கார்த்திகாவின் பெரிய கனவு!

Karthika Nair Hot Photo Shoot Stillsஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
நடிகை ராதாவின் மகளான கார்த்திகா பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான்.

அதனால் மகளை பொலிவுட்டில் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதுதான் ராதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது தீவிர முயற்சிக்குப் பலன் கிடைக்காததால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா களத்தில் கார்த்திகா இறங்கினார்.

தற்போது மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் கார்த்திகா அன்னக்கொடி படத்தில் கதைக்கேற்ப கவர்ச்சியாகவும் நடித்தார்.

இனி கிளாமர் விஷயத்தில் அளவுகோல் வைக்கப்போவதில்லை என்று தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் கூறி வரும் கார்த்திகா, பொலிவுட்டில் என்ரி ஆக நேரம் பார்த்து வருகிறாராம்.

இந்தியில் நடித்து மார்க்கெட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் கார்த்திகாவின் பெருங்கனவாம்.

சிக்கலில் சிக்கிய ஆர்யா!!

aaryaடிவிட்டர் இணையத்தில் நடிகர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி அதில் அவர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை வெளியிட்டு பீதியை கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் புதிதாக சிக்கியிருப்பது நடிகர் ஆர்யா.

டிவிட்டர் இணையத்தில் (https://twitter.com/aryaactor) என்ற பெயரில் ஆர்யா இயங்கி வருவதாக தகவல்கள் வெளியானது.

அதில் அஜித்துடன் ஆர்யா நடித்து வரும் ஆரம்பம் படத்தின் இசை வெளியீடு எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியானதில் இருந்து தான் சிக்கல் ஆரம்பித்து இருக்கிறது.

அந்த இணையத்தில் அனைவருமே ஆரம்பம் இசை வெளியீடு எப்போது என்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள். தற்போது வரை யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறோம். ஏதாவது மாற்றம் இருந்தால் கூறுகிறேன் என்ற தகவல் வெளியானது.

இந்த தகவல் குறித்து ஆர்யா, “நான் டிவிட்டர் இணையத்திலேயே இல்லை. எனது பெயரில் இயங்கி வருவது போலியானது. ஆரம்பம் இசை வெளியீடு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார்.

அந்த இணையத்தில் நான் அனுஷ்காவைக் காதலிக்கிறேன், நயன்தாராவைக் காதலிக்கிறேன் என்று போடாமல் இருந்தாங்களே அதுவரைக்கும் சந்தோஷம்.

நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட சேரன்..கல்லாய் நின்ற மகள் தாமினி!!

cheran4

எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்து, பாசம் காட்டி, இன்னாரைக் காதலிப்பதாக மகள் எழுதிய பேஸ்புக் ஸ்டேஸுக்குக் கூட லைக் போட்ட ஒரு தந்தை அத்தனை பெரிய நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார். அப்படியெல்லாம் வளர்க்கப்பட்ட மகளோ கல்லாய் நிற்கிறார்.

அந்தத் தந்தையைத் திரும்பிப் பார்க்கக் கூட விரும்பாமல் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொள்கிறார். இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் தாமினியை நேற்று நீதிமன்றத்தில் இந்த நிலையில் பார்த்த பார்வையாளர்கள் பெரும்பாலோர் தாமினியைத் திட்டித் தீர்த்தனர்.

வந்திருந்த பார்வையாளர்களில் சிலர் அப்படி என்ன இந்தப் பெண்ணுக்குப் பிடிவாதம் அவர்தான் திருமணம் செய்து தருவதாகச் சொல்கிறாரே அந்தப் பையன் ஒப்புக்குக் கூட நான் செட்டிலாவதற்கு முயற்சிக்கிறேன் என்று கூட சொல்லவில்லையே. ஏதோ சேரனுடன் மல்லுக்கட்டுவது போலத்தானே நிற்கிறான் அவனுக்கு இந்தப் பெண் இந்த அளவு உறுதியான ஆதரவு காட்டும் பின்னணி என்ன என கேள்வி எழுப்பினர்

சட்டம் தாமினிக்கும் சந்துருவுக்கும் சாதகமாக இருந்தாலும் யதார்த்தம் அவர்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக அளவில் மிக வெறுப்புக்குள்ளான ஒரு ஜோடியாகவே இந்த இருவரும் இப்போது பார்க்கப்படும் சூழலை அவர்களே உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

சேரன் சொல்லும் காரணங்களை ஒரு வழக்கமான தந்தையின் மனக் குமுறலாக ஆரம்பத்தில் பார்த்தவர்கள் கூட மகளின் பேஸ்புக் பக்கத்தில் அவள் தன் காதலன் சந்துருவைப் பற்றி வெளிப்படையாக எழுதிய ஒரு ஸ்டேடஸுக்குக் கூட லைக் போட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்த பிறகு வாயடைத்துப் போய்விட்டார்கள்.

பெண்ணுக்கு இத்தனை சாதகமாக ஒரு தோழனைப் போல இருந்த தந்தை எப்படி அவளுக்கு எதிரான முடிவை எடுப்பார். இப்போது தந்தையுடன் அந்தப் பெண் செல்வதே சரி என நீதிமன்ற வளாகத்துக்குள் பலரும் சத்தமாகக் கூறியதைக் கேட்க முடிந்தது.

சேரன் விவகாரத்தை, நீதிபதிகளும் காவல் துறையும் வெறும் சட்டப்பூர்வமாக மட்டும் அணுகவில்லை. அதில் உள்ள யதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டே விசாரிப்பது இப்போது பலருக்கும் புரிந்துள்ளதுதான் சேரனுக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல்.

இப்படியும் சொதப்ப முடியுமா ??(வீடியோ)

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் பல தடங்கல்கள் நிகழ்ந்திருக்கும். அவ்வாறான ஒரு தொகுப்பை இங்கே பாருங்கள்..

முகம் அழகு பெற பாம்பு மசாஜ்!(படங்கள்)

பெண்களின் முகம் அழகாக மிளிர வேண்டும் என்பதற்காக ஒருசில பெண்கள் என்னென்னவோ செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை..அது எல்லோருக்குமே தெரிந்த கதை.

ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த மானமி டாக்கமுறா என்ற பெண் நத்தை பேஷியலை வருகின்றார். இந்த நத்தை பேஷியல் சிகிச்சையின் மூலம் முகத்தில் ஏற்கனவே காணப்படும் பருக்கள், முகச் சுருக்கம், கரும்புள்ளிகள் என்பவை நீங்கி முகம் புதுபொழிவுடன் பிரகாசிக்கின்றதாம்.தற்போது ஜப்பானில் இந்த சிகிச்சை முறை பெண்களிடம் வேகமாக பரவி வருகின்றது என்ற விடயமும் நீங்கள் அறிந்ததே.

நத்தை மசாஜை விடவும் ஒருபடி மேல் என்று கூட இதனைக் குறிப்பிடலாம்.அதாவது பாம்பு மசாஜ் தான் அது. என்ன பாம்பு மசாஜ் என்றதும் முகத்தைச்சுழிக்கிறீர்கள். முகச்சுறுக்கத்துக்கு நிவாரணம் பெறுவதற்காகவே தான் இந்த மசாஜாம்.

சிறு எறும்பு முகத்தில் ஓடினால் கூட அந்த எறும்பை பிடித்து நசுக்கி எறிந்து விடுவதே ஒவ்வொருவரினதும் வழமையான செயற்பாடு. ஆனால் இந்தப் பெண்கள் தமது முகத்தில் நத்தைகளை மட்டுமல்ல பாம்புகளையும் ஊர்ந்து செல்ல விடுகிறார்கள் என்றால் என்ன வேடிக்கையான உலகம் இது.

பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் கொள்வதற்காக இதைவிடவும் மிகவும் பயங்கரமான மசாஜ்களை கையாண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தகைய மயிர்கூச்செறியும் மசாஜ் முறைகள் கண்டிப்பாக எமக்குத் தேவை தானா?

s7

s1 s2 s3 s4 s5 s6

வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் விபத்து!!

ACCIDENT_logo

வவுனியா வைரவ புளியங்குள குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பத்தவர்களை பின்னால் வேகமாக வந்த ஆட்டோ தட்டி சென்றமையினால் தடம் புரண்டு விழுந்தனர் இதனால் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்

இப்பாதையில் பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும் ஆட்டோவினால் விபத்துகள் ஏற்படுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துகள் ஏற்படும் பாதையாக காணப்படுவதனால் பெரிய வாகனங்கள் செல்வதற்கு மாற்று வழியை பாவிக்க வலியுறுத்துமாறு உரியவர்களிடம் வலியுறுத்திய போதும் இது வரை நடவடிக்கை எடுக்க படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்

வெயிலில் எழுந்து ஓடிய பிணத்தைப் பார்த்து அதிர்ந்த சீன அதிகாரிகள்!!

ASSAM DROUGHT

சீனாவில் அரசின் நிவாரணா உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர் வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.

சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். அப்படி பலியானவர்களது குடும்பத்திற்கு நிவாரணமாக இழப்பீடு வழங்கி வருகிறது சீன அரசு.

அவ்வாறு வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெறுவதற்காக ஹூபே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அனல் காற்றில் சிக்கி பலியானவர் போல் நடித்தார். அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர்.

திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால் பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது. தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர் உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வவுனியாவில் வழிபாட்டு தலங்களின் ஒலி பெருக்கிகள் குறித்து புதிய கட்டுப்பாடு!!

speaker

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது

வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இவ் விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன.

எனவே பொதுப் பரீட்சைகளான புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடிய கவனமெடுத்து தமது வழிபாட்டு தலங்களில் ஒலிக்க விடப்படும் ஒலிபொருக்கிகளின் ஓசையை உட் பிரகாரத்தினுள் மாத்திரம் ஒலிக்க விடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது!!

arrest

மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் 1 கிராம் 276 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று ஒருவர் கைதானார்.

இவர் எருக்கலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் நேற்றையதினம் மன்னார் நகரில் ஒரு கிலோ 905 கிராம் கஞ்சாவுடன் 41 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இரண்டு சந்தேகநபர்களும் இன்றையதினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய முடியைக் கொண்ட பெண்மணி (வீடியோ இணைப்பு)

சிகை அலங்காரங்களில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆப்ரிக்க சிகை அலங்காரம்.

இவ்வாறான முடி அமைப்பைக்கொண்ட 38 வயதான ஏவின் டுகாஸ் எனும் பெண்மணி உலகிலேயே மிகவும் பெரிய முடியைக் கொண்ட பெருமையை பெற்றுள்ளார்.

hairstyle1 hairstyle

99ம் இலக்கத்திற்கு போட்டியிடும் அஸ்வின்-மிஸ்ரா!!

99

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் 99 என்ற எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ராசியான எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவர். இந்திய அணியின் சச்சின்-10, டோனி-7, ஷேவாக்-44 என்று பல உதாரணம் உண்டு.

இந்தவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 99 என்ற எண் கொண்ட சட்டையுடன் விளையாடுவார். தற்போது சிம்பாவேக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியின் போது மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவும் 99 என்ற எண் கொண்ட சட்டையுடன் விளையாடினார்.

இப்போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இவர் இதே எண்ணுடன் விளையாட வாய்ப்பு உள்ளது. தவிர இருவரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை, ஐதராபாத் அணிக்காக விளையாடிய போதும் 99 எண்ணுடன் பங்கேற்றனர். அஷ்வினுக்கு 7 ஆண்டுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார் அமித் மிஸ்ரா. இதனால் 99 எண்ணுக்கு தாராளமாக உரிமை கொண்டாடலாம்.

இருவரும் சேர்ந்து ஒரே போட்டியில் விளையாடும் நிலை இன்னும் வரவில்லை. சமீபத்தில் முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடர் பயிற்சி போட்டியின் போது, அமித் மிஸ்ரா 9, அஷ்வின் 99 என்ற சட்டையை அணிந்தனர்.

இதில் அமித் மிஸ்ராவை (18) விட அதிக ஒருநாள் போட்டியில் பங்கேற்றதால், அஷ்வினுக்கு (58 போட்டி) இந்த வாய்ப்பு தரப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அஷ்வின் வெளியிட்ட டுவிட்டர் இணையதள செய்தியில் இரு வீரர்களும் ஒரே எண் தான் வேண்டும் என்று விருப்பப்பட்டால், யார் அதிக போட்டியில் பங்கேற்றுள்ளனர் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொது முகாமையாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில் இரு வீரர்களும் இணைந்து விளையாடாத வரையில் அவர்கள் எந்த எண்ணை விரும்புகின்றனரோ, அதுவே தரப்படும். இருவரும் ஒரே போட்டியில் களமிறங்கும் நிலை வந்தால் வேறு எண் வழங்கப்படும் என்றார்.

இந்தியாவின் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 10ம் நம்பரை பயன்படுத்தினார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பின் இதை யாரும் பயன்படுத்தவில்லை. மும்பை ஐ.பி.எல் அணியில் சச்சின் ஓய்வு பெற்ற பின் நம்பர் 10க்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது.

என் சோதனை வேறு யாருக்கும் வரக்கூடாது : சண்டிலா உருக்கம்!!

Ajit-Chandila

ஆறாவது ஐ.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து மொகோகா எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோர் பிணையில் உள்ளனர். ஆனால் மற்றொரு கிரிக்கெட் வீரர் சண்டிலாவுக்கு மட்டும் பிணை தரப்படவில்லை. இவர் கடந்த மே 16 முதல் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் இறுதிச் சடங்குக்காக, இடைக்கால பிணையில் வெளிவந்த சண்டிலா கூறுகையில் வாழ்க்கையில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று பெரிய கனவு கண்டேன்.

இதை ஓரளவுக்கு நிறைவேற்றி வந்தேன். ஆனால் திடீரென நடந்த துயரமான சம்பவம் காரணமாக, எனது கனவு பாதியில் தூள் தூளாக உடைந்து சிதறி விட்டது. கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் எனது திறமையை மக்கள் பார்த்துள்ளனர். நான் சுத்தமானவன், எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், என் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரிய அதிர்ச்சி. நான் கிரிக்கெட் வீரர் மட்டும் தான், பயங்கரவாதி அல்ல. இது போன்ற சம்பவத்தினால் எனது குடும்பத்தினர் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.

எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் மக்கள் உண்மையை அறிந்து கொள்வர். ஏனெனில் எனக்கு சூதாட்டம் குறித்து எதுவும் தெரியாது. இதற்காக யாரையும் ஒருபோதும் அணுகியது இல்லை. நான் ஒன்றுமறியாத அப்பாவி விரைவில் மீண்டு வருவேன்.

தவிர ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் நிறைய பணம் கிடைக்கிறது. இந்நிலையில் தவறான பாதையில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. எனது ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து அனைவரும் பேசுகின்றனர்.

பொதுவாக எல்லோரும் நல்ல ஆடைகள் அணிவதைத் தான் விரும்புவர் என்றும் இந்நிலையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அணிவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதல்!!

Par6792127

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

முதலாவது போட்டியில் 12 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது.

இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 20-20 தரவரிசையில் 1ஆம் இடத்தை இழக்க நேரிடும்.

காதலை கைவிட மகள் மறுப்பு : சேரனின் பாசப்போராட்டம் வெல்லுமா?

seran

இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் சந்துருவுடன் தாமினிக்கு ஏற்பட்ட காதலை ஆரம்பத்தில் சேரன் ஆதரித்தார். பின்னர் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி காதலக்கு சேரன் தடை போட்டார். இதனால் தாமினி பொலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது தந்தை சேரன் மீது புகார் அளித்ததுடன் பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

காதலன் சந்துருவை கொலை செய்ய எனது தந்தை ரவுடிகளை ஏவி விடுகிறார் என்றும் தாமினி கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேரன் போலீசில் அளித்த புகாரில் ‘‘தனது மகள் தாமினி, காதலன் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி அவனை பிரிந்து விட்டதாகவும் பின்னர் தாமினியின் மனதை மாற்றி எனக்கு எதிராக சந்துருவின் குடும்பத்தினர் திருப்பி விட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பொலீசார் விசாரணை நடத்தி சேரன் மீதும், சந்துரு மீதும் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை தாமினி மற்றும் அவரது காதலன் சந்துரு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தாமினி சந்த்ருவை எந்த சூழ்நிலையிலும் நான் பிரிய மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவரை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சந்துரு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வரை பொலீஸ் நிலையத்தில் காத்துக் கிடந்த சேரன் மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த காதல் விவகாரத்தில் சேரன் தரப்பில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் நியாயமானவையாகவே உள்ளன. ஒரு தந்தையாக, தனது மகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெற்று வளர்த்து ஆளாக்கிய மகள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று எந்த தந்தையும் நினைக்க மாட்டார்.

அப்படி ஒரு தந்தையாக கடந்த 3 நாட்களாக சேரன் பாசப் போராட்டத்தையே நடத்தி வருகிறார். மயிலாப்பூரில் காப்பகத்தில் இருக்கும் தாமினியிடம் இன்று 2வது முறையாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து இருந்தனர். அப்போது மீண்டும் அவருக்கு கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே சந்துரு குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சந்துரு கவுன்சிலிங்குக்கு வர வில்லை. சேரன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் வர வில்லை. அவரை எதிர்பார்த்து நடிகர் சந்திரசேகர், பொற்காலம் பட தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்தானது.

காதலன் சந்துருவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அப்போது இந்த காதல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். அதே நேரத்தில் தனது மகள் தாமினி மனம் மாறி நம்மிடம் திரும்பி வந்துவிட மாட்டாளா என்கிற ஏக்கத்துடன் கண்ணீரும் கம்பலையுமாக சேரன் காத்துக் கிடக்கிறார்.

மகளின் காதல் விவகாரம் தொடர்பாக 2 முறை பேட்டி அளித்துள்ள அவர் துக்கம் தாங்காமல் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேரனின் பாசப் போராட்டம் வெல்லுமா அவரது கண்ணீருக்கு விடை கிடைக்குமா முடிவு மகள் தாமினியின் கையில்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுளம்பு தீயிட்டு அழிப்பு: பரிசோதனையில் சிக்கல்!!

mosquito

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நுளம்பு வகை களுத்துறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட இடத்தியேயே தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்தார்.

புதிய நுளம்பு வகை தொடர்பில் அது கண்டறியப்பட்ட பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அப்பிரதேச மக்கள் நுளம்பு கண்டறியப்பட்ட பிரதேசத்தை தீயிட்டு அழித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக எந்தவொரு நுளம்பையும் அப்பிரதேசத்தில் கண்டறியக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரிசோதனைகளை மேற்கொண்ட குழுவினர் பெரும் சௌகரியத்திற்கு உட்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அதிகாரி ஒருவர் அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்போது புதிய நுளம்பு குறித்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளரியின் மருத்துவம் குணங்கள்!!

vellarikaai

1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

2. உடலைக் குளிரவைக்கும்.

3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி.

4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர்சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசிஅதிகரிக்கும்.

6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.

7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும்.

8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

9. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும்,மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும்

12. சமீபத்திய ஆய்வுகளின் படி வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது

13. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.

14. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சைசாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம்பெறும்.

15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறியபின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.

16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.

17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.

18. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

19. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.

20. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.

21. தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.

22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.

23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.

24. வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

25. வெள்ளரிக்காயைத்தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்

26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள்,நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம் மறையும்.

28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

ஒரு முக்கிய குறிப்பு :

நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச்சாப்பிடுவது நல்லதல்ல.