யாழில் பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளிய வாகனம் : பயணித்தவர்கள் மாயம்!!

யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக பயணித்த வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மித்த சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவத்திடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் , விபத்துக்கு உள்ளான வாகனத்தினையும் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர். வாகனம் தொடர்பிலும் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

திருமணமான சில மணி நேரத்தில் மணமக்கள் இருவரும் பலியான சோகம்!!

திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என மேலும் அறுவர் அந்த வெடிப்பில் உயிரிழந்ததுடன் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் துயரம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (11.01.2026) இடம்பெற்றது. வெடிப்பு காரணமாக வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.

மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டு தூக்குப் படுக்கைகளில் கொண்டுசென்றனர். எரிவாயுக்கசிவு காரணமாக வெடிப்பு நேர்ந்ததாக அவசரகால உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பில் அருகிலிருந்த மூன்று வீடுகளும் சேதமடைந்தன.

முதல்நாளான சனிக்கிழமைதான் தம் மகனின் திருமணம் நடந்ததாக ஹனிஃப் மசிஹ் கூறினார். வெடிப்பு நேர்ந்தபோது புது மணமக்கள், குடும்பத்தினர், விருந்தினர்கள் ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

இந்நிலையில் திருமண “கொண்டாட்ட நிகழ்வு துயரத்தில் முடிந்தது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது,” என்று பாகிஸ்தான் மேலவைத் தலைவர் யூசுஃப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோர விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தாய், மகன் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதிவேகமாக வந்த உந்துருளியும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வீட்டுப்பணிப்பெண்ணும் அடங்குவதாகவும், அவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 61 வயதான ஹேமா பரணகம, அவரது மகன் லஹிரு ஷெஹான் டி கோஸ்டா, 26, மற்றும் அவர்களது உறவினர் மேரி தெரசா கோஸ்டா 84 உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞர் பிரபல ஹோட்டலில் சமையல்காரர் எனவும், அதே நேரத்தில் உயிரிழந்தவரின் அத்தை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நடந்த நேரத்தில் தாய், மகன்,அத்தை மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோர் அனுராதபுரத்திற்கு யாத்திரைக்காக காரில் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது வானில் பயணித்த 6 வயது சிறுவன், நான்கு பெண்கள் மற்றும் சாரதி உட்பட ஏழு பேர் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த மூவரின் பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட உள்ளது.

தீப்பற்றிய வீட்டில் கிடைத்த பெண்ணின் உடல் : பின்னர் வெளியான அதிரவைக்கும் உண்மை!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டுக்குள் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் புகையால் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 3ஆம் திகதி, பெங்களூருவிலுள்ள ராமமூர்த்தி நகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தீயணைப்புத்துறையினருடன் அங்கு விரைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிப்பதைக் கண்டுள்ளார்கள். விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷர்மிளா (32) என தெரியவந்தது.

அவர் புகையில் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், தடயவியல் நிபுணர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையில், ஷர்மிளாவும் அவரது வீட்டுக்கு எதிரே குடியிருக்கும் கிருஷ்ணய்யா (18) என்னும் இளைஞரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள, அதிரவைக்கும் உண்மை ஒன்று வெளியானது.

ஆம், கிருஷ்ணய்யா ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பால்கனியிலுள்ள ஜன்னல் வழியாக ஷர்மிளாவின் வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணய்யா, ஷர்மிளாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

ஷர்மிளா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கிருஷ்ணய்யா ஷர்மிளாவின் கழுத்தில் தாக்கியதுடன், அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

அது கொலை என தெரியவராமல் இருப்பதற்காக, கட்டிலின்மேல் துணிகளைப் போட்டு கிருஷ்ணய்யா தீவைத்துவிட்டு வெளியேற, தீ வீடு முழுவதும் பரவியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணய்யாவிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு : புடவையால் தெரியவந்த உண்மை!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்பட்ட அந்த எலும்புக்கூடு யாருக்கு சொந்தமானது என அடையாளம் காணுவது அதிகாரிகளுக்கு கடினமான விடயமாக இருந்துள்ளது.

இந்நிலையில், அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புடவையால், அந்த உடல் அந்தப் பகுதியில் வாழும் பீதாம்பர் என்னும் நபரின் மனைவியான பூனம் (30) என்னும் பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.

என்றாலும், அடையாளம் காண்பதில் எந்த தவறும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த உடல் பாகங்கள் DNA பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பூனமுக்கும் அவரது கணவரான பீதாம்பருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,

தன் மனைவி காணாமல் போனதாக அவர் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல் : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் நேற்று (12.01.2026) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான விதிகளின்படி, தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) அரச அதிகாரி ரூ.10,000/- முற்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை வட்டி இல்லாமல் 08 மாதாந்திர தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

 

நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு : பெரும் துயரத்தில் உறவுகள்!!

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

52 வயது மதிக்கத்தக்க தோதல்ல தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் நாளாந்த வேலை அடிப்படையில் பணிபுரிந்து வந்த பெண் இவ்வாறு தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகின்றது.

கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பலி : பலர் காயம்!!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று(12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

முச்சக்கர வண்டியில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன்!!

மொனராகல, தனமல்வில – வெல்லவாய வீதியில் நிறுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன், மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனமல்வில-வெல்லவாய வீதியில் தேநீர் அருந்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது, ​​அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த எதிலிவெவ வெஹெரய பகுதியைச் சேர்ந்த 23 வயதான நதுன் தீக்ஷன ஹேரத் என்ற இளைஞன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்று!!

நாட்டில் வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பரவல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா வழக்குகளின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ஒன்பது நாட்களில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2,170 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு விருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : கருப்பையை பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சி!!

புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். கடந்த 9 ஆம் திகதி 1990 அம்பியுலன்ஸ் சேவையால் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்ய வைத்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் அவரை ஸ்கேன் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நோயாளியை விசாரித்த போது, ​​அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி முதலாம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார்.

விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்தபோது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட நோய்க்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் – வேன் மோதி விபத்து : மூவர் பலி : பலர் காயம்!!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஊடான யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

குருநாகல் – மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு தொடருந்து மார்க்கத்தில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹோ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த தொடருந்து மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் இன்று (11) காலை மோட்டார்சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரொருவர் குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறி மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.