தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது – பொலீஸ் கைவிரிப்பு!!

thalaivaaa

தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் பொலீஸ் தெரிவித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவா படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன. படத்தை வெளியிட முடியாது என்று சென்னை – செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அந்தந்த மாவட்ட பொலீசார் திரையரங்க உரிமையாளர்களுக்கு வாய் மொழியாகக் கூறிவிட்டார்களாம்.

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலைவா படம் வெளியாகவிருந்த திரையரங்க உரிமையாளர்கள், தங்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தைப் பொலீசார் கூறியதாகத் தெரிவித்தனர்.

சென்னையின் மிக முக்கியமான விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவமருமான அபிராமி ராமநாதனை நேரில் அழைத்த தென் சென்னையின் ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஒருவர், இந்தப் படத்தை திரையிடுவது நல்லதாகப் படவில்லை. பாத்து இருந்துக்கங்க என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னேஸ்வரம் பத்திரகாளிக்கு இம்முறையும் பலி பூசை இடம்பெறாது..!

vavuniyaமுன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த பலி பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் பலி பூசைக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதால் பலிபூசையை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலய நிர்வாகிகள் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை 2011ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவால் இடம்பெறவில்லை.

2012ம் ஆண்டு புத்தரின் புனித தாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதால் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை இடம்பெறவில்லை.

இந்நிலையில் இம்முறையும் பலி பூசை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலமொழியில் பாடங்கள்: விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை..!

vavuniyaஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். சவரத் தொழிலாளி. இவரது மகன் தமிழ் செல்வன் வயது-21. பாலிடெக்னிக்கில்“டிப்ளமோ” பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் சேர்ந்தார். கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்வதில் தமிழ்செல்வனுக்குச் சிக்கலாக இருந்துள்ளது என்று தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர்,மதுக்கரை பகுதியில் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா..!

indSLஇலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதால், தமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் அழுத்தங்கள் அரசின் மீது அதிகரித்தாலேயே அவர்களை சிறைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்தார்.

இந்தியாவின் கவலைகள் கொழும்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்தி, விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் தான் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் கூறுகிறார்.

(BBC)

தலைவா திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடமுடியாது : சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி!!

talaiva

அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தலைவா இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த முதலமைச்சர் என்ற இலக்கை முன்வைத்து விஜயும் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9ம் திகதி அதாவது நாளை உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார்.

அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் படத்தை வெளியிடுவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர். இந்த சூழலில் சென்னை – செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் கூடியது.

அரசுக்கு எதிரான படமாகக் கருதப்படும் தலைவாவை வெளியிட அரசின் ஒத்துழைப்பு திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற உண்மை புரிந்து, தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம், என அறிவித்துள்ளனர். இதனால் திரையுலகிலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பம் படப்பிடிப்பில் சண்டைபோட்ட நயன்தாரா–டாப்சி!!

aarambam

அஜீத், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ஆரம்பம். ஆர்யா, டாப்சி, ராணா போன்றோரும் நடிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் நயன்தாரா, டாப்சி இடையே போட்டி ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா அதிகம் சம்பளம் கேட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..

ஆரம்பம் படத்தில் நயன்தாராவுக்கும், டாப்சிக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்குள் ஈகோ ஏற்படவில்லை. இருவரும் சண்டை போட்டார்கள் என்பது வதந்திதான். பில்லா படத்தை போல் நயன்தாராவை இதிலும் கவர்ச்சியாக பார்க்கலாம். கவர்ச்சியாக நடிப்பதற்கு அவர் கூடுதல் சம்பளம் கேட்டதாக சொல்வதில் உண்மை இல்லை.

ஆரம்பம் படப்பிடிப்பில் ஆபத்தான சண்டை காட்சிகளில் அஜீத் டூப் போடாமல் நடித்தார். மூன்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது கால் இடறி முறிவு ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டாம் என்று தடுத்து விட்டார்.

மும்பை பின்னணி கொண்ட கதையாக இப்படம் தயாராகியுள்ளது. தாதாக்கள் படம் அல்ல. வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும். முக்கிய சமூக பிரச்சினையொன்றும் படத்தில் இருக்கும். சுமா ரங்கநாத் நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்பம் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்தோம் என்று அவர் கூறினார்.

T20 ஐ.சி.சி. தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி..!!

CRICKET-TRI-IND-SRI

சர்வதேச கிரிக்கெட் சபையின் T20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவிற்கெதிரான நேற்றைய 3வதும், இறுதியுமான T20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருக்குமாயின் இலங்கை அணி 3வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டிருக்கும் என்பதோடு T20 சர்வதேசப் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த முதலாவது டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடு என்ற மோசமான சாதனைக்கும் சொந்தமாகியிருக்கும்.

எனினும் நேற்றைய போட்டியில் இலங்கை அணி திலகரட்ண டில்ஷான், திசார பெரேரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றிபெற்றதால் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதோடு அவ்வணி தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

போட்டோஷொப் தில்லுமுல்லு!! (வீடியோ)

போட்டோஷோப்பை பயன்படுத்தி எப்படி எல்லாம் வினோதம் செய்கின்றார்கள் என நீங்களும் பாருங்கள்..

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

thalaivaa

சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் “ஐநாக்ஸ்” என்ற பெயரில் 4 திரையரங்குகள் உள்ளன.
வணிக வளாகம் மற்றும் சினிமா திரையரங்குகள் உள்ளதால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

ஐநாக்ஸ் திரையரங்கில் எதிர்வரும் 9ம் திகதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த திரையரங்கிற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் திரையரங்கில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் பொலிசில் திரையரங்க முகாமையாளர் விக்னேஷ் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் பொலிசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதித்து பார்த்தனர். இது தவிர தலைவா படம் திரையிடப்படும் மேலும் சில திரையரங்குகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சில திரையரங்குகளுக்கு தொலைபேசி மூலமும் சில திரையரங்குகளுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக பொலிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 திரையரங்குகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைவா படத்துக்கு இன்று டிக்கெட் முன் பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நடைபெறவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த இரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

கடிநாய் வளர்த்தால் ஆயுள் தண்டனை : இங்கிலாந்தில் புதிய சட்டம்..!!

barking-police-dog

இங்கிலாந்தில் வருடம்தோறும் சுமார் 2 இலட்சம் மக்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது. கடந்த ஆண்டுகளில் 16 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர்.

எனவே நாய்களை பொது இடங்களில் அலைய விடும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபரை வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினால் அந்த நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை திருத்தி காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுக்கு மட்டும் இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் 30 லட்சம் பவுண்டுகள் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க எதிர்ப்பு : வித்யாபாலன் நீக்கம்!!

vidhya_balan

கர்நாடக இசைப் பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிறு வயது வாழ்க்கை முதல் கர்நாடக சங்கீத பாடகியாக சாதனை நிகழ்த்தியது வரை அனைத்து விவரங்களும் இப்படத்தில் இடம் பெறுகிறது.

இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க வித்யாபாலன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை வித்யா தேடி வாங்கி படிக்க ஆரம்பித்தார். அவர் போன்று நடிக்க பயிற்சியும் எடுத்தார். இந்த நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க வித்யாபலனுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது.

த டேட்டி பிக்சர் படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்துள்ளார். அவருடைய ஆபாச பட சுவரொட்டிகள் நகரமெங்கும் ஒட்டப்பட்டு இமேஜை கெடுப்பதாக அமைந்தது.

எனவே எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க வித்யாபாலன் தகுதியில்லாதவர் என்று எதிர்பாளர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தில் இருந்து வித்யாபாலன் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் வேறு நடிகை தேர்வு நடக்கிறது.

யாழ்.தேவியின் வவுனியா- கிளிநோச்சி பரீட்சார்த்த பயணம் வெற்றி!!

vavuniya

வடக்கிற்கான ரயில் தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர் வரை வந்தடைந்தது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெறுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

tamilnadu cricket association

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த புதிய அரங்குகள் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வெவ்வேறு துறைகளிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உயிருடன் விளையாடி இருக்கிறது என்று ஜபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலர் மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர பொலீஸிடம் 2011ம் ஆண்டு புகார் மனு தாம் அளித்ததாகவும் அதன் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள்..!!

astrology

ஓகஸ்ட் மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க எளிய வழி!!

facebook-friends-hide

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம். இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி யாருக்கும் தெரிவதில்லை இதே அந்த வழி..

முதலில் உங்கள் கணக்கில் உள்ள privacy settings க்கு போங்கள்
பிறகு Edit க்கு போகவும்

தற்போது only me என்ற ஒப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இனி அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்ப முடியாது.

பின்பு அதில் strict filtering என்ற ஒப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய செய்திகள் தடுக்கப்படும்.

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா : ஜோன் அபிரகாம் விளக்கம்!!

john-abraham

ஜோன் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகின்றது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் வற்புறுத்தி உள்ளன.

இந்த நிலையில் மெட்ராஸ் கபே படத்தின் தமிழ் ரெய்லரை வெளியிடுவதற்காக ஜோன் அபிரகாம் நேற்று மாலை சென்னை சத்யம் தியேட்டருக்கு வந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க தியேட்டரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ரெய்லரை ரிலீஸ் செய்துவிட்டு ஜோன் அபிரகாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ஜான் அபிரகாம் கூறியதாவது..

மெட்ராஸ் கபே படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை. இலங்கையில் 1980 மற்றும் 90களில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து படம் எடுத்துள்ளோம். அதை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ எந்த கருத்தையும் சொல்லவில்லை. நடுநிலையாக கருத்தை பதிவு செய்துள்ளோம்.

படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பது சரியல்ல. எதிர்ப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட தயார். இப்பத்தில் நாயகியாக நர்சிஸ் பக்ரி நடித்துள்ளார். சூஜித் சர்க்கார் இயக்கியுள்ளார். கற்பனை கலந்த படமாக தயாராகியுள்ளது. இலங்கை, லண்டன், தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.