகமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த தொழிலதிபர் தனது நண்பரின் மூலமாகவே இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அத்துடன், அந்த நண்பரின் 13 வயதுடைய மகன் மற்றும் அவரது வயதுடைய ஏனைய சிறுவர்களை இந்த தொழிலதிபர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
கடந்த 3 மாதங்களாக தொடர்ந்த இந்த செயலில், பாதிக்கப்பட்ட சிறுவன் வாரத்திற்கு இருமுறை வீதம் கடுமையான பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவல் மூலமே இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7ஆம் திகதி குறித்த தொழிலதிபர் சிறுவன் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, சந்தேகமடைந்த அண்டை வீட்டார் 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து சந்தேகநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், தனது பண பலத்தை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் அந்த தொழிலதிபர் நடந்துகொண்டுள்ளார். நீண்டகாலமாக அவர் அந்த வீட்டிற்குச் சிறுவர்களை அழைத்து வந்ததை அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது ஹோரண தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஹோரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பட்டதாரி மற்றுமொரு யுவதியை ஏமாற்றி, 25 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுள்ளார். சந்தேக நபர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இந்த பெண் கேகாலை மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த இருவருடன் இணைந்து இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி யுவதிக்கு, தனது நண்பி ஒருவரின் ஊடாக குறித்தப் பெண் அறிமுகமாகியுள்ளார். இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, அந்த யுவதி 25 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.
எனினும், நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காத நிலையில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது இத்தாலியில் தங்கியிருக்கும் கேகாலையைச் சேர்ந்த நபர் மற்றும் குருநாகலைச் சேர்ந்த பெண் ஆகியோருடன் இணைந்து இந்தப் பெண் இந்த மோசடி வலையமைப்பை முன்னெடுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதியிடமிருந்து பெறப்பட்ட பணம் வங்கிக் கணக்கு ஒன்றின் ஊடாக வைப்புச் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மோசடி பணத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில்,
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்கிருஷ்ணா. இவரின் மனைவி 27 வயதான பிரியங்கா புரோஹித். பிரியங்காவுக்கு 15 வயதிலேயே தேவ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் இரவில் வீட்டில் கணவருடன் பிரியங்கா இருந்த நிலையில் திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்துள்ளனர். வந்த வேகத்தில் கணவன், மனைவி இருவரையும் தாக்கிய மர்ம நபர்கள் தனித்தனி அறையில் அடைத்துள்ளனர்.
தேவ்கிருஷ்ணாவை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. மற்றொரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிரியங்கா கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்களிடம் கொள்ளையர்கள் வீடு புகுந்து தனது கணவனை கொலை செய்துவிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
விரைந்து வந்த பொலிஸார், தேவ்கிருஷ்ணாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணையில் மர்ம நபர்கள் திட்டமிட்டு வேண்டும் என்றே தேவ்கிருஷ்ணாவை தலையில் பலமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. நகை, பணத்திற்காக தனது கணவன் கொல்லப்பட்டதாக கூறிய மனைவி பொலிஸாரின் விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
அதில் 27 வயதான பிரியங்கா, கமலேஷ் என்பவருடன் முறை தவறிய உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனை தீர்த்துக்கட்டி விட்டு ரகசிய காதலனை கரம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடகம் போட்ட இளம்பெண், தனது ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியில், மனதைக் கசக்கும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைவண்டூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில்,
சுமதியின் கண் பார்வைக் குறைபாட்டை மறைத்துத் திருமணம் செய்ததாகக் கூறி, அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
அன்றிலிருந்து தனது இரண்டு வயது பெண் குழந்தையான யாஷிகாவை, கண் இமை போலப் போற்றி வளர்த்து வந்துள்ளார் இந்தப் பார்வைத் திறன் குறைந்த தாய்.
இந்நிலையில், நேற்று வீட்டில் சுமதி வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி யாஷிகா அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் நீரை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாகத் தடுமாறி அந்தத் தொட்டிக்குள்ளேயே குழந்தை விழுந்துவிட்டது.
தண்ணீரில் தத்தளித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, பதறியபடி ஓடிவந்த சுமதி, தனது பார்வைக் குறைபாட்டால் குழந்தையை உடனடியாக மீட்க முடியாமல் திகைத்துக் கூச்சலிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தொட்டிக்குள் மூழ்கிக் கிடந்த குழந்தையை மீட்டுத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததைக் கேட்டு அந்தத் தாய் நிலைகுலைந்து போனார்.
தனக்கு இருந்த ஒரே பிடிமானமான குழந்தையும் கண் முன்னே பறிபோனதை எண்ணி அந்தத் தாய் கதறுவது அப்பகுதி மக்கள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள கொட்டிகே ஹாரா பகுதியில், கணவன் – மனைவி பாசத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
77 வயதான சிரில் மோனிஸ் என்பவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களது மகன் பெங்களூருவிலும், மகள் துபாயிலும் வேலை பார்த்து வரும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை சிரில் மோனிஸ் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்துள்ளார்.
வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சிரில் மோனிஸ், கடந்த 10 நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார்.
ஆனால், கணவர் இறந்தது கூடத் தெரியாமல், அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக எண்ணிய அவரது மனைவி, 10 நாட்களாக அழுகிய உடலுடனேயே வாழ்ந்து வந்துள்ளார். மகன் போனில் அழைக்கும் போதெல்லாம், “அப்பா நல்லா இருக்காரு, தூங்குறாரு” என்று கூறி வந்துள்ளார்.
உடல் அழுகி, புழுக்கள் நெளிந்து, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையிலும், அந்தப் பெண் தனது கணவரைப் பிரிய மனமில்லாமல் அருகிலேயே அமர்ந்திருந்தது காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது.
துர்நாற்றம் தாங்க முடியாமல் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் வந்து உடலை மீட்க முயன்றபோதுதான் அந்தப் பாசப்போராட்டம் அரங்கேறியது.
“என் கணவர் தூங்குறாரு, அவரைத் தொடாதீங்க.. எங்களைப் பிரிச்சிடாதீங்க” என அந்தப் பெண் கதறி அழுது போலீசாரைத் தடுத்த விதம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
ஒருவழியாகச் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கணவர் மறைந்தது கூடத் தெரியாமல் ஒரு பெண் நடத்திய இந்தப் பாசப்போராட்டம், அப்பகுதி மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.
வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை
முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த பரிசோதனையின் முடிவில், இது இயற்கையான மரணமல்ல – ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், வீட்டு வாடகை தொடர்பான பிரச்சினை காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திருச்சூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்சயா என்ற இளம்பெண் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்தார்.
ஆனால், அவர் சமையல் செய்தபோது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு கட்டு கட்டப்பட்டிருந்ததால், அந்த விரலில் மை வைக்க முடியாது என வாக்குச்சாவடி அதிகாரி அவரை அதிரடியாகத் தடுத்தார்.
தேர்தல் விதிமுறைப்படி ஆள்காட்டி விரலில் தான் மை வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அதிகாரி, இளம்பெண் காட்டிய மருத்துவச் சான்றிதழையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் இருந்த கட்டை அவிழ்த்துக் காயத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விவகாரம் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், அந்தத் தொகுதியின் இடதுசாரி முன்னணி வேட்பாளர் சுனில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஆள்காட்டி விரலில் காயம் இருந்தால் அதற்கு அடுத்த விரலில் மை வைக்கலாம் என்கிற விதிமுறையைச் சுட்டிக்காட்டிய கலெக்டர், அந்த இளம்பெண்ணை வாக்களிக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்சயாவின் நடுவிரலில் மை வைக்கப்பட்டு அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். ஒரு சிறிய காயத்திற்காக வாக்கு மறுக்கப்பட்ட சம்பவம் திருச்சூரில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மனிதாபிமானமற்ற முறையில் தனது 4 வயது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்த தந்தையைத் தெலங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மையே இந்தத் துயரத்திற்குப் பின்னணியாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜூபிலி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவருக்கு 4 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர். தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற விரக்தியில் ஸ்ரீசைலம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று மீண்டும் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம், தனது பிஞ்சு குழந்தைகளைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டி, பின்னர் அங்குள்ள விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள், கிணற்றில் இருந்து குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தப்பியோட முயன்ற ஸ்ரீசைலத்தை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து, பின்னர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீசைலம் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.