பெற்ற மகளை தவறாக வழிநடத்திய தாய் : நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!!

முல்லைத்தீவில் தனது பதின் அகவை மகளை தவறான முறையில் நடத்திய தாயாரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இதன்போது, இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட 32 வயதுடைய தாயாரே கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை தவறான முறையில் தனது கைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட தாயார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதோடு தயாரிடம் இருந்த கைத்தொலைபேசி சான்று பொருளாக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட தாயாரின் இரண்டு பிள்ளைகளையும் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் கைதுசெய்யப்பட்ட தயாரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தற்போது இரண்டு சிறுமிகளும் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவர்களின் சித்திகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வாடகை வருமான வரி!!

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டளவில் இந்த வரி முறையை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி என்பது ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அவர் பெறும் வருமானத்தின் மதிப்பீடாகும். இந்த வரி வீட்டின் மதிப்பின் அடிப்படையில் அல்ல, ஆனால் அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தின் அடிப்படையிலானதாகும்.

2025 ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், தற்போதுள்ள தடைகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாக, இந்த வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

குடியேறியுள்ள மற்றும் ஆளில்லாத வீடுகளுக்கு இந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சொத்து வரிக்கு ஏற்ற மாற்றாகும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபை மட்டத்தில் தரவுத்தளமொன்றை நிறுவுவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாட்டிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டை தரவுத்தளத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் தரவுத்தளத்தை உருவாக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பாரிய பண மோசடி!!

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாத்தறை (Matara), கொட கமவில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில் வழங்குவதாக பணம் வசூலித்ததாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, குறித்த சந்தேகநபரால் சுமார் 130 இலட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 29 அன்று முடிவடைந்துள்ளதுடன், உரிமம் புதுப்பிக்கப்படாமல் நிறுவனம் சட்டவிரோதமாக இயக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (13) பணியகத்திற்கு அழைக்கப்பட்டு பணியக சட்டத்தில் உள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய நீதவான், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், பயணத்தடையும் விதித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்… விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் தாய்!!

யாழ்ப்பாண பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (13.06.2024) காலை 100 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 9 வயது அடுத்த வருடம் புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.  இரண்டாவது மகளுக்கு 7 வயது 2 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

சம்பவத்தில் 35 வயதான குணசீலன் ஆனந்தி என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிண்ணியா இடிமனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்றைய தினம் இரவு தந்தையுடைய பண்ணைக்கு சென்ற வேலையில் அவரை மறைந்திருந்த யானை ஒன்று தாக்கியுள்ளது.

இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவர்களின் மரணம்!!

நீர்கொழும்பு குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் நேற்று(14) கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.

நீர்கொழும்பு கடற்கரை தெருவை சேர்ந்த யோகநாதன் நிதிஷ் (17), அஸரப்பா வீதியை சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் (17) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். ஐந்து மாணவர்கள் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

ஏனையவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தநிலையில் பிரதேசவாசிகளும் இணைந்து மூவரை காப்பாற்றியபோதும் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2024 இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!!

2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (13) ஆரம்பமான சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் “SAARCFINANCE” மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் 1949 ஆம் ஆண்டு பிறந்தேன். அப்போது நிலையான மாற்று விகிதம் 3 ரூபாய் 32 சதங்கள். 1978 இல், நான் அமைச்சரவையில் இருந்தபோது, ​​நிலையான மாற்று விகிதத்தை நீக்கிவிட்டு, டொலருக்கு நிகரான 16 ரூபாய் என்ற மிதக்கும் மாற்று விகிதத்திற்கு மாற்றினோம்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற விரிவான திட்டங்கள் இருந்தபோதிலும், அச்சிடுவதற்குப் பணம் தேவைப்பட்ட போதிலும், 2009 ஆம் ஆண்டளவில் நாம் டொலருக்கு 116 ரூபாவை செலுத்த வேண்டிய நிலையை எட்டியிருந்தோம்.

அப்போது சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டுக் கடன் நெருக்கடிக்கு மிதமான ஆபத்து இருப்பதாக அறிவித்திருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், மகாவலி திட்டத்தின் ஊடாக அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தி, நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்தோம். எமது சுதந்திர வர்த்தக வலயங்கள், எங்களின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை உறுதி செய்தன.

எங்களிடம் வளமான சுற்றுலாத் துறை இருந்தது. 2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய்.

எனவே, 1949 – 2024 வரையிலானபொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கிக் கொள்கையை விட பணத்தை பெரும்பாலும் அச்சிடுவதை மையப்படுத்தியதாகவே இருந்துள்ளது.

கடன் பெறும் தரப்பு என்ற வகையில் நாம் கடன் வாங்குதல், பணத்தை அச்சிடுதல் உள்ளிட்டச் செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கிறோம். அதன்படி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே புதிய மத்திய வங்கி சட்டத்தினை சமர்பித்திருக்கிறோம்.

அதன்படி மத்திய வங்கியிடம் கடன் வாங்குவும், பணம் அச்சிடவும் முடியாது. அரச வங்கிகளிடத்திலிருந்தும் கடன் பெற முடியாது. அதனால் வருமான வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக தூண்டப்படுவோம். அதேபோன்று பணவீக்கம் தொடர்பிலான இலக்குகளும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

 

சமாரி அத்தபத்துவுக்கு இரண்டாவது முறையாக கிடைத்த அங்கீகாரம்!!

மேற்கிந்தியத் தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி சர்வதேச மகளிர் கிரிக்கெட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

அதே நேரத்தில் இலங்கை கேப்டன் சாமரி அதபத்து தனது இரண்டாவது ஐசிசி மகளிர் வீராங்கனைக்கான விருதைப் பெற்றுள்ளார்.

2024 மே மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 வயது மகளை தகாதமுறையில் படம் பிடித்த தாய் : முல்லைத்தீவில் சம்பவம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனது பதின்ம வயது மகளின் மார்பினை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றதாக ட்கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் 32 வயதான இரு பிள்ளைகளின் தயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் குறித்த பெண் தனது 13 வயது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சிறுமியின் மார்பக பகுதியினை தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். இதனை தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களை ஏன் தாயார் அவ்வாறு படமெடுத்தார் என்பது தெரியவராத் நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதேவேளை தமிழர் பகுதிகளில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் போதைவஸ்து பாவனை என்பது அதிகரித்து வருகின்றமை சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பொலிசாரால் 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது : பல லட்சம் பெறுமதியான நகைகளும் மீட்பு!!

வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (14.06) தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், புளியங்குளத்தில் பிறிதொரு வீடு உடைத்து கிறைண்டர், மடிக்கணனி, லைற் உள்ளிட்ட பொருட்களும் குறித்த சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளன.

மேலும், மன்னார் பகுதியில் வீடு உடைத்து 5 இலட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார், பேசாலைப் பகுதியில் 3 வயது பிள்ளை அணிந்திருந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் குறித்த நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகள் வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த 6 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

வீதியில் சென்ற மாணவிக்கு திடீரென முத்தம் கொடுத்த நபர்!!

வீதியில் சென்ற 14 வயது பாடசாலை மாணவியை இறுக கட்டியணைத்து முகத்தில் முத்தமிட்ட 23 வயது குடும்பஸ்தர் இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான ஆறு குற்றங்கள் இருப்பதாக இரத்தினபுரி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் தெரிவித்தனர்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர், சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

இதனால் திகைப்படைந்த சிறுமி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்ததை தனது தாயிடம் கூறியதை அடுத்து தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தை பொலிசாரிடம் முறையிட்டதால் சந்தேகநபர் சிறுமியின் தாயையும் தாக்கியதுடன், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை தாக்கி பல கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட சிறுமி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!!

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.

இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும்.

இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். “ இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் 2006ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

மாறுவேடத்தில் வாழும் வேற்றுக் கிரகவாசிகள்!!

வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.

அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட வரும் நிலையில் இந்த புதிய விபரத்தை ஹவார்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வேற்றுக்கிரகவாசிகள்

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளில் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பறக்கும் தட்டுக்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில வேலை அவை மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து போய் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேற்று கிரகவாசிகள் அல்லது இந்த பூமிக்கு வெளியேயான விடயங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம் பாரிய அளவிலான பறக்கும் தட்டு ஒன்றை மறைத்து வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளிட்டிருந்தார்.

இந்தப் பேரண்டத்தில் நாம் தனித்து வாழ்கின்றோமா அல்லது வேறும் உயிரினங்கள் பல்வேறு கிரகங்களில் காணப்படுகின்றனவா என்பது குறித்த மர்மத்தை கண்டறியும் முனைப்புகள் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் திடமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆய்வு அறிக்கை இன்னமும் மீளாய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு : 4 பேர் கைது!!

வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று (14.06.2024) தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக தலைமையில் ஏ9 வீதியில் விசேட சோதனை ஒன்றை பொலிசார் மேற்கொண்டனர்.

இதன்போது ஏ9 வீதியூடாக பயணித்த வாகனங்களை சோதனை செய்த போது இரு வாகனங்கள் நிறுத்தாது வீதியூடாக தப்பிச் சென்றுள்ளன. விரட்டிச் சென்ற பொலிஸார் அவ்விரு வாகனங்களையும் வழிமறித்து சோதனை செய்ததில் வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக உரிய அனுமதிகளின்றி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வடக்கின் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மற்றைய வாகனம் வடக்கின் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 18 மாடுகளுடன் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

எனினும் தற்போது வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு வழமை போன்று இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

ஒரு நாள் சேவை அல்லது பொதுச் சேவைகளின் கீழ் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் இதனை பெறலாம்.

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்குவது தேசிய தரவு முறைமை தயாரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளையுடன் முடியும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்!!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் 2025 இல் முடிவடையும் .

அதேசமயம் இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை தொடர்வதற்கு போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் தேர்தலை நடத்துவதில் நிதி நிதிக்கு பிரச்சினை இல்லையென்றாலும் அது தேர்தல் நிதி நிதி திட்டத்தின் நேரத்தை பாதிக்கிறது எனவும் தேர்தல் நடத்தினால் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நேரத்தை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.