இன்று..

வாழ்வின் இறுதி
அத்தியாயங்களில் -உயிருடன்
ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம்
ஈழத்து உறவுகளை -இன்னும்
என்ன செய்ய போகின்றாய்?

உண்மைகள் மறைக்கப்படும்
இரவுகள் தொடர்ந்து கொண்டே
விடிகின்றது எம் முற்றம்..

எங்கோ மண் பிறாண்டி
துடிப்படங்கும்-நாயின் ஓலமும்
இரும்புச் சப்பாத்துகளின்
இரக்கமற்ற உதைப்புகளும்
சொல்லித் தருகின்றன
எம் மீதான பார்வைகளை..

எதை எதையோ
எழுத நினைத்த-என்
கரங்கள் அடங்கிப்போயிற்று
ஒரு துளி மையினுள்..

முடிந்த நாட்களில்
மண்டையோடுகளில்
கூழ் குடித்த பேய்களின்
பயமுறுத்தல்கள்..

சிறைச்சாலைகளில்- இன்னும்
காயாத இரத்தக் கறைகள் -இப்போதும்
வலியை- தரும் தழும்புகள்..

காணமல் போன
அன்னையா்களின் ஒப்பாரிகள்
அனாதை குழந்தைகளின்
கெஞ்சுதல்கள்..

பீரங்கி வாயினில்
கூண்டினை கட்டி
குடிபுகுந்துள்ள நிஜத்தினை -சொல்லி நிற்க..

இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்
எழுதாத என்- வரிகளை
மறைத்துக் கொள்கின்றேன்
மன்னித்து விடுங்கள்
ஜ.நா அதிகாரிகளே-இன்றும்
நாமும் ஒா் கைதி
இன்னும் விடியவில்லை எம் முற்றம்..

நட்சத்திரங்களை விழுங்கிய
வானத்தின் கடவாய்களில்
இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கின்றது
உங்கள் கால்களைப் பாருங்கள்..

ஜ.நா அதிகாரிகளே
எங்கள் குருதிகளால்
உங்கள் பாதங்கள் நனைய வேண்டுமா?
துவாயில் உள்ளவர்களின் -பின்னால்
நாமும் உள்ளோம் -எங்கள்
இரத்தங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்..

இனியும் வேண்டாம்
இந்த அவலம் -எங்கள்
கற்பப்பைகள்-எல்லாம் தற்கொலை
செய்து கொள்ளட்டும்..

-மித்யா -கானவி-

ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி!!

dhoni

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து‘லீக் போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18ம் திகதி முதல் மார்ச் 30ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள்.

ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனியும் கால்பந்து அணியை வாங்குகிறார். ஹிந்தி நடிகரும் நெருங்கிய நண்பருமான ஜோன் ஆப்ரகாமுடன் இணைந்து அவர் கால்பந்து அணியை வாங்குகிறார்.

கால்பந்து போட்டியில் டோனிக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவே அவர் இந்தப்போட்டியில் முதலீடு செய்ய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலியல் வன்கொடுமைகள் குறைய பீர் குடிங்க! பிரபல நடிகை ஆலோசனை!!

Poonam-Pandayபாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே.

பீர் பார்களை திறவுங்கள் பாலியல் வன்கொடுமைகள் குறைந்திடும் இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு. மும்பை பெண் புகைப்பட கலைஞர் பாலியல் பலாத்காரத்தால் இந்தியா கொந்தளித்துப் போயுள்ளது.

பூனம் பாண்டேயை போல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதும், நடிப்பதும்தான் பாலியல் பலாத்காரங்கள் பெருக காரணம் என ஒரு கலாச்சார காவலர் குரூப் குற்றம்சாட்டியதும், உடம்பில் இருக்கிற ஒன்றரையடி துணியையும் வ‌ரிந்துகட்டி சண்டைக்கு வந்துவிட்டார் பூனம்.

நான் போடுற ஆடைதான் பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்றால் நான் ஊடகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி மட்டும் கற்பழிக்காமலா இருந்தாங்க? பெண்கள் போடுற ஆடைதான் ஆண்களை செடியூஸ் பண்றதுங்கிறது எந்த விதத்தில் நியாயம்?

அஞ்சு வயசு குழந்தையைக்கூட துஷ்பிரயோகம் பண்றாங்களே. நான் சும்மா பேசுவேன், எதுவும் செய்ய மாட்டேன். ஆனா இங்க நிறைய பிரபல நடிகைகள் இருக்காங்க. என்னைவிட ஐட்டம் டான்சில் அவங்கதான் அதிகம் எ‌க்ஸ்போஸ் பண்றாங்க என்று ஒரேயடியாக போட்டு வாங்கியிருக்கிறார்.

பிரச்சினையை பேசினால் போதுமா? தீர்வு சொல்ல வேண்டாமா? பீர் பார்களை திறந்தால் இந்த பாலியல் வன்னொடுமைகள் எல்லாம் ஒரேயடியா குறைஞ்சிடும் என்றிருக்கிறார் பூனம்.

31 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த காமுகன் கைது!!

child abuse

குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த நபர் ஒருவரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளாக பார்த்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

அவர் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர் மீது ஒரு பலாத்கார வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ளவை கடத்தல் வழக்குகளாக பதிவானது.

அந்த நபர் சிறுமிகளை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன் பிறகு சிறுமிகள் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த நபரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர். பொலிஸ் விசாரணையில் தான் 31 சிறுமிகளை கடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர அவர் பைக்குகள், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியது, பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 சிறுமிகளை கடத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி விடுதியில் 14 சிறுமிகளை கற்பழித்த வாடன்!!

arrest

அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டம் லிகாபாலியில் ஒரு தனியார் பள்ளி விடுதி உள்ளது. இங்கு தங்கியிருக்கும் 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் 14 பேரை விடுதி வாடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வாடன் விபின் விஸ்வானை கைது செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடமும் பொலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதி வாடன் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று வாடனும், பள்ளி நிர்வாகிகளும் மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மாணவிகள் வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். பின்னர் சுவர் ஏறி குதித்து தப்பி வந்த மாணவிகள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவிகள் கற்பழிப்பு பற்றி கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியிடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டியது அவசியம் – வவுனியா மாவட்ட வேட்பாளர் பிரசாத்..!

imageதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டிய தேவை இருப்பதாக எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதேச மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:

“எமது இனம் காலங் காலமாக வாழ்வதற்காகப் போராடியும், போராடுவதற்காக வாழ்ந்தும்வரும் இனமாக எல்லையற்ற துன்பங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருவதுடன் ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியப் போக்கினாலும் சீரற்ற பொருளாதாரக் கொள்கையினாலும் எமது மக்கள் போக்கிடம் இன்றி கடன் சுமைகளைச் சுமந்துகொண்டு தற்கொலைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு புறத்திலே உரிமைகள் மறுக்கப்பட்டும் மறுபுறத்திலே பொருளாதார, கலாச்சார, சமய விழுமியங்களும் நலிவுற்றுள்ள இத்தருணத்தில் மாகாணத்திலும் தமிழ்மக்களுக்காகக் குரல்கொடுக்கக் கூடியதும் தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கு உணர்த்தக்கூடியதும் சகல இன மக்களையூம் சமமாக மதிக்கும் ஒரே ஒரு தேசியக்கட்சி ஐக்கியதேசியக்கட்சி மட்டுமே” எனத் தெரிவித்தார்.

அத்தோடு தம் பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும், அபிவிருத்திப் பணிகளையும் பட்டியலிட்ட அவர் தன்னை மாகாணசபை உறுப்பினராக மக்கள் தெரிவுசெய்யுமிடத்து பிரதேச சபையின் ஊடாக வழங்கிய அபிவிருத்திப் பணிகளையும் விட பலமடங்கு பணிகளையும் சேவையிகளையும் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

1 2 3 4

15 வருடங்களுக்குப்பின் பாகிஸ்தானை வீழ்த்திய சிம்பாப்வே..!

CRICKET-ZIM-PAKசுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாப்வே ஹராரே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பெற்றது.

அதில் அணித்தலைவர் மிஸ்பாஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

245 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சிம்பாப்வே அணி சார்பில் மஸ்கட்சா 85, சிபன்டா 54, டய்லர் 43 (ஆ.மி) வில்லியம்ஸ் 39 (ஆ.மி) பெற்றுக் கொடுத்தனர்.

இறுதியாக 15 வருடங்களுக்கு முன்பே சிம்பாப்வே அணி ஒன்று பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் கண்ணை தோண்டிய உறுப்புகளைக் கடத்தும் கும்பல்..!

eyesசீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது.

சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை.

அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராய் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர்.

இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர். அந்த பெற்றொருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுவனின் இரண்டு கண்களும் தோண்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுவனின் தோண்டி எடுக்கப்பட்ட கண்களுடன் மருத்துவமனைக்குப் பதறிப் போன பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் சொன்ன விஷயம் இன்னொரு பயங்கரம்..

அதாவது சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்த கும்பல், சிறுவனின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்து தப்பியிருக்கிறது.

சீனாவில் உடல் உறுப்பு தானங்களுக்காக 3 லட்சம் நோயாளிகள் காத்திருந்தாலும் இவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்குத்தான் சரியான உடல் உறுப்புகள் கிடைக்கின்றனவாம்.

இதனால் சட்டவிரோதமாக இப்படி கடத்தலில் ஈடுபட்டு மனித உறுப்புகளை வேட்டையாடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் கொடூரமும் அரங்கேறி வருகிறதாம்..

மும்பையில் பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி-உதை..!

loveleenமும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மும்பை புறநகரில் டி.வி. நடிகை ஒருவரை, பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டி.வி. நடிகையான லவ்லீன் கவுர், ஆட்டோவில் சென்றபோது, அவரிடம் இருந்த மணிபர்சை ஒரு ஆசாமி பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு தப்பி ஓடினான். உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய கவுர், பிக்பாக்கெட் ஆசாமியைத் துரத்தினார்.

ஆனால், சிறிது நேரத்தில் அவனுடன் மேலும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து, கவுரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த கவுர் உதவி கேட்டு அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.

மெட்ராஸ் கபே படத்தை பாராட்டுவதா? – நடிகை நீது சந்திராவுக்கு கண்டனம்..!

neethu‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார். இதை கண்டித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை.

இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மலையாளப் படங்களில் அம்மாவாக மீனாவின் மறுப் பிரவேசம்..!

meenaநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.

அதன் பின்னர், 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய மீனா, ‘சீதா ராமையா காரி மனவரலு’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நாகேஸ்வர ராவின் பருவ வயது பேத்தியாக 1991ல் அறிமுகமானார்.

‘ஒரு புதிய கதை’யின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தென்னிந்திய மொழிகளின் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக பல படங்களில் பிரகாசித்துள்ளார்.

கடைசியாக வெளியான ‘ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கரர்’ தெலுங்கு படத்தில் பார்வதி வேடம் ஏற்று நடித்த மீனா, 2 மலையாள படங்களில் அம்மாவாக அவதாரம் எடுத்துள்ளார்.

பிரபல மலையாள நாவலாசிரியர் வைக்கம் பஷீர் எழுதிய ‘பால்யகால சகி’ என்ற நாவல் அதே பெயரில் 1967ம் ஆண்டு மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது.

சிறுவயதிலிருந்தே காதலித்து வந்த ஒரு ஜோடியை சுற்றி பிண்ணப்பட்ட இந்த கதையின் நாயகன் மஜீத் ஆக பிரேம் நசீரும், நாயகி சுஹ்ராவாக ஷீலாவும் நடித்திருந்தனர்.

அதே கதைக்களம் – அதே ‘பால்யகால சகி’ என்ற பெயர் என தற்கால சூழலுக்கேற்ப உருவாக்கப்படும் மலையாள படத்தில் மஜீத் ஆக மம்முட்டியும், சுஹ்ராவாக இஷா தல்வாரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் மம்முட்டியின் அம்மாவாக மீனா மலையாள திரையுலகில் தற்போது மறுப் பிரவேசம் செய்கிறார்.

மோகன்லாலுடன் கடைசியாக 2005ல் வெளியான ‘உடயநனு தாரம்’ படத்தில் ஜோடியாக நடித்த அவர், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘திரிஷ்யம்’ படத்திலும் 2 குழந்தைகளின் பாசமான அம்மாவாக நடிக்கிறார்.

இந்த 2 படங்களும் வெளியான பிறகு கோலிவுட்டில் மீனா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

வேகம் கூடிய Mac Pro கணனிகளை அறிமுகப்படுத்தும் அப்பிள்!!

Mac-Pro 2013 vs 2012_full

முதற்தர கணனி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அப்பிள் ஆனது Mac Pro எனும் வேகம் கூடிய கணனிகளை இந்த வருடம் இடம்பெறவுள்ள Apple WWDC 2013 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

12 Cores Processing வலுவினைக் கொண்டதும் பிரதான நினைவகமாக DDR3 RAM களைக் கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை 40GB/s எனும் வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் காணப்படும் SATA வினை அடிப்படையாகக் கொண்ட SSD சேமிப்பு சாதனங்கள் சாதாரண அளவை விட 2.5 மடங்கு வேகம் கொண்டதாகவும், 7200-rpm கொண்ட சாதனத்தை விட 10 மடங்கு வேகத்தினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு செல்லும் மூட்டைப் பூச்சி விவகாரம்!!

bed bugs-2

கனடாவில் மூட்டைப் பூச்சி விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளது.
கனடாவின் கியூபெக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார்.

அந்த அறையில் மூட்டைப் பூச்சிகள் அதிகம் இருந்ததால் நிர்வாகியிடம் காண்பித்துள்ளார். உடனே அவர் 40 டொலர்கள் தருகிறோம் வேறு ஹோட்டல் சென்று தங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதனை ஏற்காதவர் இரவு முழுவதும் அதே அறையிலேயே தங்கியுள்ளார். இதன் பின்பு இணையதள சுற்றுலா வலைத்தளத்தில் ஹோட்டல் பற்றி கிண்டல் செய்து விமர்சனம் எழுதியுள்ளார்.

இதனை நீக்கும்படி நிர்வாகம் கேட்டுக் கொண்டும் அதனை மறுத்துள்ளார். இதனையடுத்து தங்கள் வர்த்தகத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது.

சிரித்தபடியே தீவிரவாத பயிற்சி பெறும் சிறுவர்கள் : தலிபான்கள் அட்டூழியம்!!(படங்கள்,வீடியோ)

ஒன்றும் அறியாத சிறுவர்களுக்கு தலிபான்கள் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பிரசாரத்திற்காக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் சாதாரண துப்பாக்கி முதல் கனரக துப்பாக்கி வரை சிறார்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் சிரித்தபடி துப்பாக்கி பயிற்சி பெறுகிறான்.

அவனுக்கு தலிபான் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியைப் பிடிப்பது எப்படி சுடுவது எப்படி என்று பயிற்சி தருகிறார்.

இதேபோன்று பெண் ஒருவர் தனது கையில் ரொக்கெட் மூலம் ஏவப்படும் கிரேனெடை வைத்திருக்கிறார். அதை ஒரு கார் மீது செலுத்தி வெடிக்க வைக்கிறார்.

மேலும் பள்ளிப் பருவத்தில் உள்ள பல சிறுவர்கள் வரிசையாக உட்கார்ந்தபடி ஏ.கே. 47 துப்பாக்கியை கையாளும் பயிற்சியில் ஈடுபடும் காட்சியும் இதில் வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வசிரிஸ்தானில்தான் இந்தப் பயிற்சி முகாம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 2 3 4

 

கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 6 வயது சிறுவன் சாதனை!!

c1

பிரிட்டனில் 6 வயது சிறுவன் ஒருவன் உள்ளூர் கிரிக்கெட் அணியில் நிரந்தர உறுப்பினராக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.
பிரிட்டனின் நியூபோர்ட்டை சேர்ந்த பார்சன்ஸ்(வயது 27) கிரிக்கெட் வீரர்.

இவரது மகன் ஹரிசன்(வயது 6), சிறு வயதில் இருந்தே தந்தையிடம் இருந்து கிரிக்கெட்டை கற்று வந்துள்ளான். தற்போது தந்தையை விடவும் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறான்.

சமீபத்தில் உள்ளூர் போட்டி ஒன்றில் தந்தையும் மகனும் களமிறங்கினர்.
இதில் ஹாரிசன் 24 ஓட்டங்களும், அவரது தந்தை 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து உள்ளூர் கிரிக்கெட் குழுவில் நிரந்தர உறுப்பினராகி உள்ளான். இதுகுறித்து பார்சன்ஸ் கூறுகையில், நான் விளையாட்டாகத்தான் ஹரிசனை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்து சென்றேன்.

ஆனால் அவனோ என்னை விட கூடுதலாக ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டான்.

மிகவும் சிறியவனாக இருந்தாலும் அவனைவிட வயதும் அனுபவமும் அதிகமுள்ள பந்து வீச்சாளர்களின் பந்துகளை மிகவும் நேர்த்தியாக சந்திக்கிறான்.

இன்னும் திறமையாக விளையாடி இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலும் இடம்பிடிப்பான் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஹரிசனின் தாய் பெகி பார்சன் கூறுகையில் ஹரிசன் நடக்கத் தொடங்கும் முன்னரே கிரிக்கெட்டை ரசித்து பார்ப்பான் என்றும் அந்த அளவுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

c2

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலி!!

river

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலியாகியுள்ளனர். அரலகங்வில பிரதேசத்தில் உள்ள இஸட் டி மகாவலி கிளையாற்றில் விழுந்து தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மதுங்கல பிரதேசத்தில் இருந்து கணவருடன் இந்த பெண்ணும் இரண்டு வயது குழந்தையும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மெதகம 8 ஆம் மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

32 வயதான பெண்ணும் குழந்தையுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது கணவர் மதுபோதையில் இருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.