
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காரில் வந்த மூன்று தற்கொலை தாக்குதல்தாரிகள், தூதரகத்துக்கு அரு கேயுள்ள சோதனைச் சாவடியின் அருகாமையில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அருகேயுள்ள மசூதிக்கு வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேநேரம் இந்திய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக நான்கர்ஹார் மாகாண காவல்துறைத் துணைத் தலைவர் மவுசம் கான் ஹசிம் கூறியுள்ளார்.
தனது தூதரகத்தில் வேலை செய்யும் அனைவரும் பத்திரமாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் இந்திய அலுவலகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டு காபூலில் இருக்கும் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது.
-BBC தமிழ்-












வன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக “2013-என் சமாதான” (N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பாலின் கால் சீட் டைரி தற்போது பக்கம் இல்லாமல் நிரம்பி வழிகிறது.
முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், இம்மாதம், 4ம் திகதி, இந்த தூதரகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.