அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி நிலவரப்படி,

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது.

இது யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே, மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், “(09.01.2026) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வங்காள விரிகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மட்டக்களப்புக்கு கிழக்காக 116 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அதன் வெளிவலய முகில்கள் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை தொட ஆரம்பித்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பதிவாக தொடங்கியுள்ளது. காற்றும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளது.

ஆகவே, அடுத்த வரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமானவை.

எனவே கனமழை, வேகமான காற்று வீசுகை தொடர்பில் தயவு செய்து மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம் : கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்!!

கொழும்பு – மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்

இதன்போது தீயை அணைக்க கோட்டை மற்றும் ஹொரணையை சேர்ந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தின் போது தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 26 இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள், கோடிக்கணக்கானசொத்துக்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.

கனடாவில் கோர விபத்து – இலங்கை தமிழ் பெண் பலி!!

கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான அனுஷா ராஜகாந் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 9 மணியளவில் Islington Avenue மற்றும் Dixon Road சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அனுஷா நடைபாதையில் வீதியை கடந்து செல்கையில், ​​அவர் மீது வாகனம் மோதியுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் 6G தொழில்நுட்பம்!!

இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6Gயின் முன்னுரிமை திட்டம் (sixth-generation) network அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்லாந்தின் ஒலு Oulu பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Indian Institute of Technology (IIT) ஆகியவற்றின் பிரதிநிதிகள் (07ஆம் திகதி ) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருடன் கலந்துரையாடினர்.

சர்வதேச கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையின் டிஜிட்டல் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், நாட்டை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான பிராந்திய மையமாக நிலைநிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

Oulu பல்கலைக்கழகத்தின் 6G முன்னுரிமை திட்டம் மற்றும் சென்னை ndian Institute of Technology (IIT) இன் புதுமை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்துதல், உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மறுமளர்ச்சிக்கு ஆதரிப்பது ஆகியவற்றின் முதல் படிமுறையின் அடுத்த கட்ட நகர்வுகளின் ஆரம்பமாக அமையவுள்ளது.

இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!!

பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள வீடுகளில் தேடி பயாகல பொலிஸில் முறைபாடு அளித்துள்ளனர்.

அதன்படி, விசாரணைகளைத் தொடங்கிய பின்னர் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது, ​​வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள், பயாகல பொலிஸார் மற்றும் பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட குழு சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மக்களே பயப்பட வேண்டாம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது.

யாழ் மாவட்டத்திற்குரிய தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி அதாவது, 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.

யாழ். மாவட்ட அரச அதிபரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது அரச அதிபரினால் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை – என்றார்.

 

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் தான் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு கொய்யாப்பழமானது 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ள இந்த பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொய்யாப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தின் அளவை சமநிலையில் பராமரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மலச்சிக்கல் நீங்கும்

கொய்யாப்பழத்தில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலத்தை இளகச் செய்து, மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுவிக்கும் தற்போது நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வை தேடிக் கொண்டிருந்தால், கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.

எடை குறையும்

கொய்யாப்பழம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், உங்கள் தினசரி உணவில் கொய்யாப்பழத்தை சேர்த்து வாருங்கள்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

கொய்யாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. ப்ரீ டயாபெட்டிக் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், அது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் மிகவும் நல்லது.

 

முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் : சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா!!

முல்லைத்தீவு – சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.

சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்விகள்,

1.சிறுமி குகநேசன் டினோஜா மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி மற்றும் நேரம்?

2.வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியரின் பெயர்,குழந்தைகள் வாட்டுக்கு மாற்றப்பட்ட நேரம்?

3.மேற்படி வைத்தியசாலையில் குழந்தைகள் வைத்திய நிபுணர் கடமையாற்றுகிறாரா?அவரின் பெயர்?

4.அவ்வாறு இல்லை என்றால் சிரேஷ்ட வைத்திய அதிகாரியின் பெயர், அன்று அவர் கடமையில் இருந்தாரா?

5.இந்த வைத்தியசாலை எந்த பிரிவுக்குள் அடங்குகிறது.பொறுப்பதிகாரியின் பெயர்?

சம்பவம் நடந்த அன்று அத்தியட்சகர் வைத்தியசாலையில் இருக்கவில்லை.கொழும்பில் இருந்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருந்துகள் அச்சந்தர்ப்பத்தில் இருந்த வைத்தியரால் ஆராயப்பட்டதா போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், முதல் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கை அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.அதை கொண்டு மேலதிக பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

வைத்தியசாலை ஊழியர்களால் மேற்கொண்ட தவறால் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பாலத்தை கடக்க முயன்ற வேன் – பேருந்து மோதி கோர விபத்து!!

பாலத்தை கடக்க முயன்ற வேன் ஒன்று எதிராக வந்த பேருந்தில் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்லாறு பகுதியில் பாலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன நிலையில் இதற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒடுங்கிய பாலத்திலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என திணைக்கள குறிப்பிடுள்ளது.

இத் தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,

ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகத் தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம் : மின் தடை ஏற்படலாம் – கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (08.01.2026) தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதால் மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அறிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வளிமண்டல திணைக்கள எதிர்வுகூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரையில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன்,

60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அவதானமாக இருங்கள் : யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!!

நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள், தயாராக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (07.01.2026) இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம் வழங்கிய முன்னறிவிப்புகளின்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலும் ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறையும் அறிவித்துள்ளது.

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம், உயர்வடையும் கடல் அலைகள்!!

புதிய இணைப்பு : இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது.

இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இலங்கை கடற்கரையை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு அதிகம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.5 மீட்டர் வரை எழும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் குறித்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

நாளை (09) பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளிலிருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலை நாட்டை நோக்கி உள்நுழையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதகமான வானிலை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கருணாநாயக்க தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைவிடாத மழை

இதன் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவிடாத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாடு முழுவதும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் மெரில் மெண்டிஸ் கூறினார்.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 

புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22000 பேர் உயிரிழப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன என்றும், அவற்றிற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 15 இலட்சம் பெரியவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்.

இந்த நிலையில், உலகளவில் ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கும் ஒரு புகையிலை தொடர்பான மரணம் பதிவாகிறது என தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகார சபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் சிகரெட்டுகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை : மாலை 5.30 மணிக்கு பிறகு நாட்டிற்குள் நுழையவுள்ள தாழமுக்கம்!!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் நாட்டை தாக்கிய போது பெரும்பாலான பகுதிகளில் அறிவுறுத்தல்களை பின்பற்றி விரைவான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படத நிலையிலேயே பெருமளவான பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்க தொகுதியானது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,

ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாளை (09.01.2026) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மழையுடன்கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உட்பட்ட 26 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 24 மத்திய அளவிலான நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது கலாவெவ, கண்டலம வெவ, மாதுரு ஓயா, ராஜாங்கனய ஆகிய நீர்த்தேக்கங்களும் இதில் அடங்குவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விக்டோரியா, ரந்தெணிகல, மொரகஹகந்த, கலு கங்க ஆகியவையும் தற்போது வான் பாயும் மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவு கொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில், நீர்நிலைகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு இடையிலான மோதலில் மகளுக்கு நேர்ந்த துயரம்!!

பொலநறுவையில் வீடொன்றில் பெற்றோருக்கு இடையே நடந்த சண்டையின் போது, ​​12 வயது மகள் படுகாயமடைந்துள்ளார். ஹிங்குராக்கொடயில் மனைவியை கத்தியால் தாக்க கணவன் முயற்சித்த போது அது மகளின் தலையில் குத்தியதாக தெரியவந்துள்ளது.

இதனால் மகள் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.