பிச்சை எடுத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்!!

old

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 93 வயது மூதாட்டி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

சாலையோரத்தில் சிறிய குடிசை அமைத்து இரவு நேரங்களில் தங்கியிருந்தார். சம்பவம் நடைபெற்று அன்று குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அவரை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் இருந்த 2,000 மற்றும் மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கயவர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் பிரவரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து பலாத்காரம் மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி உயிர் பிழைத்தார். இருப்பினும் அவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால், அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளின் விவரங்களை திரட்ட முடியவில்லை.

நடிகை ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பு வழக்கு : 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ranjitha

நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் “நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.

அதில் தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும் மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்.

தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9ம் திகதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சிரிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஜேர்மனியர்!!

Syrian-Rebels

சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட ஜேர்மன் தொண்டு நிறுவன தொழிலாளி ஒருவர் 111 நாட்களுக்கு பின்பு தப்பித்துள்ளார்.

ஜேர்மனைச் சேர்ந்த பொறியாளர் சியாத் நூரி. 72 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டார்.

மேலும் இவருடன் சேர்த்து இரண்டு நபர்களும் கடத்தப்பட்டு ஒரு மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 111 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தற்போது அந்த கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பித்துள்ளனர்.

இது குறித்து நூரி கூறுகையில், எங்களை கடத்தி வைத்து பணம் கேட்டனர், மேலும் எங்களுக்கு முன்னதாக கடத்தப்பட்டவர்கள் கடந்த யூலை மாதம் தப்பித்துவிட்டார்கள்.

நாங்கள் கொள்ளையர்கள் தூங்கிய போது தப்பித்து வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிரியா மீதான தாக்குதலுக்கு பான் கி மூன், புடின் எச்சரிக்கை!!

UN-Secretary-General-Ban-Ki-moon

சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலும், பிரான்ஸும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சிரியா மீது முழு அளவிலான போர் நடவடிக்கையை வலியுறுத்தும் விதமாக இந்த தீர்மானம் இருக்கிறது என்று சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது அந்த தீர்மானத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு மாற்றியுள்ளது.
அதாவது சிரியா மீதான ராணு தாக்குதலுக்கான காலக்கெடுவை 60 நாட்களாக்கியிருக்கிறது. சிரியாவில் உடனடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்றும் அதில் திருத்தப்பட்டிருக்கிறது.

பான் கி மூன் எச்சரிக்கை..

ரசாயன குண்டு வீச்சு தொடர்பாக சிரியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி பெறாமல் ராணுவ தாக்குதல் நடத்த கூடாது. அதனால் குழப்பமும், ரத்தம் சிந்த வேண்டிய நிலையும் ஏற்படும்.

ரசாயன குண்டு வீசியது குறித்து ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டால் சிரியா அரசு மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனெனில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரான குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார்.

புடின் எச்சரிக்கை..

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முன்புதான் தாக்கல் செய்ய வேண்டும்.

அதைவிட்டுவிட்டு வதந்தந்திகளின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் ஒப்புதல் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொலிசாருக்கு பயந்து கடலில் குதித்த அகதி!!(படங்கள்)

ஸ்பெயின் நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆபிரிக்கா நாட்டில் உள்ள மொராக்கோ என்னும் பகுதியில் இருந்து 7 பேர் கொண்ட கும்பலானது ரப்பர் படகின் மூலம் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றுள்ளனர்.

இவர்கள் ரப்பர் படகின் மூலம் வரும்போது ஸ்பெயின் நாட்டு பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பொலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார்.

ஆனால் ஸ்பெயின் கடற்படை பொலிசார் அந்த நபரை கடலில் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்பெயினுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் 20,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5

சச்சின் இடத்தை கோலியால் நிரப்ப முடியாது : கிறிஸ்டன்!!

Gayr_Kirsten_Vivek__521838g

ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கரி கிறிஸ்டன்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கிண்ணம் வென்றது.

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் பதவி விலகிய இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டெல்லி அணி கிறிஸ்டன் பயிற்சியில் கிண்ணம் வெல்லும் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து 45 வயதான கிறிஸ்டன் கூறுகையில் இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

எனவே தான் ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.

ஐ.பி.எல் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும் என்றும் இதற்கு இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன் எனவும் கூறினார்.

வீராட் கோலி குறித்து கிறிஸ்டன் கூறுகையில் இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என்று தொடக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது என்றும் சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது கடினமான செயல் எனவும் கூறினார்.

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும் – பான் கீ மூன்..!

banKeeஇலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை இன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

அதில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கொண்டு அங்குள்ள பிரச்சினைக்கான தீர்வைக் காண விரும்புவதாக பான் கீன் குறிப்பிடடுள்ளார்.

இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய முறையில் செயற்படாது தோல்வி கண்டது என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பணிக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்புக்கூறலை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி, முடம் போன்றது : இளையராஜா!!

ilayaraja

தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் விடையளித்தார்.

இளையராஜாவுக்குள்ளும் ஒரு கதையாசிரியர் இருக்கிறாராமே என்று கேட்டதற்கு, கதையாசிரியர் இருக்கிறார். ஆனால் இசை மட்டும்தான் எனக்கு தெரியும் என்றார்.

மேலும் சமீபத்தில் பாடகர்கள் தாங்கள் பாடும் பாடலுக்கு ரோயல்டி கேட்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தினார்களே என்று கேட்டதற்கு,

அவர்கள் பாடியதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வேறு எதற்கு ரோயல்டி. ரோயல்டி கேட்பது அவர்களை உரிமை. அதனால் கேட்கிறார்கள்.

உங்களைப்போன்ற மிகச்சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளை தற்போது சிலர் பயன்படுத்தி விட்டு நன்றி என்று போட்டுக்கொள்கிறார்களே இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,

இப்படி அடுத்தவர்களின் படைப்புகளை பயன்படுத்திக் கொண்டு நன்றி என்று போடுவது நொண்டி, முடம், கையாளாகாத தனம் என்றார்.

இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி தாங்கள் கூறுவதென்ன என்று கேட்டதற்கு,

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவன் மூலம் இளம் இசையமைப்பாளர்கள் சோம்பேறியாகிறார்கள் என்றார்.

இலங்கையில் சீனத் தலையீடு கவலைக்குரியது – இந்திய பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை..!

baratஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் பாரத் கர்நாட்,

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய அண்டை நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு ஸ்ரீசாந்த், சவானுக்கு உத்தரவு..!

cricketஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள்.

இதில் சண்டிலா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த 3 பேரையும் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் வாரியம் தற்காலிக பணிநீக்கம் செய்தது.

கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ரவிசவானி இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு வருகிற 13–ம் திகதி டெல்லியில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹர்மித்சிங், சித்தார்த் திரிவேதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் மீதான நடவடிக்கை பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் பரிந்துரை செய்யும்.

செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும். கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவில் துணைத் தலைவர்களான அருண்ஜேட்லி, நிரஞ்சன் ஷா இடம்பெற்று உள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் இணையத்தை முடக்கிய சிரியா..!

hackedசிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.

போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு தக்க பாடம் புகட்டும்விதமாக சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க அரசு முடிவெடுத்தது. ஆயினும், இவர்களின் நட்பு நாடான இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போருக்கு எதிராக வாக்களித்ததால் அமெரிக்கா தனியாக இதனை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது.

இதனிடையில் அமெரிக்க கடற்படையினரின் வர்த்தக வேலைவாய்ப்புத் தளம் ஒன்று சிரியாவின் எலெக்ட்ரானிக் படை என்ற ஒரு அமைப்பால் நேற்று பல மணி நேரம் முடக்கப்பட்டது. அவர்களால் வெளியிடப்பட்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட செய்தி மட்டுமே அந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியானது.

இந்த அமைப்பு ஆறு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில் உள்ள வாசகங்கள் சிரியாவில் இருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்காக நான் போராடமாட்டேன் என்று கையினால் எழுதப்பட்டிருந்தது. இதன்மூலம் சிரியா அரசை எதிர்த்து அல்கொய்தா தீவிரவாதிகள் போரிட்டுக் கொண்டிருப்பதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்கா, சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி தீவிரவாதம்தான் என்றும், சிரியாவின் துருப்புகள் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுபவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், சமூக இணையதளமான டுவிட்டர் மற்றும் பல ஊடக தளங்களையும் முடக்கியதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எஸ்.ஈ.ஏ. தெரிவித்துள்ளதாக சீனப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் இணையதளப் பிரிவு இதனால் பாதிக்கப்படவில்லை என்று கடற்படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் எரிக் பிளானகன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 10 இலங்கை மீனவர்கள் கைது!!

Indian-fishermen

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவேறு பகுதிகளில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒகஸ்ட் 31ம் திகதி விஸ்வாஸ்ட் (ICGS Vishwast ) பகுதியில் வைத்து ஒரு மீன்பிடி படகில் இருந்து ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு மீன்படி படகில் இருந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனைவியை பலிதீர்க்க கைதியை தப்பிக்க வைத்த அதிகாரி!!

jail

பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவன் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெய்சங்கர் (36). இவன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன். கர்நாடக பொலிசார் அவனை கைது செய்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சிறையில் ஜெய்சங்கர் தப்பி ஓடிவிட்டான். ஜெய்சங்கர் பொலிஸ் சீருடையில் தப்பியதாக கூறப்படுகிறது. அப்படி சென்றதை பார்த்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

அத்துடன் சுவரில் உள்ள மின்சார வேலியில் எதிர்பாராதவிதமாக மின்சாரத்தடை ஏற்பட்டாலும் அடுத்த சில வினாடிகளில் மின்சாரம் வந்துவிடும். ஆனால், ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று யாரோ ஒருவர் மின் வினியோக பிரதான சுவிட்சை நிச்சயம் ஓப் செய்திருக்க வேண்டும் என்றும் அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் தலா 200 வீதம் மாமூல் வசூலிப்பது வாடிக்கை.
வசூலாகும் பணத்தை சனிக்கிழமை அன்று மாலையில் பங்கு பிரித்துக்கொள்வது வழக்கம். ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி மதுவிருந்தும் நடைபெற்று இருக்கிறது.

இந்தநிலையில் ஜெய்சங்கர் தப்பிச்சென்ற விவகாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த சிறையில் அதிகாரி ஒருவரின் மனைவி அவருடைய கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அதிகாரிதான் தனது மனைவியையும் கள்ளக்காதலனையும் தீர்த்துக்கட்ட இதுபோன்ற குற்றங்களில் கைதேர்ந்தவனான ஜெய்சங்கரை பயன்படுத்த திட்டமிட்டு அவன் தப்பிச்செல்ல உதவி இருக்கலாமா என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்துள்ளது.

கர்நாடக மாநில பொலிஸ் ஐ.ஜி.லால் லோகுமா பச்சாவுவிடம் இதுபோன்ற சந்தேகங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் தற்போதைய நிலையில் அது குறித்து எதுவும் கூற முடியாது. உள்துறை அமைச்சர், பொலிஸ் ஆணயைளார் ஆகியோருடன் சிறையில் ஆய்வு நடத்தியபோது சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.

20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!

hi-syria-refugees-cp-rtr3en

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருவதால் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் எந்நேரமும் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனாலும் அங்கிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் ஏஜன்சி ஆணையர் ஆன்டோனியோ குட்டர்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பு வரை சிரியாவில் இருந்து 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வெளியேறி அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் கடந்த 12 மாதங்களில் மட்டும், 18 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் வெளியேறுகின்றனர். இவர்களுக்கு அண்டை நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலாம் அளிப்பதுதான் ஒரே ஆறுதலான விஷயம்.

கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி லெபனானில் 7 லட்சத்து 16 ஆயிரம் பேரும், ஜோர்டனில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேரும், துருக்கியில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரும், ஈராக்கில்1 லட்சத்து 68 ஆயிரம் பேரும், எகிப்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும் குடியேறியுள்ளனர்.

இது தவிர 42 லட்சம் பேர் சிரியா நாட்டுக்குள்ளேயே வேறு பகுதியில் குடியேறியுள்ளனர். இவ்வாறு ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவை விட்டு அகதிகள் வெளியேறும் நிலை தொடர்ந்தால் அண்டை நாடுகளில் சிக்கல் ஏற்படும் என ஐ.நா சிறப்பு தூதர் நடிகை ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச உதவியை பெறுவது குறித்து அண்டை நாடுகளின் அமைச்சர்கள் ஐ.நா அதிகாரிகளை சந்தித்து பேச திட்டுமிட்டுள்ளன

100 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தில் கடும் வெப்பநிலை!!

new-zealand-luxury-all-season-lodge

நியூசிலாந்தில் இந்த வருடக் குளிர்காலம் வழக்கம்போல் உறையவைக்கும் குளிர்காலமாக இருக்கவில்லை. காரணம், வெப்பநிலையை பதிவு செய்யத் தொடங்கிய நூறு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பநிலை இந்த குளிர்காலத்தில் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு தேசிய நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம், இந்த குளிர்காலத்தில் நாடு முழுவதும் சராசரியாக 9.5 செல்சியஸ் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது வழக்கமான சராசரி வெப்பத்தை விட 1.2 செல்சியஸ் கூடுதலாகும். 1984ல் பதிவான மிக அதிகபட்ச வெப்பத்தை விட 0.3 செல்சிஸ் அதிகம். நியூசிலாந்தில் 1909ம் ஆண்டு முதல் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் குளிர்கால மாதங்களாகும்.

பவர் ஸ்டாரின் புதிய அவதாரம்!!

power

லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். என்னுடைய ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜனிதான் என்ற ஸ்டேட்மென்ட் மூலம் ரசிகர்களிடையே பிரமலமானார்.

அதன்பின் சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் கமெடி நடிகராக திகழ்ந்தார். அதனால் சும்மா நச்சுன்னு இருக்கு, சங்கரின் ஐ போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். நடித்துக்கொண்டிருக்கும்போது மோசடி புகார் காரணமாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்துக்கொடுத்தார். வட போச்சே என்ற படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
அதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாண்டிச்சேரியில் நடந்த படப்பின்போது ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. வட போச்சே முழு காமெடி படமாக இருக்கும். கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை காட்டிலும் காமெடி அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கதை கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இரண்டு இளைஞர்களின் எளிமையான கதையாகும்.

இந்தப்படத்தில் ஒரு பாடலை என் சொந்த குரலில் பாடியுள்ளேன். அந்தப் பாடலை ரசித்து பாடியுள்ளேன். மேலும் டி.ஆர். ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள குத்துப்பாட்டு பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் நான் நடனம் ஆடியுள்ளேன்.

இப்படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் யாரு பவர பாரு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தவை ஆகும் என்று அவர் கூறினார்..