விபத்தில் உயிரிழந்த கணவர் : கொழும்பில் அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!!

கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் லியனகே கலும் துஷார சில்வா என்பவர் விபத்துக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி ரசோமா ஹசந்தி திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி, நானும் உங்களுடன் வந்துவிடுவேன் என கதறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவரும் உயிரிழந்துள்ளார்.

ரசோமாவின் பூதவுடல் கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு களனி, கோனவலயிலுள்ள பமுனுவில இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ் வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை செப்டெம்பர் மாதம் நடத்த முடியும்.

பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எகிப்து ராணியின் சிலையை தனதாக்கிக்கொள்ள மூன்று நாடுகளிடையே போட்டி!!

ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள அருங்காட்சியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள எகிப்திய ராணி ஒருவரின் சிலையை தனதாக்கிக்கொள்ள 3 நாடுகள் உரிமைகோருவதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இதற்காக உரிமைகோருகின்றன. நெஃபெர்டிட்டி(Nefertiti) என்ற எகிப்திய பலன்களை இராணி ஒருவரின் சில்லைக்காகவே இவ்வாறு போட்டிகள் உருவாகியுள்ளன.

சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த பெண் அகெனாடென்(Akhenaten) எனும் எகிப்திய மன்னரின் மனைவி ஆவார். ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள அருங்காட்சியம் ஒன்றில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.

1924ஆம் ஆண்டு முதல், இந்த சிலை தங்கள் நாட்டிலிருக்கவேண்டும் என எகிப்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரி வருகின்றன.

உலகிலேயே அழகான பெண் என கருதப்படும் நெஃபெர்டிட்டியின் சிலையை, ஜேர்மன் ஆய்வாளரான Ludwig Borchardt என்பவர் ஆய்வொன்றில் மூலம் கண்டுபிடித்ததால், அதை அவர் நேரடியாக ஜேர்மனிக்குக் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், அவர் ஒரு எகிப்து ராணி என்றும், அவரது சிலை எகிப்தில்தான் இருக்கவேண்டும் என எகிப்தியர்கள் உரிமைகோருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிமிடத்தில் 300 கிராம் மிளகாய் சாஸை சாப்பிட்டு இளைஞர் கின்னஸ் சாதனை!!

சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள், லைக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி காரமான மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் சவாலில் இளசுகள் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் Chase Bradshaw என்பவர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டார். இதனை சாப்பிட்டதால் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆடை காயப்போட்ட கம்பியில் மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி உடல் கருகி பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் வசித்து வருபவர் 38 வயது ராமு. இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 30 வயது சரளா.

இவர்களுக்கு 13 வயதில் கீர்த்தனா, 6 வயதில் மேகா என இருமகள்கள். ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில் காயப்போட்டுள்ளார்.

அப்போது திடீரென மீட்டர் பெட்டியிலிருந்து கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால் ராமு அலறினார். அவர் அலறிய சத்தம் கேட்டு வந்த சரளா அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

இதனால் சரளாவையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன் அறுவை சிகிச்சையில் விபரீதம்!!

பெங்களூருவில் தொண்டை வலிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் உயிரிழந்ததாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பங்கி ராமநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது. தொண்டையில் புண் இருந்த மைக்கேல்(7) என்ற சிறுவன் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் மைக்கேலுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேற்று முடிவு செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர் ஸ்வேதா பாய் என்பவர் அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

இந்த மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே மைக்கேல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அந்த டாக்டர், மைக்கேலின் பெற்றோரிடம் கூறவில்லை. அதற்கு மாறாக சிறுவன் மைக்கேலுக்கு இதயக்கோளாறு இருப்பதாக கூறியுள்ளார். இதனால், மைக்கேலின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதன் பேரில் அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். பரிசோதனையில் மைக்கேல் இறந்த விஷயம் தெரிய வந்தது. சிறுவன் மைக்கேல் மயக்கமடைந்த பிறகு 3 ஊசிகள் போடப்பட்டதால் அவர் அளவுக்கதிகமான மருந்தை உட்கொண்டதால் இறந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மைக்கேலின் பெற்றோர் கூறுகையில், எங்களின் வலி யாருக்கும் ஏற்படக்கூடாது. எங்கள் மகனுக்கு நீதி வழங்குங்கள் என கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மைக்கேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை இறந்த தகவல் அறிந்த டாக்டர் ஸ்வேதா பாய் தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவிக்கும் 17 வயது சிறுமி : நுரையீரலில் ஏற்பட்ட துளை!!

பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமி வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் என்ற சிறுமி வாரத்திற்கு சராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார்.

அதாவது 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார். அதையடுத்து அவ் கடந்த மே மாதம் 11 ஆம் திகதியன்று கடும் வயிற்று வலியால் அவதியுற்று, மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவர் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். கைலாவை பரிசேதனை செய்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக புகைப்பிடித்ததால் நுரையீரலில் துளை விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுரையீரலில் ஏற்பட்டுள்ள துளையானது மேலும் விரிவடையாமல் இருப்பதற்கு, ஐந்தரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும், யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் : காயமடைந்தோருக்கு பெருந்தொகை இழப்பீடு அறிவிப்பு!!

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விபத்தில் காயமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளது.

இது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம், லேசாக காயமடைந்தோருக்கு 10,000 டொலர் இழப்பீடாக அறிவித்துள்ளது.

மேலும், ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக 25,000 டொலர் இழப்பீடு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களின் நிலை அறிந்து பின்னர் உரிய இழப்பீட்டு அளிக்கப்படும் என்றும் உறுதி அலித்துள்ளது.

கடந்த மே மாதம் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மியான்மர் பகுதியில் வைத்து பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதில் பலர் காயங்களுடன் தப்பிய நிலையில் பிரித்தானிய பயணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

குறித்த விமானம் உடனடியாக தாய்லாந்துக்கு திருப்பிவிடப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து 4.6 நொடிகளில் 178 அடி கீழே இறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலர் காயங்களுடன் தப்பியதை அடுத்து, தாய்லாந்து மருந்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தற்போது காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த பயணிகளின் பயணக் கட்டணமும் முழுவதுமாக திருப்பித் தரவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 20ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தற்போதும் 20 பயணிகள் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். தொடர்புடைய விமானத்தில் சம்பவத்தின் போது அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் பயணிகள் உட்பட 211 பேர்களும் 18 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பருடன் இணைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

கொழும்பு – தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த 31 வயதுடைய பெண் தனது கணவருடன் வாடகை அடிப்படையில் வீடொன்றில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார். வெளிநாடு செல்லும் கணவனை விமான நிலையத்திற்கு விட்டு வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கிரிபத்கொட ஹுனுபிட்டிய வீதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று இரவு 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் அதிநவீன கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காரின் காற்று பலூன்கள் இயக்கப்பட்டதால் ஓட்டி வந்த பெண் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் பின்பக்கத்தில் இருந்த ஒருவர் சிறு காயங்களுடன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டெய்னரின் வலது புறத்தில் இருந்த எரிபொருள் தொட்டி மீது கார் மோதியது.

கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், கார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாகொலவில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கொள்கலன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா?

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 26ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்வரும் 12ம் திகதியும் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க திர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதை!!

சிலாபம், ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று பராமரிப்பு நோக்கத்திற்காக இவ்வாறான அவசர அகழ்வை மேற்கொண்டுள்ளனர்.

சுரங்கப்பாதைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செங்கல் சுவரின் ஒரு பகுதியும் தோண்டப்பட்ட இடத்தில் மிகத் தெளிவாகக் காணப்பட்டது. தற்போதைய சிலாபம் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிடம் டச்சு காலத்தில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த சிறைச்சாலையில் இருந்து சிலாபம் துறைமுகம் வரை ரகசிய சுரங்கப்பாதை இருந்ததாக தொல்லியல் பதிவுகள் இருப்பதாக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டேவிட் கயான் இந்திக்க தெரிவித்தள்ளார்.

இந்த சுரங்கப்பாதையின் பாகங்கள் இதற்கு முன்னரும் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பாக முறையான அகழ்வாராய்ச்சி எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

யாழில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணம் – அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது. அராலி வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் தந்தையும், சகோதரனும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவர் இன்று உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சடலமாக கிடந்த 32 வயது நடிகை… துர்நாற்றம் வீசியதால் தெரிந்த விடயம்!!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இந்தி நடிகை நூர் மாலபிகா தாஸ், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நூர் மாலபிகா தாஸ் (32). விமான பணிப்பெண்ணாக வேலைபார்த்த இவர், பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.

Siskiyaan, Backrod Hustle, Walkman Upaya, Charamsukh வெப் தொடர்களில் நடித்துள்ள நூர் மாலாபிகா, 2023யில் கஜோல் நடிப்பில் ‘The Trial’ வெப் தொடரில் தோன்றினார். சமூக ஊடகங்களில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த வாரம் நூர் மாலாபிகாவின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம வீசுவதாக பொலிஸிடம் புகார் கூறியுள்ளனர்.

இதனையடித்து பொலிஸார் வந்து பார்த்தபோது நூர் மாலாபிகா மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக இருந்தது தெரிய வந்தது.

அவரின் அறையில் இருந்து மருந்து, செல்போன் மற்றும் டைரி ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நூர் மாலாபிகா தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

வானும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

இன்று (செவ்வாய்கிழமை) காலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வானில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் பேருந்துக்கும் வானுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளது.