வாழைக் குற்றியில் தோணி செய்து விளையாடிய சிறுவர்கள் பரிதாப மரணம்..!

floodபிலியந்தலை, எகொடவத்த பிரதேசத்தில் வாழைக் குற்றியின் உதவியுடன் தோணி செய்து விளையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விளையாடும்போது சேற்று நீரில் புதைந்து இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுவன் மற்றும் ஏழு வயதான சிறுமியுமே உயிரிழந்துள்ளளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை இவர்களது சடலம் பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

செப்டெம்பர் மாத ராசி பலன்கள்!!

astrology

செப்டம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இன்று நாடு முழுவதும் மழை பெய்யும்..!

weatherநாட்டின் பல பாகங்களிற்கும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், காலி தொடக்கம் பொத்துவில் வரையான கடற் பகுதிகள் மழை அல்லது மின்னல் தாக்கத்திற்கு உட்படும் என அவ்நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இடையிடையே காற்று மணத்தியாலத்திற்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

விஷால், சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த கார்த்தி!!

karthi

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய இரண்டு படங்களும் வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியாகவிருக்கின்றன.

இந்த படங்களை பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்கு தியேட்டரில் கூடுதல் ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அது என்னவென்றால், எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா’படத்தின் டீஸரை அன்றைய தினம் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இந்த டீஸரை வருகிற 6ம் திகதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி’என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது. இப்படத்தில் கார்த்தியுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

டெண்டுல்கர் தொடர்ந்து விளையாட வேண்டும் : கிறிஸ் கெய்ன்ஸ்!!

Sachin-tendulkar

கிரிக்கெட்டின் ககாப்தம் என்று அழைக்கப்படுபவர் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்து இருந்தார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா செல்கிறது.

இந்த சுற்றுப் பயணத்தில் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்டில் விளையாடி சாதனை படைக்க இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரோடு டெண்டுல்கர் ஒய்வு பெறலாம். என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதே மனநிலையில்தான் உள்ளார்.

இந்த நிலையில் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியில் டெண்டுல்கர் இடம்பெற்று இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனுபவம் வாய்ந்த வீரராக அவர் மட்டுமே உள்ளார். கங்குலி, டிராவிட், லட்சுமண் ஒய்வுக்கு பிறகு டெண்டுல்கர் மட்டும் அணிக்கு இருக்கிறார்.

நடு வரிசையில் வீராத் கோலி, புஜாராவுக்கு இன்னும் அதிகமான அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் டெண்டுல்கர் மேலும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ்கெய்ன்ஸ் கூறியுள்ளார்.

கையில் தூக்கி செல்லக்கூடிய மினி சலவை இயந்திரம் அறிமுகம்!!

portable-washing-machine

கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் சிறிய சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் வைத்தே சலவை இயந்திரங்களில் துணிகளை சலவை செய்ய முடியும். ஆனால் கையில் தூக்கி சென்று துணிகளை துவைக்கும் சலவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பேக் வடிவில் ஆனது. வாட்டர் புரூப் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 நிமிடத்தில் துணிகளை துவைக்க முடியும். சாதாரண சலவை இயந்திரத்தின் தரத்தில் இதன் சலவை உள்ளது.

கையில் தூக்கி செல்லும் வசதி இருப்பதால் அதை சுற்றுலா செல்லும் இடங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதில், ஜீன்ஸ், டி–சேர்ட், உள்ளாடைகள், காலுரைகள் போன்றவற்றை திரவ நிலையிலான கோப்புடன் 3 லிட்டர் தண்ணீரில் சலவை செய்யலாம்.

இந்த சலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 180 கிராம் மட்டுமே எடையுள்ள இதை மடித்து வைத்து கொள்ள முடியும்.

சிம்பாவேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

pak

சிம்பாவேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

சிம்பாவேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 67, அஹ்மத் ஷெஸாத் 54, நசிர் ஜம்ஷெட் 38, உமர் அமின் 33 ஓட்டங்களை எடுத்தனர். சிம்பாவே தரப்பில் சதாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு 261 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாவே அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக வாலர் 48, அணித் தலைவர் டெய்லர் 26 ஓட்டங்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சினிமாவில் கால்பதிக்கும் செந்திலின் வாரிசு!!

senthil

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள், காமெடியர்கள், டெக்னீசியன்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகர் செந்திலும் இணைந்துள்ளார். ஆனால் இவர் தன்னைப்போல் காமெடி நடிகராக உருவாக்காமல் இயக்குனராக உருவாக்க நினைத்துள்ளார்.

இதற்காக சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டிருக்கிறாராம். தற்போது அஜீத்தின் வீரம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பா பணம் கொடுப்பார் சொந்த படம் எடுக்கலாம் என்ற கனவில் வேலைக்கு போகக்கூடாது. நான் எப்படி சொந்த முயற்சியில் அறிமுகமாகி, நடித்து, பேரும் புகழும் வாங்கினேனோ, அதேபோல் சொந்த காலில் நிற்கணும் என அறிவுரை கூறித்தான் தன் மகனை சினிமாவுக்குள் நுழைய அனுமதித்தாராம் செந்தில்.

நான் பாடிய பாடலை 30 லட்சம் பேர் கேட்டுள்ளனர் : சிவகார்த்திகேயன்!!

siva

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நெல்லை ரத்னா தியட்டரில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பட தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:–

இந்த படத்தில் நடிகர் சத்யராஜூடன் இணைந்து நடித்துள்ளேன். முழுக்க முழுக்க பொழுதுபோக்கும், நகைச்சுவையும் நிறைந்த படம். 90 சதவீதம் காமெடி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த பாடலை யூ டியூப் மூலம் 30 லட்சம் பேர் கேட்டுள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று டிரெய்லர் வெளியிட்டு வருகிறோம் என்று கூறினார்.

வரதட்சணைக் கொடுமையால் இந்தியாவில் மணிக்கொரு பெண் மரணம்!!

dowry

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியா எங்கிலும் பார்க்க 2012ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது. தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருமண விஷயத்தில் பெண்ணை ஒரு பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கும் சமூக மனப்பாங்கு இந்தியாவில் இன்னும் பெரிதாக மாறியிருக்கவில்லை என கருத்து வெளியிட்ட எழுத்தாளரும் பெண்ணுரிமை ஆர்வலருமான கீதா கூறினார்.

இந்தியாவில் வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961ம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்டாலும் இன்றளவும் சாவு எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சட்டம் இருந்தும் இல்லாத ஒரு நிலையையே காட்டுவதாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரான ஆர்.வைகை தெரிவித்தார்.

விராத் கோலிக்கு அர்ஜுனா விருது!!

kholi

இந்திய விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதினை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதிக்கு பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து இரு முறை தங்கம் வென்றவரான ரஞ்சன் சோதிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுடன் 7.5 இலட்சம் இந்திய ரூபா, பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நட்சத்திர வீரரான விராத் கோலி உட்பட 14 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டன. இந்த விருதுடன் 5 இலட்சம், பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டதை அடுத்து, இவ்விருதை பெற்ற 7 வது துப்பாக்கி சுடும் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பதும் இவ்விருது தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!!

eng

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரை கைப்பற்ற நினைத்த அவுஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 20-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் 20-20யில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செஸ்டர்- லீ-ஸ்டீரிட்டில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு லம்ப், ஹேல்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வட்சன் ஓவரில் லம்ப் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஜோன்சன் பந்துவீச்சில் ஹேல்ஸ் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பால்கனர் ஓவரிலும் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களைச் சேர்த்தபோது, லம்ப் 43 ஓட்டங்களில் வெளியேறினார். பின் வந்த ரைட் (30), மோர்கன் (20) நீடிக்கவில்லை. ஹேல்ஸ் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்க எடுத்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு கடந்த முறை உலக சாதனை படைத்த பின்ச் (5) இம்முறை ஏமாற்றினார். பிராட் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரி விளாசினார். ஆனால், பின் வந்த வாட்சன் (7), மார்ஷ் (13) விரைவில் வெளியேறினர்.

அரை சதம் கடந்த வோனர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெய்லி (23), வேட் (4), மேக்ஸ்வெல் (27) நிலைக்கவில்லை. மற்றவர்கள் சொதப்ப, அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன் மூலம் 20-20 தொடர் 1-1 என சமநிலையானது.

சவுதியில் மரணமான வாகரைப் பெண்ணின் சடலத்தில் தொடரும் மர்மம்!!(படங்கள்)

சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தமிழ் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வழங்க்கப்பட்டு சடலம் நேற்று கொழும்பில் இருந்து சொந்த இடம் கொண்டுவரப்பட்டு இன்று அதனை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இவர் கடந்த 4 வருடங்களாக சவுதி அரேபிய நாட்டில் ஜித்தா நகரில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில்,
தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவுதியரேபியா சென்றார்.

அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை.
எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன் எதுவும கிடைக்கவில்லை.

இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது. இந் நிலையில் சவுதி நாடு சென்றது தொடக்கம் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும்.

காரணம் என்னிடம் சடலத்தை தரும்போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளாதாகவே சவுதியில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர் என்று கூறினர். ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப் பகுதி, மார்புப் பகுதி, கழுத்து பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளில் காயத் தழும்புகளும் அடிகாயங்களும் காணப்படுகின்றன.

எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை பணிக்க வேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயத்தை கேள்வியுற்ற ஊர் மக்கள் உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் இச்சம்பவம் பற்றி கூறியிருந்தனர்.

வெருகல் சித்திரவோயுதர் ஆலய இறுவெட்டு வெளியீட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பவத்தை கேள்வியுள்ளதும் அங்கிருந்து வாகரை பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக சென்று வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இவ்விடயமாக ஆராயுமாறு வேண்டுதல் விடுத்தார்.

அத்தோடு உறவினர்களின் வாக்கு மூலத்தையும் பொலிஸார் பதிவு செய்தனர். அத்தோடு சடலத்தை அடக்கம் செய்யுமாறும், இவ்விடயமாக தாங்கள் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதியுரை வழங்கியுள்ளார்.

பின்னர் ஓமடியாமடு கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சவுதியில் இருந்து அனுப்பப்பட்ட சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், உறவுகளுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இவ்வியடமாக தான் வெளிநாட்டு நலனோம்புகை அமைச்சருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இது சார்பான தீவிர விசாரணைக்கான ஏற்பாடும், நஸ்டஈடும் கோருவதாகவும்இ அடித்து துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் உரியவருக்கு தகுந்த தண்டனை வழங்க கோருவதாகவும் உறவுகளுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் சடலமாக அனுப்பப்படும் நிலை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

1
2

3

4

சிரியா மீது போர்த்தொடுக்குமா அமெரிக்கா??

syria

தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியா எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல்.

வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின் ஜனாதிபதியாக பஷர் அல்–ஆசாத் உள்ளார்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றனர்.

அவர்களின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் துனிசியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வெடித்தது.

அது படிப்படியாக வலுவடைந்து 2011ம் ஆண்டு பிப்ரவரியில் கலவரமாக மாறியது. அதே போன்று அண்டை நாடுகளான எகிப்து, லிபியாவுக்கும் பரவி அது உள்நாட்டு போர் ஆக உருவானது.

மக்கள் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் துனிசியா, எகிப்து நாடுகளின் ஜனாதிபதிகள் ஷின் எல் அபிடினே பென் அலி, ஹோஸ்னி முபாரக் ஆகியோர் பதவி விலகினர்.

லிபிய தலைவர் மும்மர் கடாபி புரட்சிபடையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது அங்கு குடும்ப ஆட்சி மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது.

அதே நிலை சிரியாவிலும் தொடர அந்நாட்டு மக்கள் விரும்பினர். அதை தொடர்ந்து அரபுநாடுகளில் ஒன்றான சிரியாவிலும் கடந்த 2011 மார்ச் 15ம் திகதி மக்கள் புரட்சி வெடித்தது. தொடக்கத்தில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன.

அது மாபெரும் புரட்சியாகி 2011 ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், அலெப்போ உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அரசுக்கு எதிராக சிரியா சுதந்திரப்படை என்ற மக்கள் புரட்சி படை கடந்த 2011 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. அதில் அரசின் நடவடிக்கை பிடிக்காத இராணுவ வீரர்கள்,இராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் சேர்ந்தனர்.

இதனால் அப்படை வலுவடைந்தது. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.

கலவரத்தை அடக்க ஆசாத் தனது இராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் குவியல் குவியலாக பொதுமக்கள் கொல்லப்பபட்டு வருகின்றனர்.

கலவரம் தொடங்கி 2 1/2 ஆண்டுகளாகியும் இன்னும் கலவரம் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஜூன் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கையை கை விடும்படியும் பதவி விலகி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் படியும் ஜனாதிபதி ஆசாத்தை ஐ.நா. சபை எச்சரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவற்றின் நட்பு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கேட்டுக் கொண்டன.

அதற்கு தொடக்கத்தில் சம்மதம் தெரிவித்த ஆசாத் பின்னர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து போராட்டம் கடுமையானது. புரட்சி படைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாக ஆயுத உதவியும் மருந்து மற்றும் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றன.

சவுதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகிய அண்டை நாடுகளும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இதனால் புரட்சி படையின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இராணுவத்தின் வசம் இருந்த முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இதை பொறுத்து கொள்ள முடியாத ஆசாத் அவற்றை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிரடி தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

புரட்சிபடையின் பிடியில் இருக்கும் தலைநகர் டமாஸ்கசின் புறநகரான ஷமால்கா மீது கடந்த 21ம் திகதி இராணுவம் போர் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி கொடூர தாக்குதல் நடத்தியது.

அதில் சுமார் 1429 பேர் நச்சுப்புகை தாக்கியதில் மூச்சு திணறி பலியாகினர். பலியானவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவம் உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஐ.நா சபையும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே சிரியாவிடம் இரசாயன குண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அதை சிரியா மறுத்தது. இந்த நிலையில் இரசாயன குண்டுகள் இருந்தாலும் போராடும் மக்கள் மீது வீசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிரியாவை கடந்த 2012ல் அமெரிக்கா எச்சரித்தது.

இதே கருத்தை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தும் கூறின. இந்த எச்சரிக்கையையும் மீறி சிரியா இரசாயன குண்டுகளை வீசி சொந்த மக்களின் இன்னுயிரை பறித்துள்ளது. இதனால் கோபத்தின் எல்லைக்கு சென்றுள்ள அமெரிக்கா சிரியா மீது இராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.

இதே காரணத்தை காட்டி தான் கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது ஈராக் ஜனாதிபதியாக சதாம் உசேன் இருந்தார். இவர் ஈராக்கின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார்.

அவர் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரை கடந்த 2003 டிசம்பர் 13ம் திகதி அமெரிக்கா கைது செய்தது. அவர் மீது விசாரணை நடத்தி 2006 டிசம்பர் 30ம் திகதி தூக்கிலிட்டது. அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்தார்.

தற்போது அதே காரணத்தை முன்வைத்து சிரியா மீதும் போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக உள்ளன. போர் நடவடிக்கைக்கு முன்னோடியாக அமெரிக்கா தனது 6 போர் கப்பல்களை சிரியா அருகே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் சிரியா மீதான இராணுவ தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலை முறியடிக்க ரஷ்யா தனது 3 போர்க்கப்பல்களை சிரியா கடல் பகுதிக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சிரியா மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தள்ளி வைத்துள்ளன.

சிரியா மீது போர் தொடுக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரினால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணை விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, மற்றொரு எண்ணை வள நாடான சிரியா மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இப்போது சிரியா விவகாரத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

விடுமுறை முடிந்து பாடசாலைகள் இன்று ஆரம்பம்..!

schoolநாட்டிலுள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாட்டிற்காக மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.

2ம் தவணை விடுமுறைக்காக இப்பாடசாலைகள் கடந்த ஒகஸ்ட் மாதம் 02ம் திகதி மூடப்பட்டது.

இன்று அரச பாடசாலைகள் திறக்கப்படுமாயினும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தவணை விடுமுறை சகல அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் 06ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றையதினம் சமுக மளிக்கமாட்டார்கள்.

தொடர்ந்து மதிப்பீடு முடியும் வரை ஒரு சில பாடசாலைகள் ஸ்தம்பித நிலையிலிருப்பது தவிர்க்க முடியாமலிருக்குமென கூறப்படுகிறது.

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி : வீடும் சேதம்!!

thunder

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனப்புலவு கிராமத்தில் நேற்று (31) இரவு மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வவுனியாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் தமது வீட்டில் இருந்தவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக இருவர் படு காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை வவுனியா நெளுக்குளம் பகுதியியல் தம்பனைக்குளம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அவ் வீட்டில் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது.