வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை : யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர்!!

வவுனியாவில் பதிவான நிலநடுக்கம் பாரிய நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்று முன்தினம் (18.06.2024)  இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும். இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

நான் இது தொடர்பாக இட்ட பதிவில் கருத்துரைத்த பலர் கல் அகழ்வுச் செயற்பாடுகள், மற்றும் குழாய்க்கிணறு தோண்டுதல் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலநடுக்கம் தோன்றியிருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் புவி நடுக்கத்திற்கும் இவைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

வவுனியாவில் நிகழ்ந்த புவிநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. எனினும், இந்த கல்லகழ்வு மற்றும் குழாய்க்கிணறுகள் புவி மேற்பரப்பில் இருந்து வெறுமனே 100 மீற்றருக்குள்ளேயே நிகழ்கின்றன என்பதுடன் இவை வேறுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பாரிய புவி நடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன.

முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.

அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் பதிவாகின்ற நிலையில் இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்

அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வரட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துக்கள் மற்றும் தீ விபத்துக்கள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களை தவிர்க்க முடியும் என புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று (19.06.2024) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நெடுந்தீவு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் (வயது 23) என்பவரே அடி காயங்களுடன் குறித்த பகுதியில் சடலமாக இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள் : விசாரணையில் வெளியான தகவல்!!

பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.

இதன்போது 200 கசிப்பு போத்தல்கள் மற்றும் 1250 லீற்றர் கோடாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 48 வயதுடைய தாயும் அவரது 26 வயது மகளும் கசிப்பு கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் பேராதனை போவல பேருந்து வீதியில் இருந்து சுமார் 1 1/2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சல்களை நடத்தி வந்துள்ளனர்.

கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவின் மேற்பார்வையில் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

 

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கோர விபத்து!!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த விபத்தானது மிஹிந்தலை – பலுகஸ்வெவ பகுதியில் இன்று (20) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரக்கறி லொறியின் சாரதி மற்றும் லொறியின் உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற மரக்கறி லொறியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கியின் பின்புறம் மோதியதில் மரக்கறி லொறி வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சத்தியாக்கிரகம்!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள்
பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக வளாகம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றைய (20.06.2024) தினத்திலிருந்து சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களும் பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில் குறித்த போராட்டம் தொடர்ந்து செல்லும் என்று தெரிவித்த போராட்டகாறர்கள், ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, கொடுப்பனவை அதிகரி, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்தியாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. றீல்ஸ் மோகத்தால் வந்த வினை!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் 300 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவமானது நேற்று (18.06.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. விபத்தில், மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் பகுதியை சேர்ந்த 23 வயதான ஸ்வேதா சர்வசே என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அவரது நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறி, ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் மிக வேகமாக பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூமியை பற்றிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் : எச்சரித்த விஞ்ஞானிகள்!!

பூமியின் மேற்பரப்பை விட பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California) ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.

இது பூமியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்பதோடு காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது மணித்தியாலம், நாட்கள் மற்றும் வாரங்களில் சிறிதளவான நீட்டிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பூமியின் காந்தப்புலத்தை உருவாக்கும் திரவ வெளிப்புற மையத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் அடர்த்தியான பூமியின் பகுதிகளிலுள்ள பாறை மேடுகளின் ஈர்ப்பு விசையாலேயே பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், 2010ஆம் ஆண்டளவில் பூமியின் உட்புறம் அதன் மேற்பரப்பை விட வேகத்தை குறைக்க தொடங்கியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பூமிக்கு கீழ் 4,800 கி.மீ ஆழத்தில் அதிக வெப்பமும் அதிக அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருக்கின்றது.

பூமியின் இந்த மாற்றத்தினால் இவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராட்சத பட்டத்தில் சிக்கி நடுவானில் பறந்த 3 வயது சிறுமி!!

தைவானில் பட்டம் விடும் திருவிழா ஒன்று கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது, அங்கிருந்த அனைவரும் ராட்சத பட்டம் ஒன்றை, பறக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.

குறித்த ராட்சத பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார். இதைக்கண்டு அங்கிருந்த பலரும், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், காற்றின் வேகம் சீரான பிறகு, அந்த சிறுமி மீண்டும் கீழே வந்தார்.

இதையடுத்து, அந்த சிறுமியை, அங்கிருந்த வைத்தியர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள், அந்த பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தபோதிலும், தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தொடரும் சோகம்… இந்திய இளம்பெண் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் 29 வயது ஜஸ்வீர் கவுர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஜஸ்வீர் கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவருடைய வீட்டுக்கு 20 வயதான உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் வந்திருந்தார்.அந்த சமயத்தில் 19 வயதான ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசினார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்து வந்த போது ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசி உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அதன் பிறகு ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார்.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப்கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் கவுரவ் கில் (19) என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், சமீபத்தில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? ஏன் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இருவரும் இதற்கு முன்பு இந்தியாவில் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதி மாறியதால் நின்று போன திருமணம்.. கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்த இளம்பெண்கள்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விருத்திகா. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தாயார் சிறுவயல் பகுதியில் நடந்த திருமணத்திற்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வினோதினியோடு அறிமுகமானார்.

வினோதினியின் தம்பிக்கு விருத்திகாவை திருமணம் செய்து வைக்க கேட்டனர். இதன் அடிப்படையில், இரு வீட்டாரும் சந்தித்து பரஸ்பரம் மணம் முடிக்க பேசி முடிவெடுத்தனர்.

வினோதினியோ, அவரது தந்தை சந்திரன் தாய் லதா இவர்களுடன் சென்று தனது மூத்த தம்பியான பூமிநாதனுக்கு விருத்திகா வீட்டில் வைத்து பூ வைத்து நலங்கு செய்தனர். நாளைய தினம் திருமணம் நடைபெற இருந்ததால் பத்திரிகை அடித்து இரு வீட்டாரும் உறவுகளை அழைத்து தாலி தாம்பூலம் என திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கினர்.

இருவீட்டாரும் திருமணத்திற்கு தயாராக இருந்த நிலையில் திருமணத்தை பதிவு செய்வதற்காக விருத்திகாவின் கல்வி சான்றிதழை மாப்பிள்ளை விட்டார் கேட்டனர். அதில் தான் விருத்திகா மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணமகனின் ஊராருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண் வீட்டார் மாற்றுச் சமூகத்தினர் என்பதால் திருமணத்தை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் வீட்டில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டோம். ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதனால் மாப்பிள்ளையின் வீட்டார் திருமணத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்ட நிலையில், திடீரென மணமகன் வீட்டார் கூறியதை கேட்டு பெண் வீட்டார் திகைத்தனர்.

எத்தனையோ எடுத்துக் கூறியும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தனர்.

மணமகள் விருத்திகா தன்னை தன் எதிர்கால கணவனோடு சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பூமிநாதனின் உறவுக்கார பையனான அதே சிறுவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரனுக்கும், விருத்திகாவின் உறவுக்கார பெண்ணான சிந்து நதிக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

அந்த திருமணத்தையும் சிறுவயல் கிராமத்தாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நிறுத்தி விட்டதாக கூறி 2 இளம் பெண்களும் கண்ணீர் மல்க காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த இரு திருமணத்திலும் மாப்பிள்ளைகள், அவரது குடும்பத்தாருக்கோ பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில், ஊராரின் அச்சுறுத்தலின் பேரில் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவங்கள்!!

முல்லைத்தீவு (Mullaitivu) வான் பரப்பில் நேற்றையதினம் (18.06.2024) இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததையடுத்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

அத்துடன், அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் ஒன்று விட்டு விட்டு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

வவுனியாவில் நிலநடுக்கம்

இதனை அவதானித்த மக்கள், இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது.

தமிழர் பகுதியில் குடும்ப தகராறில் பறிபோன உயிர்!!

இலங்கையின் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படும் நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது.

குறித்த நபர் நேற்று(17) பகல் 12.40 மணியளவில் தனது வயல் நிலத்திற்குச் சென்று நஞ்சருந்திய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட கருத்து முரண்பாடு காரணமாக குடும்பஸ்தர் உயிரிழந்ததக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் : 17 வயது இளைஞன் கைது!!

முல்லைத்தீவு பகுதியொன்றில் உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 திகதி அன்று இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முத்தையன்கட்டுப் பகுதியில் கூலி வேலை செய்துவந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 வயதுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனை மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை பிறப்பிடமாக கொண்டு முள்ளியவளையில் வசிந்துவந்த 27 வயதுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய 17 வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (19.06.2024) சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 711,039 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,090 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,000 ரூபாவாகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,960 ரூபாவாகவும் அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார் வீதியை விட்டு விலகி விபத்து : விசாரணையை ஆரம்பித்த பொலிஸார்!!

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பம் ஒன்று பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இன்று (2024.06.19) அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரின் சாரதி தூங்கியதால், கார் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் 17 வயதான இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் விபத்தில் சிக்கிய 17 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்று (18) செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நீர்வேலி, வில்லுமதவடிக்கு அண்மையான பகுதியில் நிகழ்ந்துள்ளது.

புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கலைப்பிரியன் (17) என்பவரே உயிரிழந்துள்ளார் .

கைதடிப் பகுதியில் மின்னொளியில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.