
இயக்குனர் சேரன் மகளை காதலித்து திடீரென என பிரபலமாகியுள்ளார் சந்துரு. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் டான்சர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் செய்திகள் வருகின்றன. சேரன் தரப்பினர் இதை மறுக்கிறார்கள். சந்துருவின் நிஜ பெயர் சந்திரசேகரன். தமிழ் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்கின்றனர்.
சந்துருவின் அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்துள்ளார். இவரது அம்மா ஈஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது ஈஸ்வரி இருதய நோயாளியாக இருக்கிறார். சூளைமேட்டில் வசிக்கின்றனர். இவர்களுடன் சந்துருவின் அக்கா பத்மாவும் வசிக்கிறார். இவர்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் உள்ள அன்பு நகரில் வசித்துள்ளனர். பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.
ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஆடல்–பாடல், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் நடனக்குழுவில் சந்துரு நடனம் ஆடி உள்ளார். பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆடி பரிசு வாங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை வைத்து நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தொடங்கினார். இதனால் அவருக்கு பெண் ரசிகைகள் சேர்ந்தனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடிய போது தான் சேரன் மகள் தாமினியின் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் மலர்ந்தது. சேரனுக்கு காதல் விவரம் தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
ஆனால் சந்துருவின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததாகவும், எனவே அவருக்கு மகளை கட்டி கொடுக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
இரவு நேரங்களில் வெகுநேரம் பெண்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் மூன்று பெண்கள் சந்துருவுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார்.
தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ஐலவ்யூ சொல்லியுள்ளான் என்றும் ஆத்திரப்பட்டு உள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்துரு சிகரெட் பிடிப்பது போன்றும், சேரன் மகளுடன் இருப்பதுபோன்றும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன.

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் களவாடிய பொழுதுகள்.
அரபு நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. அப்போது அவர் கொல்லப்பட்டார். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள புத்த கோவிலில் ஜன்னல் கதவு அருகில் பதுக்கி வைத்திருந்த குண்டு திடீரென்று வெடித்தது. சற்று நேரத்தில் மற்றொரு குண்டில் இருந்து புகை கிளம்பியது. ஆனால் அது வெடிக்கவில்லை.
பிதிர் தர்ப்பணம் செய்யும் புனித ஆடி அமாவாசை தினம் இன்றாகும். இன்று ஆடி மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.



புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன்.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

