வாழ்வின் இறுதி
அத்தியாயங்களில் -உயிருடன்
ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம்
ஈழத்து உறவுகளை -இன்னும்
என்ன செய்ய போகின்றாய்?
உண்மைகள் மறைக்கப்படும்
இரவுகள் தொடர்ந்து கொண்டே
விடிகின்றது எம் முற்றம்..
எங்கோ மண் பிறாண்டி
துடிப்படங்கும்-நாயின் ஓலமும்
இரும்புச் சப்பாத்துகளின்
இரக்கமற்ற உதைப்புகளும்
சொல்லித் தருகின்றன
எம் மீதான பார்வைகளை..
எதை எதையோ
எழுத நினைத்த-என்
கரங்கள் அடங்கிப்போயிற்று
ஒரு துளி மையினுள்..
முடிந்த நாட்களில்
மண்டையோடுகளில்
கூழ் குடித்த பேய்களின்
பயமுறுத்தல்கள்..
சிறைச்சாலைகளில்- இன்னும்
காயாத இரத்தக் கறைகள் -இப்போதும்
வலியை- தரும் தழும்புகள்..
காணமல் போன
அன்னையா்களின் ஒப்பாரிகள்
அனாதை குழந்தைகளின்
கெஞ்சுதல்கள்..
பீரங்கி வாயினில்
கூண்டினை கட்டி
குடிபுகுந்துள்ள நிஜத்தினை -சொல்லி நிற்க..
இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்
எழுதாத என்- வரிகளை
மறைத்துக் கொள்கின்றேன்
மன்னித்து விடுங்கள்
ஜ.நா அதிகாரிகளே-இன்றும்
நாமும் ஒா் கைதி
இன்னும் விடியவில்லை எம் முற்றம்..
நட்சத்திரங்களை விழுங்கிய
வானத்தின் கடவாய்களில்
இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கின்றது
உங்கள் கால்களைப் பாருங்கள்..
ஜ.நா அதிகாரிகளே
எங்கள் குருதிகளால்
உங்கள் பாதங்கள் நனைய வேண்டுமா?
துவாயில் உள்ளவர்களின் -பின்னால்
நாமும் உள்ளோம் -எங்கள்
இரத்தங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்..
இனியும் வேண்டாம்
இந்த அவலம் -எங்கள்
கற்பப்பைகள்-எல்லாம் தற்கொலை
செய்து கொள்ளட்டும்..
-மித்யா -கானவி-


பாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டிய தேவை இருப்பதாக எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது.
மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.




