சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் : லெபனானுக்கு தப்பியோடும் மக்கள்!!

syria

சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் போராளிகள் பகுதியில் ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள், முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனானுக்கு தப்பி ஓடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனான் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.

சிரியாவிலிருந்து வரும் அகதிகள் வருவதற்கு அருகிலுள்ள நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலியில் நபரொருவரை கோரமாக வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது

knife

காலியில் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து வந்த நபரொருவரை கோரமாக வெட்டிக்கொலை செய்த மூன்று பேரை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எல்பிட்டிய – பிட்டிகல பாணதுராதோட்டத்தில் வசித்த நபரோ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் எல்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் வசித்த தோட்டத்தை சேர்ந்த 21, 43 மற்றும் 62 வயதான நபர்கள் மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது இரண்டாவது மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் வசித்தபோதே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது மனைவியுடன் தகராறு ஏற்பட்ட மறுநாளே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தி கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.

கொடுமைப்படுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி சமைத்த பெண்!!

Cooking Lamb in slow cooker

சீனாவில் தன்னை கொடுமைப்படுத்திய கணவரை ஒரு பெண் கொன்று சமைத்துள்ளார்.

சீனாவில் உள்ள ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு நபரை 2வது திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களே அவர் அப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

பின்னர், அப்பெண்ணையும் மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். அதை தாங்க முடியாத அப்பெண் தனது 2வது கணவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்தார்.

அதைத்தொடர்ந்து 3 நாட்களாக அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டார். மேலும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

அதை தாங்க முடியாத பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனவே, அவரது சடலத்தை மறைக்க உடலை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் போட்டு சமைத்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று அப்பெண்ணை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் கைது!!

arrest1

12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்தபோதே முதியவர் சிறுமியை நேற்று வெள்ளிக்கிழமை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமி வசிக்கும் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர் என்று தெரிவித்த வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் விசாரணை!!

dog

இலங்கை பொலிஸ் மோப்பநாய் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய்கள் இரண்டின் திருமண வைபவம் அண்மையில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்றது.

அதன்மூலம் இலங்கையின் புராதன சிங்கள திருமண கலாசாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு உள்ளிட்ட அமைப்புக்கள் விசனம் தெரிவித்திருந்தன.

இந்த திருமண வைபவ ஏற்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸார்!!

abuse

பெண் ஒருவர் இரண்டு பொலிசார் மற்றும் அவர்களது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

அப்பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பின் அவரிடமிருந்து பணம் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.

இன்று காலை அப்பெண் அளித்த புகாரின் பேரில் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வசித்த அதே குடியிருப்பில் தான் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் வசித்துவந்துள்ளான்.

பொலிஸில் சேர முயற்சித்துக்கொடிருந்த அந்த நபர் தன்னுடைய பொலிஸ் நண்பர்கள் இரண்டுபேரையும் மற்றொரு நண்பரையும் இப்பெண்ணின் வீட்டிற்கு அழைத்து இக்கொடுமையை செய்துள்ளான்.

இக்கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதை அவருடைய உடைமைகளை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதை அடுத்து பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது : ஒபாமா!!

obama-immigration-1

சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்..

அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவே இருக்கும். சிரியா மீதான போரும் சிறிய அளவிலேயே இருக்கும். இது தொடர்பாக நேச நாடுகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது என்றார்.

இதற்கிடையில் சிரியாவில் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்களை உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இலங்கை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவலா??

map

நாகை மாவட்ட கடலோர பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து கடல் பகுதியில், கடலோர பாதுகாப்பு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இலங்கை வழியாக, தமிழகத்திற்குள் ஊடுருவி கடலோர மாவட்டங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் மத்திய உளவுத் துறை எச்சரித்தது.

இதையடுத்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம், திருக்கடையூர் கடல் பகுதியில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கடலோர பாதுகாப்பு பொலிசார் மத்திய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் அத்தகவல் விஷமிகள் பரப்பிய வதந்தி என தெரியவந்தது.

இருப்பினும் கடலோரக் காவல் குழும பொலிசார் நாகை மாவட்ட கடல் எல்லையான கொடியம்பாளையத்தில் இருந்து கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன் பிடித்து துறைமுகத்திற்கு வரும் படகுகள், தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன.

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் மதுரையில் கைது!!

credit

சர்வதேச வங்கிகளின் போலி கடன் அட்டை தயாரித்து, பிரபல கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த, இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடன் அட்டை தயாரிப்பு தொடர்பாக, மாருதிஹள்ளியில் பரிமளா கோல்டன் கேட் அபார்ட்மென்ட் மகேந்திர கருணராஜ்(50), மதுரை விவேகானந்தா வீதி அஸ்வின் குமார்(30), ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் போலி கடன் அட்டை மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 50 க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கைதானவர்களில், கருணராஜ், இலங்கையை சேர்ந்தவர். அஸ்வின் குமார் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சென்னை வந்த இவர்களிடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. பிரான்சில் வசிக்கும் தன் சிறு வயது நண்பர் மூலம் இந்திய வங்கிகளின் கடன் அட்டை தகவல்களை, இ-மெயிலில் பெற்ற, கருணராஜ், அஸ்வின் குமாருடன் சேர்ந்து போலி கடன் அட்டைகளை தயாரித்து உள்ளார்.

இதற்கு தேவையான இயந்திரங்களை கேரளாவை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் மலேசியாவிலிருந்து வரவழைத்து உள்ளனர். தயாரித்த கடன் அட்டை மூலம் பெரிய ஷாப்பிங் மால், கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, பல்வேறு இடங்களில் அதை விற்று பணம் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். இந்த கார்ட்களை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். போலி கடன் அட்டை தயாரிக்க உதவியாக இருந்த பிரான்ஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவ்வப்போது பண உதவி செய்துள்ளனர்.

கிரெடிட் கார்டின், பின் எண்களை கேட்கும் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் இவர்கள் வாங்குவதில்லை. அத்துடன் ஒரு எண்ணில் தயாரித்த கடன் அட்டையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். அதனால் எளிதாக அனைவரையும் மோசடி செய்துள்ளனர்.

கருணராஜ் சென்னையில் போலி கடன் அட்டை ஒன்றை பயன்படுத்தியபோது, கண்காணிப்பு கேமராவில் அவரின் படம் பதிவாகியிருந்தது. அதன்மூலமே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீரம் படத்தில் ஓடும் ரெயிலில் தொங்கியபடி துணிச்சலாக நடித்த அஜீத்!!

ajith

ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து பிறகு அஜீத் நடிக்கும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆரம்பம் படப்பிடிப்பக்குப் பின் தற்போது அஜீத் வீரம் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இது ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இதனால் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கும். அஜீத் பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சியில் டூப் போடுவதில்லை. அதேபோல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

வீரம் படப்பிடிப்பு பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஓடும் ரெயிலில் வெளியே தொங்கியபடி ஒரு காட்சியில் அஜீத் நடிக்க வேண்டியிருந்தது. டைரக்டர் சிவா டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அஜீத் நானே நடிக்கிறேன் என்று தைரியமாக கூறினார்.

காட்சியும் கச்சிதமாக எடுக்கப்பட்டது. அஜீத்தின் இந்த துணிச்சலை படக்குழுவினர் பாராட்டினர். பீகாரைத் தொடர்ந்து ஐதராபாத்திலும், சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.

நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை முற்றுகையிட்ட ரசிகர்கள் : திணறிய நயன்தாரா!!

nayan

நகை கடை திறப்பு விழாவில் நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியில் இச்சம்பவம் நடந்தது. அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடையொன்றை திறக்க நயன்தாராவை அழைத்து இருந்தனர்.

வீட்டில் இருந்து நாலைந்து கார்கள் பின் தொடர அவ்விழாவுக்கு நயன்தாரா சென்றார். நகைக்கடையை திறக்க நயன்தாரா வருகிறார் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்ததால் அவரை காண ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு நின்றனர்.

நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் முண்டியடித்தார்கள். ஒட்டோ கிராப் வாங்கவும் நீட்டினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நயன்தாரா கூட்டத்தினர் நடுவில் சிக்கினார். இதனால் விழாக்குழுவினர் பதட்டமானார்கள். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் விரைந்து போய் கூட்டத்தினரை விலக்கி நயன்தாராவை பத்திரமாக மீட்டனர்.

அவரை சுற்றி வளையம் அமைத்தபடி நகைக்கடைக்குள் அழைத்து சென்றனர். நகைக்கடையை திறந்து வைத்து சிறிது நேரம் நயன்தாரா சுற்றி பார்த்தார். பிறகு பாதுகாவலர்கள் துணையோடு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

நயன்தாரா ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களில் அதிகம் பங்கேற்பது இல்லை. அதிக பணம் தருவதாக ஆசை காட்டியும் மறுத்து வந்தார். கொச்சி நகை கடையை மட்டும் திறந்து வைக்க சம்மதித்தார்.

என்னை ஆபாசமாக காட்டுவதா : டைரக்டர் மீது சார்மி பாய்ச்சல்!!

Sharmi00

தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தபின் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொரட்ந்து தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் நிறைய படங்கள் வந்தன. அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் படம் நேற்று ரிலீசானது.

இந்த நிலையில் டைரக்டர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில டைரக்டர்கள் மோசடித்தனமாக நடந்துள்ளனர்.

மாயகடு தெலுங்கு படத்தில் நடித்தபோது டைரக்டர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். படத்தில் அதை பார்த்தபோது அதிர்ந்தேன். அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார். பிரேம கமாலிகம் படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளேன் என்று சார்மி கூறினார்.

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா??

emailverify

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க் http://www.verifyemailaddress.org

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.

குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!!(படங்கள்)

தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி.

கேரளாவில் உள்ள முத்தூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது தங்கத்தில் குளித்துள்ளார்.

அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அத்தனை நகைகளும் மிக நேர்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக திருமண வைவவத்தில் கலந்துகொண்டவர்கள் பாராட்டுத் தெரிவி்த்தனர்.

அந்த தங்க மகளை நீங்கள் இங்கே காணலாம்.

g3

g1 g2

வவுனியா பெரியார்குளத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

vavuniyaவவுனியா பூந்தோட்டம் பிரிவுக்குட்பட்ட பெரியார்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 18 வயதான கோகுலன் என்பவரே பலியாகியுள்ளார்.

இத் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – வவுனியா ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை..!

vavuniyaகொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பன்பொல – வெரஹெரயாம பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய ரொஷான் எனத் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் அம்பன்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.