தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு இல்லை : அரசு உத்தரவு!!

vi

விஜய், அமலாபால் நடித்துள்ள தலைவா திரைப்படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தலைவா திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளனர். படத்தைப் பார்த்த குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும் விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

யு சான்றிதழ் பெற்றிருந்தாலும் திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும் பெண்கள் குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.

எந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றும் ஸ்ரோ!!(படங்கள்)

இன்று உலகில் அதிகமான நோய்களுக்கப முக்கிய காரணம் எது என்று பார்த்தால் அது தண்ணீர் தான். அசுத்தமான தண்ணீரில் இருந்து தான் பல முக்கிய நோய்கள் பரவுகின்றன எனலாம்.

இதற்காக நாம் செல்லும் இடமெல்லாம் மினரல் தண்ணீர் போத்தல் வாங்குவது என்பது அனைவருக்கும் இயலாத காரியம். அதற்காகவே பிரத்யோகமான ஸ்ரோ ஒன்றை வடிவமைத்துள்ளார் ஒருவர்.

இந்த ஸ்ரோவில் சிறிய அளவிலான தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் பிளேட்டுகள் உள்ளது. இந்த ஸ்ரோ மூலம் நாம் தண்ணீரினை அருந்தும் போது நுண் கிருமிகள் நீக்கப்பட்டு சுத்தமான தண்ணீர் மட்டுமே நாம் அருந்தலாம்.

இந்த ஸ்ரோ மூலம் நாம் நீர் நிலைகளில் கூட தைரியமாக தண்ணீர் அருந்தலாம் இதோ அந்த ஸ்ரோவை படத்தில் பாருங்கள்..

11 12 13 14 15 16 17 18

சதம் அடிக்காமலே சாதனை படைத்த மிஸ்பா!!

misbah.cms

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மத்தியதர வீரராக களமிறங்கும் இவர் டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக பெற்ற 96 ஓட்டங்களாகும்.

மிஸ்பா இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

இவரை அடுத்து பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ஓட்டங்கள், 12 அரைசதம்), சிம்பாவேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ஓட்டங்கள், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ஓட்டங்கள்) உள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் சென்ற பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய மிஸ்பா 4 அரைசதம் உட்பட 260 ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார்.

இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த தலைவர் வரிசையில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆபிரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணித் தலைவர்களில், அசார், கங்குலி, டோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

தலைவா படத்துக்கு தடங்கலா : கருணாநிதி கருத்து!!

karunanithiகேள்வி :– நடிகர் விஜய் நடித்து 9ம் திகதி வெளிவருவதாக இருந்த தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வருகிறதே?

பதில் :– தலைவா திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும் யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் முதல்– அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும் ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும். வரி விலக்கு கூட இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால் அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால் ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.

கேள்வி :– அ.தி.மு.க. அரசு தாமதமாக ஓகஸ்ட் 2ம் திகதி பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்த போதிலும் விவசாயிகள் அந்தத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாதவாறு கால்வாய்கள் எல்லாம் தூர் வாரப்படாமல், புதர் மண்டிக் கிடப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளனவே?

பதில்:– டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் எல்லாம் எவ்வாறு தூர் வாரப்படாமல் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன என்பதைப் புகைப்படங்களோடு நாளேடுகள் எடுத்து வெளியிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் அவை தொடர்ந்து காட்டப்படுகின்றன.
கொள்ளிடம் ஆற்றிலே வருகின்ற தண்ணீர் அரசின் முன்னெச்சரிக்கை இல்லாத காரணத்தால், கடலில் சென்று கலப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பாசனத்துக்கு உரிய நீர் தலைமடை முதல் கடைமடை வரை தங்குதடையின்றி, பயிர்களுக்குச் சென்றடையாத வகையில் ஏரி, குளம், வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு செடிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாம்.

கேள்வி :– ஓய்வூதிய தாரர்கள் இறக்கும்பொழுது அவர்களது வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பப் பாதுகாப்பு நிதியை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி யிருப்பதாக ஏடுகளில் செய்தி வெளிவந்திருக்கிறதே?

பதில்:– அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்பு நிதியே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் என்பதை அரசு அலுவலர்கள் மறந்து விடுவார்களா என்ன? அதுபோலவே காலஞ்சென்ற ஓய்வூதியர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கென 1-1-1997 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, ஓய்வூதியர்களிடமிருந்து அவர்கள் இறக்கும் காலம் வரை அவர்தம் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு 20 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து, ஓய்வூதியரின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற திட்டமும், தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம்தான்.

இந்த உதவித்தொகையைத் தான் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1-6-2012 முதல் 35 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திற்காக மாதந்தோறும் ஓய்வூதியர்களிடமிருந்து ஏதாவது பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதைப் பற்றியும், அது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டமா என்பதைப் பற்றியும் தற்போதைய அரசு அறிக்கையிலே கூறவில்லை.

அது மாத்திரமல்ல இந்தத் தொகை கூட அரசே தன் நிதியிலேயிருந்து அரசு ஓய்வூதியதாரர்களுக்குச் செய்வதும் அல்ல. 35 ஆயிரம் ரூபாய் என்பதை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்திக் கொடுக்கிறார் என்றால் உயர்த்தப்படும் இந்தத் தொகை கூட அரசினால் வழங்கப்படுவதல்ல.

பணியிலே இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதந்தோறும் 70 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையிலிருந்துதான், அந்த ஓய்வூதியதாரர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்திற்கு இதுவரை 35 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்தார்கள்.
அதை தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துகின்ற போது, ஓய்வூதியதாரர்கள் இதுவரை மாதந்தோறும் இதற்காகச் செலுத்தி வந்த 70 ரூபாய் என்பதை 80 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யவிருக்கிறார்கள்.

இதையும் முதல் அமைச்சர் அறிவிப்பில் அப்படியே மறைத்து விட்டு, அரசு ஏதோ ஓய்வூதியதாரர்களுக்கு புதிதாகத் தருவதைப்போல, அதுவும் தற்போதுதான் தருவதைப் போலச் செய்தி கொடுத்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இசை, தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்தார் இசைப் புயல் ஏ.ஆ.ரஹ்மான்!!(படங்கள்)

சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு புதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை ஆரம்பித்துள்ளார். ரமலான் திருநாளன்று நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிடா அம்பானியும் கலந்து கொண்டுனர்.

இது தொடர்பாக சமூக இணையத்தளம் ஒன்றில் தெரிவித்த ரகுமான், இன்று நாங்கள் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை துவங்குகிறோம் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளும் முகேஷ் அம்பானி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வளவு காலமும் நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் தான் இந்த கல்லூரியை ஆரம்பிக்கும் அளவிற்கு என்னை ஊக்குவித்துள்ளது.

இக்கல்லூரி வருங்காலத்தில் இந்தியாவிலிருந்து சிறந்த இசை கலைஞர்களை உருவாக்க உதவி புரியுமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

rahman-ambanis

a1 a3 a4 a5 a6

தலைவா படம் விரைவில் வெளியாகும் : பொறுமையுடன் இருக்குமாறு ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!!

vijay

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு ரத்து, படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஆகிய காரணங்களுக்காக நேற்று வெளியாக வேண்டிய படம் வெளியாகவில்லை.

படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சில இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் விஷ்ணுகுமார் என்ற ரசிகர் ஒருவர் தலைவா படம் வெளியாகாத ஏமாற்றத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.08.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த திகதியில் படம் வெளியாகவில்லை.

என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏமாற்றத்தினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன்.

இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமருக்கு அவசர சத்திர சிகிச்சை..!

vavuniyaஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும், பாலஸ்தீன நாட்டுடன் மீண்டும் சமாதான பேச்சு தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாக வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக பெஞ்சமின் நேதன்யாஹூ கூறியதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பிரதமரின் வயிற்று வலிக்கு ´ஹெர்னியா´ எனப்படும் குடல் இறக்க நோய்தான் காரணம் என்பதை கண்டறிந்த வைத்தியர்கள், உடனடியாக அவசர சத்திர சிகிச்சை செய்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, இன்று ஜெருசலேமில் உள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஹெர்னியா நோய்க்கான சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த சத்திர சிகிச்சைக்கு பின்னர், ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வரும் புதன்கிழமை ஜெருசலேமில் நடைபெறும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையம் தீ பற்றி எரிந்தபோது கொள்ளையடித்த பொலிஸார்..!

vavuniyaகென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வருகையாளர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், விமான நிலைய ஊழியர்களும், பொலிசாரும் கடமையே கண்ணாக வேறொரு காரியத்தில் ஈடபட்டிருந்தனர்.

வெறிச்சோடி கிடந்த வருகையாளர் பகுதியில் இருந்த வெளிநாட்டு பயணிகளின் பெட்டிகளை திறந்து, அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிச் செல்வதில் இவர்கள் கண்ணும் கருத்தமாக இருந்த காட்சி சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது.

மேலும், அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து உள்ளே இருந்த பணத்தை பொலிசார் அள்ளிச்சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகளை கண்ட விமான நிலைய உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. பதிவுகளில் இடம் பெற்றிருந்த பொலிசார் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 7 பொலிசார் மீதும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டரைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பொலிசார் இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இந்தியாவின் இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரிப்பு..!

vavuniyaஇலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியா வழங்கிய இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி, கடந்த வாரத்தில் இந்தியாவினால் இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திடம் ராஜதந்திர ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்பில் குறித்த இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கையளித்தார்.

அதில் மீனவர்களின் தடுத்து வைத்தல் காரணமாக அவர்களின் குடும்பங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தமது மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் உள்ளிடுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று இலங்கை இந்தியாவிடம் கேட்டுள்ளது. இதனை தடுக்கும் போதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கிடைக்கும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயத்தில் இலங்கை தமது உள்ளூர் சட்டங்களை மதித்து செயற்படவேண்டிய அவசியம் உள்ளதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் கருணாதிலக்க அமனுகம தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கையின் சிறைகளில் மனிதாபிமான முறையிலேயே நடத்தப்படுவதாகவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

கோல் கீப்பராக மாறும் டோனி!!

msd

உலகின் மிகப்பெரிய இங்கிஷ் கால்பந்து லீக் தொடரின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் என்று மூன்றுவித இந்திய அணிக்கும் டோனி தலைவராக உள்ளார்.

2007ல் T20, 2011ல் உலகக் கிண்ணம், இந்த ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம் என்று மூன்று கிண்ணங்களை வெற்றிபெற்றுள்ளார்.

இவரை, இங்கிலீஷ் பிறீமியர் லீக் கால்பந்து தொடரின் இந்திய தூதராக நியமித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம். இதையடுத்து, இத்தொடரை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில், அடுத்த வாரம் முதல் டோனி தோன்றவுள்ளார்.

அதாவது கால்பந்து போட்டியுடன் இணைந்திருங்கள் என்று அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் டோனி அழைக்கவுள்ளார். டோனி இயற்கையாகவே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். மான்செஸ்டர் யுனைடெட் கழக அணியின் தீவிர ரசிகர்.

இது குறித்து டோனி கூறுகையில் கிரிக்கெட் போட்டிகளில் பிசியாக இல்லாத வார நாட்களில் கால்பந்து போட்டிகளில் இணைந்து விடுவேன். எனது பள்ளி நாட்களில் கால்பந்து விளையாடும் போது நான் தான் கோல் கீப்பராக இருப்பேன்.

இன்றைக்கும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் கால்பந்து விளையாடித்தான் என்னை தயார் செய்து கொள்வேன். கிரிக்கெட் மீது தீவிர பற்று வைத்திருக்கும் அதேநேரம், இந்திய விளையாட்டு ரசிகர்கள், அனைத்து போட்டிகளையும் ரசிக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும்.

இங்கிலீஷ் லீக் தொடரின் போது 100 போட்டிகளுக்கும் மேல் இந்தியில் வர்ணனை செய்யவுள்ளது, கால்பந்து போட்டிகளை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

இம்முயற்சி இந்தியா முழுவதிலும் புதிய ரசிகர்களை கொண்டு வரும் என்றும் இதேபோல மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் டோனி கூறியுள்ளார்.

கவுண்டமணி கதாநாயகனாகும் 49ஓ..!!

kowndamani

1990 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த படங்கள் காமெடியில் களைகட்டின.

இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த 8 வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தற்போது சாந்தனு நடிக்கும் வாய்மை என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகான நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு 49ஓ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

49ஓ என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டிய படிவம். அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்காக, இது அரசியல் படம் என்று கூறமுடியாது. இந்த படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறாராம்.

இதுதவிர இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவுண்டமணி நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவருகின்றது ஜெய்ஹிந்த் 2..!!

jaihind2ஜெய்ஹிந்த் ஹிட் அலைவரிசையைத் தக்கவைப்பதற்காக ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி வருகிறார் அர்ஜுன். மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா இதிலும் அர்ஜுனுடன் ஜோடி சேர்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அர்ஜுன் “படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்து, அதில் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கினோம்.

பெற்றோர்கள் குழந்தைகளைத் தங்கள் சொத்தாக மட்டுமே நினைக்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களின் சொத்து மட்டுமல்ல, இந்த நாட்டின் பொக்கிஷம். அப்படிப்பட்டப் பொக்கிஷத்தை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கதைக்கருவாக ஜெய்ஹிந்த்-2வில் கையாண்டிருக்கிறேன்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லண்டன் ,டெல்லி, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கல்வி பற்றிய படம்தான் என்றாலும், கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம்” என்றார்.

சிறுநீர் கழித்த விவகாரம் : பனேசரின் தாயார் ஆவேசம்!!

Monty-Panesar

குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விடயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என மொன்டி பனேசரின் தயார் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர், குடிவெறியில் கிளப் பாதுகாவலர்கள் மீது, சிறுநீர் கழித்து சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் இவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து பனேசரின் தாயார் குர்ஷரன் கவுர் கூறுகையில்

“பனேசர் செய்தது ஒரு விடயமே அல்ல. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. பெற்றோர் என்ற முறையில் இதற்காக வருத்தப்படுகிறோம், அவ்வளவு தான். மற்றபடி இது முடிந்து போன பிரச்னை. இதுகுறித்து வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

வவுனியா, முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது!!

arrest

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல பெண்களை ஏமாற்றி மேசடியில் ஈடுபட்ட நபர்ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பகுதியில் வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த குறித்த நபரினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் பெற்ற பணத்தினை செலுத்த மறுத்து வந்ததாகவும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறையிட்டுள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் குத்திக்கொலை (படங்கள்)..!!

MURDER

மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.  2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.

vavuniya1 vavuniya2 vavuniya3

சச்சின், பொண்டிங்கை விட லாரா தான் சிறந்த வீரர் : அப்ரிடி அதிரடி!!

afridi

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாகவே லாராவா சச்சினா சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற கேள்வியும் விவாதமும் தொடர்ந்தபடிதான் உள்ளன. சமீபத்தில் பொண்டிங் இந்த விவாதத்தை மேலும் சூடாக்கி விட்டுப் போனார். இந்த தொடர் விவாதத்தில் தற்போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடியும் தலையை விட்டுள்ளார்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் லாராதான் சிறந்தவர் என்பது எனது கருத்து. அவரைப் போன்ற வீரரை நான் பார்த்ததில்லை. சச்சின், ரிக்கி பொண்டிங் ஆகியோர் ஜாம்பவான்களாக இருந்தபோதிலும் அவர்களை விட ஒரு படி மேலான நிலையில்தான் இருக்கிறார் லாரா.

லாராவை வீழ்த்துவது என்பது மிகவும் கஷ்டமான விடயம். ஒவ்வொரு விதமான கிரிக்கெட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர் லாரா. பவுண்டரிகள் அடிப்பதில் அவரை மி்ஞ்ச முடியாது.

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை மெக்கிராத் சிறப்பான பந்து வீச்சாளர் என்றும் அதேபோல முகமட் ஆசிப்பும் நல்ல பந்து வீச்சாளர் எனவும் கூறினார்.