உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் ஓய்வு பெற முடிவு!!

Usain-Bolt

உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்புக்குரியவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். 27 வயதான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் இதுவரை 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கம் உள்பட 10 பதக்கங்களும் அள்ளியுள்ளார்.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையும் படைத்துள்ளார். தடகள வரலாற்றில் ஜாம்பவான் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள உசேன் போல்ட் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு விடைபெற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

நாளை நடைபெறும் டைமன்ட் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அவர் பிரஸ்செல்ஸ் நகரில் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

2016ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது திட்டமாகும். நான் நல்ல உடல்தகுதியுடன் இருந்தால், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு சென்று, அதில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.

ஒலிம்பிக்கில் மேலும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன் ஓய்வு பெறுவதே சரியான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முகமது அலி (குத்துச்சண்டை), பீலே (கால்பந்து) ஆகியோர் போன்று நானும் தலைச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஓய்வு பெறும் வரை தடகளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று போல்ட் கூறினார்.

சிரியா மீது போர் தொடுக்க உலகம் ஆதரிக்கிறது.. நான் கெடு விதிக்கவில்லை : ஒபாமா!!

opama

பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார்.

உள்நாட்டில் முழு ஆதரவு இன்னும் கிடைக்காத நிலையில், உலகின் ஆதரவை பெற வேண்டி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் ஒபாமா நேற்று சென்றார். செல்லும் வழியில் அவர் சுவீடன் தலைவர்களை இன்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா கூறியதாவது:- போரின் போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்ட சிரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று நான் எந்த கெடுவும் விதிக்கவில்லை.

எனது நிலை சிரியாவிற்கு கெடு விதிக்கவேண்டும் என்பதல்ல. ஆனால், சிரியா மீது நம்பகத்தன்மையை இழந்த சர்வதேச நாடுகள் போர் தொடுக்க ஆதரவு தெரிவிக்கின்றன.

அமெரிக்க மக்களிடத்திலும், காங்கிரசிடமும் ஒப்புதலை பெற முயற்சிகள் நடக்கின்றன. சர்வதேச விதிமுறைகளின் படி சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய ஜி-20 மாநாட்டின் போது, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷ்ய உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து சிரியா மீது போர் தொடுக்க அதிபர் ஒபாமா ஆதரவு கோருவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்ற தாய்!!

Girl-with-trinkets-TonyPadua

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்டு 11 வயது மகளை விற்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வரும் பாப்லா செசரினா மான்சன் அல்டானா(வயது 30) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில் குடும்ப கஷ்டம் மிக அதிகரிக்கவே தனது மகளை மீண்டும் அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே, பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து சென்ற பொலிசார் சிறுவர் சிறுமிகளை மீட்டனர்.

அப்போது 11 வயது சிறுமி ஒருவர் பொலிசாரிடம் என் அப்பாவால் வேலை செய்ய முடியாது. எனவே எனது தாயார் என்னை வேலைக்கு அனுப்பினார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர்.

அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா என்று என் அம்மாவிடம் கேட்டனர்.

எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று என் அம்மா கூறியபோது, பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.

இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து உதைத்து சித்ரவதை படுத்தினர்.

மேலும் இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர் என்று அந்த சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்த பொலிசார் சிறுமியின் தாயார் விலைக்கு வாங்கிய தம்பதியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

விமானத்தை இயக்கி 5 வயது சிறுவன் சாதனை(வீடியோ)!!

boy

சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா பகுதியில் சனிக்கிழமை மதியம் 2 விமானங்களை மொத்தம் 47 கி.மீ.தூரம் இயக்கினான். அதில் ஒரு விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி சாதனை படைத்துள்ளான்.

சிறுவன் இயக்கிய விமானத்தின் எடை 100 கிலோ. இதில் 2 இருக்கைகள் உள்ளன. சிறுவன் விமானத்தை இயக்கியபோது பயிற்சியாளர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சிறுவன் டுவோடுவோ தனியார் கிளப் ஒன்றில் 20 நாட்கள் பயிற்சி பெற்றான். அந்த கிளப்பின் பொறுப்பாளர் ஜங் யோங்குய் கூறும்போது, சிறுவன் டுவோடுவோ விமானம் இயக்குவதை விடியோவில் பதிவு செய்து வைத்துள்ளோம். அதை நாங்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

hen_diamond_ring

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார்.
சாராவை எப்போதும் தன்னுடனேயே வைத்து சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்.

அப்போது சாரா கிளாரியின் காதில் இருந்த காதணியை விழுங்கி விட்டது. வைர காதணி காதலனின் அன்பு பரிசு என்பதால் கோழியை மருத்துவரிடம் எடுத்து சென்றார்.

அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது கோழியின் வயிற்றில் காதணி சிக்கி இருப்பது உறுதியானது. ஆனால், சிக்கலான பகுதியில் காதணி இருந்ததால் அதை அறுவைசிகிச்சை மூலம் வெளியில் எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அப்படியே செய்தாலும் கோழியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை உள்ளே காதணி இருந்தால் அதன் உயிருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்து விட்டனர். இதுகுறித்து கிளாரி கூறுகையில் வைர காதணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என் சாரா.

அதை கொன்று காதணியை எடுக்க எனக்கு மனமில்லை. சாரா அதிக பட்சமாக இன்னும் 8 ஆண்டு உயிர் வாழும், அதுவரை காத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

hen

சொத்துக்காக பெற்ற தாயை சிறை வைத்த கொடூர மகன்!!

amma

தமிழ்நாட்டில் சொத்துக்கு ஆசைப்பட்ட மகன் தனது தாயை சிறை வைத்துள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவட்டார் அடுத்துள்ள தேமானூர் பகுதியை சேர்ந்தவர் பகவதியம்மாள்(60). கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் தங்கையன் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார்.

மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பகவதியம்மாள் 2வது மகன், மருமகளுடன் தனக்கு சொந்தமான பெரிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டை தனது பெயருக்கு பகவதியம்மாளிடம் இருந்து மகன் நைசாக பேசி எழுதி வாங்கிக் கொண்டார்.

வீடு கட்டிய பின்னர் தனது தாயை வீட்டின் பின்பக்கம் உள்ள விறகுகள் அடுக்கி வைப்பதற்கு பயன்படும் சிறிய அறையில் தங்க வைத்துள்ளார்.

சரியான பராமரிப்பு இல்லாததால் முதுமை காரணமாக பகவதியம்மாள் உடல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தாயை பார்க்க அவரது மகள்கள் இருவர் வந்துள்ளனர்.

தாயின் நிலைமையை கண்டு அதிர்ந்து போய் சகோதரனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்களை மீண்டும் வராதபடி விரட்டி விட்டுள்ளார்.

இவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் குடியிருந்து வரும் வீட்டை விற்க போவதாகவும் அதில் வரும் பணத்தை கொண்டு நான் பிழைத்துக் கொள்வேன் என பகவதியம்மாள் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகனும் மருமகளும் ஏற்கனவே பகவதியம்மாள் தங்கியிருந்த சிறிய அறைக்குள்ளேயே சிறைவைத்தனர்.
6 மாதத்திற்கு முன் உயிருடன் கொளுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் கணவன் மனைவி இருவரும் பகவதியம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவட்டாரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்பு சிகிச்சையளிக்கப்பட்ட பதவதியம்மாள் அவர்களின் மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய நடவடிக்கையால் பல கோடிகளை இழக்கும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை!!

Cricket South Africa

இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் ஆட்டங்கள் குறைக்கப்பட்டால் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபாய் நஷ்டம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய அணி வரும் நவம்பர் முதல் ஜனவரி வரை தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இது குறித்து பிசிசிஐ எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் (வரும் நவம்பர்) மற்றும் நியூசிலாந்து (ஜனவரி-2014) தொடர்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.

ஆனால், தென் ஆபிரிக்கத் தொடர் குறித்து எந்த முடிவும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. இதனால் தென் ஆபிரிக்க தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் தென் ஆபிரிக்கத் தொடரில் 3 ஒருநாள், 2 டெஸ்ட், T20 போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு போட்டிகள் குறைக்கப்பட்டால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுந்தரபுரம் கொலை தொடர்பில் 22 வயது இளைஞர் கைது!!

arrest1

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 30ம் திகதி வவுனியா சுந்தரபுரம் பகுதியின் பாடசாலை ஒன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் சுந்தரபுரம் சாஸ்திரகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொலைசெய்யப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (05) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம் : சச்சின் கேள்வி!!

sachineeeee

ஓய்வு பெறுவதற்கு தற்போது என்ன அவசரம் என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இதுவரையிலும் 198 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இந்த அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 200வது போட்டிகளுக்கு முன் சச்சின் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள சச்சின், தற்போது நான் ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என்று குறித்த கேள்விக்கு, நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் அவ்வளவு தான் நான் கடவுள் கிடையாது என்று பதிலளித்துள்ளார்.

மும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவா!!

prabhu deva

தமிழ் திரையுலகில் நடன உதவியாளராக ஆரம்பித்து பின்னர் நடிகராகி, தற்போது இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. நடன வகைகளில் பல புதிய முறைகளையும் இவர் உருவாக்கியுள்ளார். திரைப்படத்தில் தான் அமைத்த நடனத்திற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் இவர் இந்தியில் இப்போது முன்னணி இயக்குனராக உள்ளார். இந்தியில் இவர் இயக்கி வெற்றி பெற்ற ரவுடி ரத்தோர் இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ராம்போ ராஜ்குமார் படப்பிடிப்பில் இவர் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றார்.

அஜய் தேவ்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களையும் இவர் இயக்க உள்ளார்.

இந்தியாவின் மைக்கல் ஜக்சன் எனப்படும் பிரபுதேவாவின் மும்பை ரசிகர்கள் லோனாவாலா வேக்ஸ் மியூசியத்தில் இவரது மெழுகுச்சிலையை உருவாக்கியுள்ளார்கள். இந்தச் சிலையை பிரபுதேவா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

ரசிகர்களின் இந்தச் செயலால் மனம் நெகிழ்ந்த அவர், இதுகுறித்து இணையதளத்தில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்தச் சிலை உருவாவதற்குக் காரணமான சுனில் குழுவினரையும் அவர் பாராட்டியுள்ளார்.

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை!!

ipl

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இதனால் கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டது இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் “ஒப்பரேஷன் கிளீன் அப்” என்ற நடவடிக்கையில் இந்திய கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக சம்பியன்ஸ் லீக் தொடரில் நடன பெண்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த இந்த பெண்கள் நான்கு , ஆறு ஓட்டங்கள் அடிக்கப்படும் போது குறைந்தளவில் ஆடை அணிந்து கொண்டு நடனம் ஆடி ரகர்களை உற்சாகப்படுத்துவர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கிரிக்கெட்டை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைகள் செய்யப்பட்டன. இதில் நடன பெண்களுக்கு தடை விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இணையத்தில் சல்மான்கானுடன் நெருக்கமான படங்கள் : ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி!!

ice

ஐஸ்வர்யாராய் – சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் திடீர் என்று பரவியுள்ளன. இவற்றை வெளியிட்டது யார் என தெரியவில்லை. இதனால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகியுள்ளார்.

ஐஸ்வர்யாராயும் சல்மான்கானும் பழைய காதலர்கள். இருவரும் ஹம்தில் சுகேசனம் படத்தில் காதலர்களாகவே நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். சல்மான்கான் இரவு நேரங்களில் ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு சென்று கதவை தட்டி தகராறு செய்ததெல்லாம் அப்போது செய்திகளாக வெளிவந்தன.

பிறகு ஐஸ்வர்யாராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார். மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன் ஆறுதல் வார்த்தைகள் கூறி வந்தார். இதில் இருவரும் நெருக்கமாகி காதல் வயப்பட்டார்கள்.

பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. இந்த நிலையில்தான் சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கார்பந்தயத்தை அறிமுகம் செய்த சச்சின்!!

sachine

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார்.

பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராகிம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டெல்லி நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச பந்தயக் களத்தில் கடந்த ஆண்டு நடந்த போமுலா 1 கார் பந்தயத்தையும் சச்சின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்!!

trisha

திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகர் ராணா என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சம காலத்து நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, லைலா, ரம்பா, மீனா போன்றோர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என செட்டில் ஆகி விட்டனர்.

ஆனால் திரிஷாவுக்கு முப்பது வயது கடந்த பிறகும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. திரிஷா தாய் உமா கிருஷ்ணன் விரைவில் திருமணம் நடத்தி விட அவசரப்படுகிறார். திரிஷாவுக்கு இப்போது படங்களும் இல்லை. முன்னணி ஹீரோக்கள் புதுவரவுகளான இளம் நாயகிகளுடன் ஜோடி சேரவே விரும்புகிறார்கள்.

எனவே திரிஷாவும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளாராம். தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்றும் காதலிப்பது உறுதி என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெயம்ரவி உறவினர் வீட்டு திருமணத்துக்கு திரிஷாவும் ராணாவும் கைகோர்த்தபடி வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். திருமண கூட்டத்தினர் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஐதராபாத்தில் திரிஷா தந்தை இறந்தபோது திரிஷா கூடவே ராணா இருந்தார்.

பட விழாவுகளுக்கும் ஜோடியாக போனார்கள். ராணா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் திருமணத்துக்கு தாமதம் ஆனதாகவும் இப்போது அவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு சில மாதங்களில் திரிஷா–ராணா திருமணம் நடக்கும் என நெருக்கமானவர்கள் கூறினர்.

இரண்டு குடும்பங்கள் முற்றாக சுட்டுக்கொலை – ஈராக் தீவிரவாதிகள் வெறியாட்டம்..!

iraqஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சகோதரர்கள் இருவரின் வீடுகளை இலக்குவைத்து நடந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஆறு பேர் குழந்தைகளும் ஐந்து பேர் பெண்களும் ஆவர்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கிதாரிகள் சுட்டுத் தள்ளியதாக உயிர் பிழைத்தவர் ஒருவர் கூறுகிறார்.

தந்தையின் சாதனையை முறியடித்தார் ஷான் மார்ஷ்!!

shane_marsh

ஸ்கொட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் தந்தையின் சாதனையை முறியடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ்.
இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா விளையாட உள்ளது.

இதற்கு முன்பாக ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் நேற்று மோதியது. எடின்பர்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 362 ஓட்டங்கள் எடுத்தது.

முதலாவது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 148 ஓட்டங்களும் 3வது சதத்தை எட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் 151 ஓட்டங்களும் விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஒருநாள் போட்டி வரலாற்றில் அவுஸ்திரேலிய தொடக்க ஜோடி ஒன்று எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன்பு ஜெப் மார்ஷ்– டேவிட் பூன் ஜோடி கடந்த 1986ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

27 ஆண்டு கால அவர்களின் சாதனையை பிஞ்ச்–ஷான் மார்ஷ் கூட்டணி முறியடித்திருக்கிறது. முந்தைய சாதனையாளரான ஜெப் மார்ஷ்சின் மகன் தான் ஷான் மார்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.