இறுதி எச்சரிக்கையை நிராகரித்தார் எகிப்து ஜனாதிபதி ..!

இராஜினாமா செய்யும்படி இராணுவம் விடுத்த இறுதி எச்சரிக்கையை எகிப்து ஜனாதிபதி நிராகரித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.எகிப்தில் கடந்த 2011-ம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக பொதுமக்கள் புரட்சி வெடித்தது. அதை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலின்படி புதிய ஜனாதிபதியாக முகமது முர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு தலைமை வகித்தவர் இவர்தான். ஜனாதிபதியாக பதவி ஏற்ற சில மாதங்களில் இவர் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கும் புதிய சட்டங்களை கொண்டு வந்தார். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து கலவரம் மூண்டது. எதிர்க்கட்சியினரும், அதிபரின் சகோதரத்துவ கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் பலியாகினர். இதற்கிடையே, முர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்ற நேற்று முன்தினம் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் மிகப்பெரிய பேரணியும், போராட்டமும் நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கெய்ரோ, அலெக்சாண்டிரியா உள்ளிட்ட நரகங்களில் திரண்டனர். சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையும் முற்றுகையிடப்பட்டது.

போராட்டத்தினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 16 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து பேராட்டம் தீவிரம் அடைந்தது. எனவே, அதிபர் முர்சி, 48 மணி நேரத்துக்குள் அதாவது இன்று மாலைக்குள் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வெளியுறவுத்துறை மந்திரி மொகமது கமெல் ஆம்ர் உள்பட 4 மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இராணுவ மந்திரி ஜெனரல் அப்துல் பதேஎல் – சிஸ்சியும் முர்சி பதவியை இராஜினாமா செய்யும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையில் உள்நோக்கமோ, பேரமோ எதுவும் இல்லை. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பு இராணுவத்துக்கும் உள்ளது என கூறிள்ளார்.

ஆனால், இராணுவத்தின் இந்த இறுதி எச்சரிக்கையை முகமது முர்சி நிராகரித்தார். இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடையே சமரசம் ஏற்படுத்த அதிபர் முர்சி தீவிரமாக உள்ளார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் 48 மணி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியுடன் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் எகிப்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் முன்னால் பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம்..!

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிக்குமார்கள் மற்றும் பொதுபல சேனாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

உயர் கல்வி அமைச்சு நிராகரிப்பு-
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர்களுக்கும் வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை சாதாரணமான கோரிக்கை அல்லவென உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமிந்ர ஏகநாயக தெரிவித்துள்ளார்.

ரண்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி பாடசாலையில் இராணுவத்திடம் பயிற்சி பெற்று வந்த அதிபர் ஒருவர் நேற்று திடீர் என மரணமானார். இந் நிலையில், இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த தலைமைத்துவ பயிற்சியை உடன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிபர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல்கொடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறாயினும் தலைமைத்துவ பயிற்சியை இடைநிறுத்த விடுக்கப்படும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று அல்லவென உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக குறிப்பிட்டுள்ளார்.

ஷரீஆ சட்டம் தொடர்பில் தெளிவுவேண்டுமென சட்டமா அதிபர் கோரிக்கை-
தமிழ் பேச முடியாததையிட்டு வெட்கமடைகின்றேன் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எனக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் சரளமாக பேச முடியும். எனினும் தமிழ் பேச விருப்பம். ஆனால் சரளாமாக பேச முடியாது என தமிழ் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் சீ.ஜீ.விரமந்திரியினால் எழுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் – ஒரு சர்வதேச பார்வை எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் மாணவனாக இருந்த போது தமிழ் கற்க முயற்சித்தேன். எனினும் பொருளாதார கஷ்டம் காரணமாக முடியவில்லை. இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு கட்டாயம் தேவை.

மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஷரீஆ சட்டம் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இந்த தெளிவின்றியே எமது நாட்டிலிருந்து மக்களை தொழிலுக்காக அங்கு ஏற்றுமதி செய்கின்றோம். இதனால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.

இதனால் அந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளிடம் தெரிவித்துள்ளேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமாகிறார் பிரேம்ஜி..!

இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கொலிவுட் திரையுலகிற்கு அடியெடுத்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தின் மூலம் நடிகராகி விட்டார். தற்போது பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்கிறார்.

இசையமைப்பதைக் காட்டிலும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி கொலிவுட் மட்டுமின்றி மலையாளத்திலும் விரைவில் அறிமுகமாக இருக்கிறார்.

பகத் பாஸில் – ஸ்வாதி ரெட்டி நடிக்கும் நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார்.

பிரேம்ஜி முதல் முதலாக மலையாளத்தில் நடிக்கும் இப்படத்தை அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்குகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், எங்கள் படத்தில் பிரேம்ஜிக்கு சிறிய கதாபாத்திரம் தான்.

ஆனால் அவருடன் பணியாற்றியது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தில் அவருடன் மேலும் பணியாற்ற ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மாகாணசபை அதிகாரங்களை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்க நான் தயாரில்லை – வாசுதேவ நாணயக்கார..!

மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்க தாம் தயாரில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், 13வது அரசியல் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், இரண்டு மாகாணசபைகள் இணைவது மற்றும் மத்திய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு குறைந்த மாகாணசபைகளின் அனுமதி போதுமானது என்ற யோசனைகளே அவையாகும்.
இந்தநிலையில் இரண்டு மாகாணசபைகள் இணைவதை தடுப்பதற்கான யோசனைக்கு தாம் ஆதரவளிக்கின்ற போதும் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்த அரசாங்கத்திலும் தாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்

சிவசங்கர் மேனன் இலங்கை வருகிறார்..!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவரது இலங்கை விஜயம் ஜூலை 7ம் திகதி இடம்பெறவுள்ளது.

13வது சட்டத் திருத்தம் மூலத்தில் திருத்தங்கள் கொண்டுவர இலங்கை அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இலங்கை அரசின் இத் தீர்மானத்திற்கு இந்தியா தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ள நிலையில் சிவசங்கர் மேனன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இலங்கை வரும் சிவசங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்..!

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கட் வீரரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா..!

குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்ந்துகொண்டுள்ளதை ஒட்டி, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரோஷியா அதிகாரபூர்வமாக சேர்ந்துகொண்ட உள்ளூரின் நள்ளிரவு நேரத்தில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.

அதன்பின்னர் உடனடியாக, சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரியின் எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டன.

மற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளுடனான எல்லைகளில் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்த நாளை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள் என்று குரோஷிய அதிபர் ஈவோ யூசிபோவிச் வர்ணித்தார்.

யூரோ வலய நாடுகளில் ஏற்கனவே நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் உள்நாட்டு நிதிப் பிரச்சனைகளாலும் குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது அவதானிகளால் பெரிதளவில் வரவேற்கப்படவில்லை.

2007-ம் ஆண்டில் பல்கேரியாவும் ரொமானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டதிலிருந்து குரோஷியா தான் இப்போது புதிய நாடாக சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் சூதாட்ட விடுதி முற்றுகை: 83 பேர் கைது..!

கொழும்பு 7, தர்மாபால மாவத்த பிரதேசத்தில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) இரவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் மற்றும் அவ் விடுதியை நடத்திச் சென்ற மூவர் என 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிருந்து 95 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (02) மருதானை பொலிஸாரினால் மாலிகாஹந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாளையுடன் நிறைவடையும் சவூதி வழங்கிய மன்னிப்புக்காலம் – திருப்பி அனுப்பப்படுவார்களா இலங்கையர்கள்?

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மூன்று மாத மன்னிப்புக் காலம் நாளையுடன் (ஜுலை 3) முடிவடையவுள்ள நிலையில் தம்மீதான சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்ப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வினால் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மூன்று மாத மன்னிப்பு காலத்திற்குள் அங்கு தங்கியிருக்கும் சட்டவிரோத பணியாளர்கள் தாம் தங்கியிருப்பதை சட்ட ரீதியாக்குவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு தங்கியிருப்போர் கருப்புப்பட்டியல் அல்லது சிறை மற்றும் அபராதத்தில் இருந்து தவிர்ப்பதற்கே இந்த மூன்று மாத மன்னிப்புக்காலம் விதிக்கப்பட்டது.

சவூதியில் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மன்னிப்புக் காலத்தில் முதல் இரு மாதங்களில் அங்கு தங்கியிருந்த 1.5 மில்லியன் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் மன்னிப்பைப் பெற முன்வந்ததாக சவூதி தொழில்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது இரண்டு மில்லியனாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

சவூதி அண்மையில் கொண்டு வந்த சட்டவிரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆரம்பம் தொட்டு சுமார் 180,000 சட்டவிரோத பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதோடு மேலும் 200,000 அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் மூன்று மாத மன்னிப்புக்காலம் நிறைவடையும் தருவாயிலும் பல பணியாளர்களும் சவூதியில் இருந்து வெளியேற அல்லது தமது பணியாளர் அந்தஸ்தை சட்டரீதியாக்குவதற்கு எதிர்பார்த்து தத்தமது தூதரகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

சவூதி அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின் படி வெளிநாட்டு பணியாளர்கள் தமது தொழில் வழங்குனரிடம் மாத்திரமே அனுசரணை பெற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி தனது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் காத்துள்ளனர். மன்னிப்புக்காலம் நிறைவடைந்ததும் சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக சவூதி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதியில் எட்டு மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலையின்றி இருக்கும் மில்லியன் கணக்கான சவூதி நாட்ட வர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவே அந்நாட்டு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரபுலகில் மிகப்பெரிய பொருளாதார சக்தியான சவூதியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 12.5 வீதத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் மன்னிப்புக் காலத்திற்கு பின்னரும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் இரண்டு வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சவூதி அரசு எச்சரித்திள்ளது. எனினும் இந்த புதிய சட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு சாதகமானது என பொருளியல் ஆய்வாளர் பதல் அல் பவ்வனைன் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சந்தையை சவூதி நாட்டவர்களுக்கு திறந்து விடவும் வெளிநாட்டு பணியாளர்கள் தமது அனுசரணையாளரிடம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கவும் இந்த புதிய சட்டம் உதவுகிறது” என அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட்: காயமடைந்த டோனி எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கம்..!

இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளிள் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.

இப்போட்டியின்போது, டோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கட் காப்பாளர் பணியை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.

இந்த தசைப்பிடிப்பு சரியாகாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அம்பதி ராயுடு அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். கோலி அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்துவார்.

கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை நேரப்படி இப்போட்டி இரவு எட்டு மணியளவில் ஆரம்பமாகும்.

இரு அணிகளும் தமது முதல் போட்டியில் மண்ணைக் கவ்வியமையால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.

அண்மைகாலமாக இலங்கை அணிக்கெதிரான போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வினோத முறையில் நாடு கடந்து மாட்டிக்கொண்டவர்..!

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!

immig1

ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.

இது தொடர்பாக எல்லை காவலர்கள், ” இது ஒரு அகப்பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதனமான முறையில் எல்லையை தாண்டி இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!

ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 600 வீரர்கள் பங்குபெறுகின்றனர். புனே ஸ்ரீ ஷிவ் சத்திரபதி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த 20 ஆவது ஆசியத் தடகளப் போட்டியை மராட்டிய மாநில அரசும், இந்தியத் தடகளச் சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன. ஆசியத் தடகளப் போட்டிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்ற 14 வீரர்கள் புனே போட்டியில் தமது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போட்டியிடுகிறார்கள் என்று இந்தியத் தடகளச் சம்மேளனம் கூறுகிறது. புனேவில் நடைபெறவுள்ள இந்த ஆசியத் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்கள் அடுத்த மாதம் மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலகத் தடகளப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுவர்.

இதனிடையே ஆசியத் தடகளச் சம்மேளனத் தலைவர் பதவிக்கான போட்டியில், இந்தியாவில் சுரேஷ் கல்மாடி தோல்வியடைந்துள்ளார். புனேயில் ஆசியத் தடளப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கல்மாடி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து கத்தார் நாட்டு தடகளச் சம்மேளனத்தின் தலைவரும், ஆசிய அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கும் தல்ஹான் ஜுமான் அல் ஹமாத் அவர்கள் போட்டியிட்டார்.

இதில் 18-20எனும் வாக்கு வித்தியாசத்தில் தல்ஹான் ஹமாத் வெற்றி பெற்றார். கடந்த 13 ஆண்டுகளாக ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவியில் சுரேஷ் கல்மாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பத்து மாதங்கள் சிறையில் இருந்த சுரேஷ் கல்மாடி தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

நினைவுகளின் கனவுத் தொடர்…

வானம்
சூரிய குளியலுக்காய் தயாராகியது..

நிலவு இலவச மின்சாரத்தை
இடை நிறுத்திக் கொண்டது..

நட்சத்திரங்கள்
தலையணை தேடின..

சேவல்களும் குயில்களும்
செய்தி அறிவித்தன..

கதிரவன் வரவேற்பு
புன்னகைக்காய்
மொட்டுக்கள்
உதடுகள் அசைக்கத்
தொடங்கின..

அவள் விழிகளுக்கு மட்டும்
இன்னும் விடியவில்லை
ஏனெனில்..
அவன் நினைவுகளின்
கனவுத் தொடர்
இன்னும் முடியவில்லை..

-திசா.ஞானசந்திரன்-

மீண்டும் நடிக்க வருகிறார் லைலா..!

தமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம். கணவர் மற்றும் மகனை பராமரிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறாராம் லைலா.

இந்த நேரத்தில் தனது புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு லைலாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் டைரக்டர் பாலா.ஆனால், நடிப்பது பற்றி இன்னமும் அவருக்கு சரியான பதில் சொல்லவில்லையாம் அவர். மாறாக, சினிமாவில் நான் நிறைய சம்பாதித்திருக்கிறேன். அதனால் இப்போது சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டே நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருப்பதாக கூறினாராம். அப்படி நான் தயாரிக்கும் படங்களில் என்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தும் கேரக்டர்கள் இருக்கிறபட்சத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன் என்றும் தனது எதிர்கால திட்டத்தை சொன்னாராம் லைலா.

அதற்கு, நல்ல யோசனைதான் என்று சொன்ன பாலா, பிதாமகன் படத்தில் உனது கேரக்டர் எப்படி மனதில் நின்றதோ அதை மிஞ்சும் ஒரு கேரக்டர் எனது புதிய படத்தில் உள்ளது. அதில் லைலா நடித்தால் சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம். விருப்பம் இருந்தால் நடிக்கலாம், இல்லையேல் வேறு நடிகை பார்த்துக்கொள்கிறேன் என்று லைலாவின் விருப்பத்துக்கே விட்டு விட்டாராம் பாலா. ஆக, பாலா படத்தில் நடிப்பதா?வேண்டாமா? என்பது குறித்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறாராம் லைலா.

அமெரிக்கா கண்காணிப்பு: ஸ்நோவ்டன் கசியவிட்டுள்ள புதிய தகவல்..!

பிரிட்டனின் கார்டியன் செய்தி நாளிதழுக்கு கசியவிடப்பட்டுள்ள புதிய தகவல்களின்படி, பிரான்ஸும் கிரேக்கமும் இத்தாலியும் அமெரிக்காவின் உளவுத்துறைக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐரோப்பாவைச் சேராத-கூட்டாளி நாடுகளும் அமெரிக்காவின் என்எஸ்ஏ புலனாய்வுத்துறையினால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணமொன்று கூறுகிறது.இதில் ஜப்பான், மெக்ஷிகோ, தென்கொரியா, இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட அமெரிக்காவின் ஏனைய கூட்டாளி நாடுகளும் அடங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகங்களும் அமெரிக்காவினால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய சஞ்சிகையொன்று தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இப்போது இந்த புதிய தகவல் கசிந்துள்ளது.கார்டியனுக்கு கசியவிடப்பட்டுள்ள 2010- ரகசிய ஆவணமொன்றின்படி, 38 வெளிநாட்டுத் தூதரகங்களும் என்எஸ்ஏ-இன் கண்காணிப்பு பட்டியலில் இருந்துள்ளன.
அமெரிக்கா இதுபற்றி உரிய விளக்கமளிக்க வேண்டுமென்று பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க புலனாய்வுத் துறையின் முன்னாள் கணினி நிபுணரான ஸ்நோவ்டன் தான் இந்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அமெரிக்கா அவரது பாஸ்போர்ட்டை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தபடியால், ஈக்வடோரில் தஞ்சம் கோரியிருந்த ஸ்நோவ்டனால் ரஷ்யாவை விட்டு இன்னும் வெளியேற முடியாதநிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

அழிந்த தரவுகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள்..!

உங்கள் கணனி வந்தட்டு(hard drive) , USB (விரலி), SD card ( தரவு அட்டைகள்) என்பவற்றில் அழிந்துபோன தரவுகளை மீட்டெடுக்க உதவும் மிகச்சிறிய அளவிலான ஒரு சிறந்த மென்பொருளை இங்கு நீங்கள் தரவிறக்கிகொள்ளலாம்.

format பண்ணப்பட்ட hard drive, பழுதடைந்த hard drive போன்றவற்றில் இருந்து தரவுகளை மீட்க முடிகின்றமையுடன், USB , SD , ஏனைய removable discks களில் அழிக்கப்பட்ட தரவுகளையும் மீட்க முடியும்.

அளவு : 4Mb

தரவிறக்க :  Download