ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – கும்பம்

kumbam

மனத்துணிவும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் உங்களிடத்தில் அதிகமுண்டு. இந்த மாதம் ராசிக்கு ஐந்தில் குரு, ஒன்பதில் ராசிநாதனான சனி என்று சஞ்சாரம் செய்வதால் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்படும் பணத் தேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால், செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின்போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். கட்சித் தலைமையிடம் உங்களுக்கு உள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்காலத்தைபற்றி கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்கான அனைத்து முயற்சிகளும் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்:

9, 10 ஆகிய திகதிகளில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்துப் போட வேண்டாம்.

பரிகாரம்:

புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சந்தனம், குங்குமம் கொடுத்து வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் ஒன்பது முறை கூறவும்.

சிறப்புப் பரிகாரம்:

மரிக்கொழுந்து வாங்கி அம்மனுக்கு சாத்தவும். முடிந்தவர்கள் பச்சை நிறத்தில் பட்டும் வாங்கி சாத்தலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : வியாழன், வெள்ளி;
தேய்பிறை : வியாழன், வெள்ளி..

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 116 பேர் கடலில் கைது (படங்கள்)!!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென் பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 59 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

1 3 2

 

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மகரம்

makaram

அனைவரும் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். இந்த மாதம் ராசிக்கு ஏழாம் இடத்தில் புதனின் சஞ்சாரம் தொடங்குவதாலும் சூரியன், புதன் சேர்க்கை பெற்றிருப்பதாலும் வரவுக்கு இணையாக செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும்.

பங்குச் சந்தை போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும். குழப்பவாதிகளையும் அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்யோகத்தில் கூடுதலான வேலைச் சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியின் மேலிடத்து ஆதரவு கூடுதலாகவே கிடைக்கும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்:

7, 8 ஆகிய திகதிகளில் யாரிடமும் தேவைக்கு அதிகமான வாக்குவாதங்கள் வேண்டாம்.

பரிகாரம்:

அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட, துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும்.

சிறப்புப் பரிகாரம்:

வில்வத்தளங்களை சிவனுக்கு அர்ச்சனைக்காக கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி,
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி .

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – தனுசு

thanusu

நிதானமாகவும் செம்மையாகவும் தெய்வ பலத்தோடும் காரியமாற்றி வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் மற்றும் தன, தைரிய ஸ்தானாதிபதியின் சஞ்சாரம் நன்மையைத் தரும். புதன் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

எந்த நோய் என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று குணமடைந்து விடுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். உஷ்ண சம்பந்தமான நோய் வந்து போகும். பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.

கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

5, 6 ஆகிய திகதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தேவாரம், திருவாசகம் படித்து வர குருவருள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

சிறப்புப் பரிகாரம்:

எலுமிச்சைச் சாறு பிழிந்து பிரதோஷ அபிஷேகத்திற்குக் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – விருச்சிகம்

 viruchikam

அனைவருடனும் நல்ல முறையில் பழகி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காரியத்தை சாதித்துக் கொள்ளும் புத்திசாலிகள் நீங்கள். உங்களின் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதேசமயம் எதிர்பாராத வகையில் பணவரத்தும் இருக்கும். அரசுத் துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் சிறிது மந்தமான நிலை காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் நிறைய வரக்கூடும். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மையைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

இதனால் உங்களைத் தேடி புதிய பதவிகள் வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும் புகழும் உயரும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாக பழகுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரத்தை ஒதுக்கிப் படிப்பது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்:

3, 4, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் வெகு தூரம் சுயமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.

பரிகாரம்:

முருகனின் அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தரிசித்து தீபமேற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீ ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

முருகன் கோயிலிலுள்ள நாகருக்கு நெய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், வியாழன்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – துலாம்

thula

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கமின்றி கடுமையாக உழைப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். இம்மாதம் லாப ஸ்தானத்தில் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருப்பதால் எடுத்த காரியங்கள் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும் விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளை பெற குறுக்கு வழிகளை தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளால் உத்யோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களைப்பற்றி புறம் பேசியவர்கள் சரணடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டம தினங்கள்:

1, 2, 29, 30 போன்ற திகதிகளில் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.

பரிகாரம்:

மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபமேற்றி வழிபட எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

வெண் சுண்டல் செய்து சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமையன்று வழங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி,
தேய்பிறை : திங்கள், வெள்ளி..

கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

akshra

கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிக்ரகளின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கை அக்ஷரா ஹாஸனும் நடிக்க வருகிறார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கிறார் அக்ஷரா. அவருக்கு திரையில் நடிப்பதை விட திரைக்குப் பின்னால் இருப்பிதிலேயே அதிக ஆர்வம். அதனால் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இந்நிலையில் அவர் ஸ்ருதியுடன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஸ்ருதி நடனமாட சென்றபோது அவருக்கு நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கம்பெனி கொடுத்துள்ளார். இதையடுத்து நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கு படத்தில் அக்ஷரா நடிக்கப் போவதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – கன்னி

kanni

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள். அனைத்திலும் அதீதமான கௌரவத்தை எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் உங்களின் ராசியாதிபதியான புதன் ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்வதும், சூரியனின் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் துணிவு உண்டாகும். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.

புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக் காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சிலருக்கு ரியல் எஸ்டேட் துறையின் மூலம் ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு மிகவும் உதவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொல்லும் வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் பேச்சை உடனடியாக கேட்க வேண்டாம். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்:

27, 28 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம்:

முடிந்தவரை தினமும் பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 23 முறை சொல்லுங்கள்.

சிறப்புப் பரிகாரம்:

விநாயகப் பெருமானை அறுகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுபட, தடைப்பட்ட காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், புதன்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – சிம்மம்

simmam

கடமையில் கண்ணும் கருத்தாய் செயல்படும் நீங்கள் எல்லோராலேயும் நேசிக்கப்படுவீர்கள். இதுவரை தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசிநாதனான சூரியனின் சஞ்சாரம் ராசிக்கு பன்னிரெண்டில் இருப்பதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்திருப்பது மனதில் தெளிவை உண்டாக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேருவார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள்.

உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றி கொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதோடு மட்டுமல்லாமல் ஆதாயமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும் இருக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். ஆடை, ஆபரணங்கள் என்று வாங்கிக் குவிப்பீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களின் முழுமையான திறமைகள் வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களின் திறமை வெளிப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

25, 26 ஆகிய திகதிகளில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமஹாருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்,
தேய்பிறை : புதன், வியாழன்..

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – கடகம்

katakam

அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்து மகிழும் தயாள குணம் படைத்தவர்கள் நீங்கள். இனிமையாகப் பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் ராசிக்குள் புதன், சூரியன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது யோசித்துச் செய்வது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரத்தில் பொருட்களை அனுப்பும்போது கவனம் தேவை. பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும்.

நுணுக்கமான விஷயங்களையும் சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்துச் செல்லவும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.

பெண்கள், நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற மாதமிது. சமுதாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்களை பெற உதவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

22, 23, 24 போன்ற நாட்களில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்:

புதன் கிழமைதோறும் ஹயக்ரீவ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி, தைரியம் பிறக்கும்.

சிறப்புப் பரிகாரம்:

மல்லிகை மலரை அம்பாளுக்கு படைக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வியாழன்,
தேய்பிறை : ஞாயிறு, திங்கள், வெள்ளி.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மிதுனம்

mithunam

தனது பேச்சாற்றலால் மற்றவர்களை கவர்ந்திழுத்து எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சாதுர்யமாக முடிப்பீர்கள். இந்த மாதம் புதன் ராசிக்கு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சூரியனுடன் சேர்க்கை பெறுவதும் பொருள் வரவை கொடுக்கும். சேமிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்யம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகள் வந்து நீங்கும்.

மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் பூர்த்தியாகும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத்தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும்.

கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் திறமையைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அரசியல், சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு பரிபூரண நன்மைகள் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான காலம் இது. நிறைய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

19, 20, 21 ஆகிய திகதிகளில் பெரிய முதலீடு எதையும் செய்ய வேண்டாம்.

பரிகாரம்:

பெருமாள் கோயிலுக்குச் சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமாதவாய நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

மரிக்கொழுந்தை பெருமாளுக்கு சாத்தி வழிபட, அவரின் அருளால் அனைத்து நன்மையும் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்,
தேய்பிறை : திங்கள், புதன், வியாழன்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – ரிஷபம்

rishabam

எந்த சூழ்நிலையிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் கிரக சஞ்சாரத்தினால் இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சுக ஸ்தானத்தில் ராசிநாதனின் சஞ்சாரம் இருப்பதால் எதிலுமே சாதகமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியனின் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் நிற்கும். கடினமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் சாதனைகளை செய்து புகழ் பெறுவீர்கள்.

தொழிலிலும் வியாபாரத்திலும் மேன்மை உண்டாகும். ஆனால், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையிலுள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சாதகமான முடிவை பெறுவார்கள்.

இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருந்தாலும் பல சோதனைகளையும் சந்திக்க வேண்டியது வரும். இருப்பினும் சூரியனின் சஞ்சாரத்தால் அனைத்தையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் கிடைக்கும். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சந்திராஷ்டம தினங்கள்:

17, 18 ஆகிய திகதிகளில் புதிய தொழில்களுக்கான முன்பணம் எதையும் தர வேண்டாம்.

பரிகாரம்:

அருகிலுள்ள சிவாலய அம்பாளை தரிசித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற்றால் எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் சதாசிவகுடும்பின்யை நமஹ” என்ற மந்திரத்தை 24 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

மல்லிகை மலரை அம்பாளுக்கு சாத்தி வழிபடுங்கள். அவளின் அருட்பார்வையால் உங்களது துன்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வெள்ளி,
தேய்பிறை : புதன், வெள்ளி.

அர்ஜென்டினாவில் ரயிலை செலுத்தும் போது தூங்கி வழிந்த, மொபைல் போனில் பேசிய டிரைவர்கள்!!

rail

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, மொபைல் போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர் பலியாகினர். அந்த ரயிலின் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் ரயில் டிரைவர்கள் வண்டியை ஓட்டும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் மற்றொன்றின் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து டிரைவர்களின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

காரணம் ரயில் ஓடும் போது டிரைவர்கள் ஹாயாக மொபைல் போனில் பேசியது, புத்தகம் வாசித்தது, தூங்கியது ஆகியவை பதிவாகியுள்ளன. ரயிலில் உள்ள பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் டிரைவர்கள் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆந்திரா பிரிவினை : அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி!!

andra

ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் மரணமடைந்துள்ளனர், 10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்த நிலையில் விஜயவாடா அஜீத் சிங் நகரில் ஒரு மாணவியின் உருக்கமான பேச்சை கேட்டு குருசாமி என்பவர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார். அனந்தபூர் சாதிபத்ரி என்ற ஊரில் சுப்பிரமணியம் என்பவரும் கிருஷ்ணா மாவட்டம் மல்லவள்ளி என்ற ஊரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பத்மநாபன் என்பவரும் டி.வி. செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

இதே போல் குண்டூர் மாவட்டத்தில் சிவாஜி என்பவரும் விஜயநகர மாவட்டத்தில் அரிபாபு என்பவரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை டி.வி யில் பார்த்து அதிர்ச்சி அடைந்து பலியானார்கள். மாரடைப்பு, தற்கொலை விஜய நகரம் தாதில் பூடியில் ஊர்க்காவல் படை வீரர் சீனிவாசராவ் என்பவர் தெலுங்கு பேசும் மக்களை பிரித்து விட்டார்களே என வேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குண்டூரில் மின்வாரிய ஊழியர் சேக் காஜா அலி அரசியல் தலைவர்களின் காலை பிடித்து கதறி அழுததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பில் உயிர் இழந்தார். 10 பேர் கவலைக்கிடம் இது தவிர பல்வேறு இடங்களில் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கிழக்கு கோதாவரியில் பாப்ஜி என்ற வாலிபர் தொலைபேசி கோபுரத்திலிருந்து இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்கொலை முயற்சி செய்த 10 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மேஷம்

mesha

“மேட முயற்சி’’ என்பதற்கேற்ப எந்த காரியத்திலும் முதலில் சில தடைகளை சந்தித்து பின் விடாமுயற்சியால் வெற்றிகளை குவிப்பீர்கள். எதிர்பா ராத அலைச்சல், வீண் விரயங்களுக்கு மத்தியில் சிறந்த பலன்களை அடைவீர்கள். குரு, புதனின் வீட்டில் இருந்து உங்களது களத்ர ஸ்தானத்தை பார்க்கிறார். தம்பதிகளுக்குள் இருந்த மனக் கசப்புகள் குறையும். ராசியில் இருக்கும். கேது வீணான குழப்பங்களை தந்தாலும் ராசிநாதனின் சஞ்சாரத் தால் அதெல்லாம் மறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள்.

வக்ர சனியின் பார்வையால் சிற்சில விஷயங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் உங்களது மன வலிமையால் அனைத்தையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். சமுதாயத் தில் அந்தஸ்துமிக்க பதவிகளை பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து முடிவெ டுப்பீர்கள். தடைப்பட்டிருந்த விஷயங்கள் மடமடவென்று நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். பணியின் நிமித்தமாக வெளியூர்களில் இருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

அலுவலகத்தில் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்த்து வெற்றிகரமாக நிறைவேற்றி நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபத்தில் குறைவிருக்காது. போட்டிகளை சமாளிக்க முடியும். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடத்துப் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. மாணவ மணிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

14, 15, 16 போன்ற நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:

தினந்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ககாடரூபாயை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை கூறுங்கள்.

சிறப்புப் பரிகாரம்:

அறுகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருக்கவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி,
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய் !!

vijay

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஏழை மாணவ- மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி வழங்கினார்.

கடந்த 10 வருடங்களாக ஏழை மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களையும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் செலவில் ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், கல்வி உதவித் தொகையையும் விஜய் வழங்கினார்.

அது மட்டுமின்றி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வழங்கி அவர்களை கௌரவப்படுத்திய பின்பு அவர்களுக்கு அறுசுவை உணவுகளையும் அவரே பரிமாறினார்.

பின்பு மாணவர்களிடம் பேசிய விஜய், உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் தரமான கல்வியால் மட்டுமே முடியும்.

எனவே நமது நாட்டுக்காகவும், நமது ஊருக்காகவும், நமது குடும்பத்துக்காகவும் பொறுப்புடன் படித்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.