அநுராதபுரம்,நொச்சியாகம, பஹலமாரகஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (16.09) காலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 03 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்று (15.09.2025) நடவடிக்கை எடுத்தனர்.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றை இளைஞர்கள் செலுத்தி வருவதுடன், அப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அப் பகுதியில் வசிப்போர், மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் வவுனியா மாநகர சபையால் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24 வயதுடைய சுந்தரலிங்கம் அர்ச்சனா என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிச் பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு, காரை ஓட்டிச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து, திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்தார்.
தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இரத்தினபுரி கஹதுடுவ பகுதியில் வைத்து 15 வயதுடைய சிறுவன் ஒருவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் புதிய சைக்கிளை பெறுவதற்காக மாணவனே போட்ட திட்டம் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது அவர் ஓட்டிச் சென்ற பழைய சைக்கிள், கஹதுடுவவில் உள்ள மினுவன்வில காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், ஜூலை 16 திகதி மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டு தப்பி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவனின் வாக்குமூலங்களின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் குறித்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாணவன் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் பாடசாலை நண்பர்கள் மூவரை பலமுறை விசாரித்ததில், மாணவன் தான் கடத்தப்பட்டதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதையும், பழைய சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை வாங்கித் தருவதாக மட்டுமே கூறிக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவனிடம் விசாரணை நடத்திய போது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தன் நண்பர்கள் அனைவரிடமும் புதிய சைக்கிள் இருப்பதாகவும் தந்தையிடமிருந்து புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு செய்ததாகவும், நான் பொலிஸாரிடம் மாட்டடிக்கொள்வேன் என தெரிந்தே அதனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோகர்ணா அருகே பூஜாரிபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா(23).
இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி.
இந்நிலையில் ரக்ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ரக்ஷிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரக்ஷிதா தனது காதலில் உறுதியாக இருந்தார்.
அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திக்கிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதையடுத்து ரக்ஷிதாவுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது பெற்றோரின் அறிவுரையை ரக்ஷிதா கேட்டார். அவர் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.
மேலும் அவர் செல்போன் எண்ணையும் தனது செல்போனில் ‘பிளாக்’ செய்தார். இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் நேற்று காலையில் ரக்ஷிதா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற கார்த்திக், பிரம்மாவர் புறநகர் பகுதியில் வைத்து வழிமறித்தார். மேலும் அவர் காதலை கைவிட்டது குறித்து ரக்ஷிதாவிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரக்ஷிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரக்ஷிதா பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தார். இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடி வந்து ரக்ஷிதாவை மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரக்ஷிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் கார்த்திக், அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று இரவு பிணமாக மீட்கப்பட்டார்.
இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், போலீசுக்கு பயந்து கார்த்திக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மாவர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.
இவ்வாறு இறந்தவர் சம்பூர் கிழக்கு, மூதூரில் வசித்து வந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை மணியளவில் வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் வாள் வெட்டுக்குழு அங்கிருந்து வெளியேறிச் சென்றபின்னரே தாமதமாக வந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலக பாரம்பரிய தளமான சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிலாபத்தில், சிறுமியான தனது காதலிக்கு கருக்கலைப்பு செய்யும் சட்டவிரோத மருந்தினை கொடுத்ததாக கூறப்படும் இனைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம்-வெல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞராகும். 15 வயதுடைய சிறுமி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருந்தொன்றை பயன்படுத்தியமையினால் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரான சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய் சுமார் 03 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சகோதரியுடன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அந்தப் பகுதியிலுள்ள இளைஞனுடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக கர்ப்பம் அடைந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியை பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கர்ப்பத்தை சட்டவிரோதமாக கலைத்த குற்றச்சாட்டில் சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. அதன்படி, இன்றையதினம்(15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,101,491 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 38,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 310,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 34,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) 272,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 29 அன்று ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.
இந்நிலையில், புதிய நாணயத்தாளை சுமூகமாக ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
செயல்முறையின் வேகத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்.
அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகளிலும் தடையின்றி கிடைக்கப்பெறும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13) காலாமானார் .
திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர், மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமூகத்தாலும் நல்ல மனிதராக பார்க்கப்படுகிறார்.
தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நடிகர் விமல் நடித்த ‘களவாணி’ படத்தை மிஞ்சும் வகையில் சேசிங்க் நடந்த நிலையில், தனது காதலிக்கு காருக்குள் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார் என்ஜினீயர் ஒருவர்.
தனது கண் முன்னே மகளுக்கு காருக்குள் வைத்து காதலன் தாலிக் கட்டியதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அஜய் (26).
இவருடைய உறவினரான நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தண்டபாணியின் மகளும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவியுமான நந்தினியும் (21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலனைத் திருமணம் செய்துக் கொள்வதில் நந்தினி உறுதியுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டனர். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நந்தினி. நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்தில் நாமக்கல் வந்து இறங்கியுள்ளார்.
அங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி, நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில் காதலன் அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் காரில் காத்திருந்த நிலையில், அவர்களின் காரில் நந்தினி ஏறி உள்ளார்.
இதனிடையே கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் வந்த மகளை அழைத்து செல்ல அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி தனது கண் எதிரிலேயே மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
மகள் காதலனுடன் காரில் ஏறுவதைக் கண்டு, அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே மோதிரமும் மாற்றி கொண்டனர்.
காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் காரில் இருந்த அஜய் உள்ளிட்டோரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு, அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜய்யை காதலித்து வந்த நிலையில், தான் சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ.
சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.
இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.
பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.
அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார்.
இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியா, தனது மகள் யோகஸ்ரீயிடம் செல்போன் மற்றும் ரூ.500ஐ கொடுத்து, வைத்திருக்கும்படி கூறினார். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டார்.
பிரியா வீட்டுக்கு திரும்பி வந்து மகளிடம் பணத்தையும், செல்போனையும் கேட்டார். அப்போது யோகஸ்ரீ சரியான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர் தனது மகளை கண்டித்துவிட்டு வெளியே சென்றார்.
அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
வெளியே சென்றிருந்த பிரியா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே யோகஸ்ரீ உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முருங்கை அறுவடையில் பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முருங்கைக் காயானது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பாம்மைப் போன்ற வடிவில் 6 அடி நீளத்தில் அறுவடை செய்யப்பட்ட முருங்கைக்காயை அந்தப் பகுதியிலுள்ள பார்வையிட்டு வருகின்றனர்.