போட்டியில் விஷால் – கார்த்தி படங்கள்!!

visal

விஷாலின் மதகஜராஜா படமும் கார்த்தியின் பிரியாணி படமும் அடுத்த மாதம் 6ம் திகதி ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. இவ்விரு படங்களும் போட்டியிடும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் வருகிறது.

மதகஜராஜா படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்த படம் முன்பே வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மரணம் அடைந்ததால் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினைகள் முடிந்து திரைக்கு வருகிறது.

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன், ராம்கி, நிதின்சத்யா, மதுமிதா போன்றோரும் உள்ளனர். காமெடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடி படமாக தயாராகியுள்ளது.

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!(படங்கள்)

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால் அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா நகரங்களைத் தான் தேர்ந்தெடுப்போம்.

ஏனெனில் கடற்கரை உள்ள நகரங்களில் நேரம் போவதே தெரியாது. மேலும் அங்கு மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உலகில் ஒருசில கடற்கரை நகரங்கள் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் அந்த நகரங்கள் இரவில் பார்க்கும் போது மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும், அங்கு கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை போன்றவை சிறந்ததாகவும் இருக்கும்.

எனவே நீங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு அதிலும் கடற்கரை நகரங்களுக்கு செல்ல விரும்பினால் அத்தகையவர்களுக்காக உலகில் உள்ள சிறந்த 10 கடற்கரை நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, சுற்றுலாவிற்கு எங்கு செல்லலாம் என்று முடிவெடுங்கள்.

மியாமி, ஃப்ளோரிடா
உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட.

1

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்
துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக்கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது.

2

பார்சிலோனா, ஸ்பெயின்
பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.

3

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

4

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது.

5

மும்பை, இந்தியா
மஹாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையும் ஒரு சிறந்த கடற்கரை நகரங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் அங்கு பல்வேறு கடற்கரைகளுடன், மேற்கத்திய கடற்கரையும் இணைந்துள்ளது. அதில் தாதர் சௌபதி, ஜூஹூ கடற்கரை, வெர்ஸோரா கடற்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

6

லொஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த நகரங்களுள் முக்கியமானவை. இங்குள்ள சான்டா மோனிகா கடற்கரையில் பல ஹொலிவுட் படப்பிடிப்புக்கள் எடுக்கப்படும். மேலும் இங்கு பல கேளிக்கை பூங்கா சவாரிகள், மீன் அதிசயங்கள் மற்றும் உணவுத் திருவிழா போன்ற பல உள்ளதால், இது ஒரு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய கடற்கரை நகரமாக உள்ளது.

7

சிட்னி, அவுஸ்ரேலியா
சிட்னி, தென்கிழக்கு கடற்கரையில் இருக்கும் டாஸ்மான் கடலில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகும். இந்த பல்வேறு சர்வதேச விளையாட்டுக்கள் நிகழும். இத்தகைய சிட்னியும் உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் அழகான கடற்கரை நகரங்களுள் ஒன்றாகும்.

8

வெனிஸ், இத்தாலி
வடகிழக்கு இத்தாலியில் 118 சிறு தீவுகளால் அமைந்துள்ள வெனிஸ் நகரமும் ஒரு அழகான கடற்கரை நகரமாகும். மேலும் இந்த நகரம் அழகு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கடற்கரையால் இன்னும் புகழ்பெற்றதாக உள்ளது.

9

நைஸ், பிரான்ஸ்
மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள நைஸ் நகரம், இரண்டாவது பெரிய பிரஞ்சு கடற்கரை நகரமாகும். மேலும் இந்த பிரஞ்சு நகரம், பாரிஸுக்கு அடுத்த இரண்டாவது புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள கடற்கரையானது மிகவும் அழகாவும், சுத்தமாகவும் இருப்பதோடு, இதன் அழகு அங்கு செல்வோரை அங்கேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தை தரும் அளவில் இருக்கும்.

10

இணைய விளம்பரங்கள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பது எப்படி??

add

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இணையத்தளங்களை பயன்படுத்தும்போது, தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.
இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தரவிறக்க இங்கே கிளிக் செய்க..

குடிவெறியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பனேசர் அடாவடி!!

panesar

குடிவெறியில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொன்டி பனேசருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர் 48 டெஸ்டில் 164 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இவர் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள இரவு நேர கிளப்புக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். குடிவெறியில் அங்கிருந்த பெண்களுக்கு தொல்லை தர உடனடியாக கிளப்பை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த கோபத்தில் கிளப்பின் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டு ஓடினார். இவரை துரத்திய காவலர்கள் அருகிலுள்ள “பீட்சா நிலையத்தில்” வைத்து பிடித்து மீண்டும் கிளப்புக்கு இழுத்து வந்தனர். பின் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவருக்கு ரூ. 8500 அபராதம் விதிக்கப்பட்டது. பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

பிரைட்டன் பகுதியில் உள்ள கிளப் அருகில் அதிகாலை 4.13 மணி அளவில், போதையில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதால் பனேசருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

போதையில் ரகளையில் ஈடுபட்டதற்காக பனேசர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். பனேசர் பொலிஸில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த 2011ல் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர்.

சமீபத்தில் கவுன்டி போட்டியின் போது களத்தில் மோசமாக நடந்து கொண்டதால், சசக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

வவுனியா, கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட மூவர் கைது!!

vavuniya

கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டதாக கூறப்படும் ஒருவரும் அவற்றை வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், தும்ரியபொல வீதி கிளிநொச்சி பிரதேசத்தில் போலி 1000 ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைதானார். நேற்றையதினம் கைதான இவர் வசமிருந்து 28 போலி 1000 ரூபா நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதேசத்தில் 20 போலி 1000 ரூபா நாணயத் தாள்களுடன் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதில் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிடுபவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதானார்.

மேலும் நாணயத் தாள்கள் அச்சிட பயன்படுத்தப்பட்ட கொன்கோட் வகை தாள்கள் 15, கனிணி மற்றும் அச்சுப்பொறி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

meditate

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம்.
உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், அதனை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருப்பதென்பது மிக கடினம். இருப்பினும் அது முடியாத காரியமல்ல. மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சுற்றுச்சூழல்
எந்த சூழலில் அமர்ந்து பணிபுரிகிறோமோ அது மனதை ஒருமுகப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. மனதிற்கு இதமான மற்றும் வசதியான சூழ்நிலையில் பணிபுரியும் போது பணியில் மிகவும் அதிகமாகக் கவனத்தைச் செலுத்த முடியும்.

எண்ணங்கள்
மனதை ஒருமுகப்படுத்துதலின் இரகசியம் என்னவென்றால் சாதாரண எண்ணங்களால் மனதை குழப்பமால் பார்த்துக் கொள்வது தான். பணிக்கு சற்றும் தொடர்பில்லாத நினைவுகள் எழுந்தால் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு கவனம் முழுவதையும், பணியில் மட்டும் செலுத்தவும்.

நேரம்
செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அவசரமான வேலை சாதாரணமான வேலை என்று முக்கியத்துவத்தைப் பொறுத்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும். குறிப்பாக நேரத்தினை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதே பணியில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவும். இப்படிச் செய்து கொண்டால் சிறுசிறு நிகழ்ச்சிகளால் கூட கவனத்தைத் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எதிர்மறை எண்ணங்கள்
எப்போதும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று சொல்லக்கூடாது. அதனால் மனம் நம்பிக்கை இழந்து எதிர்மறையாக நினைக்கத் தொடங்கும். அதன் பின் மனதை வற்புறுத்தி பணிபுரியத் தொடங்கும் போது அது ஒத்துழைக்காமல் போகும். எனவே எப்போதும் என்னால் முடியும் என்றே நினைக்க வேண்டும்.

பல பணிகள்
ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டால் நம்மால் எந்த ஒரு பணியிலும் மனதைத் தீவிரமாகச் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே ஒவ்வொரு பணியாக முழுமனதுடன் செய்து முடித்து அதன்பின் அடுத்த பணிக்கு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பணிகளும் அழகாக முடிந்திருக்கும்.

சத்தம்
நம்மை சுற்றி சத்தமாக இருந்தால் பணியில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, கையடக்கத் தொலைபேசி சத்தமெழுப்பினால் அவற்றை நோக்கி கவனிக்க வைத்துவிடும். அது கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கும். இறுதியில் செய்ய வேண்டிய பணிகள் தடைப்பட்டிருக்கும். முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை நிறுத்தி வைக்கவும்.

உணவும் உடற்பயிற்சியும்
மனதை ஒருமுகப்படுத்துவதில் சரிவிகித உணவுக்கும் உடற்பயிற்சிகளுக்கும் நல்லதொரு பங்குண்டு. தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு இல்லையென்றால் அது மயக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும். விட்டமின் ‘ஈ’ அடங்கிய பருப்பு வகைளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புரிந்து கொளுங்கள்
செய்யும் பணியை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் இறங்கினால் மனதினை அதில் முழுமையாகச் செலுத்த முடியாது. அது குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, முதலில் செய்ய வேண்டிய பணியினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யும் பணி கடினமாக இருந்தால் நமது மனம் எளிதான பணிகளை நாடத் தொடங்கிவிடும். எனவே பணிகளை செய்யத் தொடங்கும் முன்னதாக, அப்பணிகளைப் பற்றிய ஒரு எளிமையான அடிப்படைக் கட்டமைப்பினையும் செயல் திட்டத்தினையும், வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

தள்ளிப் போடக்கூடாது
பணிகளைச் செய்வதை தள்ளிப் போட விரும்புகிறீர்களா? எப்போதுமே பணிகளைச் செய்வதைத் தள்ளிப் போட கூடாது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை முடித்துவிட்டு தான் இருக்கையை விட்டு எழுந்திருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பான நேரம்
அனைவருக்கும் இருப்பது 24 மணிநேரம் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். அப்படிப்பட்ட நேரத்தினைக் கண்டறிந்து கொண்டு மிகவும் சவாலான பணிகளை இந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.

நேர்மறையான எண்ணுங்கள்
மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தால் என்னால் எனது மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யதால் உங்களை அறியாமலேயே ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாகும்.

தியானம்
தியானம் என்பது ஒரு சிகிச்சையல்ல. ஆனால் இதனைக் கற்றுக் கொண்டு முறையாகச் செய்து வந்தால் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இதனால் ஏதோ ஒரு வேறுபாட்டினை உணரத் தொடங்குவதோடு மன ஒருமுகப்படுத்தும் திறன் மெல்ல வளர்வதையும் உணர்வோம்.

நிதானம்
ஒரு பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட அதில் அதிக நேரம் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமையலாம். எனவே மனம் முழுவதையும் செலுத்தி போதுமான நேரம் எடுத்துக் கொண்டு, நிதானமாக அதனைச் செய்தால் அப்பணி சிறப்பாக நிறைவடையும்.

பழக்கப்படுத்தவும்
மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மூளையைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்குப் போதுமான பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு பொருள் மீது சில விநாடிகளுக்கு மேல் கவனத்தைச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட அதை தொடர்சியாக பயிற்சி செய்வதன் முலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

காலக்கெடு
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால் முக்கியமில்லாத பணிகள் மறந்து போய் முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.

தூக்கம்
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.

சீரான முன்னேற்றம்
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால் பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.

இதயமும் மனமும்
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து ஈடுபடுத்திக் கொண்டு ரசித்து செய்யும் போது மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

உலகின் குள்ளமான பெண்ணாக 22 வயது கல்லூரி மாணவி..!!

smallest woman

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜோர்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால் பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம்.

இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மஜிக் என்று பல விடயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். 28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார் பிரிட்ஜெட்.

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் 24 அங்குலம். அவர் கடந்த 1895ம் ஆண்டு தனது 19ஆவது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

selicon

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது “சிலிகன் டேப்” ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்து வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் சமநிலையில் நிறைவடைந்தது.

தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் ஆஷஸ் தொடர் மீது புதுவிதமான பிரச்சினை வெடித்துள்ளது. இந்த தொடரில் நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை எதிர்த்து முறையீடு செய்யும் முறை (டி.ஆர்.எஸ்.) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தொழில்நுட்பம் ஒட்டுமொத்த சர்ச்சையின் உருவமாக கிளம்பி இருக்கிறது. டி.ஆர்.எஸ். என்பது நடுவர்களின் தவறான தீர்ப்புகளை சரி செய்வதற்கு தான். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சில தவறான தீர்ப்புகள் ஆஷஸ் தொடரில் வழங்கப்பட்டது.

குறிப்பாக டி.ஆர்.எஸ் இன் ஒரு அங்கமான “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பந்து துடுப்பில் உரசியதா இல்லையா என்பதை துல்லியமான “இன்ப்ரா ரெட் கமரா” உதவியுடன் அறிவதற்கு “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஆஷஸ் 3வது டெஸ்டின் போது ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் மேத் பிரையரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்ப்பு வழங்கிய போது “ஹொட் ஸ்பொட்” முறையின்படி டி.வி. ரீப்ளேயில் பார்த்தனர்.

பந்து துடுப்பில் உரசியதற்கான ஆதாரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் பந்து துடுப்பை கடந்த போது ஏதோ சத்தம் மட்டும் வந்தது. பந்து துடுப்பில் உரசியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவரது ஆட்டமிழப்பு உறுதி செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதே போட்டியில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு வழங்கப்பட்ட பிடியிலும் “ஹொட் ஸ்பொட்” முறையில் பந்து துடுப்பில் பட்டதற்கான அடையாளம் தெரியவில்லை. இதனால் “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறினார்.

இதற்கிடையே “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பத்தை குழப்புவதற்காக இந்த தொடரில் இரு அணியிலும் சில வீரர்கள் நூதன மோசடியை கையாண்டு இருப்பதாக இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது துடுப்பில் பந்து உரசி செல்வதை தவிர்ப்பதற்காக வீரர்கள் சிலிகன் என்ற ஒரு வகை உலோக டேப்பை துடுப்பில் ஒட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். சிலிகன் டேப்பில் பந்து உரசும் போது அது துடுப்பில் பட்டதற்கான அடையாளத்தை மறைத்து விடும். சத்தமும் வராது. இவ்வாறு நடக்கும் போது “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பம் குழம்பி போய் விடும்.

இப்படி மோசடிகள் அரங்கேற்றப்பட்டதால் தான், இந்த தொடரின் போது “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் சில முக்கியமான முடிவுகளில் தனது தரத்தை இழந்து விட்டதாக ஆஸி. தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அந்த அலைவரிசை குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி இங்கிலாந்து முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் கூறும் போது, வீரர்கள் தங்களின் துடுப்புகளில் சிலிகன் டேப்பை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆஸி. தலைவர் மைக்கேல் கிளார்க் விசாரிக்க வேண்டிய நேரம் இது என்றார்.

மைக்கேல் கிளார்க்கிடம் இது பற்றி கேட்ட போது துடுப்பில் டேப் பயன்படுத்துவது குறித்து எனக்கு தெரியாது. எங்கள் அணியில் யாரும் இது போன்ற மோசடியில் ஈடுபடவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த மாதிரி விளையாடுவது ஆஸி. கிரிக்கெட்டின் கலாசாரம் கிடையாது என்றார்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் மீதுதான் மறைமுகமாக இந்த புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்துள்ள அவர் கூறும்போது, விக்கெட்டை இழப்பதற்கு நான் ஒரு போதும் பயந்தது கிடையாது. ஆட்டமிழப்பு என்றால் உடனே நடையை கட்டி விடுவேன். துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டியிருப்பதாக கூறுவது, எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பந்து துடுப்பில் உரசுவதை மறைக்க நான் முயற்சிப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. முதல் இன்னிங்சின் போது எனது துடுப்பில் பந்து உரசியதை “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்ததை எண்ணி பார்க்க வேண்டும்’ என்றார்.

எனினும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் குற்றச்சாட்டை ஐ.சி.சி. மறுத்துள்ளது.

ஐ.சி.சி பொது மேலாளர் ஜெப் அலார்டைசி ஆஸி. இங்கிலாந்து வீரர்கள், நடுவர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் டி.ஆர்.எஸ். முறையை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தார். மற்றபடி எந்த வீரர்களிடம் விசாரணை நடத்தவில்லை. ஊடகத்தின் தகவல் தவறானது என்று ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சட்சன் கூறியுள்ளார்.

நடிகர் ஜெயப்பிரகாசுடன் இணைத்து அவதூறு பரப்புவதா : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்!!

laxmi

நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பசங்க படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். எதிர்நீச்சல், சென்னையில் ஒரு நாள், கழுகு, மங்காத்தா, மெரினா போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்திலும் வில்லனாக வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்துள்ளார். சென்னையில் ஒரு நாள் படத்தில் ஜெயப்பிரகாசும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஜோடியாக நடித்தனர்.

இந்த நிலையில் இருவரையும் இணைத்து இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்கு பதில் அளித்து லட்சுமிராமகிருஷ்ணன் அவரது டுவிட்டரில் கூறி இருப்பதாவது..

ஜெய்பிரகாசும் நானும் இணைந்து வாழ்வதாக அவதூறு பரபரப்பட்டு உள்ளது. இது எனக்கு மனவேதனை அளிக்கிறது. இந்த வயதில் காதல் எனக்கு தேவையா, எனக்கு கணவர் இருக்கிறார். காதல் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய ரூபாவின் மதிப்பு குறைவடைந்து வருவதால் இலங்கையிலிருந்து சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பு!!

Gold

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் செயல்களும் அதிகரித்துள்ளன.

சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான பிரேரணையை சமர்பித்து பேசும் போதே அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று 40,000 ரூபா விலையில் குறைவடைந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டே உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்காக 5 வீத இறக்குமதி வரி அறவிடப்பட்டது.

இந்த 5 வீத இறக்குமதி வரிக்கு 100 வீத மேலதிக வரி இடப்படுகிறது. அதாவது தங்கத்துக்கு 2013 ஜூன் 21 ம் திகதி முதல் 10 வீத வரி அமுல்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு உலக சந்தையில் வெகுவாக தங்கத்தின் விலை குறைந்தது. 2011ல் ஒரு ட்ரோய் அவுன்ஸ் தங்கம் 1900 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது பின்னர் 1300 டொலராக குறைவடைந்தது.

இது 30 வீத குறைவாகும். எமது நாட்டின் உள்ளூர் சந்தையில் 15 வீதம் குறைவடைந்தது. இந்த நிலை காரணமாக 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்கம் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 136.2 மில்லியன் டொலர்கள் 2013 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஒப்பிடும் போது 200.3 மில்லியன் டொலர்களாக 50 வீத அதிகரிப்பு ஏற்பட்டது.

தங்கத்தின் விலை உலக சந்தையில் அதிகரித்தால் எமது இறக்குமதி செலவில் அதிகரிக்கவும் நேரடியாக வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயமும் உள்ளது.
உலகில் அதிகளவு தங்கத்தை நுகரும் மக்கள் இருக்கும் நாடாக கருதப்படும் இந்தியாவில் அந்நாட்டு ரூபாவின் மதிப்பும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை இலங்கையைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து தங்கத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
தங்கம் இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள் அடகு நிலையங்களில் மக்கள் தங்கத்தை அடகு வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 2013 ம் ஆண்டு மே மாதம் வரையில் 633 பில்லியன் ரூபாவுக்கு தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளில் 590 பில்லியன் ரூபாவும், நிதி நிறுவனங்களில் 32 பில்லியன் ரூபாவும், அடகு நிலையங்களில் 11 மில்லியன் ரூபாவுமாக அடகு வைக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகியுள்ள வட்சனின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

Shane Watson

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக அதிரடி தொடக்க வீரர் டேவிட் வானரை மீண்டும் பணியில் இறக்கலாம் என்று ஆஸி அணி நிர்வாகம், பயிற்சியாளர் டேரன் லீ மேனும் கருதுகின்றனர்.

வட்சன் தொடர்ந்து எல்.பி அல்லது வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பது என்ற நிலையில் இருந்து வருகிறார். அவுஸ்திரேலியா போன்ற அணிகளில் அதுவும் கிளார்க், லீமேன் போன்ற கண்டிப்பான நபர்களின் மேற்பார்வையில் தொடர்வது வட்சனுக்குக் கடினம்.

இன்னொரு முறை எல்.பி-யோ அல்லது ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தாலோ அணியிலிருந்து வெளியேற வேண்டியதுதான் என்பதை அவர்கள் திட்டவட்டமாக துடுப்பாட்ட வீரர்களிடம் கூறும் கலாசாரம் அங்கு உள்ளது.

வட்சனின் இந்த ஆஷஸ் தொடர் ஓட்ட எண்ணிக்கை 46, 30, 20, 19 தான். சரியும் அவரது கிரிக்கெட் வாழ்வின் பிரதிபலிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நடுவரிசையில் வட்சனை களமிறக்கலாமா என்ற யோசனையும் இருந்து வருகிறதாம். அப்படி இல்லாது வெளியேற்றப்பட்டால் வட்சன் மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக பாடுபடவேண்டும் என்பது உறுதி.

தயாரான கோச்சடையான் டிரைலர்..(வீடியோ இணைப்பு)

Rajini Kochadaiyaan First Look Postersசெளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிரெய்லர் ரெடியாகியுள்ளது. கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட தயாராகிவிட்டதாம்.
அவதார் படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதாம்.

படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினியின் பிறந்தநாளுக்கு கோச்சடையான் வெளிவரலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட திட்டம் எதுவும் தற்போது இல்லையாம்.

நண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது அசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்!!

acid

இந்திய உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த நண்பனின் மகள் மீது அசிட் வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு நரைன் ஷிவ்புரி(50).

மில் கொலனியில் வசிக்கும் அவருக்கு மறைந்த தனது நண்பரின் 24 வயது மகளை திருமணம் செய்துகொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. மகள் வயதில் உள்ள பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அப்பாவின் நண்பர் இப்படி தன்னிடம் கேட்டதால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை மணக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு அப்பெண் மீது நேற்று அசிட் ஊற்றினார்.

அவர் அசிட் ஊற்றியபோது அப்பெண் நல்லவேளையாக விலகிவிட்டதால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பிரான்சில் 500 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பாரிஸ் கோபுரம்..!

vavuniyaபிரான்சில் 500 ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்டுள்ள வரலாற்று பாரிஸ் கோபுரமானது சுற்றுலாப்பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியினால் செயிண்ட் ஜாக்ஸ் டி லா போச்செரி (Saint-Jacques-de-la-Boucherie) கோபுரமானது தாக்கப்பட்டது. இதனால் இந்த கோபுரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பொலிசரால் மூடப்பட்டது.

இந்த கோபுரமானது 62 மீற்றர் உயரமும் மற்றும் 300 படிக்கட்டுகள் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரமானது பாரிஸ் நகரத்தின் நடுவே அமையப்பெற்றது.

இக்கோபுரத்தின் உச்சியில் இருந்து நகரத்தை முழுமையாக காண முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு

நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணச்செல்கின்றனர். மேலும் பார்வையாளர்களின் அனுமதி சீட்டானது 6 யூரோவிற்கு விற்கப்படுகிறது,

ஆனால் இந்த நினைவுச் சின்னமானது செப்டம்பர் 15ம் திகதியுடன் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடுதளத்தில் மேய்ந்த மாட்டின் மீது மோதி நிலை குலைந்த பயணிகள் விமானம்..!

vavuniyaஇந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் ஜெட் ரக விமானம் நேற்று சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது.

விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில் பதியும் வேளையில் அருகாமையில் உள்ள புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகளில் ஒன்று ஓடுபாதையின் குறுக்கே ஓடிவந்தது.

நடக்கும் விபரீதத்தை விமானி உணர்ந்துக்கொள்ளும் முன்னர், விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் மாட்டின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதறிய மாடு பல அடி தூரம் தள்ளிப்போய் விழுந்தது.

மாட்டின் மீது மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய விமானம், ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் பாய்ந்தது.

இச்சம்பவத்தில் விமானத்தின் சிறிய பகுதிய சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 110பயணிகளும் பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஓடுபாதையின் குறுக்கே விபத்துக்குள்ளான விமானம் விழுந்து கிடந்ததால் அங்கிருந்து புறப்படும் இதர விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி இதுதொடர்பாக கூறுகையில், ´மேலே இருந்து பார்க்கும் போது ஓடுதளத்தில் நாய்தான் மேய்கிறது என்று நினைத்தேன். விமானம் நெருங்கிய வேளையில்தான் அது மாடு என்று தெரிந்தது´ என்றார்.

என் மகள் மீது வைத்துள்ள பாசத்தால் அழுகிறேன் : இயக்குனர் சேரன்..!!

seran

மகள் பிடிவாதத்தால் இயக்குனர் சேரன் மனம் உடைந்து போய் இருக்கிறார். நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த போது சேரன் மனைவி செல்வராணியுடன் வந்து இருந்தார். மகள் தாமினியும் வந்து இருந்தார்.

தாமினி முகத்தை பார்க்கவும் பேசவும் சேரனிடம் ஆர்வம் பொங்கியது. ஆனால் தாமினி கண்டு கொள்ளவே இல்லை. முகத்தில் வருத்தம், சலனம் எதுவும் இன்றி இருந்தார். காதலன் சந்துருவை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இரு வாரங்கள் தாமினி படித்த பள்ளிக் கூடத்தின் தாளாளர் வீட்டில் அவரை தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரனிடம் பேசிய போது ஒரு தந்தையின் வலிகளை உணர முடிந்தது. அவர் கூறியதாவது..

என்னை நிறைய பேர் போனில் அழைக்கிறார்கள். யாரிடமும் பேச முடிய வில்லை. பேசும் போது வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இது எனக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட வேதனை.

இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நான் ஹீரோ இல்லை என்று எனக்கு தெரியும். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் ஒரு தந்தையாக என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எந்த விதத்திலும் எனது சொந்த பலத்தை நான் பயன்படுத்தவில்லை. இந்த பிரச்சினையை சட்டத்தின் உதவியோடு நேர்மையாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த போது நான் அழுது விட்டேன். மகள் மீதுள்ள பாசத்தால் அழுகிறேன். திரையுலகில் எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள்.

இயக்குனர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் இதயம் காயப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திரையுலகினர் எனக்கு துணையாக இருப்பது வலிக்கு மருந்தாக உள்ளது.

என் மகள் மேல் எந்த தப்பும் இல்லை. அவளுக்கு இருபது வயதுதான் ஆகிறது. வாழ்க்கை பற்றி புரியாத வயது. இது கோபப்படுவதற்கான நேரம் அல்ல. அவளுக்கு நல்லது நடக்க போராடுகிறேன்.
இவ்வாறு சேரன் கூறினார்.