250 கோடி ரூபா ஹெரோயின் கடத்தியவர்களின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை..!

heroபோதைப் பொருள் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, கொழும்பு சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களை அம்பலப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.

மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 250 கோடி ரூபா எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, இலங்கைக்கு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தி வந்ததன் பின்னணியில் மலேசியாவை சேர்ந்த இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் இருப்பதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

258 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பிரவுண் சுகர் ரகத்தை சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.

மும்பை அணியிலிருந்தும் லசித் மலிங்கா விலகல்!!

lasith_malinga

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சம்பியன்ஸ் லீக் T20 தொடரிலும் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமில் லசித் மலிங்க இடம்பெறாத காரணத்தினாலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பரில் தனது இரண்டாவது குழந்தையை லசித் மலிங்கா எதிர்பார்க்கும் நிலையில் குழந்தை பிறக்கும் காலத்தில் தனது மனைவியுடன் இருப்பதற்கு லசித் மலிங்க விரும்புகிறார்.

இதன் காரணமாக இலங்கையின் சிம்பாப்வே தொடரிலிருந்தும், மும்பை இந்தியன்ஸ் சார்பான சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரிலிருந்தும் அவர் விடுப்புக் கோரியிருந்தார்.

சிம்பாவே தொடரில் பங்குபற்றாமல் விடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய அறிவித்திருந்தார். சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கான மும்பை இண்டியன்ஸ் குழாமிலும் லசித் மலிங்க இடம்பெறவில்லை.

அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் பின்னர் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ரிக்கி பொண்டிங்கும் இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. இக்குழாமின் தலைவராக ரோகித் சர்மா செயற்படவுள்ளார்.

3 கோடி சம்பளம் கேட்கவில்லை : விமல்!!

vimal

பசங்க படம் மூலம் அறிமுகமான விமல் தற்போது முன்னணி நடிகராகியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்கள் ஹிட்டாயின. தற்போது தேசிங்குராஜாவும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது.

இதனால் சம்பளத்தை 3 கோடி வரை உயர்த்திவிட்டதாக செய்திகள் பரவி உள்ளன. தேசிங்குராஜா படக்குழுவினர் சார்பில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விமலிடம் 3 கோடி சம்பளம் கேட்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விமல் அதிகம் சம்பளம் கேட்டு நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. கதையை பொறுத்தே சம்பளம் கிடைக்கிறது. நல்ல கதையாக இருந்தால் கொடுப்பதை வாங்கி கொள்கிறேன். கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அதற்கேற்ற தொகையை வாங்கிக் கொள்கிறேன்.

விரலில் துண்டை போட்டு பேரம் பேசுவதுபோல் சம்பளம் பற்றி பேசுகிறார்கள். தேசிங்கு ராஜா படம் ஹிட்டாகி வெற்றிகரமாக ஓடுவது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் எழில் முழு நீள காமெடி படமாக சிறப்பாக எடுத்துள்ளார். பாடல்களும் நன்றாக வந்துள்ளது என்று அவர் கூறினார்.

கழிவறையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்!!

marriage

இந்திய மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்ற சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது.

மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.

செஹோர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த புதிய சட்டமாம்.

சிறுவன் என்றால் மன்னிக்கலாமா : டுவிட்டரில் கொந்தளிக்கும் குஷ்பு!!

Kushboo_002

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனை மன்னித்தோ மறந்தோவிடலாமா? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோரே இந்த தண்டனை போதாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில் பலாத்காரத்தில் ஈடுபட்டவன் சிறுவன் என்பதால் மறந்துவிடலாமா? மன்னித்துவிடலாமா? நாம் வேண்டுமானால் மறந்துவிடலாம்? ஆனால் அவனை மன்னிக்கிற உரிமை நமக்கு கிடையாது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரால் எப்படி மறக்கவோ? மன்னிக்கவோ முடியும்? இன்னொருபுறம் இளம் பெண்ணை சீரழித்த அசாராம்பாபு இன்னமும் சுதந்திரமாக உலவ முடிகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

25 ஆண்டுகளில் மிகச் சிறந்த இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!!

rajani

கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது.

பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜனி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன.

ஒன்லைனில் நேரடியாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

கவர்ச்சியாக நடிப்பேன் : தலைவா நாயகி!!

thalaiva

விஜயுடன் தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் ராகிணி. இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன என்று ராகிணி சொல்கிறார்.

தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். படத்தை பார்த்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இப்படத்தில் நான் நடித்த நிறைய சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன.

படம் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. கதைக்கேற்ற கவர்ச்சி அவசியமானது. எனவே, படங்களில் கவர்ச்சியாகவும் நடிப்பேன். தமிழ், தெலுங்கு மொழிகளை கற்று வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன் என்று ராகிணி கூறினார்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடவிருக்கும் சச்சின், டிராவிட்!!

sachin

சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர் வருகிற 21ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு ஐ.பி.எல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டெண்டுல்கரை சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுமாறு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது.

இந்த நிலையில் மும்பை இண்டியன்ஸ் அணியில் டெண்டுல்கர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் இந்த சம்பியன்ஸ் லீக் போட்டியுடன் விடைபெறுவதாக தெரிவித்து இருந்த டிராவிட்டின் பெயர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறது. இதனால் இருவரும் இந்த போட்டியில் விளையாடுவார்கள்.

கற்பழிப்பு குற்றங்களுக்கு என்படங்கள் காரணமா : பூனம் பாண்டே!!

Poonam-Pandey

கற்பழிப்பு குற்றங்களுக்கு இன்டர்நெட்டுகளில் பரவி கிடக்கும் இந்தி நடிகை பூனம் பாண்டேயின் ஆபாச படங்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

சமீபகாலமாக நாடு முழுவதும் கற்பழிப்புகள் பெருகி வருகின்றன. கடுமையான சட்டங்கள் மூலமும் இவற்றை தடுக்க முடியவில்லை. பூனம் பாண்டேயின் படங்களை பார்த்தே இளைஞர்கள் வழி தவறுகிறார்கள் என்று வட இந்தியா முழுவதும் பேச்சு நிலவுகிறது.

பூனம் பாண்டே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் மைதானத்துக்குள் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவிப்பு வெளியிட்டவர்.

படங்களில் ஆபாசமாக நடித்தும், மொடலிங்கில் போஸ் கொடுத்தும் வருகிறார். இந்திய நடிகைகள் எவரும் இவர் போல் எல்லை மீறவில்லை. இன்டர்நெட்டில் பூனம் பாண்டே பெயரை அடித்தாலே அவருடைய ஆபாச படங்கள் கொட்டுகின்றன.

இதுகுறித்து பூனம் பாண்டேவிடம் கேட்டபோது ஆவேசபட்டார். அவர் கூறியதாவது..

பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்களுக்கு என் படங்கள்தான் காரணம் என சொல்வதை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. நான் சினிமாவுக்கு வரும்முன் கற்பழிப்புகளே நடக்கவில்லையா.

பெண்களின் ஆபாச படங்களை பார்த்துதான் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையல்ல. நான் நிர்வாண போஸ் கொடுத்தது இல்லை. இன்டர்நெட்டில் வெளியான என்னுடைய ஆபாச படங்கள் போலியானவை என்று அவர் கூறினார்.

நெல்சன் மண்டேலா வீடு திரும்பியதாக வெளியான தகவல் வதந்தி!!

46664 Concert: In Celebration Of Nelson Mandela's Life - Performance

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா குணமடைந்ததை அடுத்து சனிக்கிழமை வீடு திரும்பியதாக வெளியான தகவல் தவறானது என்று அதிபர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

தென் ஆபிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த கிராமமான குனு வில் ஓய்வெடுத்து வந்தார்.

95 வயதாகும் நெல்சன் மண்டேலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசக் கோளாறு, கடுமையான நுரையீரல் நோய் தொற்றின் காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் திகதி பிரட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலேயே இருந்துவந்த அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனது 95வது பிறந்த நாளையும் ஆஸ்பத்திரியிலேயே கொண்டாடிய நெல்சன் மண்டேலா சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் இன்று வீடு திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டன.

அவர் டிஸ்சார்ஜ் ஆகும் செய்தி கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில், இதுதொடர்பாக தென் ஆபிரிக்க அதிபர் மாளிகை இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தி தவறான செய்தியாகும் என தெரிவித்துள்ளது.

27 ஆண்டுகள் சிறை தென் ஆபிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும் : பாலாஜி சக்திவேல்!!

balaji

விஜய் சேதுபதி, நந்திதா, ஸ்வாதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த், தேவயானி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்த அனைவரும் படத்தை வாழ்த்தி பேசினார்கள். விழாவில் காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது..

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியை பற்றி சிலர் பேசும்பொழுது, அவர் சரியான இயக்குனர்களை தேர்வு செய்கிறார். மேலும், ஸ்கிரிப்டை முழுவதும் படித்து அதில் ஆட்சேபனை இருந்தால் உடனே அதை பற்றி இயக்குனரிடம் நேரடியாக பேசுகிறார். அவர் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னணிக்கு வந்தவர். அதனால் அவரது கேரியரை சரியான திசையில் கொண்டு செல்கிறார். விஜய்சேதுபதியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

கவுண்டி போட்டியில் சதமடித்த கம்பீர்!!

gautam-gambhir2

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டியில் போமின்றி தவித்த இந்திய வீரர் கம்பீர் சதம் அடித்து எழுச்சி கண்டார்.

மோசமான போம் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல் தர போட்டி + இரண்டு ஏ பிரிவு போட்டி) ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

அதிகபட்சமாக நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் 31 ஓட்டங்களும், டெர்பிஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் 21 ஓட்டங்களும் எடுத்தார்.

சமீபத்தில் முடிந்த லன்காஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் வெறும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கம்பீர், பிரிஸ்டோல் நகரில் நடக்கும் கிளவ்சஸ்டர்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியின் முதல் இன்னிங்சில் டக்-அவுட் ஆனார்.

நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாட்டத்தில் எழுச்சி கண்ட கம்பீர் கவுன்டி போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தவிர இது முதல் தர போட்டியில் இவரது 34வது சதமாகும், பொறுப்பாக ஆடிய இவர் 149 பந்தில் 106 ஓட்டங்கள்(ஒரு சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார்.

நவி.பிள்ளையின் கருத்துக்களை இலங்கை நிராகரிப்பு..!

naviஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான், என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

´நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக்கூறியிருக்கிறார். இதனைவிட வேறுவகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையாவது கேட்பதற்கு உரிமை கிடைத்திருக்கிறது´ என்றார் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

´இங்கு தேர்தல்கள் நடக்கின்றன. அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை. பலமான பாராளுமன்றம் இருக்கிறது. பெரும்பான்மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது எல்லாம் இருக்கிறது´ என்று தெரிவித்த இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு தான் என்றும் கூறினார்.

´பயங்கரவாதத்தின் மூலம் இந்த நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. அவை தோல்வியடைந்தாலும் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பார்க்கிறார்கள். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது´ என்றும் கூறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

யுத்த காலத்தில் சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொண்டதோ அதேபோலவே இப்போதும் பதில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார்.

´விடுதலைப் புலிகளுடனான போரின்போது சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நெருக்குவாரங்களை கொடுத்தன. முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் சர்வதேச மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் நாட்டில் இன்னும் யுத்தம் முடிந்திருக்காது.இனிவரும் சவால்களையும் அதேபோலவே எதிர்கொள்வோம்´ என்றார் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றி பேசவல்ல அதிகாரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

(Source: BBC)

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் சோதனை இல்லை!!

omanth

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின் போது வடக்கில் இருந்த மக்கள் தெற்கிற்கு செல்வதற்கும் தெற்கில் உள்வர்கள் வடக்கிற்கு செல்வதற்கும் பிரதான பரிசோதனை மையமாக அமைக்கப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் (31) நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வன்னி கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவத்திருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும் எனவும் போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் வன்னி கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை சோதனைச் சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டதாக தெரிவித்ததுடன் இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 15377 உள்ளுர் பயணிகளும் 198 வெளிநாட்டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சொன்றுவந்ததாகவும் தெரிவத்தார்.

இதேவேளை வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் வடக்கில் இருந்து தெற்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 17,164 உள்ளுர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்வதாகவும் தெரிவத்திருந்தார்.

இத்துடன் இச் சோதனைச்சாவடியில் யுத்த காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள், வயர்கள், தொலை நோக்கிகள், திசை காட்டிகள், சிறிய ரக பற்றரிகள், இராணுவ பயன்பாட்டிற்கான பொருட்களை கொண்டு செல்வதை கடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.

இந் நிலையில் சுமார் 15 வருடங்களாக செயற்பட்டு வந்த இச் சோதனைச்சாவடி இன்றில் இருந்து பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

logo8

 

*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

*மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

*காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

*ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்கொடுக்கும்.

*உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

*டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

*வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

*ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

*பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

*பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலைமட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

*கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

*கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

*ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

*சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

*ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கல்கட்டா நகரம்.

*நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

*ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

*நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது!!

old man

5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர்.

சந்தேகப்பட்டு விசாரித்த போது பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும் பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.

மேலும் சிறுமிகளை விசாரித்தபோதுதான் அறுபது வயதைக் கடந்த 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ் வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர்.

அதில் தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய் திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர்.

தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜுடிஷியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி, தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.