செப்டம்பர் மாத ராசி பலன்கள் – சிம்மம்!!

simmam

‘‘கம்பீர சிங்கம்’’ என்பதற்கேற்ப எதிலும் தங்களது கம்பீரத்தை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே! ராசியில் ஆட்சியாக இருக்கும் ராசிநாதனால் எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி ராகுவால் இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும்.

கூடா நட்பை கைவிடவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். லாபஸ்தான இடத்தில் இருக்கும் பஞ்சமாதிபதி குருவின் பலத்தால் பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.

உங்கள் முயற்சிகளில் வெற்றியையும் பொருளாதார வளத்தையும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். உறவுகள் உதவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாதப் பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கூடிவரும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.

சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் இருந்தாலும் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவ மணிகள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு மாத பின்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.

பரிகாரம் : சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் நமசிவாய நமஹ’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : வில்வத் தளங்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்யவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 19, 20, 21 ஆகிய திகதிகளில் புதிய முயற்சிகள் வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.

செப்டம்பர் மாத ராசி பலன்கள் – கடகம்!!

katakam

“கடகம் விசுவாசம்’’ என்பதற்கேற்ப தங்களுக்கு உதவி செய்தவர்களை எக்காலத்திலும் மறக்க மாட்டீர்கள். சில நன்மைகளை அளிக்கும் வகையில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை இழப்புகள் ஏற்படலாம்.

சில பொன்னான வாய்ப்புகள் தேடி வந்து வாழ்வை வளமாக்கும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். சுகஸ்தானத்தில் இருக்கும் சனியால் வேலை செய்யும் இடத்தினில் சில பிரச்னைகள் வரலாம். சகாக்களின் உதவியோடு அதனைச் சமாளிப்பீர்கள்.

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். தீவிர முயற்சி களின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். பெண்களுக்கு நாவடக்கம் தேவை.

கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் : திங்கள் கிழமைதோறும் சந்திர ஹோரையில் ( காலை 6-7) சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீசிவஸ்வரூபமங்களாயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : முல்லை மலரை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 17, 18 ஆகிய திகதிகளில் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி
தேய்பிறை : ஞாயிறு, வியாழன், வெள்ளி.

செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

mithunam

‘‘மிதுனத்தன் வார்த்தை இனிமை’’ என்பதற்கேற்ப சிந்தனையிலும் பேச்சிலும் நடத்தையிலும் இனிமையை கொண்டுள்ள மிதுன ராசி வாசகர்களே சில நன்மைகள் விளையக்கூடிய வகையில் ராசிநாதன் புதன் சஞ்சரிக்கிறார். மாத ஆரம்பத்தில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் சுகஸ்தானத்திற்கு மாறும் போது மிக நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சுபகாரகன் குருவும் மங்களநாயகன் செவ்வாயும் இணைந்து உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால் அஷ்டம பாக்கியாதிபதி சனி ஐந்தில் அமர்வதால் பணவிரயம் ஏற்படக்கூடும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகள் உதவுவார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் சில சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.ஆனால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஐந்தாமிடத்தில் உலவும் ராகுவாலும் ரண ருண ரோகஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தான ராசிக்கு மாறுவதாலும் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பெண்களுக்கு மிகச்சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும்.

பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். தேங்காய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகேசவாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : பெருமாளுக்கு துளசி தள அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 15, 16 ஆகிய திகதிகளில் யாருக்கும் பிணை கையெழுத்திடாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வியாழன்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

rishabam

சத்தியமே ரிஷபம் என்பதற்கேற்ப எதிலும் எப்போதும் சத்தியத்தை விரும்பி நடக்கும் ரிஷப ராசி அன்பர்களே தனஸ்தான ராசியில் செவ்வாயும் குருவும் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரனும் இருப்பதால் நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். மூன்றாம் இடத்திற்கு செவ்வாய் 3ம் திகதி மாறுவதால் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.

மாத முற்பாதியில் ஆட்சியில் இருக்கும் சுகஸ்தானாதிபதி சூரியனால் வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். தாயாருடன் இருந்து வந்த கசப்புகள் மறையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.

குருவின் பார்வையால் தடைகளை தகர்ப்பீர்கள். ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் களத்திர விரையாதிபதியால் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டி வரலாம். வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். ஒன்பதாமதிபதி சனி ஆறில் மறைந்தாலும் அவரை வியாழ பகவான் பார்ப்பதால் காரிய அனுகூலம் கிடைக்கும்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். லாபஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். பிரச்னைகளை முறியடிப்பீர்கள். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் நிலவி வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து உறவுகள் நல்ல நிலையில் இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத முற்பாதியில் சுமாராக இருந்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயிலுக்குச் சென்று அன்னையை வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 18 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : அம்மனுக்கு மல்லிகைப் பூவை சாத்தி வணங்கி வலம் வரவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 13, 14 ஆகிய திகதிகளில் பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள் :
வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.

செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மேஷம்!!

mesha

மேஷத்தான் தைரியன் என்பதற்கேற்ப அனைத்து இடத்திலும் தைரியத்தை வெளிப்படுத்தும் மேஷ ராசி அன்பர்களே ராசியில் கேது ராசிநாதன் செவ்வாயுடனும் குரு தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். பாக்கியஸ்தானத்தை குருவுடன் பார்க்கிறார். தன வாக்கு குடும்பாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் நீசமானாலும் அவரை ராசிநாதன் பார்ப்பதால் உக்ரம் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். சனியும் ராகுவும் களத்திர ஸ்தானத்தில் இருந்து சிற்சில குழப்பங்களை விளைவித்தாலும் குரு தனது பஞ்சம பார்வையால் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தைரிய வீர்ய ஸ்தானாதிபதி புதன் அந்த ஸ்தானத்திற்கு மூன்றாம் இடத்தில் இருப்பதால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம் எச்சரிக்கை.

களத்திர ஸ்தானத்தில் இருக்கும் ராகுவுடன் சனி இருப்பதால் தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். தொழிற்ஸ்தானத்தை ராசிநாதன் பார்ப்பதால் சுபச்செலவுகள் நிகழும். சேமிப்புகள் அதிகரிக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கு எந்த குறையும் இருக்காது.

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் அனுசரனையாக இருப்பார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வரும். மாணவ மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும். பிற்பாதி கவனமுடன் இருக்க வேண்டி வரும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 ஆகிய தேதிகளில் வீண் விவாதம் வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை : ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி;
தேய்பிறை : ஞாயிறு, வியாழன், வெள்ளி.

இன்று முதல் அரசு கல்லூரிகளில் டி ஷர்ட் , ஜீன்சுக்கு தடை!!

college

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் டி ஷர்ட், ஜீன்ஸ் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர்.

சில மாணவர்கள் டி ஷர்ட், டிராக் ஷூட் போன்றவற்றோடும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மாறாக முழுக்கை சட்டை மற்றும் நீளக்காற்சட்டை அணிந்து கம்பீரமாக வர வேண்டும்.

மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. ஆபாச உடையணிதல் கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

சிலர் அணியும் உடையால் ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க பொதுவான டிரஸ் கோட் ஏற்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் அணியும் உடை குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் கதற கதற அடி ,உதை வாங்கிய அமைச்சர்!!

Sharif protest_0_0

இந்திய மேற்கு வங்கத்தில் கல்லூரி விழா ஒன்றுக்கு தலைமையேற்க வந்த மாநில அமைச்சரை ஊர் மக்கள் சுற்றி வளைத்து உதைத்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்திருந்தார்.

அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் அமைச்சரை பிடித்து அடித்து உதைத்து கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் படுகாயமடைந்த அமைச்சரை மீட்க விரைந்தனர்.

ஆனால் பொலிசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க கல்லூரி வாசலையும் அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்துள்ளனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க பொலிசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்பு பொதுமக்களுடன் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி மந்திரியை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.

திருமண வீட்டில் உணவு விஷமானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி : மட்டக்களப்பில் சம்பவம்!!

Puluhan anak panti asuhan mendapat perawatan di Rumah Sakit Umum Daerah (RSUD) Syekh Yusuf, Sungguminasa, Kabupaten Gowa, Sulsel

மட்டக்களப்பு பெரிய கல்லாறு பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இன்று கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 3.30 மணியிலிருந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கான அவசர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்தார்.

சச்சினின் 200 ஆவது டெஸ்ட் போட்டி இந்தியாவில்??

sachin

சச்சின் டெண்டுல்கர் தனது 200 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னெடுப்பை இந்திய கிரிக்கெட் சபை இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற தனது செயற்குழு கூட்டத்தில் எடுத்தது.

இதுவரை டெண்டுல்கர் 198 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணி தமது அடுத்த டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்காவில் விளையாடத் திட்டமிட்டிருந்தது.

எனினும் டெண்டுல்கரின் விருப்பத்துக்கு ஏற்ப, மேற்க்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்வரும் நவம்பர் இந்தியாவுக்கு வந்து விளையாடுமாறு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை மேற்க்கிந்தியத் தீவுகள் ஏற்றுக் கொண்டு, இந்தியா வந்தால், அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் திட்டமிடபடி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆபிரிக்காவுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயணம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.

இந்திய அழைப்பை ஏற்று மேற்க்கிந்தியத் தீவுகள் அணி நவம்பர் மாதம் இந்தியா வந்தால், நடைபெறவுள்ள இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளும் கொல்கத்தா மற்றும் மும்பை நகரில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய கிரிக்கெட் சபையின் பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் 29ம் திகதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

700 கோடி செலவில் ஒலுவில் துறைமுகம்!!

mahinda_rajapaksa_oluvil_hakeem

கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு நெடுங்சாலையில் பனிச்சங்கேனி பாலத்தையும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

சுனாமியினாலும் போரினாலும் சேதமடைந்த பாலங்களை புனரமைப்பதற்காக ஜப்பான் அளித்த உதவித் திட்டத்தின் கீழ் 1060 மில்லியன் நிதியில் பனிச்சங்கேணி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நெடுங்சாலையில் ஐந்து பாலங்கள் ஜப்பான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கபட்டுள்ளது.

பனிச்சங்கேனி பாலத்தை திறந்து வைத்து உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தினாலும் சுனாமியினாலும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் உயிழப்புகளை தவிர்ந்த ஏனைய சேதங்களை புனரமைத்துக் கொடுப்பதே தனது நோக்கம் என்று கூறினார்.

முன்னதாக, சுனாமியினால் சேதமடைந்து தற்போது புனரமைக்கப்பட்டுள்ள வாகரை சென் பீட்டர்ஸ் தேவாலய திறப்பு விழா ஆராதனையிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தனது உரையில் ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடியாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச். எம் அஸ்ரப்பை நினைவு கூர்ந்தார்.

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அந்தப்பகுதி மக்கள் நாட்டின் தேசிய அபிவிருத்தியில் இணைந்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தபோது முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸ்ரப் ஒலுவில் துறைமுக வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

மீன்பிடி துறைமுகத்தையும் வணிக துறைமுகத்தையும் கொண்ட ஒலுவில் துறைமுகத்தை அமைப்பதற்கான செலவினை டென்மார்க் அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளது.

ஒலுவில் துறைமுகம் மூலம் அந்த பகுதி மக்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டாலும் அது கேள்விக்குறிய விடயமாகவே இருப்பதாக அந்த பகுதி மக்கள் பலரும் கருதுகின்றனர்.

ஆனாலும் கடந்த காலங்களில் ஆண்டில் எட்டு மாதங்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வந்த ஆழ்கடல் மீனவர்கள் இனிமேல் ஆண்டு முழுவதும் மீன்பிடியில் ஈடுபடும் போது தங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என அம்பாறை மாவட்ட ஆழகடல் மீனவர்கள் சங்கத்தின் செயலாளர் எம். எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

மீன்பிடித் துறைமுகம் மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும் வர்த்தக துறைமுகத்தை பொறுத்தவரை ஏற்றுமதி இறக்குமதி பணிகள் நடைபெற்றால்தான் வருமானத்தை ஈட்ட முடியும். தற்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இல்லை என்றார் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை மூத்த விரிவுரையாளர் ஏ. ஏ. எம். நுபைல்.

குறித்த துறைமுகம் நாட்டு மக்களுக்கு மற்றுமோர் சுமையாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

-BBC தமிழ்-

கோச்சடையான் டீஸர் செப்.9ம் திகதி வெளியீடு : சௌந்தர்யா அறிவிப்பு!!

kochadayanரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். சரத்குமார், ஆதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

முதன்முறையாக மோஷன் கெப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹொலிவுட்டில் தயாரான அவதார் படத்தைப் போல் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இப்படம் தெலுங்கிலும் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் வெளிவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸரை வரும் செப்.9ம் திகதி வெளியிடவுள்ளனர். இதுகுறித்து, இப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, செப்டம்பர் 9ம் திகதி கோச்சடையான் படத்தின் டீஸர் வெளியாகிறது. இதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் இளம்வயது பிரபுவாக நடிக்கும் கார்த்தி!!

pirabu

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இப்படத்தில் கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். காமெடி கலந்த சென்டிமெண்ட் கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கார்த்தி, பிரபுவுக்கு மகனாக நடிக்கிறார். பிரபுவுக்கு இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறது. இதில் இளைய வயது பிரபுவாக அவரையே நடிக்க வைக்க எண்ணினர். ஆனால், தற்போது இளம்வயது பிரவுவாக கார்த்தி நடிக்கவிருக்கிறாராம்.

பொதுவாக நடிகர்களின் பிளாஷ்பேக் காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்தான் நடிப்பார். ஆனால், வித்தியாசமான முயற்சியாக இதில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.

வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி!!

doglass

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.

விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும்.

எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் : குடும்பத்தினர் ஆவேசம்!!

boy

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினர் ஆவேசமாக கூறினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பவம் நடந்தபோது 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளி ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் ராம்சிங் என்பவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இளம் குற்றவாளி மீது டெல்லி சிறுவர் நீதிமன்றத்திலும் மற்ற4 பேர் மீது டெல்லி விரைவு கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இளம் குற்றவாளிக்கு கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இளம் குற்றவாளிகள் சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள்தான் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த அளவிலான இந்த தண்டனை மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. தீர்ப்பு கூறப்பட்டதும் அதிருப்தி அடைந்த மாணவியின் தந்தை இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று தெரிவித்தார். மாணவியின் தாய் மற்றும் தம்பியும் ஆவேசம் அடைந்தனர்.

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெலிபோனில் பேட்டி அளித்த மாணவியின் தந்தை ‘‘இளம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட குறைவான தண்டனை முடிவு துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து வக்கீல்களிடம் கலந்து பேச இருக்கிறோம். அவனை தூக்கில் போட வேண்டும். இந்த வழக்கில் மற்ற குற்றவாளி களுக்கும் இன்னும்10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். குற்றவாளிகள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

குறைவான தண்டனை திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டபின் மாணவியின் குடும்பத்தினர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேராவுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது 10 நாட்களுக்குள் அவர்களை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்குவதாக பிரியங்கா அவர்களிடம் உறுதி அளித்தார்.

தங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்மந்திரி ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும், மாணவியின் தந்தை தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப்பதில் அளித்த அவர், பா.ஜனதா தலைவரும் குஜராத் முதல்மந்திரியுமான நரேந்திரமோடியை இன்னும் தான் சந்திக்கவில்லை என்றும் அவர் தங்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

சச்சின் சாதனை முறியடிக்கக் கூடியது தான் ஆனால் எளிதல்ல : வெங்கடேஷ் பிரசாத்!!

Venkatesh-Prasad

தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி இரண்டு சர்வதேச T20, ஏழு ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த வீரர்கள் அணி மட்டுமல்லாமல், இந்தியா ஏ, 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட அணிகளும் சிறப்பாக விளையாடின.

வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள தென் ஆபிரிக்காவுக்கெதிரான தொடரில் இந்திய அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல.

குறிப்பாக துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஏனெனில் தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர் மற்றும் சுவிங் பந்துகளை சமாளிப்பது கடினம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், துல்லியமாக பந்து வீசினால் மட்டுமே சாதிக்க முடியும்.

இரண்டு தொடர்களில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். இவருக்கு, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தது பாராட்டுக்குரியது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆபிரிக்க ஆடுகளத்தில் இவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.

இந்திய அணி அதிகளவு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டி மட்டும் தான் உண்மையான கிரிக்கெட். ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் அதிகளவு ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வருகிறது.

அதேபோல சச்சின் படைத்த சாதனைகள் முறியடிக்க கூடியது தான். ஆனால் எளிதான காரியமல்ல. இருபது ஆண்டுகளுக்கு மேலாக போமை தக்கவைத்துக் கொண்டு உடற்தகுதி, காயம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் விளையாடினால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

சாதனை முயற்சியில் 64 வயதான நீச்சல் வீராங்கனை டயான நையத்!!

dina

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் (64) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

166 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது இதே முயற்சியானது 41 மணி நேரம் கடலில் நீந்தியபிறகு கடல் சீற்றத்தாலும் ஜெல்லி மீன்கள் கடித்ததாலும் தடைப்பட்டது.

இது அவரது 5வது முயற்சியாகும். 64 வயதான இந்த உறுதியான வீராங்கனையின் கடைசி முயற்சி இதுவாகும். கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துள்ளார்.

இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் செல்கின்றனர்.