அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்கம் எடுத்த அதிரடித் தீர்மானம்!!

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18.06.2024) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் சத்தியாக்கிரக போராட்டத்தை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடுக்காட்டில் காணாமல்போன குழந்தை கண்டுபிடிப்பு!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் காணாமல்போன நான்கு வயது குழந்தை காட்டுப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி லக்சபான பிரதேசத்தில் வசிக்கும் சிவநாதன் அபிலாஷ் என்ற குழந்தை தனது பெற்றோருடன் உறவினர் வீடொன்றுக்கு திருமண நிகழ்விற்கு வந்திருந்த நிலையில் காணாமல்போயுள்ளது.

குழந்தை (17.06.2024) மதியம் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் உணவு கொண்டு வந்தபோது, குழந்தை அந்த இடத்தில் இல்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

குழந்தை காணாமல்போனமை தொடர்பில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 119 பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து, நோர்வூட் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட மக்கள் கடந்த 18ஆம் திகதி காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குழந்தை அருகில் இருந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும், பின்னர் வீடு திரும்ப முடியாமல் காட்டில் தவித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குழந்தை கண்டுபிடிக்கப்படும் போது பசியுடன் இருந்ததாகவும், நோர்வூட் பொலிஸார் குழந்தைக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியதன் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக குழந்தையை திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோவிட்டை விட பாதிப்பான உலகத் தொற்று : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க நிபுணர்!!

உலகில் இன்னுமொரு தொற்று நோய் தீவிரமாக பரவும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரொபட் ரெட்ஃபீல்ட் (Robert R.Redfield) அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, கோவிட்டை போன்ற பெரிய தொற்றுநோய் வருவது உறுதி என்றும், ஆனால் அது எப்போது வரும் என்பது தெரியாமல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் மூலம் ஒரு தொற்றுநோய் பரவி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அது கோவிட்-19 தொற்று நோயை விட மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்

முன்னதாக கோவிட் வைரஸ் தொற்றுநோய் பாதிப்பின்போது இறப்பு விகிதம் வெறும் 0.6வீதமாக இருந்தது எனினும் பறவைக் காய்ச்சலால் பரவும் புதிய தொற்றுநோயால் இறப்பு விகிதம் 20 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம்.

இந்த சூழ்நிலையில், மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு மூன்றாவது முறையாக கடந்த மாதம் அமெரிக்காவில் பதிவானது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் இதுவரை 15 பேருக்கு எச்5என்1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பறவைக் காய்ச்சலில் ஐந்து அமினோ அமிலங்கள் இருப்பதால் அவை மனிதர்களுக்கு சென்றடைகின்றன. இதனால், இந்த நோய் உலகம் முழுவதும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதோடு இது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது என்று ரொபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு காலாவதியான கோழித் தீவனத்தை வழங்கியுள்ளனர்

இதன் காரணமாக, அதில் இருந்த பறவைக் காய்ச்சல் வைரஸ்கள், கால்நடைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து இந்த நடைமுறை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காட்டுப் பறவைகள் மூலமும் பறவைக் காய்ச்சல் மாடுகளுக்கு பரவியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு!!

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (19.06) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு நில அதிர்வுகள்!!

வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று (18.06.2024) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது.

மேலும் இலங்கை நேரம் இரவு 11.02 மணியளவில் குறித்த நில அதிர்வு என உணரப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பகுதியின் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் அதிர்வுகளை அதிகமாக உணரக்கூடியிருந்திதாகவும் Volcana Discovery தெரிவித்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்

வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

 

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்புத் தகடு : அதிர்ச்சியில் பயணி!!

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தகடு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பெங்களூருவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் ஏர் இந்தியாவின் AI 175 என்ற விமானத்தில் மாதுரஸ் பால் என்ற பயணி பயணித்துள்ளார். பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை பயணி கண்டறிந்து உள்ளார். இது குறித்து மதுரஸ் பால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஏர் இந்தியா விமான பயணத்தின் போது வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்ற இரும்பு தகடு இருப்பதை கண்டறிந்தேன். உணவு மென்று சாப்பிடுவதற்கு முன்னதாக அதை கண்டறிந்தேன். அதனால் எந்த வித அசம்பாவிதமும் நிகழவில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

யாழில் பெரும் சோகம் : பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் மரணம்!!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் தந்தை தாய் உயிரிழந்த நிலையில் ஒரே மகளும் நேற்று முன்தினம் (16.06) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நயினாதீவு 05 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசசூரியர் பவதாரணி வயது 22 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்று தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம் : தந்தை பலி, மகன் படுகாயம்!!

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை நாகொட சந்தர்ஷனாராம வீதியை சேர்ந்த 46 வயதுடைய சதுன் அரவிந்த என பொலிஸார் தெரிவித்தனர்.

காரை ஓட்டி வந்த சீன நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மான முறையில் மரணம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொலனாவை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வீதியில் சென்ற நாய்க்குட்டி ஒன்றை தன்னுடன் கொண்டு வளர்ந்து வந்துள்ளார். எனினும் குறித்த நாய்க்குட்டி திடீரென உயிரிழந்துள்ளது.

நாய்க்குட்டி உயிரிழந்து சில வாரங்களில் குறித்த மாணவியும் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியர்கள், விசர் நாய்கடி நோய் காரணமாக மாணவி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. சமகாலத்தில் பல வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்மை பொதுவான விடயமாக உள்ளது.

இந்நிலையில் தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறும் வைத்தியர்கள் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடலில் தவறி விழுந்து மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு!!

அம்பாறை – காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஒருவர் பாணமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, லகுகல கடலில் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017. 11. 06 அன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து முந்தலை, மதுரங்குளிய பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருந்தது.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் புத்தளம் மேல் நீதிமன்றில் 07 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 36 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சாரதிக்கு 03 பிரிவுகளின் கீழ் 17 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 56800 ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம், பலவியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 07 வரையிலான 07 குற்றச்சாட்டுகளுக்கு 07 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு வருடத்திற்கு ரூ. 35000 அபராதமும், பிரிவு 328-ன் கீழ் ரூ.100, 329 பிரிவின் கீழ் 20 குற்றச்சாட்டுகளுக்கு தலா 1800 ரூபாவும், 10 வருடங்கள் 06 மாதங்களுக்கு 20000 ரூபா வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாதி கடந்து காதல் திருமணம் : மகளை கடத்திச் சென்ற தாய் உள்ளிட்ட உறவினர்கள்!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான கவின் குமார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சாதி மாறி கவின்‌ குமாரைக் காதலித்து வந்ததை அறிந்து ரோஷினி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அருவங்காடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிய காதலர்கள், கடந்த மாதம் 25 – ம் தேதி கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 11 – ம் தேதி இரவு இவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த ரோஷினியின் உறவினர்கள், கவின் குமார், அவரின் சகோதரி மற்றும் தாயாரைத் தாக்கியுள்ளனர்.

ரோஷினியையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மனைவியை கடத்திச் சென்றதாக கணவர் கவின் குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

விசாரணையில் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரோஷினியை அடைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் ஈடுபட்ட தாய், உறவினர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர், “கவின் குமார் அளித்த புகாரின் பேரில் அருவங்காடு போலீஸார் வழக்குபதிவு செய்து கவின்குமாரின் மனைவி ரோஷினியை தேடி வந்தனர். ரோஷினியின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருந்தது.

ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன், அவரை ஓசூருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ஓசூர் விரைந்த தனிப்படையினர், அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த ரோஷினியை மீட்டனர்.

பெண்ணைக் கடத்தியது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளுக்கு மேல் ரோஷினி தாயார் சாந்தி மற்றும் உறவினர்கள் என 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது ” என்றனர்.

மகள் இறந்த சோகத்தில் தீக்குளித்த தாய் : இறுதியில் நடந்த சோகம்!!

நாகப்பட்டினம் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராதிகா, மகள் திவ்யா. திவ்யா 12 ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் மகள் இறந்த சோகத்திலயே தாய் ராதிகா இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராதிகா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கார்த்திகேயன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, படுகாயமடைந்த ராதிகாவை மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் ராதிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே 6 நாட்களுக்கு முன்பாக மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும்,

அதனைத் தொடர்ந்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜ் போட்டபடி LAPTOP பயன்படுத்திய இளம் பெண் : தந்தை கண்முன் நேர்ந்த சோகம்!!

விருதுநகரில் சார்ஜ் போட்டபடி Laptop பயன்படுத்திய இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராம். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செந்தி மயில் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜராம் துபாயில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மனைவி செந்தில் மயில் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது தந்தை வெளியே வந்து பார்த்தபோது மகள் மயங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் போட்டபடி Laptop பயன்படுத்திய இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தால் 10 நாட்களில் முழங்கால் வரை முடி வளர்க்கலாம்!!

கூந்தலின் அழகை பராமரிக்க சந்தையில் பல பொருட்கள் உள்ளன. ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் பெறும் நன்மைகளை ரசாயனம் சார்ந்த பொருட்களால் பெற முடியாது.

அந்தவகையில் முருங்கை இலையானது ஊட்டசசத்து நிறைந்ததாகும். இது முடியை கருப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் மாற்றும்.

முருங்கைப் பொடி செய்வது எப்படி?
முருங்கை பொடி சந்தையில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், வீட்டிலும் செய்யலாம். இதற்கு முருங்கை இலைகளை சந்தையில் இருந்து கொண்டு வந்து காய வைக்க வேண்டும்.

இலைகள் காய்ந்ததும் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை கூந்தலில் தடவி கழுவலாம்.

முருங்கையில் உள்ள சத்துக்கள்

முருங்கை இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முருங்கையில் உள்ளன. முருங்கையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முருங்கை தூளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது தலையில் பொடுகு மற்றும் பிற தொற்றுகளை குறைக்க உதவுகிறது.

முருங்கைப் பொடியில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடியை ஈரப்பதமாக்கவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

முருங்கை தூள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இது முடிக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

முருங்கைப் பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் தண்ணீரில் ஊறவைத்து, அதில் சிறிது நெல்லிக்காய் பொடியையும் கலக்கவும்.

அதன் பிறகு, காலையில் இந்த தண்ணீரை வடிகட்டவும். பிறகு இந்த தண்ணீரை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவவும்.

பின் தலைமுடியில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வைத்து, பின்னர் உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவவும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி… பாடிச் சேர்த்த பணத்தை வைத்து நற்செயல்!!

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் ‘Saving Little Hearts’ என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாடகி கூறும்போது, இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இது தான் என் வாழ்க்கையின் லட்சியம் ஆகும்” என்று கூறினார்.

மேலும், தெருக்களில் பாடி கார்கில் வீரர்களுக்காக நிதி திரட்டிய தனது முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

அண்மையில், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த அலோக் என்ற சிறுவனின் வீடியோவை பகிர்ந்து பிரார்த்தனை செய்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பாடகியும், அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் திரட்டிய நிதியை வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறார். இவர், சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.

அதோடு இவரை இந்திய அரசு பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளன