புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.
அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பல்பொருள் விற்பனை நிலையமொன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கொம்பனி வீதி பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி வங்கி கணக்கினை பெற்று பணமோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபரிகளிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 109 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் மார்க்கமாக கடத்திச் செல்ல முயன்ற கடத்தல் கும்பலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த ஞாயிற்றுகிழமை (07.07.2024) இடம்பெற்றுள்ளது.
தெற்கு கடலில் வழக்கமான ரோந்து பணியின் போது, கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை கடற்றொழில் படகினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, கூண்டுகளில் அடைக்கப்பட்ட அரியவகை பாம்பு இனங்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக இழுவை கடற்றொழில் படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்காக இவ்வாறு கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும்,கடற்றொழில் படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
முதல் முறையாக விமானத்தில் பயணித்த ஒரு பெண், கழிவறை என நினைத்து விமானத்தின் அவசரகால கதவைத் திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண், ஏர் சீனா(Air China) விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று புறப்படத் தயாராக இருந்த நிலையில், விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்துள்ளார்.
இந்நிலையில் அந்த விமானத்திலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணிடம் ஏன் அந்தக் கதவைத் திறந்தீர்கள் என்று கேட்டபோது, முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் அவர், கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு சுமார் 22,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் நீதிமன்ற விசாரணை ஏதுமின்று காவலில் அடைக்கப்படலாம் என்பதுடன், இனி விமானத்தில் பயணிக்க அவருக்கு தடையும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிப்படுகிறது.
முல்லைத்தீவு (Mullaitivu) ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் – 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து சுற்றுலா சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டுவிலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
குறித்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
விமானப் பயணச்சீட்டு
இது குறித்து தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.
இலங்கையில் அண்மைய நாட்களில் முகநூல் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்தாவது,
தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, அந்த பணம் இரட்டிப்பாக தங்களது வங்கிக் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும் என்றும் மோசடிக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அதிகளவு பணம் முதலீடு செய்யப்பட்டு 4 மடங்கு திரும்பக் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டு இந்த மோசடி இடம்பெறுகின்றது.
இந்த பணமோசடி நைஜீரியா போன்ற வெளிநாடுகள் ஊடாக இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை குறித்த மோசடி சம்பவத்தில் வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஈரானில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு வேலைகள்
உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் அமிரி (Abolfazl Amiri) தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ள நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது.
இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் -2 திகதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.
பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7 -ம் திகதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று 6 -வது முறையாக கடித்துள்ளது.
இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார்.
இங்கிலாந்தில், உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் நிலையில், என்மீது என் கணவர் தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த செய்தி தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
என் கணவர்தான் இதைச் செய்தார் என சத்தமிட்டபடி ஓடிவந்த பெண்
இங்கிலாந்திலுள்ள Bury என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த சாரா (Sarah Hussein) என்னும் Nosheen Akhtar (31), 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் திகதி, தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதற்கு முந்தைய தினம், உடலில் தீப்பற்றி எரியும் நிலையில், சத்தமிட்டபடி சாரா வீட்டை விட்டு வெளியே ஓடிவர, அருகிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்த Shamin Ahmed என்ற பெண், அவர் மீது பற்றிய தீயை அணைக்க முயலும்போது ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு சாரா, என் கணவரால்தான் இப்படிச் செய்தேன், அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்ணிடம் சாரா கூறிய தகவல்
ஆனால், சாராவைக் காப்பாற்ற முதலில் வந்தவரான மருத்துவ உதவிக் குழுவைச் சேர்ந்த Niamh Nolan என்ற பெண், சாராவிடம், உங்கள் உடல் முழுவதும் ஏன் பெட்ரோலாக இருக்கிறது என கேட்க, என் கணவர்தான் அதை வாங்கிவந்தார், அவர்தான் அதை ஊற்றினார், அவர்தான் அதைச் செய்தார் என்று கூறியுள்ளார்.
தொடரும் வழக்கு விசாரணை
சாரா பாகிஸ்தானில் வளர்ந்தவர் ஆவார். சாராவின் கணவரான மஹ்மூத் (Waqas Mahmood) ஏற்கனவே கயானி (Kierran Kayani) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து இருவரும் 10 ஆண்டுகள் இணைந்துவாழ்ந்துள்ளார்கள்.
பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிய, தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் தந்தை மற்றும் தாய் வீட்டில் மாறி மாறி தங்கி வளர்ந்துவந்துள்ளார்கள்.
பிள்ளைகளைப் பார்ப்பதற்காக மஹ்மூத் அவ்வப்போது கயானி வீட்டுக்குச் செல்ல, மஹ்மூதின் இரண்டாவது மனைவியான சாரா, அவருக்கும் கயானிக்கும் தொடர்பு இருப்பதாக கணவரிடம் சண்டையிட்டுள்ளார்.
சாரா தீப்பற்றி எரிய வீட்டை விட்டு வெளியே வந்ததும், தன் முன்னாள் மனைவியை மொபைல் அழைத்த மஹ்மூத், அந்த சாரா தன் மீது தீயை வைத்துக்கொண்டாள் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அன்று மாலை தன்னைக் கொளுத்திக்கொள்ளப் போவதாக சாரா கூற, அவரது உறவினரான Ifra Farooq என்பவர் அவரது கையிலிருந்த லைட்டரைத் தட்டிப் பறித்திருக்கிறார். ஆகவே, சாராவே தன் மீது தீவைத்துக்கொண்டிருக்கவும் சாத்தியம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மஹ்மூத் மற்றும் இருவர் முதலில் கைது செய்யப்பட்டாலும், பின்னர் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். வழக்கு தொடர்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் தனது காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு பிரவீன் குமார் தினமும் மது அருந்திவிட்டு, தனது காதல் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் 26-ம் தேதி அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீரம்மாளின் தம்பி இவர்களது பிரச்சனையை பேசி தீர்த்து வைத்துள்ளார். பின்னர், மறுநாள் காலையில் வீரம்மாளின் தம்பிக்கு பிரவீன் குமார் பதற்றத்துடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீரம்மாள் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் வீரம்மாளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனிடையே பிரவீன் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிரவீன் குமார் துவாக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனக்கும், வீரம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் இதேபோல் தகராறு நடைபெற்றது. இதனால் நான் ஆத்திரத்தில் வீரம்மாளை தாக்கி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரவீன்குமாரை கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி(36).
சென்னையில் ராணுவ வீரரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி(36).
இந்நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த வேளாங்கண்ணி தாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி இரவு தலைக்கேறிய மதுபோதையில் படுக்கை அறையில் சுய நினைவின்றி கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி லீமா ரோஸ் மேரி (36), அவரை மீட்டு ஆவடி ராணுவ மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணி தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரதுது மனைவி லீமா ரோஸ் மேரியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது மதுபோதையில் இருந்த கணவரை கழுத்தை நெறித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். விசாரணையில், என் கணவர் தினமும் மது போதையில் என்னிடம் தகராறு செய்ததால் புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடமாடினேன் என கூறியுள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி லீமா ரோஸை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பிறந்தநாளன்று, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம் ஹொன்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்சிதா. இவர் பெங்களூரு நிட்டே மீனாட்சி கல்லூரியில், கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே பி.காம் படித்து வந்தார்.
இன்று ரக்சிதாவின் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு வாடகைக் காரில் சென்றுக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், இவர்களது கார் விபத்திற்குள்ளானது.
இதில் ஓட்டுநரின் இடப்பக்கம் அமர்ந்திருந்த ரக்சிதா படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி ரக்சிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நந்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநர் நிஸ்வந்தை தேடி வருகின்றனர். பிறந்த நாளைக் கொண்டாட வந்த கல்லூரி மாணவி, விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து ஒரு காதல் ஜோடி ‘போட்டோஷூட்’ நடத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு ஜோடி, பள்ளத்தாக்கு பகுதியில் ரோப் காரில் அமர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு டைனிங் டேபிள் வடிவில் அமைக்கப்பட்ட அந்த ரோப்பில் அமர்ந்து தம்பதியினர் கேபிளை பிடித்தபடி பேசுவது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து 69 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண நபரொருவர் நேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேறறிரவு (09.07.2024) இந்தியாவிற்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஒஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரகர் ஒருவரிடம் 90 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, இந்த போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.