சிம்பாபேக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு!!

Zimbabwe-Vs-Sri-Lanka

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாபேக்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிம்பாபே கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து இப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தெரிவித்தார்.

ஒரு கையால் சுவாமி சிலை செய்யும் தன்னம்பிக்கை மனிதர்!!

silai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் இளைஞர் பாண்டி.

மானாமதுரையில் வேளார்கள் எனப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைவினை கலைஞர்களான இவர்கள் சீசனுக்கு ஏற்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வார்கள். மண்பாண்ட தொழிலாளாரான பாண்டிக்கு 21 வயதாகிறது.

ஒரு சிறு விபத்தில் ஒரு கையை பறிகொடுத்தார். பள்ளியில் சிறுவர்கள் கேலி செய்யவே படிப்பை பாதியில் நிறுத்தினார். குடும்பத் தொழிலான மண் பாண்ட தொழிலையே தந்தை உதவியுடன் கற்றுக் கொண்டார். பானைகள், சிறுசிறு சுவாமி சிலைகளை செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு அடி முதல் 6 அடி விநாயகர் சிலை வரை செய்கிறார். சுவாமி சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது கிடையாது என்பது இவரின் தனிச்சிறப்பு.

ஓடர் கொடுப்பவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்கிறார். இவருக்கு பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் இருந்துதான் அதிகளவில் ஓடர் வருகிறது. விநாயகர் சிலை பணி குறித்து பாண்டி கூறும்போது சுந்தரநடப்பு, செய்களத்தூர் உள்ளிட்ட கிராம கண்மாய்களில் மண் அள்ளி வந்து சிலைகள் செய்கிறோம்.

இந்த மண்ணில்தான் இரும்புச் சத்து உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு மணல் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆண்டாண்டு காலமாக நாங்கள் கண்மாய்களில் மணல் எடுத்து கைவினை பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். தற்போது தடையால் மண் கிடைப்பது சிரமமாகி விட்டது.

இதனால் ஒரு மாட்டு வண்டி மணல் 75ரூபாயில் இருந்து தடைமயால் 400ரூபாயாக உயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் அரசே மேல்முறையீடு செய்து ஒராண்டிற்கு தடை வாங்கியுள்ளது. அதுபோல தமிழக அரசும் மனது வைத்து எங்களுக்கு கண்மாய்களில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்!!

ltte

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கெளதமன். தமிழ் உணர்வாளராகிய கெளதம் இயக்கப் போகும் புதிய படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ. கெளதமன்  கூறுகையில், பிரபாகரனின் வீர வரலாற்றை விவரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.

தலைவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் துளசி இலைகள்!!

thulasi

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.
துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம். சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.
துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

நடுக்கடலில் நடந்த நான்தாண்டா பட ஓடியோ வெளியீட்டு விழா!!

naanthaandaபாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. இவர் தற்போது தமிழில் நான்தாண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகி வருகிறது. தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனைகா சோதி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஓடியோவை கடந்த 26ம் திகதி சென்னை துறைமுகத்தில் விசைப்படகில் வைத்து வெளியிட்டனர். தமிழ் சினிமாவில் முதன்முறையாக விசைப்படகில் வைத்து பாடல் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ராம்கோபால் வர்மா, சர்வானந்த், சுப்பு பஞ்சு, அனைகா போன்றோர் கலந்து கொண்டனர். நான்தாண்டா பற்றி ராம்கோபால்வர்மா கூறுகையில் இது ஒரு வித்தியாசமான கிரைம் படம். இது அனைத்து வகை ரசிர்களையும் கவரும் என்றார்.

கிளிநொச்சிக்கான ரயில் சேவையின் முன்னோட்டம்!!

train

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் செல்லும் ரயில் பாதையில் வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி முதல் ரயில் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு முன்னோடியாக வியாழனன்று ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிக்கு பரீட்சார்த்த ரயில் சேவை நடைபெற்றது. இந்த பரீட்சார்த்த ரயில் பயணத்தை இலங்கையின் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன, இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி உள்ளிட்ட இலங்கை இந்திய உயரதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டார்கள்.

தற்போது கொழும்பில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன.ஓமந்தையில் இருந்து 63 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சிக்கு 23 வருடங்களின் பின்னர் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடபகுதியில் ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணம் செய்யத்தக்க வகையில் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதாக இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் காரணமாக வவுனியாவில் இருந்து வடக்கே யாழ்ப்பாணம் வழியாக காங்கேசன்துறை வலையிலான ரயில் பாதையும், மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில்பாதையும் முற்றாக சேதமடைந்தன.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இலங்கை இந்திய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் வடபகுதிக்கான ரயில் பாதைகளை மறுசீரமைக்கும் பணிகளை இர்கோன் இன்டர்னேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பில் இருந்து மதவாச்சி ஊடாக மடுறோட் வரையில் தற்போது ரயில் சேவை நடைபெறுகின்றது. மடுறோட்டில் இருந்து தலைமன்னார் வரையில் ரயில் சேவையை நீடிப்பதற்கான ரயில் பாதை நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

1 ரூபாய் முன்பணம் வாங்கி நடித்த அனன்யா!!

anaina

மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம் இரவும் பகலும். பல வருடங்களுக்குப்பின் இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பாலா ஸ்ரீராம் இயக்குகிறார். தீனா இசையமைக்கிறார்.

இப்படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி தயாரிக்கிறார். பகலில் கல்லூரி மாணவராகவும் இரவில் திருடனாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலும் எதிர்பாராத சம்பவங்களை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகின்றனர்.

படம் குறித்து இயக்குனர் பாலா ஸ்ரீராம் கூறும்போது நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச்சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறோம். அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு நடிக்க வந்தார். இந்த படமும், கதாபாத்திரமும் தன் சினிமா பயணத்தில் தனி இடத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் மகேஷ் நடித்தார் என்று அவர் கூறினார்.

நான் எப்பொழுதும் பவர்புல்தான் : பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்!!

power

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இதற்கு காரணம் எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்றதுதான்.

லத்திகா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின மூலம் பிரபலமானார். இதனால் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.

யா யா, சும்மா நச்சுனு இருக்கு, ஆர்யா சூர்யா, சங்கரின் ஐ போன்ற படங்களிலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி வந்தார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே மோசடி புகார் காரணமாக கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனால் இவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் முடங்கிப் போயின.

தற்போது இரண்டு நாள் ஜாமீனில் வந்த பவர்ஸ்டார் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்துக்கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

தமிழ் சினிமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கும். சிலருடைய சதி திட்டத்தால் நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஆனாலும் பவர்ஸ்டார் எப்பொழுதும் பவர்புல்தான். ஆர்யா சூர்யா, சும்மா நச்சுன்னு இருக்கு, யா யா போன்ற படங்களில் எனது ரோலில் நடித்து முடித்துவிட்டேன். இந்த படங்கள் என் ரசிகர்களை மிகவும் கவரும்.

எனது சொந்த படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. நான் ஜெயிலில் இருக்கும்பொது ஒருபோதும் சிறையில் இருந்ததாக உணரவில்லை. ஆசிரமத்தில் இருந்ததாக உணர்ந்தேன். அங்கே இருந்த 1400 போலீசாரும் என்னை பார்க்கும்பொழுது மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்கள் என்னுடைய ரசிகர்களாக மாறினார்கள். விரைவில் என்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டு வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கில் ராசியான நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன்!!

sruthi

ஒரு படம் வெற்றி பெறாவிட்டால் அந்த படத்தில் நடித்த நடிகை ராசியில்லாதவர் என சினிமா ஒதுக்கி வைத்திவிடுவது வழக்கம். அப்படி சில தெலுங்கு நடிகர்களின் படமும் சமீபத்தில் தொடர்ந்து தோல்வியடைந்தது.

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் காஜர் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியது. இவர்கள் இரண்டு பேரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க நடிகர்களும், தயாரிப்பு நிர்வாகமும் போட்டி போட்டன. தற்போது அந்த இடத்தை ஸ்ருதிஹாசனும் பிடித்துள்ளார்.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பவன் கல்யாணுக்கு கப்பார் சிங் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

அதேபோல் ரவி தேஜாவுடன் பலுபு என்ற படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த இரண்டு படமும் வெற்றி பெற்றதால் தெலுங்கில் ஸ்ருதிஹாசன் அதிர்ஷ்ட நடிகையாக உருவாகியுள்ளார். இதனால் படதயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர்.

கடவுச் சீட்டுகளுக்கு கைவிரல் அடையாள முறை அறிமுகம்!!

finger

கடவுச்சீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடவுச் சீட்டுக்காக கைவிரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பல நாடுகளில் கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவுச்சீட்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 679.7 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய முறை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 629.7 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூ டாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போராட்டம்!!

Ahmadabad, India: Indian jewelry industry workers hold candles

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

காணாமற்போனோரின் உறவுகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று விசேடமாகச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர் கொழும்பில் தங்கியிருக்கும் நேரத்தில் இன்று இந்தப் போராட்டம் நடை பெறவுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் ஐ.நா வினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு காணாமற்போனோரை தேடிக் கண்டறியும் குழு, பிரஜைகள் குழு காணாமற்போன உறவுகளின் குடும்பங்களின் சங்கங்கள் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து கொழும்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பு முடிவடைந்த பின்னர் இரவு 7 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடும் காணாமற்போனோரின் ஆயிரக்கணக்கான உறவுகள் அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில மாங்களுக்கு முன்னர் காணாமற்போனோரின் உறவுகள் கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்த முற்பட்ட வேளை அதில் பங்கெடுப்பதற்காக வடக்கிலிருந்து புறப்பட்ட மக்கள் வவுனியாவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஞாபக மறதியைப் போக்கும் புரோட்டின் கண்டுபிடிப்பு!!

amnesia-global-transitoria

வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை மாற்றக் கூடிய ஒரு புரோட்டினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நியூயோர்க்கின் கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தமது முடிவுகளை ஒரு ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய முன்னேற்றம் காரணமாக மறதி நோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட புரோட்டினை (RbAp48) உட்கொண்ட வயதான எலிகள், இளம் வயதில் இருக்கும் எலிகளைப் போல ஞாபக சக்தியைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளை செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியானது அல்சைமர் நோயுடன் சம்மந்தப்படாத தனி நிலை என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள்.

ஒரே குற்றச்சாட்டில் நளினி மீது இரண்டு வழக்கு!!

nalini

சிறையில் செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் சிறையில் உள்ளார்.

அவர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நளினி ஆயுள் கைதியாக உள்ளார். அவர் ஆயுள் தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார். வேலூர் சிறை சிறப்பு முகாமில் தற்போது உள்ளார். வேலூர் சிறை சுப்பிரண்ட் ராஜலட்சுமி சிறையில் சோதனை நடத்திய போது நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி அவர் செல்போன் வைத்துள்ளார் என்று பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வேலூர் மாஜிஸ்திரேட் விசாரிக்க தொடங்கியுள்ளார். ஆகஸ்ட் 30ம் திகதி நளினி நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

நளினி மீது ஏற்கனவே இதுபோல ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் நளினி சிறையில் செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனால் நளினி உயர் வகுப்பு சிறையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனவே அதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் நளினி மீது வழக்கு பதிவு செய்தது சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். என்று கூறப்படடுள்ளது. இந்த மனு நீதிபதி சுப்பையா முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி!!

111115xinwen2

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது.

இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நிலவுக்கு செலுத்த இருக்கும் ரொக்கட் மற்றும் அதன் பிற பாகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை முயற்சிகளும் முடிவுற்றதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

சீனர்களின் புராணத்தின்படி நிலவுக்கு சென்ற அவர்களது பெண் கடவுளின் பெயரையே இந்தத் திட்டத்திற்கும் வைத்துள்ளார்கள்.

சங்கே-3 எனப்படும் இத்திட்டத்தின் மூலம் வேற்றுக் கிரகத்தின் மீது தம்முடைய முதல் மென்மையான தரையிறக்கமாக இந்தப் பயணம் இருக்கும் என்று திட்டத்தலைவர் மா சிங்குரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் சிக்கலானதும் கடினமானதும் மட்டுமின்றி பெரும் பொறுப்புகளையும் அபாயங்களையும் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சங்கேயின் முதல் திட்டமானது கடந்த 2007ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. அப்போது, அந்த விண்கலமானது நிலவின் கோள்வட்டப்பாதையில் சுற்றிவந்தது.

பின்னர் 2010ம் ஆண்டில் செலுத்தப்பட்ட மற்றொரு விண்கலமானது ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொண்டது. சங்கே-3ன் பயணத் திட்டம் முந்தைய இரண்டு திட்டங்களையும் இணைத்து அமைக்கப்படும்.

அதேசமயம் சீனாவின் விண்வெளிப் பொறியாளர்கள் மனிதர்களை அனுப்பக்கூடிய ஒரு நிலவுப்பயணத்தைப் பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 13 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

gavel

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது.

அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இதையொட்டி ஹாசன் கைது செய்யப்பட்டு கன்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை 13 அதிகாரிகளை நீதிபதியாக கொண்ட ராணுவ கோர்ட்டு விசாரித்து நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இஸ்லாமியரான அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

அமெரிக்க ராணுவ கோர்ட் சுமார் 52 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் மரண தண்டனை விதித்துள்ளது என்பதும், இத்தண்டனை பெறும் 6வது நபர் ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் கொலை..!

MURDERவவுனியா, சுந்தரபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து 31 வயதுடைய இளைஞனொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது

சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த சமயம் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அவரை உறவினர்கள் தேடியபோதே பாடசாலை வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.