சிரியா விவகாரம்: மத்திய தரைக்கடலுக்கு விரையும் ரஷிய போர்க் கப்பல்கள்!!

சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன.

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன.

1

இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

2

இஸ்ரேல் Vs ஈரான்

இதேபோல் இஸ்ரேலும் தமது எல்லையில் ராணுவ துருப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. “சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் தலையிடாது.

அதே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதற்காகவே எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது. குறிப்பாக ஈரானை நோக்கி தனது ஏவுகணைகளை இஸ்ரேல் தயார் நிலையில் வைத்துள்ளது.

வவுனியாவில் மக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் : வியாபாரிகள் எதிர்ப்பு!

vavuniya

வவுனியா நவீன சந்தையில் மக்களின் நடமாட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படக்கூடிய வகையிலும் சுகாதார சீர்கேடான முறையிலும் வியாபரத்தில் ஈடுபட்டவர்களின் பொருட்களை நேற்று காலை (30.8) வவுனியா நகரசபையினர் அகற்றியபோது நவீன சந்தை வியாபாரிகள் கடைகளை பூட்டி தமது எதிர்ப்பை தெரிவத்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில்

நவீன சந்தைப்பகுதியியல் நடை பாதையில் மரக்கறிகள் வைத்து விற்கப்படுவதாக தெரிவித்த நகரசபையினர் நாம் கடைகளை திறப்பதற்கு முன்னராக வந்து எமது பொருட்களை நகரசபையின் உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்று விட்டனர். எனவே அவ்வாறான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் இச் செயற்பாட்டில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தபோது..

வவுனியா நவீன சந்தைப்பகுதியில் வர்த்தக நிலையங்களை வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வெளியில் நடை பாதையில் வைத்து வியாபாரத்தல் ஈடுபடுவதனால் பொது மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அவர்கள் மரக்கறிகளை அவ்விடத்தில் வைத்து துப்பரவு செய்து வருவதனாலும் கழிவுப்பொருட்கள் தேங்கி நின்று சுகாதார சீர் கேடுகள் ஏற்படுகின்றது.

அத்துடன் எமது நகரசபை சுகாதார தொழிலாளிகள் நவீன சந்தைத் தொகுதியை துப்பரவு செய்யமுடியாத வகையில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் ஒவ்வொரு வர்த்தக நிலையத்தினரும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளமையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே நாம் பல தடவை இவ் வர்த்தகர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியிருந்ததுடன் நேற்றைய தினமும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என அறிவுறுத்தல் வழங்கினோம்.
எனினும் அவர்கள் இவ் அறிவுறுத்தலை செவிசாய்க்காததால் நாம் அதிகாலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் உள்ள பொருட்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது என தெரிவித்தார்.

இதேவேளை வியபாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இம் முறை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் இன்றில் இருந்து வர்த்தக நிலையத்திற்கு முன்னால் மஞ்சல் நிறத்திலான கோடு கீறப்பட்டு அதற்குள் வைத்தே வியாபாரம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியதுடன் ஒரு மாத காலத்தினுள் வர்த்தக நிலையத்திற்குள் மாத்திரம் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவத்திருந்ததை வர்த்கர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டு நவீன சந்தை தெகுதி திறக்கப்பட்டு வியபாரம் மேற்கொள்ளப்பட்டது.

மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறை!!

jail

பெற்ற மகள்களை பாலியலில் ஈடுபடுத்திய புதுவை தயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் தான் பெற்ற மகள்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய ஜெயஸ்ரீ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டு கால சிறை தண்டனையை 2 முறை அனுபவிக்க வேண்டும்.

மேலும் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையை 3 முறை அனுபவிக்க வேண்டும். மொத்தமுள்ள 41 ஆண்டுகால சிறை தண்டனையையும் 10 ஆண்டுக்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும், புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்த், கர்ணன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!!

us-war

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது.

இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஐ.நா குழு முகாமிட்டு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும் அமெரிக்கா முடிவு செய்திருந்தது. தற்போது ஐ.நா ஆய்வுக் குழு சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதால் அமெரிக்கா தாக்குதல் நடத்த ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சியில் மோட்டார் வண்டி கொள்ளையிட்ட இருவர் கைது!!

arrest1

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 106 000 பெறுமதியான மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட மோட்டார் வண்டியும் இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நேற்று (30) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்!!

siva

கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா தியேட்டரில் இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பாடல் சி.டி.யை சிவகார்த்திகேயன் வெளியிட பாபா தியேட்டர் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பவிழம் ஜூவல்லரி லிஜோ சுங்கத், வாசன், தாடி பாலு, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசியதாவது..

சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது. இந்த மக்களின் அன்பும் பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். செப்டம்பர் 6ம் திகதி இந்த படம் ரிலீசாகிறது. படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100வது நாளில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று அவர் கூறினார்.

சிவ கார்த்திகேயன் பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்று கூறினர். அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன் என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. நல்ல படம் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சக நீதிபதியை அடித்து நொருக்கிய நீதிபதி!!

judge-fight1

மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார். மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மைக்கேல் ஏஞ்சல் பால்கன். இதே நீதிமன்றத்தில் பணிபுரியும் மற்றொரு நீதிபதி ரூபன் ஜாசோ. முக்கிய வழக்கு ஒன்றை, இந்த இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர்.

விசாரணை நேரத்தில் ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை. முதலில் ஜாசோவை முட்டாள் என திட்டினார். அதை தொடர்ந்து, ஜாசோ மீது பாய்ந்து, அவரை நைய புடைத்தார் மைக்கேல்.

நீதிமன்றத்தில் அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

முக்கிய நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மைக்கேல் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

திருமண நாளில் தனுசுக்கு விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்!!

danush

டி.வி. நிகழ்ச்சிகள் நடத்திய சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பின் மனங்கொத்தி பறவை, 3, எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற படங்களில் நடித்து வருகிறார். எதிர் நீச்சல் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இதன்மூலம் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர். சிவகார்த்திகேயன் என் தம்பி என்று தனுஷ் சொல்லும் அளவிற்கு இவர்களது நட்பு பலமாக இருந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனது திருமண நாளை கொண்டாடினார். இதில் தனுசை சிறப்பு விருந்தினராக அழைத்து விருந்து வைத்து அசத்தினார்.

விருந்து குறித்து தனுஷ் இணைய தள செய்தியி்ல் சிவகார்த்திகேயன்- ஆர்த்திக்கு திருமண வாழ்த்துக்கள். விருந்து வழங்கியதற்கு நன்றி என்று எழுதியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகை தேவயானி போட்டி!!

devayani

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ம் திகதி நடக்கிறது. இதில் மூன்று அணிகள் மோதுகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி என்ற பெயரில் களம் இறங்கியுள்ளவர்களின் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே.ஆர். போட்டியிடுகிறார்.

இதே அணியில் துணை தலைவர்கள் பதவிக்கு டி.ஜி. தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, ஞானவேல் ராஜா ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதா கிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை தேவயானி, ஏ.எல். அழகப்பன், சோழ பொன்னுரங்கம், கமீலா நாசர், எடிட்டர் மோகன், கே.முருகன், கே.ராஜன், டி.டி. ராஜா, சவுந்திரபாண்டியன், விஜயகுமார், கே.பாலு, சித்ராலட்சுமணன், எஸ்.எஸ். துரைராஜ், காஜாமைதீன், எச். முரளி, பி.மதன், வேதா, பிரமிட் நடராஜன், ஜாகுவார் தங்கம், விஜயமுரளி, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்னொரு அணியான நன்மை செய்யும் நல்லோர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கலைப்புலி தாணுவும், துணை தலைவர் பதவிக்கு பவித்ரன், கதிரேசன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு சங்கிலி முருகன், தேனப்பனும் பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அமுதா துரைராஜ், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், ஆர்.மாதேஷ், கிரிதிலால் நாக்பால் ராதா ரவி, மனோஜ்குமார், தங்கர்பச்சான், கபார், கருணாஸ், ராயல் மூவீஸ் தாகா, கோவை தம்பி, ஜி.வி. பிலிம்ஸ் வெங்கடரமணி, சந்திரபிரகாஷ் ஜெயின், ஜெமினி, ராகவா, சி.பாஸ்கர், தங்கராஜ், பழனிவேல், ரிஷிராஜ், பாலாஜி, என்.ஜி. முருகேஷ்.

மூன்றாவது அணியில் செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன் துணை தலைவர் பதவிக்கு பட்டியல் சேகர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ், மணி, அரிராஜன், டைரக்டர் திருமலை, மன்னன் போன்றோர் போட்டியிடுகின்றனர்.

ஜீ.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக்கூட்டம் இசை அடுத்த மாதம் வெளியீடு!!

gvp

வெயில் தொடங்கி தற்போது ராஜா ராணி வரை இசையமைத்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

மதயானைக்கூட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாலுமகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் ஆடுகளம் படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். சுந்தரபாண்டியன் படத்திற்கு இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், செய்முறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஒக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 30 வீடுகள் தீக்கிரை!!

fire

கொழும்பு15 மட்டக்குளிய பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ வித்தில் சுமார் 30 பலகை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளிய கெமுனுபுர பகுதியில் சேரிபுறத்திலுள்ள வீடுகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயை தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியிலுள்ள சனசமுக நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முகத்துவாரம் பொலிஸார் இத்தீவிபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

சென்னையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் கைது!

arrest1

தமிழ்நாடு கடலூரில் வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர்.

இத்திட்டத்தை செயல்படுத்த முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பி வந்தனர். இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து சோதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர்.

சிவனேசன் கோபி இருவரும் தப்பிவிட்டனர். இவர்களை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்!!

chambian

சம்பியன்ஸ் லீக் டT20 தொடரில் மைக்கல் ஹசி, ஷேன் வட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 17ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை நடக்கிறது.

இதில், 6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா (3), அவுஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), மேற்கிந்திய தீவுகளைச் (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

ஐதராபாத்தில் செப்டம்பர் 17-20ம் திகதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

பிரதான சுற்றில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஏ பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 21ம் திகதி நடக்கவுள்ள ஏ பிரிவுக்கான லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் உத்தேச அணியை அறிவித்தன. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில் 11 பேர் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.

இலங்கையின் சங்கக்கார (கந்துரடமரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரட மரோன்ஸ்), அவுஸ்திரேலியாவின் பிராட் ஹக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும் உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை தங்களது அணிக்காக விளையாட தெரிவு செய்யும் இந்திய அணிகள் சம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு வீரருக்கு தலா ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

மேற்கிந்திய தீவுகள்: டுவைன் பிராவோ (சென்னை), கெவன் கூப்பர் (ராஜஸ்தான்), பொலாட் (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மோர்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

அவுஸ்திரேலியா: நதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கல் ஹசி (சென்னை), மிட்சல் ஜோன்சன் (மும்பை), ஷேன் வட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசார பெரேரா (ஐதராபாத்).

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார்.

கடந்த தொடரில் மும்பை அணியின் அணித்தலைவராக இருந்த அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் 7 போட்டியில் 41 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.

கவுண்டியில் டக் அவுட்டான கம்பீர் : சதம் அடித்த சாவ்லா!!

chawla_county_001

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் டெல்லியை சேர்ந்த தொடக்க வீரர் கவுதம் கம்பீர் இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுன்டி போட்டியில் எசக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் (இரண்டு முதல் தர போட்டி + இரண்டு ஏ பிரிவு போட்டி) ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

அதிகபட்சமாக நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் 31 ஓட்டங்களும், டெர்பிஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் 21 ஓட்டங்களும் எடுத்தார்.

சமீபத்தில் முடிந்த லன்காஷயர் அணிக்கெதிரான ஏ பிரிவு போட்டியில் வெறும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இவர், பிரிஸ்டோல் நகரில் நடக்கும் கிளவ்சஸ்டர்ஷயர் அணிக்கெதிரான முதல் தர போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் சமர்சட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா, பேட்டிங்கில் அசத்தி வருகிறார். மிடில்சக்ஸ் அணிக்கெதிராக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் தர போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தி வரும் பியுஸ் சாவ்லா சதம் அடித்தார்.

ஒருகட்டத்தில் சாமர்சட் அணி, 211 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எட்டாவது வீரராக களமிறங்கிய பியுஸ் சாவ்லா (112 ஓட்டங்கள்), சதம் அடித்ததன் மூலம் 400 ஓட்டங்களை தாண்டியது.

பியுஸ் சாவ்லா கூறுகையில், கடந்த முறை கவுன்டி போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல இம்முறையும் நடக்கும் என்று நம்புகிறேன்.

இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தெரிவாளர்களை என் மீது திசைதிருப்ப விரும்புகிறேன். விரைவில், இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிக்கும் திரிஷாவுக்கு சீமா விருது!!

trisha

எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. அதன்பின் அவர் நடித்த கில்லி, சாமி படங்கள் மிக்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரபலமானார். தற்போது அவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படமும் வெற்றி பெற்றது. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்கள் கொடுத்தார்.

சினிமா 10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிக்கும் திரிஷாவுக்கு தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சீமா) வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் வருகிற செப்.12 மற்றும் 13ம் திகதி நடக்க இருக்கிறது. இந்த விருது குறித்து திரிஷா தனது டுவிட்டர் செய்தியில் என்மீது மரியாதை வைத்து இந்த விருதை வழங்குவதற்காக சீமா விற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என எழுதியுள்ளார். இந்த விழாவில் ஆர்யா, ஸ்ரேயா, பொலிவுட் நடிகர் சோனு சூட், ராணா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள வேண்டும்: போலந்து பெண்ணின் ஆசை!!

poland_woman_002

போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி செய்து வருகிறாராம்.
அவ்வாறு செல்கையில் 1 லட்சம் ஆண்களுடன் தலா 20 நிமிடங்கள் உறவு கொள்ள வேண்டுமாம்.

இதுகுறித்து பேஸ்புக் இணையத்தளத்தில் நான் போலந்து ஆண்களை விரும்புகிறேன். ஐரோப்பா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

செக்ஸில் அதிக ஈடுபாடு உண்டு சுற்றுப்பயணத்தில் சுமார் 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும். எனக்கு ஆண்களையும் அவர்கள் மூலம் கிடைக்கும் இன்பமும் மிகவும் பிடிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் போலந்தில் செக்ஸ் குறித்து பேசுவது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. தன்னுடைய கனவுகளை பூர்த்தி செய்ய நினைக்கும் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் விபச்சாரம் செய்பவர் போல் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இவர் இதுவரையிலும் 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளாராம்.