படம் கைவிடப்பட்ட நிலையில்கூட முற்பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த நயன்தாரா!!

nayan

தமிழில் வெளிவந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏற்கெனவே ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கப்போவதாகவும் இருந்தது.

இந்த படத்துக்கு ஹீரோயினாக நடிக்க நயன்தாராவுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தும் ஒப்பந்தம் செய்துள்ளார் தயாரிப்பாளர். ஆனால், பூபதிபாண்டியனுக்கும், தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்படவே படத்தை இயக்குவதிலிருந்து பூபதி பாண்டியன் விலகினார்.

படம் டிராப் ஆன நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார் தயாரிப்பாளர். ஆனால், அதற்கு நயன்தாராவோ, அட்வான்ஸ் பணம் என்னிடமே இருக்கட்டும். நீங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்றாராம். இதனால் தயாரிப்பாளருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டதாம்.

இந்நிலையில், வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். அந்த படம்தான் கோபிசந்த், நயன்தாரா நடிக்க உருவாக உள்ளது. இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தபோதுகூட நயன்தாரா நேரில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாவற்பழம் பறிக்க மரத்தில் ஏறிய மாணவன் விழுந்து மரணம்!!

boy

நாவற்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர்கள் மரக்கிளை முறிந்து கீழே மதில் சுவரில் விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் பொத்துவில் அறுகம்பையில் உள்ள சின்ன உல்லையில் நிகழ்ந்துள்ளது. அப்துல்லா என்ற (16 வயது) மாணவன் உயிரிழந்ததுடன் (14 வயது) றிஸ்வான் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விரு மாணவர்களும் அறுகம்பை சின்ன உல்லை அல்-அக்ஷா கல்லூரியில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களாவர். நாவற்பழம் பறிப்பதற்காக இருவரும் மரத்தில் ஏறியதுடன் இருவரும் ஒரே கிளையில் இருந்த பழத்தை பறிப்பதற்காக கிளையை அசைத்த போது, கிளை முறிந்து இருவரும் கீழே விழந்தனர்.

இலங்கையில் புகைத்தல் காரணமாக நாள் ஒன்றுக்கு 54 பேர் பலி!!

smoking

இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள் நாள் ஒன்றுக்கு 210 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர்.

புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்கை பெறுபவர்களுக்காக12 000 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 8 வகையான புற்றுநோய் மற்றும் கண் பார்வை கோளாறு என்பன புகைத்தலினால் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆசிரியருக்கு முத்தம் கொடுத்தால் பரீட்சையில் சித்தி : சீன ஆசிரியரின் அத்துமீறல்!!

teacher-extorts-students-for-kisses-01

சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் சித்தியடைவதற்கு படித்தால் மட்டும் போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம்.

இது அரசாங்க உத்தரவல்ல கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் காமக் கட்டளை. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார்.

அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள் ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சரிப்பட்டு வராதவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்து விடுவாராம் இந்த ஆசிரியர்.

சிரித்துக் கொண்டே முத்தங்களை பெறும் ஆசிரியரின் அத்துமீறல்களை சிலர் புகைப்படங்களாக எடுத்து அதை இணையத்தில் போட்டு விட இப்போது ஆசிரியரின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் அதிவேக தரவுப்பரிமாற்ற இணைய இணைப்பை வழங்கவுள்ள ஜப்பான்!!

High-Speed-Internet

உலகில் சிறந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் ஜப்பான் விரைவில் 220 Mbps வேகத்தினைக் கொண்ட தரவுப்பரிமாற்றத்துடன் கூடிய இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.

KDDI எனும் நிறுவனத்தினால் 2014ம் ஆண்டின் கோடை காலப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சேவையானது தற்போது உள்ள வேகத்தினை விடவும் 32 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விருந்தாகும் பிரியாணி!!

briyani

வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பிரியாணி. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100வது படம்.

இப்படத்தை தயாரித்துவரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தை முதலில் ரம்லான் தினத்தன்று வெளியிட முடிவு செய்தது. ஆனால் படப்பிடிப்பு முடிவடையாததால் வெளியிட முடியவில்லை. பின்னர், தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவெடுத்து, பாடல்களைக் கடந்த மாதம் வெளியிட்டனர். ஆனால், தீபாவளிக்கும் படத்தை ரிலீஸ் செய்யப் போவதில்லையாம்.

அதற்குப் பதிலாக கார்த்தி நடித்த மற்றொரு படமான ஆல் இன் ஆல் அழகுராஜாவை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் இயக்குநரான ராஜேஷ், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இந்த மாத இறுதியில் பாடல்களை வெளியிட உள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் தீபாவளிக்கும், வீரம் பொங்கலுக்கும் ரிலீஸாவதைப்போல ஆல் இன் ஆல் அழகுராஜா தீபாவளிக்கும், பிரியாணி பொங்கலுக்கும் ரிலீஸாகிறது.

காலை நேர உணவை ஏன் தவிர்க்க கூடாது என்று தெரியுமா?…

idly

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கியகேடிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் காபோஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள்தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் வெறும் வயிறுடனே பாடசாலைக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாகஇருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால் இடையில் பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல் சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்புநிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று மும்பை விமான நிலையத்தை தாக்கத் திட்டம்..!

mumbaiவிநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மும்பை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 9ம் திகதி தொடங்கி 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு புலனாய்வுத் துறை எச்சரிக்கை செய்திருந்தது. இதையடுத்து, காவல்துறையும், பாதுகாப்பு ஏஜென்சிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விமான நிலையம் அருகிலுள்ள ஹோட்டல்களின் நிர்வாகிகள், கணபதி மண்டல்களின் பிரதிநிதிகள் ஆகியோரை, பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மண்டல போலீஸ் துணை கமிஷனர், ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, ஹோட்டல்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வருபவர்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கும்படியான நபர்களை பார்த்தால், அதுபற்றி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பை தொழில்துறை பாதுகாப்பு படையினர் கவனித்து வருகின்றனர். அவர்கள் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே காரணம் – சுரேஷ்..!

sureshஇலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு காரணமாக இலங்கை அரசாங்கமும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும் காரணமாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாம் கோருவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு முழுமையான அதிகார பகிர்வு வேணும் என்றே.

ஆனால் எமது தேர்தல் பிரச்சாரங்களை அரச ஊடகங்கள் மிகைப்படுத்தி, நாம் மீண்டும் ஆயுத போராட்டத்தை தோற்றுவிக்க முயல்வதாக பிரச்சாரம் செய்கின்றது.

இலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும் காரணமாக இருக்காது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் மீண்டும் ஒரு ஆயுத கலாசாரத்தை கொண்டு வந்தது ஆளும் கட்சியே. அவர்களின் வேட்பாளரின் தந்தையாலையே அண்மையில் சாவகச்சேரியில் துப்பாக்கி சூடு நடாத்தப்படதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதேவேளை வடக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வடக்கு மாகாண விளையாட்டு துறைக்கு கல்வி அமைச்சின் ஊடாக விளையாட்டு பொருட்கள் கையளிக்க 10 மில்லியன் ரூபாயும் சுழற்சி முறை கடன் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த 26 மில்லியன் ரூபாய் என்பனவும் தேர்தலுக்காக பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வெலிவேரிய போராட்டம் போன்ற போராட்டங்களை அடக்க பிரத்தியோகமாக பயிற்றிவிக்கப்பட்ட இராணுவம் உள்ளது அவர்கள் மூலம் தேர்தல் காலங்களில் மக்களை அச்சுறுத்தி மிரட்டி வாக்களிப்பை குறைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம்..!

pakistanபோதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

உலகப் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது..!

swisதஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் இதுவரை 24 பேரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது,

120 பேர் சொந்த விருப்பத்தின் பேரில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த மாதமும் சுவிஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்த யாழ். அராலியைச் சேர்ந்த திருமணமாகிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.

அதனையடுத்து யாழிலுள்ள அவரது துணைவியார் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டில் தவறி விழுந்த ஜெயம் ரவி கை முறிந்தது!!

jeyam ravi

ஜெயம் ரவி வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை எழும்பு முறிந்தது. பூலோகம், நிமிர்த்து நில் ஆகிய இரு படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பூலோகம் பட வேலைகள் முடிந்து வெளியிட தயாராகிறது. இதில் நாயகி திரிஷா. இப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

நிமிர்த்து நில் படத்தை சமுத்திரக்கனி இயக்குகின்றார். அமலா பால் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டு உள்ளார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

கை முறிந்ததால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்று டுவிட்டரில் ஜெயம் கூறியுள்ளார். படப்பிடிப்புகளுக்கு வராததால் நிறுத்தப்பட்டு உள்ளன. ஜெயம் ரவி குணமடைய நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்தியுள்ளனர்.

பிரபுதேவாவுக்கு மெழுகுசிலை : இந்தி ரசிகர்கள் உருவாக்குகிறார்கள்!!

prabhu deva

பிரபுதேவாவுக்கு இந்தி ரசிகர்கள் மெழுகுசிலை உருவாக்குகிறார்கள். இவர் அங்கு முன்னணி இயக்குனராகியுள்ளார். இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ் கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை இயக்கிக்கொண்டிருகின்ரார்.

ராம்போ ராஜ்குமார் என்ற இந்தி படமும் கைவசம் உள்ளது. இவரே தனது படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் இந்த மெழுகு சிலையை உருவாக்குகிறார்கள்.

லண்டன் மியூசியத்தில் அமிதாப்பச்சன், சச்சின், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கு மெழுகு சிலைகள் உள்ளன. அந்த சிலைகளுக்கு இணையாக பிரபுதேவா சிலை தயாராகிறது.

மகாபாரத்தில் மங்கத்தாவுடன் என்னை இழிவுபடுத்திவிட்டனர்: எஸ்.வி.சேகர் பொலிசில் புகார்!!

s.v.sekar

நடிகர் எஸ்.வி.சேகர் தனது நாடகத்தினை கிண்டலடித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை எஸ்.வி.சேகர் தனது மகன் அஸ்வின் சேகருடன் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், மகாபாரத்தில் மங்கத்தா என்ற என்னுடைய நாடகம் 1980ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை மாநகரம் முழுவதும் எனது போட்டோவுடன் தரைக் குறைவாக விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இது என்னை மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவுடன் மகாபாரத்தில் மங்காத்தா சி.டி.களையும் தன்னை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் அடங்கிய சி.டி.க்களையும் அவர் வழங்கியுள்ளார்.

13 வயதில் முதுநிலை அறிவியல் படிக்கும் சிறுமி!!

girl

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் முதுநிலை அறிவியல் படிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

பகதூரின் கடைசி மகள் சுஷ்மா(13). சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

சிறு வயதில் கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மா தன் 5 வது வயதில் 10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். எனினும் 5 வயதில் நேரடியாக 10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால் 2005 – 06ல் 9ம் வகுப்பில் சேர்ந்தார்.

2006 – 07ல் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.

அதன் பின் 2009 – 10ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று தனது 10 வது வயதில் லக்னோ பல்கலை அனுமதியுடன் பி.எஸ்சி விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.

இந்த ஆண்டு யூனில் வெளியான பி.எஸ்சி. பட்டத் தேர்வு முடிவுகளில் 66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.
இதன் பின் லக்னோ பல்கலையில், எம்.எஸ்சி., மைக்ரோ பயோலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார்.

இதிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.

பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார்.

இந்த தகவல் அறிந்த பலரும், சுஷ்மாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படி பல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 23 வயது பெண்..!

child23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண், சிறுவனை தனது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,

சிறுவனின் பாட்டி, அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சிறுவனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் இரவு நேரத்தில் கடமைக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் துணைக்காக குறித்த சிறுவன் நீண்ட காலமாக அவரது வீட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.