மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது..!

goldமலவாயிலில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.10 அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

477 கிராம் அடங்கிய தங்க தகடுகளை குறித்த நபர் மலவாயிலில் மறைத்து வைத்து விமானத்தில் பயணிக்க முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் மோதிரம் ஒன்றும் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வளையல்கள் 45 கிராமும் மோதரம் 15 கிராமும் நிறையுடயவை என கண்டறியப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி 27 லட்சம் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மீண்டும் இணையவுள்ள சிம்பாவே!!

Zimbabwe

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் சிம்பாவே அணி மீண்டும் இடம்பிடிக்க உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு ஆகஸ்ட் வரை டெஸ்ட் போட்டிகளிலிருந்து சிம்பாவே அணி விலகியிருந்தது. இதனையடுத்து அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் அணி சிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று நேற்று ஆரம்பமாகியது.

இத்தொடர் முடியும் போது பட்டியலில் சிம்பாவே இடம் பிடிக்கும்.
இரண்டு போட்டிகளை வெல்லும் பட்சத்தில் 47 புள்ளிகளும், 1-0 என்ற நிலையில் 43 புள்ளிகளும், 0-0 அல்லது 1-1 என்ற நிலையில் 34 புள்ளிகளும் பெறும்.

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : நிர்வாணமாக்கி இணையத்தில் வெளியிட்ட நபர்!!

morphsதிருமணத்துக்கு மறுத்த பெண்ணின் புகைப்படத்தை மாபிங் மூலம் நிர்வாணமாக்கி இணையதளத்தில் வெளியிட்ட நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த அப்துல் காதர் மகன் ரிபின் காதர் (28). இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பேஸ்புக் சட்டிங் மூலம் இவருக்கு கொச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரிபினுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், இதை அவர் மாணவியிடம் தெரிவிக்கவில்லை.

நாளடைவில் இவர்களுக்கு இடையே நெருக்கம் மிக அதிகமானது. இந்நிலையில், மாணவியிடம் அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ரிபின் கேட்டுள்ளார். அந்த மாணவியும் தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் ரிபின் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் ரிபினுக்கு திருமணமான விபரம் மாணவிக்கும், அவரது வீட்டுக்கும் தெரிந்து விட்டது. ரிபினை திருமணம் செய்ய அந்த மாணவி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரிபின் மாணவியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே தன்னிடமிருந்த மாணவியின் புகைப்படத்தை மாபிங் மூலம் நிர்வாண புகைப்படமாக மாற்றிய அவர் அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து மாணவி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பெற்றோரிடம் கூறினார். ரிபினை தொடர்பு கொண்டு புகைப்படத்தை நீக்குமாறு கூறியுள்ளனர். அவர் அதை ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் களமசேரி பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். பொலிசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ரிபின் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கொடுங்கல்லூருக்கு வந்திருப்பதாக பொலிசிற்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜினதேவன் தலைமையிலான பொலிசார் கொடுங்கல்லூருக்கு விரைந்து சென்று ரிபினை கைது செய்தனர். அவரது லப்டப்பையும் கைப்பற்றினர்.

விசாரணைக்கு பிறகு பொலிசார் ரிபினை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பெற்ற மகளின் ஆடையை அவிழ்த்து கடித்துக் குதறிய தந்தை!!

child

மும்பையைச் சேர்ந்த11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவிழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையின் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடிகாரர்.அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடிபோதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லையாம்.

இதனால் கோபமடைந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக நடந்துள்ளார். மேலும் மகளின் உடலில் கடிக்கவும் செய்துள்ளார்.

குடிகாரத் தந்தை கடித்ததால் சிறுமியின் உடலில் பல் பதிந்துள்ளதாம். குடிகார தந்தை குறித்து தாயாரிடம் அழுதபடி கூறியுள்ளார் அந்த சிறுமி ஆனால் தாயாரோ போகட்டும் விடு என்று சாதாரணமாக கூறி விட்டாராம்.

இதனைத் தொடர்ந்து மனம் நொந்து போன சிறுமி தனது தந்தை மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையைக் கைது செய்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறுகையில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் எனது தந்தை சிலருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

நான் உதவிக்கு வருவேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் எப்போதும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவதால் நான் போகவில்லை.

இதனால் கோபமடைந்தார் அவர் நேராக வீட்டுக்கு வந்து என்னை அடிக்க ஆரம்பித்தார். மேலும் என்னை தரதரவென இழுத்துச் சென்று காலால் மிதித்தார்.

பின்பு எனது ஆடையைக் கழற்றி அசிங்கமாக நடந்து கொண்டார். என்னை வெறித்தனமாக கடிக்கவும் செய்தார். வீட்டில் அப்போது யாரும் இல்லை என்பதால் எனது தந்தையை எதிர்த்துப் போராட பயந்து அமைதியாக இருந்தேன்.

அடுத்த நாள் எனது தாயார் எனது உடலில் ஏற்பட்டிருந்த காயத்தைப் பார்த்து என்னவென்று கேட்டபோது நடந்ததைக் கூறினேன். அதைக் கேட்ட அவர் சரி போகட்டும் விடுஎன்று கூறி விட்டார். ஆனால் எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான் புகார் கொடுக்கத் துணிந்தேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார்.

சிரியா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!!

syria-attack

சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே அமெரிக்கா மேற்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பில்,அமெரிக்க இராணுவப் படைகளின் துணைத் தலைவர் ஜெனரல் ஜாக் கீன் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று அதிபரின் வெள்ளை மாளிகையில் இது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சிரியா மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால் அதிபர் அஸதின் இராணுவத்துக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக,அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது தனிப்பட்ட உறுதிமொழியை அளித்திருந்தார் என ஜெனரல் கீன் தெரிவித்தார்.

சிரியாவின் கிளர்ச்சிக் குழுவினருக்கான தங்களது ஆதரவை அதிகரிக்கவும் ஒரு திட்டம் உள்ளதாக ஜெனரல் கீன் மேலும் கூறினார்.

சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது இஸ்ரேல், அமெரிக்கா மறுப்பு!!

is

சிரியா மீது நேற்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அரசப் படைகள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

ஆனால் ரஷ்யாவோ சிரியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10.16 மணியளவில் சிரியாவை நோக்கி வந்த இந்த இரு ஏவுகணைகளும் மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும் அவை சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

மேலும் இதுகுறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களது நாட்டை இதுவரை ஏவுகணை ஏதும் தாக்கவில்லை என்று சிரியாவும் இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேலும் கூறியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது.

அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான USS Nimitz கப்பலும் ரெட் சீ பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன.

இந்நிலையில் இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது.

இதன்மூலம் இந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் தான் சிரியாவை நோக்கி வந்தன என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேலின் இந்தச் செயல் அந்தப் பிராந்தியத்தில் ஒரு போருக்குக் காரணமாகிவிடும் என்று சிரியா எச்சரித்துள்ளது.

புதிய சாதனையை நோக்கி டோனி!!

Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தப் போகிறார் . சம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டியில் அதிக போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமைதான் இது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி செப்டம்பர் 22ம் திகதி தனது முதல் போட்டியைச் சந்திக்கும்போது இந்த சாதனையை நிகழ்த்துவார் டோனி.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம் திகதி தொடங்கி அக்டோபர் 6ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும்.

செப்டம்பர் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னையின் முதல் போட்டி ராஞ்சியில் செப்டம்பர் 22ம் திகதி நடைபெறுகிறது. அதில் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை மோதவுள்ளது.

இதுவரை சென்னை அணிக்கு சம்பின்ஸ் லீக் தொடரில் 13 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார் டோனி. செப்டம்பர் 22ம் திகதி நடைபெறும் போட்டி அவருக்கு தலைவராக 14வது போட்டியாகும். இது ஒரு சாதனையாகும்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் டோனி மட்டுமே. இவருக்கு அடுத்த இடத்தில் 12 போட்டிகளுடன் மேற்கு இந்தியத் தீவுகளின் டேரன் கங்கா அதே 12 போட்டிகளுடன் கம்பீர் ஆகியோர் உள்ளனர்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்..!

tna2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.

1948 ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றபோது இலங்கையில் சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று பலவந்தமாக திணிக்கப்பட்டது. 1949 இல் அண்மைக் கால இந்திய வம்சாவளித் தமிழர்களுள் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, 1949 டிசம்பர் மாதம் இலங்கை தமிழரசுக் கட்சி (இ.த.க) உருவாக்கப்பட்டது.

இந்த பின்னணியில் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசியம் என்பதற்கான எல்லா அம்சங்களிலும் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனம் ஆவர் என்பதும் எனவே, சுய நிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பதுமான தனது நிலைப்பாட்டை இ.த.க வலியுறுத்தியது.

இந்த உரிமையை பிரயோகிப்பதற்கு தேவையானதொரு அம்சமாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு கிழக்கில் சுயாட்சி ஏற்பாடு ஒன்றை நாம் கோரினோம்.

1956 ஆம் ஆண்டு, பெரும்பான்மையினரிடம் இருந்த பாராளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது. இந்தகாலத்திற்கும் 1970களின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில், முதலில் வெளிநாட்டவர்கள் நாட்டை வெற்றி கொண்டமையினாலும் பின்னர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, பெரும்பான்மை ஆதிக்கத்தை வலுப்படுத்திய ஓர் ஆட்சி முறையினாலும் இழந்த சுய நிர்ணய உரிமையை மீண்டும் வென்றெடுப்பதற்காக பல்வேறு அமைதிவழி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றம் டட்லி சேனநாயக்க ஆகிய இரு பிரதம மந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் தலைவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் இடையில் முறையே 1957 ஆம் ஆண்டிலும் 1965 ஆம் ஆண்டிலும் பிரதானமாக வடக்கு கிழக்கில் உள்ள அரச காணிகளின் பராதினப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களினால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.

1970 இல் தனக்கு உகந்த அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்காக அசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதக வும் இச் செயன்முறையில் பங்குபற்றியதோடு, தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட ஒரு நாட்டிற்குள் பகிரப்படும் இறையான்மை எனும் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.

இவ் ஆலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட, இதக உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதேபோன்று, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தை வழங்கவில்லை.

இவ்வாறு, முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்புகள் ஒற்றை ஆட்சி அரசமைப்பை பாதுகாத்து, தொடர்ந்து சிங்களத்தை ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்பட்டதோடு, பௌத்தத்திற்கு முதன்மையான இடம் வழங்கின. அவை, தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன.

1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழ் மக்களின் வரலற்றுரீதியான வாழ்விடப் பிரதேசமாகிய வடக்குக் கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்குமுகமாக திட்டமிட்ட அரச ஆதரவுபெற்ற குடியேற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின்னர் வடக்கில் இது முழு முனைப்புடன் தொடர்கிறது. அரசாங்கம் அடக்குமுறை இராணுவ பிரசன்னமொன்றை வட மாகாணத்தில் தொடர்ந்து பேணி வருவதேதாடு, ‘இராணுவ நோக்கத்திற்காக’ பெருமளவு காணிகளை கையகப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களின் மூன்றாம் நிலைக் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்புக்களில் பாரபட்சம் ஆகியன அடங்கலான பாரபட்சச் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசினால் எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இச் சந்தர்ப்பங்களிலெல்லாம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசினால் வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களும் தமிழர்தம் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டன.

அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் !

1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை உடனடுத்து, தமிழ் பேசும் மக்களுக்கு பெருமளவு தன்னாதிக்கம் வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வ காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1987 இல் (அரசியல்) ஏற்பாடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகளை அமைப்பதற்கு இம் மாற்றங்கள் வழி வகுத்ததோடு, அது மேலும் விருத்திசெய்யப்படும் என்று அதி உயர் மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அத்தகைய பல முயற்சிகள் 1993 ஆம் ஆண்டின் மங்கள முனசிங்க தெரிகுழு தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1995, 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் 2006 டிசெம்பரில் சர்வ கட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மையினர் அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றன.

எரியும் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் அரங்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த அதேவேளை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தது. ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்கள் இருந்தபோதிலும், 1987 இல் இருந்து இப் போராட்டத்தை தொடரும் ஒரே ஆயுத இயக்கமாக த.ஈ.வி.பு தோற்றம் பெற்றது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் த.ஈ.வி.புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. 2002 பெப்ரவரி மாதம் த.ஈ.வி.பு வும் இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொனறில் கைச்சாத்திட்டதோடு, அதன் பின்னர், ஒஸ்லோ அறிக்கையென்று அழைக்கப்படும் பின்வரும் கோட்பாட்டுத் தொகுதியொன்றின் மீது இணக்கம் கண்டன.

‘ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’.

இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும் !

எனினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் தஈவிபு களுக்கும் இடையில் யுத்தம் மூண்டு 2009 மே 19 ஆம் திகதி இவ் இராணுவ மோதல் முடிவுக்கு வந்தது. 30 வருட பகைமையும் யுத்தமும் தமிழ் பேசும் வடக்குக் கிழக்குப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல, மேலுமொரு ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மோதல் நிலவிய ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தாக்குதலின் இறுதிக் கட்டங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவயவங்களை இழந்தும் கடுமையான காயங்களுக்குள்ளாகியும் உள அழுத்தங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

மேலும், 500,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, பலர் எல்லா நாகரிக மற்றும் சர்வதேச நியமங்களுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டபோதும் அவர்களின் மீள் குடியேற்றம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு !

தேசிய பிரச்சனையின் தீர்வுக்கு மிக முக்கியமானதென த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளும் விசேட அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத் தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையான்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பானதாகும். உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக அமைகின்றன.

• தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.

• புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான ; வடக்கு கிழக்கு மாகாணங்களே; தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.

• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

• தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.

• அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்கள் !

நீதியானதும், நிலைத்திருக்கத்தக்கதுமான சமாதானத்திற்காக தொடர்ந்து முயல்வதற்கு மேலதிகமாக, எமது மக்களின் தற்போதைய உடனடி கவலைகளைத் ;தீர்த்து வைப்பதிலும் நாம் முனைப்புடன் ஈடுபடுவோம். ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் 2012 இலும் மார்ச் 2013 இலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அமுல்படுத்த நாம் முனைவோம். விசேட விடயங்கள் பின்வருமாறு;-

• ஆயுதப் படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதன் மூலம் 1983 இல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் வகையில் காத்திரபூர்வமான இராணுவ பிரசன்னமற்ற நிலை இருக்கவேண்டும்.

• போர் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது முன்னைய இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வீடுகள் வழங்பப்படவேண்டும், அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் ஏற்படுத்தித்தரப்படவேண்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படவேண்டும்.

• யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும் தஈவிபு களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டப்படுவதோடு, இழப்பீடுகள் அடங்கலான நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

• குற்றச்சாட்டுக்களின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதோடு, ஏனைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

• காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் உறவினர்களுக்க நட்டஈடு வழங்கப்படவும் வேண்டும்.

• நாட்டை விட்டு தப்பியோடிய தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவர்கள் திரும்பி வருவதற்கு உகந்ததோர் சூழ்நிலை உருவாக்கப்படவும் வேண்டும்.

• இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும் புலம் பெயர்ந்த தமிழர்களதும் சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றம் உடன்படிக்கைகள் தொடர்பாகப் பேணப்படும் விளக்கங்களுக்கமைய, இலங்கை வாழ் தமிழர்களான நாம் தனிச் சிறப்புமிக்கதொரு மக்கள் கூட்டமாகும். ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் நாம் இந்த நாட்டில் பேரினவாத விரிவாக்கத்திற்கு ஆட்படாது, கன்னியத்துடனும் சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் சமத்துவமான பிசைகளாக ஏனைய மக்களுடன் தொடர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம்.

எனவே, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில், எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள்; ஒரு தேசியம் என்ற வகையில் எமக்கு உரித்தாகின்ற எமது ஒருமித்த உரிமைகள் மற்றும் ஒன்றுபட்ட ஓர் இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கில் சுய அரசாங்கமொன்றை உறுதி செய்வதற்கு நாங்கள் செய்யக்கூடிது என்ன என்பதை தீர்மானிப்பதற்கான எமது தெரிவை பயன்படுத்துவதற்கான எமது உரிமை ஆகியன பற்றி நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

இது தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் திருப்தியற்றவையாக அமைந்துள்ளன. பெரும்பான்மை சமூகத்திற்கும் பேரினவாத விரிவாக்கத்திற்கும் சார்பான அரசியலமைப்பு ஒன்றுதான் தற்போது உள்ளது. நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வகைசெய்யும் ஓர் அரசியலமைப்பு முறைமை இன்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாங்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலை நோக்குகின்றோம்.

இறையான்மை என்பது, மக்களிடமே உண்டு, அரசிடம் இல்லை என்று ததேகூ உறுதியாக நம்புகிறது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமின்றி, அம் மக்களிடமே உண்டு. மத்திய அரசாங்கத்திலும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரம் குவிந்து கிடக்கிறது என்பதால், இலங்கை அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் மீறப்பட்டுள்ளது. யதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் ஒரு அடிப்படை ஜனநாயக சவாலில்தான் எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது.

எனவே, தமிழ் மக்களின் தேவைகளிலும் வேணவாக்களிலுமே எமது நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசியல் நிகழ்ச்சித் திட்டம் வேரூன்றி இருக்கிறது. மேற் கூறியவற்றையும் (தேவைகளையும் வேணவாக்களையும்) நம்மில் நாம் தங்கியிருத்தலையும் அடைவதற்கு நம்மை நாமே ஆளுகின்ற அரசாங்கம் எமக்கு வேண்டுமென்பது முக்கியமாகும். இதனை அடைவதற்காக ஓர் இரு கட்ட அரசியலமைப்பு செயன்முறையை நாம் வகுத்துள்ளோம்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சி அரசாங்கம் ஒன்றிற்காக குரல் கொடுப்பதில் சிறந்த பங்கொன்றை வகிப்பதற்கு எங்களால் இயன்றதனைத்தையும் செய்கின்ற அதேவேளை, ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான எமது காத்திரபூர்வமான அரசியல் பேச்சு வார்த்தைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

நியாயமாகவே எங்களுக்குரியதான அந்த அரசாங்கப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கு சட்டவாக்க, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட, ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பு இருக்க வேண்டியதன் தேவையை நாங்கள் இதைவிட வலியுறுத்த முடியாது.

தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் மூன்று தசாப்த கால ஆயுத மோதலினால் நொந்து போயுள்ளது.; நேரடி மோதலின் விளைவுகளாக – போரிடும் தரப்பினர் மத்தியிலான இழப்புகள், படையினரின் ஒழுக்கமற்ற நடத்தை, வேண்டுமென்றே குடிமக்களை குறி வைத்துத் தாக்கியமை மற்றும் கன்னி வெடிகளை புதைத்தமை – மட்டுமன்றி, பட்டினி, பலவந்தமாக குடியகலச் செய்தமை மற்றும் வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றம் நிர்வாகக் கட்டமைப்புக்களின் சீரழிவினால் ஏற்பட்ட அரசாங்க சேவைகளின் வீழ்ச்சி ஆகியவற்றினாலும் மனித இழப்புகள் ஏற்பட்டன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் !

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்கு (உஇஆ) நீடித்து நிலைக்கத்தக்க ஒரு தீர்வை பெறுவதற்கான உரிமை உண்டு என்பதோடு, அவர்களக்கு தமது முயற்சிகளில் அடிக்கடி உதவியம் தேவை. மாகாண சபை உஇஆ ;களின் உரிமைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி நீடித்து நிலைத்திருக்கும் தீர்வுகளை வகுப்பதோடு, அதிகாரிகளின் பொறுப்புக்களை விதித்துரைத்து இவற்றை அடைவதில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டாளர்களின் உதவிகளைப் பெறுவதற்கும் வகை செய்யும்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு அல்லது வழக்கமான வாழ்விடங்களுக்கு பாதுகாப்பாகவும் கன்னியத்தோடும் திரும்பிச் செல்வதற்கு இடமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துவதும் அதற்கான வழி வகைகளை வழங்குவதுமான முதன்மையான கடமையும் பொறுப்பும் நம்பகத் தன்மை மற்றும் வகைகூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகளின் கைகளிலேயே விடப்பட வேண்டுமென்பதை த.தே.கூ அங்கீகரிக்கின்றது.

முஸ்லிம்கள் !

1996 ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுpகளில் பாரம்பரிய குடிகளாக இருந்துள்ளனர். அவர்கள் தமது சொத்துக்களைக் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று சொல்லொனாத் துன்பங்கள் அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டமை வருந்தத் தக்கதாகும்.

வட மாகாணத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம்களும் இயன்றவரை விரைவாக தத்தமது பகுதிகளுக்கு திரும்பிச் சென்று தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் நாம் பற்றுறுதி கொண்டுள்ளோம். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்.

முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பு வழங்கப்படும். இம் மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான கவனிப்பு கிடைக்கப்பெறுவதை இம் மாகாண நிர்வாகம் உறுதி செய்யும்.

போர் விதவைகள் !

யுத்தம் வட மாகாணத்தில் மாத்திரம் 50,000ற்கும் மேற்பட்ட விதவைகளை விட்டுச் சென்றுள்ளது. அவர்களுடைய திறனைக் கட்டியெழுப்புவதற்கும் இப் போர் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான தெளிவானதொரு கொளன்கைக்கான தேவையொன்றுள்ளது. இவ் விதவைகள், பொருளாரார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

எனவே, அவர்களது தற்போதைய துயர் நிலையைத் துடைப்பதற்கு வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏனைய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பினை இம் மாகாணசபை விரைவாகவும் வினைத் திறனோடும் ஏற்றுச் செயற்படும்.யுத்தத்திற்குப் பிந்திய காணிப் பிரச்சனைகள்.

யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னமும் அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களாக அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வலயங்களாக பல பகுதிகளை அறிவித்து, அப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அங்கு சென்று மீள் குடியேறவிடாது தடுக்கின்றது. உரிய நடைமுறைகள் இன்றி பெருமளவு காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உரிய நடைமுறைகள் இன்றி காணிகளைக் கையகப்படுத்துவதற்கு எந்தவொரு ஜனநாயக அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை. தனியார் காணி உடைமையாளர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டுமென்பதோடு, அத்தiகைய காணிகளை அவற்றின் சட்டபூர்வ உடைமையாளர்களிடம் மீளக் கையளிக்கவும் வேண்டும். இக்காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கணிசமான தொகையினர் மிகவும் கஸ்டமான நிலைமைகளில் வாழுகின்றனர். காணி கையகப்படுத்தல் மற்றம் அவற்றைப் பிடித்து வைத்திருத்தல் தொடர்பான அரசாங்கத்தின் கடுமையான சட்ட விதிகள் பல ஆயிரம் தமிழர்களின் வளமான விசாயக் காணிகளை பறித்துவிட்டது. அத்துடன், கடல்தொழில் மீது விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டது.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் காணிகளை பலவந்தமாக கையககப்படுத்துல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அவசரத் தேவையொன்று நிலவுகின்றது. வடக்கு கிழக்கில் காணிகள் மீதான கட்டுப்பாட்டை மாகாண நிர்வாகம் தக்க வைத்துக் கொள்வதில் ததேகூ பற்றுறுதி கொண்டுள்ளது. வடக்கு கிழக்கின் இனத்துவ மற்றும் கலாசார தனித்துவத்தின் மீது குறிவைக்கும் காணி உடைமை, கட்டுப்பாடு மற்றும் பாவனை மீதான தற்போதைய கொள்கையை சீர்திருத்தாது நல்லிணக்கம் எதுவும் ஏற்பட முடியாது என்று ததேகூ நம்புகிறது.

சட்டமும் ஒழுங்கும் !

வட மாகாணம் சட்டமும் ஒழுங்கும் தொடர்பான நெருக்கடியொன்றை எதிர்கொள்கின்றது. அதன் மக்கள் அச்சத்தினாலும் பாதுகாப்பின்மை உணர்வினாலும் ஆட்டிப் படைக்கப்படுகின்றனர். குற்றம் புரிவோர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருவாறு தப்பித்துச் சென்றுவிடுகின்றனர். தமது மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்பட்டமையினால் பாதிப்புற்ற மக்களுக்கு நீதியோ அன்றில் பொறுப்புக் கூறலோ இல்லை.

குற்றமிழைப்போர் நீதியின் முன் கொண்டுவரப்படுவதில்லை. அதனால், பாதிப்புறுவோருக்கும்; உயிர் தப்பியவர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதில்லை. இந்நிலைமையானது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் சர்வதேசக் கடப்பாடுகளின் பாரதூரமானதொரு மீறலாக அமைகின்றது. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியற்றின் மீறலுக்கான குற்ற விலக்களிப்பானது இலங்கையில் வடக்கு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் ஒரு விதிவிலக்கு என்பதை விட நாளாந்த வழக்கமாகவே நிலவி வருகின்றது.

மாகாண சபையினால் பணிக்கபபுரை விடுக்கப்படுகின்ற ஒரு பொலிஸ் படையே வடக்கு கிழக்கிற்கான மிகவும் பயன் மிக்க ஒரு பொலிஸ் படையாக அமையுமென்று ததேகூ நம்புகிறது. தற்போது மாகாணத்தில் மக்களுக்கும் பொலிஸ் சேவைக்குமிடையே எவ்வித நம்பிக்கையும் இல்லை. மக்களுக்கு அவர்களுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால், தமது சமூகத்தில் நிலவும் குற்றங்கள் மற்றும் பூசல்கள் பற்றிய கரிசனையோடு பொலிசாரை அணுக அவர்கள் அஞ்சுகின்றனர்.

தொழில் உருவாக்கம் !

எந்த ஒரு மாகாண சபையும் தொழி;ல் இன்மைப் பிரச்சனையை கையாளவே விரும்பும். எனவே, அதனைச் செய்வதற்கு அதற்கு கருவிகள் தேவை. உண்மையில் வட மாகாணத்தில் நிலவும் தொழிலின்மையின் மூல காரணங்களை அகற்றுவது ததேகூ வின் முன்னுரிமைகளுள் ஒன்றாக அமையும்.

தொழில் வாய்ப்புக்களை உச்சநிலைப்படுத்த பொருளாதாரத்தின் தொழில் முயற்சி மற்றும் வியாபாரத் துறைக்கு உறுதுணை புரிவதை ததேகூ ஆதரித்து நிற்கின்றது. நமது சமூகத்தில் செய்யப்பட வேண்டிய பல பணிகள் உள்ளன என்பதை நினைக்கும்போது இது குறிப்பாக, பொருத்தமுடையதாகிறது: சூழலைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும்; பொதுப் போக்குவரத்தை அபிவிருத்தி செய்தல்; மேலும் சிறந்த சமூகப் பராமரிப்பு; குற்றச் செயல்களையும் நாச வேலைகளையும் எதிர்த்துப் போராடுதல்; புதிய உட்கட்டமைப்புகளிலான முதலீடு. இவையனைத்தும் தற்போதைய அரசாங்கம் எவ்வித தீர்வும் வழங்காத மிக முக்கிய தேவைகளாகும். அதன் மனப்பாங்கு தமிழ் மக்களுக்கு குறிப்பாக தவறிழைத்துவிட்டது. ஒப்பீட்டளவில், கைத்தொழில் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களை மீள ஒருங்கிணைப்பதையும் நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதையும் ததேகூ ஆதரிக்கின்றது.

தேசிய மற்றும் சர்வதேச உதவியுடனான அபிவிருத்தி !

யுத்தத்திற்குப் பிந்திய புனர்நிர்மாணத்திற்கு, யுத்தத்தின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதும் சந்தை நிறுவனங்களுக்கு உறுதுணை புரிவதும் அதன் மூலம் தனியார் துறை உற்பத்தியில் நீண்ட கால வளர்ச்சிக்கான திறனை உருவாக்குவதுமான ஒரு ஒருங்கிணைந்த வறியோர் சார்பு அணுகுமுறை தேவை. இம் மாகாணத்தில் நிலவும் நீண்ட கால முதலீடு மற்றும் உதவி பிரச்சனைகளை தீர்த்துவைக்க ததேகூ இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து செயற்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்சியையும் நலச் செழிப்பையும் பெற்றுக் கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, அபிவிருத்தித் துறையில் மட்டுமன்றி, நீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஓர் அரசியல் தீர்வை காண்பதற்கான எமது தாகத்திலும் அவர்களது பெறுமதி மிக்க உதவியையும் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வோம்.

சுமூகத்தின் பங்கேற்பு சமூக அபிவிருத்தியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், மோதல் மோசமடைந்ததால் வட மாகாணத்தில் இருந்த கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் ஒரு பின்னடைவை எதிர்நோக்கின. தற்போது யுத்தம் முடிவுற்றிருப்பதால் மாகாண நிர்வாகம் பனையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளின் அபிவிருத்தி, விவசாயம் மற்றும் கடற்றொழில் முதலிய சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சர்வதேச சமூகத்தின் பங்கு !

உள்நாட்டு நடைமுறைகளுடாக தேசிய பிரச்சனையின் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் எப்போதும் பற்றுறுதியுடன் பணியாற்றியுள்ளனர். இலங்கை அரசுதான் இவ் வாய்ப்புக்களை வீணடித்து மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு செயல்களின் மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முயன்றது. இலங்கை அரசின் அத்தகைய நடத்தைதான் தேசிய பிரச்சனையை சர்வதேசமயமாக்கி சர்வதேச வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசை நிர்பந்தித்தது. தவிர்க்க முடியாத ஒரு விளைவாகிய தமிழ் போராளிச் செயற்பாடுகள் தற்போது முடிவடைந்துவிட்டன.

சர்வதேச ஈடுபாட்டின் வாயிலாக அடையப்பெற்ற குறைந்தபட்ச முன்னேற்றத்தையும் இல்லாமல் செய்ய இலங்கை அரசு தற்போது முயன்று வருகிறது. இது, இலங்கையில் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாக இருப்பதை இல்லாமல் செய்வதற்கே இட்டுச் செல்லும். இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான நீதியும் நிரந்தர சமாதானத்தின் மூலம் அடையப்பெறும் உண்மையான நல்லிணக்கமும் சர்வதேச அனுசரணையின் கீழேயே அடையப் பெறலாம் என்ற உறுதியான கருத்தை ததேகூ கொண்டுள்ளது.

இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய தன்னை மீள் கட்டமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதிருந்தமையும் தமிழ் குடிமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டமையும்தான் சர்வதேச சமூகத்தின் வகிபாகம் மிகவும் தவிர்க்க முடியாததாக மாறியமைக்கு வழி வகுத்தது என்பதை ததேகூ சுட்டிக் காட்ட விரும்புகிறது. இத்தகைய சூழ்சிலைகளில், சர்வதேச சமூகம் உலகெங்கும் பல சந்தர்ப்பங்களில் நியாயபூர்வமாகவே ஒரு முக்கிய பங்கினை வகித்துள்ளது.

முடிவுரை !

ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமக்கேயுரிய தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை, எமது மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமது அரசியல் உரிமைகளையும் நாம் மீட்டெடுக்க வேண்டும். எனவே, இலங்கைத் தமிழரசரசு கட்சி என்ற பெயரின் கீழ் அதன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து இத் தேர்தலில் தமது உறுதியை எடுத்துக்காட்ட தைரியத்துடன் எழுந்து நிற்குமாறு தமிழ் பேசும் மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இருப்பதைக் காப்போம் !
இழந்ததை மீட்போம் !

3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 57 வயது ஆசிரியர்!!

child-abuse

3ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 57 வயது ஆசிரியரை புதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் அரிகிருஷ்ணன் (57). இவர் கடந்த புதனன்று வகுப்பறையில் தனிமையில் இருந்த 3ம் வகுப்பு மாணாவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகின்றது.

அவரிடம் இருந்து தப்பித்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அச்சிறுமியின் பெற்றோர் ஆசிரியரின் கீழ்த்தரமான நடவடிக்கை குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள் நீதி வேண்டி திடீரென பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆசிரியர் அரிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி பொது மக்கள் வலியுருத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

தலைமறைவான அரிராஜனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கல்வி துறை அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் கோரி ரகசியமாக விண்ணப்பிக்க வந்த அரிராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான இறக்கை மீது பயணித்து சாதனை படைத்த சகோதரிகள் (படங்கள்)!!

Girls

பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான இரு சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வயதான சிறுமிகளே இச்சாதனைக்குச் சொந்தக்காரர்களாவர். இச்சிறுமிகள் இருவரும் சகோதரிகளாவர்.

இச்சகோதரிகள் தமது குடும்பத்தில் விமானத்தின் இறக்கையில் பயணிக்கும் 3வது சந்ததியினராம். இச்சாதனை பயணத்தினை 6 வயதிலிருந்தே மேற்கொள்ள இவர்கள் ஆர்வமாக இருந்துள்ளனர்.

ஆனால் தற்போது இந்த ஆபத்தான சாதனையை தசை தேய்வு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது தோழன் எல்லியின் உயிரைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பயணமாகவே மேற்கொண்டுள்ளனர்

வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ரோஸ் பேசுகையில் இப்பயணம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. உண்மையில் அது எவ்வாறானது என விபரிப்பது கடினமானது. பறவை பயணித்தது போல இருந்தது.உயரத்தில் செல்லும் போது சற்று பயமாக இருந்தது.

ஆனாலும் நான் உயரத்தில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆகாயத்தில் இருக்கும் போது வீடுகள் எல்லாம் சிறுவர்கள் கட்டி விளையாடும் வீடுகள் போல இருந்தது. இந்த பயணத்தால் நான் பெருமையடைகின்றேன். மீண்டும் ஒரு தடவை இதனைச் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இருவரும் இணைந்து இளவயதில் விமான சிறகில் பயணித்தவர்கள் என்ற சாதனையுடன் எல்லிக்கும் உதவுவதற்கு முன்வந்தோம். இது கடும் இரைச்சலான பயணமாக இருந்தது என பிளேம் கூறியுள்ளார்

எல்லியின் தாயும் தசை தேய்வு தொடர்பான சிறுவர்ளுக்கு உருவாக்கப்பட்டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்கட்டளை அமைப்பின் நிறுவுனருமான எமிலி க்ரொஸ்லி கூறுகையில் இச்சாதனையுடன் எங்களது அறக்கட்டளை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திய இந்த சிறுமிகளால் நாங்கள் பெருமையடைகின்றோம் என்றார்.

மணிக்கு 100 கி.மீ வரை வேகமான விமானத்தைச் செலுத்தியது அவர்களது தாத்தாக்களாகும். இவர்களில் நோர்மன் என்பவர் கூறுகையில் பேரப்பிள்ளைகள் என்பதால் மிகக் கவனமாகச் செயற்பட வேண்டி இருந்தது.பல முறை இப்பயணத்தை மேற்கொள்ள அவர்கள் விரும்பிய போதும் முன்னர் நான் அதைத் தடுத்தேன் இம்முறை அவர்களின் நோக்கத்தை கருத்திற்கொண்டு ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

1

2

இருச்சக்கர வாகனத்தில் பயணித்தபடி தாய்ப்பால் கொடுத்த பெண் கைது!!

china

சீனாவில் ஒரு பெண் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் ஓர் இளம்பெண் தனது 18 மாத ஆண் குழந்தையுடன் மொபட் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை பசியால் அழுததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடியே டி-சேட்டை விலக்கி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியுள்ளார்.

இது தாய்மைக்கே உரித்தான செயல் என்ற போதிலும், போக்குவரத்துப் பொலிசாரே அவரை தடுத்து நிறுத்தி மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

குழந்தையின் உயிரை காப்பாற்ற அவர் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். ஆனாலும் விபத்து நேர்ந்தால் அவர் உயிர் மட்டுமின்றி, மற்றவர் உயிர் போய்விடும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம் என பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் வைத்தியசாலையில்!!

Surgical-operation1

காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலுக்குள் மறைத்து வைத்த பெண் அதனை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக்(வயது 43).
இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடியுள்ளார்.

இதனை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்துள்ளார். இதன் பின் அப்பணத்தை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது.

இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.

கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா : தாய்வான் மக்கள் ஆவேசம்!!

thaivan

திருமணமான நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 56 வயது பெண்ணுக்கு தைவான் நீதிமன்றம் 298 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள தீர்ப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வானின் மத்திய சங்குவா மாகாணத்தை சேர்ந்த தனது 50 வயது கணவர், 56 வயதான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரது மனைவி பொலிசில் புகார் அளித்தார்.

தனது கணவருடன் ஓட்டல் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணை கையும் களவுமாக புகார் அளித்த பெண் பொலிசாரிடம் பிடித்தும் கொடுத்தார். கள்ளத்தொடர்பு மற்றும் விபசாரம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ள தாய்வானில் ஒருமுறை கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

பிடிபட்ட கள்ளத்தொடர்பு ஜோடிகள் வெவ்வேறு ஓட்டல்களில் 894 முறை அறை எடுத்து தங்களது லீலைகளை தொடர்ந்துள்ள விபரம் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

தனது கணவர் திருந்திவிட்டதாக கூறுவதால் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக புகார் கூறிய பெண் பொலிசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிடிபட்ட 56 வயது பெண் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது. ஓட்டல் அறைகளில் தங்கியிருந்ததற்கான பதிவேடுகளின் ஆதார அடிப்படையில் ஒரு முறை ஓட்டலில் கள்ளக்காதலருடன் தங்கிய குற்றச்சாட்டுக்கு 4 மாத தண்டனை என்ற விகிதத்தில் 894 முறை தங்கியதற்காக பெரும்பகுதி தண்டனையை குறைத்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 298 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு தாய்வான் மக்கள் மற்றும் பெண்ணுரிமை இயக்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாரை காதலிப்பது, யாருடன் உறவு வைத்துக்கொள்வது, என்பது தொடர்பான உரிமைகளை பொலிசாரும் நீதிமன்றங்களும் பறித்து விடக்கூடாது.

விபசாரத்தில் சாராத ஆண் நண்பர்களுடன் உள்ள உடல் ரீதியான தொடர்புகளை அரசியலமைப்பின் குற்றப்பிரிவு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே வேளையில், இந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்களை தங்களின் பக்கம் இழுக்க முடியாது என சில பெண்கள் கூறுகின்றனர்.

298 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார் வோனர்!!

David Warner ICC Champions Trophy

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரர் டேவிட் வோர்னர், வேகப்பந்து வீரர் ஸ்டார்க் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி ஆஸி. அணி வருமாறு..

கிளார்க், (தலைவர்), பெய்லி, பவாத் அகமது, நாதன் கோல்ட்டர், பவ்ல்னெர், ஆரோன் பிஞ்ச், ஹாசில்வுட், ஹியூக்ஸ், ஜோன்சன், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மெக்காய், வோகஸ், மேத்யூ வாடே, வட்சன்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் 6ம் திகதி தொடங்குகிறது.

தொலைக்காட்சி பார்ப்பத்தில் தம்பியுடன் தகறாது : 11 வயது சிறுமி தற்கொலை!!

sis and bro

தொலைக்காட்சி பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 11 வயது சிறுமி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் காடுகோடி சாதரமங்களாவை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நவநீதா (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள பாடசாலையில் 5ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக நவனீதாவுக்கும், அவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நவநீதா வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

அதன் பின்னர் நீண்டநேரமாக அவள் வெளியே வரவில்லை. இதனால் இரவு 10 மணியளவில் தனது மகளை சாப்பிடுவதற்காக பெற்றோர் கூப்பிட்டும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு நவநீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெளிவான சூரிய கிரகண புகைப்படங்களை அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம்!!

degree panorama of mars

செவ்வாய் கிரகத்தில் இருந்து சூரிய கிரகணத்தை கியூரியாசிட்டி விண்கலம் தெளிவாக போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாய்கிரகத்தில் உயரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது அங்கு செவ்வாய்கிரகத்தின் புவிஅமைப்பு சுற்றுப்புற சூழல் போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில், கியூரியாசிட்டியில் உள்ள சக்தி வாய்ந்த டெலிபோட்டோகிராபி கமரா சூரிய கிரகணத்தை தெள்ளத் தெளிவாக போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

மேலும், செவ்வாய்கிரகத்தின் 2 சந்திரன்கள் மற்றும் நட்சத்திரங்கள் சூரியனை கடந்து செல்வது போன்றும் உள்ளது. இதுபோன்ற போட்டோக்கள் இதுவரை எடுக்கப்பட்டதில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே செவ்வாய்கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம் முதன் முறையாக தானாக இயங்கியுள்ளது. அதற்கான தொழில்நுட்பத்தை கியூரியாசிட்டியின் என்ஜினீயர்கள் வழங்கியுள்ளனர்.