ஜேர்மனியில் பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கிவி என்ற இடத்தில் உள்ள பெமன் அமைப்பின் தலைமையகத்தை பொலிசார் சோதனையிட்டதில் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்லினில் உள்ள உக்ரைன் தூதரகம் முன்னால் பெண்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர்களது உடம்பில் “எனது உடம்பே எனக்கு ஆயுதம், எனது மார்பகமே வெடிகுண்டுகள்” போன்ற வார்த்தைகளை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நிறுவனர் ஜனா ராமணான்டி கூறுகையில் எங்கள் தலைமையகத்தில் எடுக்கப்பட்ட ஆயுதங்களானது பொலிசாரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.
மேலும் நாங்கள் திட்டமிட்டு இந்த போராட்டத்தினை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த குழுவை சேர்ந்தவர்களில் 3 நபர்கள் கடந்த மாதம் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை.
மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் முடிவு செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் கமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராணுவ அமைச்சர் சக் ஹகெல் ஒவ்வொரு நாட்டுக்கும் சில விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளது. அந்நாடுகளின் பொறுப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிரியா மக்களின் மீது கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட இரசாயன குண்டு தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மீண்டும் சரிப்படுத்த முடியாத தீங்கான நடவடிக்கை ஆகும்.
சிரியா மக்களுக்கு இந்த மிகப்பெரிய கொடுமையை இழைத்த செயல் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது. பஷர் அல் அசாத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இங்கிலாந்து பங்கேற்காவிட்டாலும் இது தொடர்பாக நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் தயாராக உள்ளது.
சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் தயாராக உள்ளபோதிலும், எங்களது தலையீட்டை நியாயப்படுத்துவதற்குள தேவையான சூழ்நிலை உருவாகும் வரை பிரான்ஸ் காத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.
தலைவா, சிங்கம்-2 ஆகிய படங்களைவிட இந்த படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜீத்தின் திரையுலக பயணத்திலேயே ஆரம்பம் படத்தின் தியேட்டர் உரிமைதான் அதிக விலைக்கு சென்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது.
நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்தன என்ற கருத்துக்கு புதிய ஆராய்ச்சிகள் ஆதரவளிக்கின்றன.
உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகளான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., மற்றும் புரோட்டீன்கள் எப்படி ஒன்று சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியின் விவரங்களை பேராசிரியர் ஸ்டீவன் பென்னெர் எடுத்துரைத்தார்.
உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணமான ஆர்.என்.ஏ வை உருவாக்குவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் நிறைந்துள்ளன. இது பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.
இதனால், செவ்வாய் கிரகத்தில் ஆரம்ப காலத்தில் உருவான உயிர்கள் பின்னர் பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருத்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் அவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் பரபரப்பான செய்தி வெளியானது.
இந்த செய்தி குறித்து அறிந்ததும் நடிகை அஞ்சலி அதிர்ச்சி அடைந்துவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
கற்றது தமிழ் தொடங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. சமீபத்தில் நான் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இனிவரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய மின்னஞ்சல் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வெற்றிபெற்ற இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து கொண்டாடினர். அப்போது ஜொலியாக இருந்ததுடன் பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், இங்கிலாந்து வீரர்களின் செயலை படித்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து.
எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான் வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது. எனவே இதற்கு தண்டனை தேவை என்று நான் கருதவில்லை. ஏதோ ஜொலியில் சில்மிஷமாக நடந்து கொண்டு விட்டனர்.
நான் கூட மைதானத்தில் ஒருமுறை சட்டையைக் கழற்றி வெற்றியைக் கொண்டாடினேன். அப்போது எல்லாமே கட்டுக்குள்தான் இருந்தது.
அதேபோல தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்காவில் வீழ்த்தியபோதும் டிரஸ்ஸிங் ரூமில் எங்களது வீரர்கள் அதகளப்படுத்தினர். ஆனால் உள்ளேதான் அது நடந்தது.
நமது வீரர்களில் சிலர் மது அருந்தினர். சிலர் பெப்சி மட்டும் குடித்தனர். சிலர் குடிக்கவே இல்லை. கொண்டாட்டம் ,உற்சாகம், ஜொலி இருந்தது.
ஆனால் தப்பாக எதுவும் நடக்கவில்லை. காரணம், அப்போது அணித்தலைவராக இருந்தவர் டிராவிட். அளவோடு இருந்தால் பிரச்சினை வராது என்று தெரிவித்துள்ளார்.
சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள் 3 வினாடிகளிலிருந்து பறந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது அல்ப்ஸ் மலையிலிருந்து 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்துள்ளார்.
இது குறித்து கெர்பர் கூறுகையில், இது என்னுடைய நீண்ட நாள் ஆசையாகும். மேலும் நான் பறப்பதற்கு முன்னதாக பனி மற்றும் காற்று நிலை குறித்து அறிந்து கொண்டேன்.
அதன் பின்பு பறக்கத்தொடங்கினேன். நான் கீழே இறங்கிய பின்பு என்னுடைய பரசூட்டானது விரிந்து கொண்டது. இந்த சாதனையை எப்படி செய்தேன் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அல்ப்ஸ் மலையில் சாதனையில் ஈடுபட்ட 30 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும், சமீபத்தில் சண்டைப் பயிற்சியாளரான மார்க் சட்டன் சாகசத்தில் ஈடுபடும்போது மலைப்பகுதியில் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த மலேசிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார்.
அவருக்கு பேஸ்புக் மூலம் கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி போன் மூலமும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவே நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து அந்த பெண் கொச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.
பின்னர் திரூருக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தன்னுடைய காதலன் பெயரை கூறி விசாரித்தார்.
இதுகுறித்த தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர் ரவி சந்தோஷ் தலைமையிலான பொலிசார் இளம்பெண்ணை திரூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட வாலிபர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் கேரளாவில் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மலேசிய நாட்டு இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் படுத்து கிடந்த பெண் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை அருகே இரு நாட்களுக்கு முன் எல்.சி ரயில்வே கேட் 26ல் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.
தண்டவாளத்தை ஒட்டி வசிப்போர் அவரை பார்த்து விட்டு முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து விரட்டி விட்டனர். ஆனாலும் சற்று நேரத்தில் மீண்டும் அங்கு வந்த பெண் மாலை 3 மணிக்கு தாம்பரம் மார்க்கமான தண்டவாளத்தில் நின்றிருந்தார்.
அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை பார்த்தும் அந்த பெண் தண்டவாளத்திலேயே நின்றிருந்தார்.
ரயில் அருகே வந்ததும் திடீரென தண்டவாளத்தில் படுத்தார் அருகில் இருந்தவர்கள் குறித்த பெண்ணின் நடவடிக்கையை பார்த்து அலறினர்.
பின் ரயில் அந்த இடத்தை கடந்து சென்றதும் தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் எவ்வித காயமும் இன்றி எழுந்து எதுவும் நடக்காதது போல் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த கேட் கீப்பர் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் அந்த பெண் யார் என்பது தெரியவில்லை தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நின்றிருக்கலம்.
ரயில் அருகே வந்ததும் மனம் மாறி தண்டவாளத்தில் படுத்துவிட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இயக்குனர் சசிகுமார். இவர் தற்போது பிரம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த சாக்ரடீஸ் இப்படத்தை இயக்குகிறார். இதில் சந்தானம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
நான் ஈ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தன் மூலம் கன்னட நடிகர் சுதீப் தமிழில் பேசப்பட்டார். இவர் தற்போது பிரம்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். கோயம்புத்தூர் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 3வது வருடமாக வேல் தாங்கிய நடைபாரயாத்திரை இன்று ஆரம்பமாகியது.
முன்னதாக வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் இடம்பெற்று கந்தனுடைய வேல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளச் செய்து அறநெறிச் செல்வி சாமி அம்மா தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் அமைதி வேண்டியும் சாந்தி சமாதானம் வேண்டியும் இன்று ஆரம்பமாகிய இந்த நடைபாதயாத்திரை ஏ9 வீதிவழியாகச் சென்று அவ் வீதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்து எதிர்வரும் நான்காம் திகதி நல்லூர் ஆலயத்தில் இடமபெறும் தேர்திருவிழாவுடன் இணையும்.
ஆரம்ப நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் எஸ்.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன், தமிழ் சங்க தலைவர் தமிழருவி சிவகுமாரன் உள்ளிட்ட பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
மும்பையில் சமீபத்தில் பத்திரிகை பெண் போட்டோகிராபரை 5 பேர் கும்பல் மிரட்டி கற்பழித்தது. அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது குற்றவாளிகளில் ஒருவர் மீது பொது மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். கோடரியால் தாக்கினார்கள்.
அவர்களிடம் இருந்து போலீசார் குற்றவாளியை மீட்டு அழைத்துச் சென்றனர். என்றாலும் பொதுமக்கள் விடாமல் துரத்திச் சென்று அந்த குற்றவாளி மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.
ஸ்பெயினில் தக்காளி திருவிழாவான La Tomatina இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்பெயினில் கடந்த 1945ம் ஆண்டு முதல் வருடந்தோறும் தக்காளி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டும் வெலன்சியாவின் புனோல் நகரில் La Tomatina வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுமார் 20,000 பேர் பங்கேற்ற இந்த விழாவில் 130,000 கிலோ கிராம் எடை கொண்ட தக்காளி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதன்முறையாக இதில் பங்கேற்றவர்களுக்கு 10 யூரோக்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக பட்ச தனிநபர் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் அக்ரோன் பின்ஞ் தன்வசப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியிலேயே அவர் இச்சாதனையை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் அக்ரோன் பின்ஞ் 63 பந்துகளை எதிர்கொண்டு 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சிறப்பாக விளையாடிய அவர் 14 ஆறு ஓட்டங்களையும் 11 நான்கு ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக இருபதுக்கு இருபது போட்டிகளில், நியூசிலாந்து அணியின் வீரர் பொன்டன் மெகலம் பங்களதேஷுக்கு எதிராக கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் 58 பந்துகளுக்கு முகங்கொடுத்து 123 ஓட்டங்களை அதிக தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக பதிவு செய்திருந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது
சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டுக்கு உதவ ரஷ்யா போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன.
இதனால், சிரியாவில், தொடர்ந்து, சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியா நாட்டுக்கு ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா ராணுவம், கடந்த, 21ம் திகதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில் நச்சு புகை பரவி 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை ஐ.நா பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் சிரியா மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானத்தை பிரிட்டன், ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இது தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூனுடன், தொலைபேசியில் விவாதித்தார்.
ஐ.நா பார்வையாளர்களின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். எனினும் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. சர்வதேச விதிப்படி ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது குற்றம். இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி வருகிறோம். இதை, எதிர்க்கட்சியினர் பயன்படுத்தியிருப்பர் என்பதை, நாங்கள் நம்பவில்லை.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மேரி ஹார்ப் கூறியதாவது: சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத்தின் உத்தரவில்லாமல் ரசாயன தாக்குதல் நடந்திருக்காது. அவருடைய உத்தரவில்லாமல், இந்த தாக்குதல் நடந்திருந்தாலும் ஜனாதிபதி என்ற முறையில் ஆசாத் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஐ.நா.,பாதுகாப்பு சபையை நாடப்போவதில்லை. ஏனென்றால் சிரியாவுக்கு ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்யா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தாக்குதலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். இவ்வாறு மேரி கூறினார்.
சிரியா மீது போர் தொடுக்கப்பட்டால் வளைகுடா பகுதியில் பதற்ற நிலை ஏற்படும் எனவே இந்த தாக்குதலை தடுக்க ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க உள்ளன. எனவே சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில் ரஷ்யா தன் பங்குக்கு நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும் ஏவுகணை தாங்கிய கப்பல்களையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், சிரியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை ரஷ்யா வெளியேற்றி வருகிறது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பி தங்கள் மக்களை தாயகம் திரும்ப செய்கிறது