நாட்டில் கொட்டித்தீர்க்கவுள்ள கனமழை : மக்களே அவதானம்!!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ‌

காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு!!

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய நிலையில், 96ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்திற்கு வந்தது. இது 2024 ஆம் ஆண்டு 96வது இடத்திலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்பில், நாடு 97ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதன் 2024 நிலையை விட ஒரு இடம் குறைவாக காணப்பட்டுள்ளது.

உலகளாவிய சூழலில், அமெரிக்க கடவுச்சீட்டு ஜூலை தரவரிசையில் இருந்து இரண்டு இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது,

இது குறியீட்டின் 20 ஆண்டுகால வரலாற்றில் மிகக் குறைந்த நிலையைக் குறிக்கிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன. மறுமுனையில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

உலகில் பார்வையிட சிறந்த நாடுகளில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை!!

2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

முன்னணி பயண வலைத்தளமான Kayakஇன் பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் 2025 கோடையில் Kayak இன் முதல் 10 விமான பயண தேடல்களில் கொழும்பு நகரமும் இடம்பிடித்தது.

பட்டியலில் தென் கொரியா நான்காவது இடத்தையும், அர்ஜென்டினா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. மொராக்கோ ஆறாவது இடத்தையும், நோர்வே ஏழாவது இடத்தையும் வென்றுள்ளது.

பட்டியலில் மால்டோவா எட்டாவது இடத்திலும் ஹொங்கொங் ஒன்பதாவது இடத்திலும் டென்மார்க் பத்தாவது இடத்திலும் உள்ளன.

 

பேருந்தில் பயணித்த யுவதிக்கு நேர்ந்த துயரம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த யுவதி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியான சேட்டைகளுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேவாயலம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான யுவதியை பல்வேறு வகையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த யுவதியை பல்வேறு தடவைகளில் சந்தேக நபர் அங்க சேட்டைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக அச்சம் அடைந்த யுவதி பல பேருந்துகள் மாறி மாறி சென்ற போதும் சந்தேக நபரின் துன்புறுத்தல் தொடர்ந்துள்ளமையினால் ஆத்திரமடைந்த யுவதி அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் தனது சகோதரிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியால் வரும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். பொலிஸ் நிலையத்தை அண்மித்து வந்த பேருந்தை நிறுத்தி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்

குறித்த சந்தேக நபர் நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் பேருந்துகளில் இவ்வாறு மோசமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குருணாகலில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யுவதியே இந்த துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது வயதை காரணம் காட்டி இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தெரிகிறது.

ரக்ஷனாவின் பெற்றோர் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி ரக்ஷனாவை அவரது தாயார் திட்டி வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த ரக்ஷனா, நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரக்ஷனா ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக வீட்டை விட்டு வெளியேறியதுடன்,

எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலர்களுக்குள் தகராறு அடுத்தடுத்து இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால்,

மன உளைச்சலில் இருந்து வந்த 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி பூபதிக்கும், மாணவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி, “இனிமேல் எனக்கு நீ தேவையில்லை.

நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன் நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த 11-ந்தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னால் தான் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை : நாய்களுக்கு புதிய தண்டனை!!

இந்தியாவில் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை கடித்தால் நாய்களுக்கு வாழ்நாள் சிறை விக்கப்படும் என உத்தர பிரதேச அரசு நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது .

நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், ரேபிஸ் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

இதனால் நாய்களை காப்பகத்தில் அடைக்க இடப்பட்ட உத்தரவிற்கும் நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மாநிலங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து உத்தர பிரதேச அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெரு நாய் ஒன்று எந்த தூண்டுதலும் இன்றி மனிதர்களை கடித்தால், முதல்முறை கடிக்கும்போது 10 நாட்கள் காப்பகத்தில் அடைக்கப்படும்.

அதற்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு விடுவிக்கப்படும். அதற்கு பிறகு வெளியே செல்லும் நாய் மீண்டும் யாரையாவது கடித்தால் அது ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல நாய் வளர்க்க லைசென்ஸ் பெறுபவர்கள் அதை கடைசி வரை கைவிடாமல் வளர்ப்பதற்கான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்திர பிரதேச அரசின் இந்த விநோத தண்டனை பேசுபொருளாகியுள்ளது.

பேஸ்புக் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண் : இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!!

இந்தியாவில் காதலனை சந்திக்க 600 கிலோ மீட்டர் பயணம் செய்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவை சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் பார்மர் நகரில் வசித்து வரும் மனா ராம்(Manaram) என்ற பள்ளி ஆசிரியருடன் கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனா ராமிடம் தெரிவித்துள்ளார், ஆனால் மனா ராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 10ம் திகதி முகேஷ் குமாரி தனது ஆல்டோ காரில் சுமார் 600 கிலோ மீட்டர் பயணம் செய்து மனா ராமின் கிராமத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் காதலன் மனா ராம் கடும் கோபம் அடைந்துள்ளார், அத்துடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்திய நிலையில் திருமணம் குறித்து பிறகு பேசலாம் என முகேஷிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் இரும்புத் தடியால் முகேஷின் தாக்கி மனா ராம் கொலை செய்துள்ளார். மேலும் முகேஷை காரில் அமர வைத்து விபத்து போல உருவாக்க காரை சாலையில் இருந்து உருட்டி விட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த பொலிஸார், முகேஷ் இறந்த போது இருவரின் செல்போன்களும் ஒரே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்து மனா ராமிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் மனா ராம் குற்றத்தை ஒப்புக்கொண்ட தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்திற்கு தயாரான பெண்ணிற்கு அதிகாலையில் நேர்ந்த பெரும் சோகம்!!

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பெண் , டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும், டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு அழைத்து வருவதற்காக தவலமயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

உறக்கத்தில் அரச ஊழியரான பெண் மரணம் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!!

மாத்தளை, தம்புள்ளை, பிரதேசத்தில் தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் 34 வயதானவர். அவர் ஒரு பிள்ளையின் தாயார், அவர் தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் மேலாண்மை சேவை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ஒரு பெண் தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தனது மனைவி தேர்வுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவள் எழுந்திருக்காததால், அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் அப்பெண்ணின் கணவன் கூறியிருந்தார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவ விகாரைக்கு அருகே கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மனி பெண்ணை அழைத்து சென்று தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு நண்டுகளைக் காட்ட கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் கடற்றொழிலாளர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் தங்காலை, பள்ளிக்குடாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுயடைவராகும். துஷ்பிரயோகத்திற்குள்ளான ஜெர்மன் பெண் மற்றும் சிலர் கடந்த சில நாட்களாக சினிமோதராவின் நகுலுகமுவவில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் தங்கியுள்ளனர்.

தவறான நடத்தைக்கு உள்ளான பெண் தங்காலை, பள்ளிக்குடாவ விகாரை அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடற்றொழிலாளர் கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மன் பெண்ணை அணுகி, தான் ஒரு கடற்றொழிலாளர் எனவும் நண்டுகளைப் பார்க்க விரும்பினால், வருமாறு கடற்கரையில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பித்து 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் வேன் – லொறி மோதி விபத்து : ஒருவர் பலி, 7 பேர் காயம்!!

தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியில் களனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சிறுவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் எதிர்பார்க்கப்படுகின்ற BYD வாகனங்கள் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை!!

BYD ரக வாகனங்களின் இயந்திரத் திறன் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தால் முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் இந்த நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், பின்னர் இறுதி ஆய்வுகள் நிலுவையில் இருந்த நிலையில் வங்கி உத்தரவாதங்களின் பேரில் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

குறித்த வாகனங்களை இறக்குமதி செய்த ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான நடவடிக்கைகளின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் அறிக்கை தொடர்பான விடயம் அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து – 11 பேர் காயம்!!

இரத்தினபுரி – ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியொன்றை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம் : கதறும் குடும்பம்!!

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.

நேற்று வழமை போல் நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 27 வயது தாய்!!

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4 குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கர்ப்பிணி தாயிற்கு அறுவை சிகிச்சையில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த அவரது கணவர் விகாஸ் ககுர்தியா, சஸ்வாத்தில் ஒரு கொத்தனார் வேலை செய்கிறார். அவர்களின் எளிமையான வீடு இப்போது ஏழு சிறிய தேவதைகளின் மகிழ்ச்சியான குழப்பம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது,

அதேவேளை 4 குழந்தைகளை பிரசவித்த காஜல் இதற்கு முன்பு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருந்தது. இதனால் காஜலுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும், அரிதான நிகழ்வு என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் டாக்டர்கள் தெரிவித்த்துள்ளனர்.