அழகிப் போட்டியில் முதன்முறையாக பிகினி உடை ரத்து!!

b2

வரலாற்றிலேயே முதன்முறையாக உலக அழகி போட்டியில் பிகினி உடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலக அழகி போட்டி முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.

இங்கு பிகினி உடைக்கு அனுமதி கிடையாது என்பதால் அழகி போட்டியில் இருந்தும் பிகினி உடையை போட்டி அமைப்பாளர்கள் நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து போட்டி அமைப்பாளர்கள் கூறுகையில், இந்தோனேசியாவின் பாரம்பரியம், மரபு, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீச்சல் உடைப் போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இது இருக்காது இது முக்கியப் பிரச்சினை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் யாரையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம் என மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பீச் பொடி போட்டிப் பிரிவு கைவிடப்படலையாம். நீச்சல் உடைக்குப் பதில் உடம்பு அதிகம் தெரியாத வகையிலான உடையை அணிந்து போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிரஞ்சீவியின் பேச்சால் ராம்சரண் படத்தை திரையிட எதிர்ப்பு!!

ramsaran

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரி சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டும் அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதோடு ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றினால் ஆந்திரா மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

சிரஞ்சீவியின் பேச்சு சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்ப உறுப்பினர்கள் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா–பிரியங்கா சோப்ரா நடித்த துபான் படம் முடிவடைந்து விட்டது. இதே படம் இந்தியில் சம்ஜீர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ஆனால் படத்தை திரையிட போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் சுவரொட்டிகளை கிழித்து தீவைத்து எரித்தனர். திருப்பதி, நெல்லூர், அனந்தபுரம், கர்னூல் ஆகிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது. எதிர்ப்பை மீறி திரையிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தியேட்டர் அதிபர்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதேபோல் ஐதராபாத் பற்றி சிரஞ்சீவி அறிவித்த யோசனையால் தெலுங்கானா பகுதியிலும் ராம் சரண் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அங்கும் அவரது பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டது. இதனால் ராம்சரண் தேஜா படம் இன்று ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி படதயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் பிக் எண்டர்டெய்மெண்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. படம் வெளியாவதில் தடை ஏற்பட்டால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும். எனவே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

எல்லா வகையான இதய நோய்களுக்கும் பொதுவான மருந்து கண்டுபிடிப்பு!!

printable-pill

எல்லா வகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க அஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் சில நேரங்களில் நிறைய மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் மறதியில் சில மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடுவதுண்டு. அதனால், உருவாகின்ற பின் விளைவுகளால் அவர்கள் அல்லலுற வேண்டிய நிலை உருவாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த புதிய மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பல மருந்துகளின் செயலைச் செய்யும் வல்லமைப் பெற்ற இந்த மருந்துக்கு பாலிபில் என பெயரிட்டுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதன் முடிவுகள் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மருந்துத் திட்டம் லண்டனில் உள்ள இம்பீரியல் கொலேஜ் சார்பில் திட்டமிடப்பட்டது. மருந்துக்கான திட்ட சமன்பாடு டாக்டர் ரெட்டி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பாலிபில்லில் அஸ்பிரின், ஸ்டாடின் மற்றும் இரண்டு வகையான இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் மருந்துகள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

இந்த ஆய்வில், 62 வயதில் உள்ள சிவிடி எனச் சொல்லப்படுகிற இதய நோயாளிகள் 2004 பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த ஆய்வு கடந்த 2010 மற்றும் 2011ம் வருடக்களில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இதய நோய் மருந்தின் விளைவுகள், பாதிப்புகள் மற்றும் பயன்கள் ஆகியவைக் கண்டறியப்பட்டன.

விநாயகருக்கு ஏற்ற விரத நாட்கள்!!

vinayakar

வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான நன்மைகளை பெறலாம்.

விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெற்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள்.

மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார்.

மீண்டும் நடிக்க வருகிறார் ஜீவன்!!

Jeevan1யுனிவசிட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜீவன். தொடர்ந்து காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை, தோட்டா, மச்சக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்திமாகவே அமைந்தது.

சுமார் இரண்டரை வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ஜீவன் தற்போது மீண்டும் அவதாரம் எடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,

கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், சில காரணங்களால் தடைபட்டு போனது. அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும். நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான். அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.

இதையெல்லாம்விட சமீபத்தில்தான் என் அப்பா இறந்தார். எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.

வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார். நான் எதிர்பார்த்த திருப்தி அதில் இருந்தது. அதோடு ஏற்கனவே நானும் அவரும் நான் அவனில்லை, நான் அவனில்லை பார்ட்-2 , தோட்டா என மூன்று படங்களில் இணைந்தோம், வெற்றி பெற்றோம். இது நான்காவது முறை. தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர். பெரிய தயாரிப்பாளர். அதனால் மீண்டும் வருவேன்.

கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே நீங்கள் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விக்கு திருட்டு பயலே படத்தில் நான் மட்டுமல்ல. சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ், என எல்லோருக்குமே நெகடிவ் ரோல்தான். கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன்.

அதுமாதிரி காக்க காக்க படத்தில் முழு வில்லன். நான் அவனில்லை படத்தில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம். தோட்டாவில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என்ற கதாபாத்திரம். சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப்படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு. அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.

இனி வேட்டையை ஆரம்பித்து விட்டேன். நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலைநிறுத்தி கொள்வேன். முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்று ஜீவன் கூறினார்.

நடிகை அனுஷ்காவுடன் நடனமாடிய கோலி(வீடியோ)!!

கிரிக்கெட் வீரர் வீராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து சல்சா நடனம் ஆடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வீராட் கோலி. 24 வயதான இவர் தனது சிறப்பான ஆட்டத்தினால் துணை அணித்தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

சிம்பாவே தொடரில் அணித்தலைவராக அசத்திய கோலி ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி கிண்ணம் கைப்பற்ற உதவினார்.

அடுத்தடுத்த வெற்றிகளால் இவரது விளம்பர வருமானம் கொடி கட்டி பறக்கிறது. மொபைல் போன், குளிர்பானம் உட்பட பல பொருட்களுக்கு மொடலாக தோன்றுகிறார்.

தற்போது போட்டிகள் இல்லாத நிலையில் கிடைத்துள்ள ஓய்வில் பல விளம்பரங்களில் மொடலாக நடிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் ஷம்பு ஒன்றின் விளம்பரத்துக்காக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து சல்சா நடனம் ஆடினார்.

லண்டனில் மினி சூரியன் : மக்கள் அவதி!!

UK

லண்டனில் மினி சூரியன் என்று வர்ணிக்கப்படும் கட்டிடம் ஒன்று மக்களுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது. லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடி கட்டிடத்தினாலே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு வாக்கி டோக்கி என பெயரிட்டுள்ளனர

முழுவதும் கண்ணாடிகளால் ஆன இந்த கட்டிடம் சூரிய ஒளியை நேரடியாக அதிகளவு பிரகாசிக்கின்றதாம். இதனால் மினி சூரியனை போன்றே உஷ்ணம் ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் பல பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு ஜாகுவார் காரின் கண்ணாடி, பேனல்கள் உள்ளிட்டவை இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பு பட்டு உருகிப் போய் விட்டதாம்.

மேலும் ஒரு நிறுவனத்தின் பெயிண்டிங்கையே இது உருக்கி விட்டதாம், கார்பெட்களும் எரிந்து போய் விட்டனவாம்.

இந்தக் கட்டிடத்திற்கு வாக்கி டோக்கி என்ற பெயர் பொருத்தமல்ல மாறாக சூரிய வலை என்றுதான் பெயரிட வேண்டும் என்று சிலர் கோபத்துடன் கூறுகின்றனர்.

இந்த கட்டிட வெளிச்சப் பிரதிபலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வாங்கித் தரப்பட்டுள்ளதாக லண்டன் மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்டிட கட்டுமானக் குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பள்ளியில் மாணவர்களிடையே குழு மோதல் : மாணவன் குத்திக் கொலை, 3 பேர் காயம்!!

USA

அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியானர், 3 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ளது ஸ்பிரிங் உயர் நிலைப் பள்ளி. 3000 மாணவ, மாணவியர் படிக்கும் அந்த பள்ளியில் திடீர் என்று ஒரு சில மாணவர்களுக்கு இடையே நேற்று காலை 7 மணிக்கு மோதல் நடந்தது.

இதில் 17 வயது மாணவர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்த மாணவரின் பெயரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருடைய பெயர் ஜோஷ்வா ப்ரூஸ்ஸார்ட் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியில் படிக்கும் லூயிஸ் ஆலோன்சோ அல்ஃபாரோ(17) என்ற மாணவனை பிடித்து விசாரித்தனர்.

மாணவனைக் குத்திக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டதாகவும், இதையடுத்து அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் ஹாரிஸ் கவுன்ட்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆலோன்சோ தவிர மேலும் 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கழுத்தை அறுத்து தாய்,மகள் படுகொலை : 40 பவுண் நகை கொள்ளை!!

murder

சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20). இன்று அதிகாலையில் சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார்.

வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்து நகை-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

சடலத்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் நகை- பணத்துக்காக தாய்-மகளை கொன்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிகாரர்களால் ஏற்பட்ட வினோத விபத்துக்கள்(வீடியோ)

குடிவெறியினால் ஏற்பட்ட வினோத விபத்துக்களை கொஞ்சம் பாருங்கள்..

வடக்கு தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா!!

uk

வடக்கு மாகாணசபை தேர்தலை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் எலிஸ்டர் பெய்ர்ட் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வடக்கு மாகாணசபை தேர்தலின் போது பணியாற்றுவதாக பெய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது மாலைத்தீவில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொதுநலவாய கண்காணிப்பாளர்கள், இந்த மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள இலங்கையின் வடமாகாண தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மொடல் அழகி எரித்து கொலை : நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!!

rusia

ரஷ்யாவில் பிரபல மொடல் அழகி கடத்தப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல மொடல் அழகி யூலியா லோஷாகினா(வயது 28), கணவர் திமித்ரி லோஷாகினா(வயது 37). இவர் புகைப்பட நிருபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கி விட்டார்.

இதனையடுத்து இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் திகதி யூலியா திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் பொலிசில் புகார் தெரிவிக்கவே, தம்பி மைக்கேல் மற்றும் யூலியாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அடர்ந்த காடுகள் அடங்கிய யூரல் மலை பகுதியில் யூலியாவின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணயில், யூலியாவின் கழுத்து திருகப்பட்டு உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கணவர் திமித்ரியை கைது செய்த பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் யூலியா மூலம் திமித்ரிக்கு எய்ட்ஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமித்ரி யூலியாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் திமித்ரியோ அடிப்படை காரணம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்துகின்றனர் நான் மனைவியை மிகவும் நேசிக்கிறேன் இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

விமானங்களை தாக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அல்கொய்தா!!

flight

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் சிக்னல்கள் மூலம் தான் இயக்கப்படுகின்றன. இவற்றை தங்களது சிக்னல்கள் மூலம் வழிமறித்து திசை திருப்புவதற்காக புதிய சிக்னல் முறையை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலுன்கள் மற்றும் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை அனுப்பி அமெரிக்க ஏவுகணை, ஆளில்லா விமானங்களின் சிக்னல்களை தடுத்து திசை திருப்பம் தொழில் நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான படப்பிடிப்பால் விஷாலுக்கு உடல் நலக்குறைவு!

Vishal

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா நாளை வெளியாகவுள்ள நிலையில் அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்துவிட்டதாகவும், இதனால் உடனடியாக அவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் பரபரப்பான செய்திகள் வெளியாயின.

ஆனால் இந்த செய்திகளை விஷால் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

என்னுடைய தயாரிப்பில் நான் நாயகனாக நடித்து வரும் பாண்டியநாடு படத்துக்காக கடந்த 10 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

அதேபோல் நாளை வெளியாகவுள்ள மதகஜராஜா படத்துக்காகவும், புரமோஷன் வேலைகளுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு சென்று வந்தேன்.

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு என் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. ஆகையால் உடல் பரிசோதனைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன்.

என்னை பரிசோதித்த வைத்தியர்கள் எனக்கு முழுமையான ஓய்வு தேவை என்று சொன்னார்கள். அவர்கள் அறிவுரைப்படி தற்போது நான் முழு ஓய்வில் இருக்கிறேன்.

மற்றபடி என் உடம்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

10 ஆண்டுகளாக தந்தை, சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முதல்வரிடம் கதறல்!!

abuse

இந்தியாவின் லக்னோவில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண் தனது தந்தை மற்றும் சகோதரனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

இந்த அவமானத்துக்குரிய சம்பவம் அந்த பெண்ணின் தாய்க்கும் தெரிந்து நடந்து வந்திருக்கிறது என்பதுதான் கொடுமை.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்து வரும் ஜனதா தர்ஷன் என்ற மக்களை நேரிடியாக சந்தித்துப் பேசும் நிகழ்ச்சியின் போது 25 வயதான பெண் தனக்கு நேரிட்ட இந்த கொடுமையைக் கூறி அழுதார்.

உடனடியாக அகிலேஷ் யாதவ் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு இணைந்து செயற்படும் : வாசுதேவ நாணயக்கார!!

vasudeva_nanayakkaraதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வடக்கை முழுமையாக அபிவிருத்தி செய்து கொள்ளமுடியும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த அவர் அரசாங்கம் இந்த விடயத்தில் மாற்றுச் சிந்தனையை கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இந்த இணைப்பு என்பது வடக்கு கிழக்கு மக்களின் விருப்பத்தை பொறுத்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கூட்டமைப்பு கோரி நின்றாலும் அது தொடர்பில் ஜனாதிபதியே இறுதிமுடிவை எடுக்கமுடியும் என்று வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகள் பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அமைக்கப்படவுள்ள வடக்கு மாகாணசபையில் இணைந்து செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.