முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் S.சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து!!

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (11) அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியின் தளங்குடா பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.சிவமோசன் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி, மின்தூண் ஒன்றில் மோதுண்டுள்ளது.

பொத்துவில் – அறுகம்பை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் S.சிவமோகன் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த நபர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செல்லப்பிராணியுடன் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தனது செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரம்புக்கன, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய பல்கலை மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பல்கலை மாணவியின் செல்லப்பிராணியான நாய் கடந்த 4 ஆம் திகதி அன்று வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மரத்தில் மோதி காயமடைந்துள்ளது.

இதனையடுத்து மாணவி தனது நாயை கேகாலை தனியார் கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, நாயின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் நாயை பேராதனையில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 7 ஆம் திகதி அன்று தனது தங்கை மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞருடன் முச்சக்கரவண்டியில் தனது நாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்திசையில் பயணித்த லொறி ஒன்று அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பல்கலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விபத்தின் போது பல்கலை மாணவியின் நாயும் உயிரிழந்த நிலையில், லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற பெண்ணுக்கு கொடிய நோய் : கையை அகற்றிய மருத்துவர்கள்!!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புருலி அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை , அந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் உண்ணுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

74 வயதான இலங்கை பெண்மணி, தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது மகளின் வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தங்கி வந்துள்ளார். கடந்த மாதம் ஒரு நாள், வலியால் இருமல் வந்ததாகவும், அப்போது அவரது ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறியதாகவும் கூறப்படுகின்றது.

அப்போது, ​​அவரது மகள் பெனடோல் கொடுத்ததாகவும் ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைப் பெண்ணுக்கு தொற்றிய பாக்டீரியாவை முதலில் மருத்துவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இருந்து யாழ் வந்து காத்திருந்தவர் கைது : குடும்பத்தினர் தப்பியோட்டம்.!!!

கொழும்பில் இருந்து தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து மோசடி செயலில் ஈடுபட காத்திருந்தவை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது குடும்பத்துடன் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை (09) அன்று குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில், போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் அதற்கு பயன்படும் தாள்களை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்கில் சந்தேகநபர் காத்திருந்துள்ளார் .

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நபரை கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் குடும்பத்துடன் அரியாலையில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து , குறித்த வீட்டுக்கு பொலிஸ் குழு சென்றபோது வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

பாஜக கூட்டணி ஆட்சி வெற்றிக்கு கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்!!

நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிர்ச்சிகர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி கடந்த 4ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.

குறித்த தினத்தில் இந்தியா கூட்டணி முன்னணி வகிக்கிறது என தெரிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளான துர்கேஷ் பாண்டே(வயது 30) சத்தீஸ்கரில் உள்ள காளி கோயிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலில் மனமுறுகிய அவர் பிரார்த்தனை செய்ததுடன் பாஜக வெற்றி பெற வேண்டியுள்ளார். மாலை வேளையில் இந்திய கூட்டணியின் வெற்றி உறுதியானததை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த துர்கேஷ் பாண்டே, கோயிலுக்கு சென்று தனது இடது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார்.

கையில் இருந்து இரத்தம் வழிந்து ஓட, வலியால் துடிதுடித்த துர்கேஷ் பாண்டேவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அம்பிகாப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்!!

கேகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த யுவதி மரணம் தொடர்பில் மரண விசாரணை அறிக்கையை, அது தொடர்பான அதிகாரியான ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.சுரங்க குலதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டது.

வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் பிரகாரம், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தலை, மார்பு உட்பட பல காயங்களினால் ஏற்பட்ட தற்செயலான மரணம் என கேகாலை பிரதேச செயலகத்தின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று ரம்புக்கனையில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு :  கேகாலை மங்களகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை மங்களகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த யுவதி படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த யுவதி ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ரம்புக்கனம், உடகல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்துள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒன்றாக பலியான சோகம்!!

கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கமாலி கோர்ட் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பினீஷ், அவரது மனைவி அனு மற்றும் அவர்களது குழந்தைகள் ஜாஸ்மின், ஜோஸ்னா ஆகியோர் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அந்த பகுதியில் வசித்து வரும் சிலர், காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, வீட்டின் ​​மேல் தளத்தில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.

வீட்டில் உள்ள குடும்பத்தினர்கள் அனைவரும் தூங்கும் ஒரு அறையில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷார்ட் சர்க்யூட் ஏற்படுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று

பரிசோதனை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்த பினீஷ் அங்கமாலி பகுதியில் வியாபாரி செய்து வருகிறார். தம்பதியரின் மூத்த மகன் மூன்றாம் வகுப்பிலும், இளைய மகன் முதல் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் மறைந்த காதல் தம்பதி!!

பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையிலும் கைகோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடி மலையேற்றத்தை மிகவும் விரும்புவார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலத்தில் மலையேற்றம் செய்வதற்காக தம்பதியினர் ஒன்றாக புறப்பட்டனர். மிகப்பெரிய துன்பம் அங்கு காத்திருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உத்தரகாண்ட் அருகே சஹஸ்த்ரா தால் மலை ஏறும் போது திடீரென கடும் பனிப்புயல் ஏற்பட்டது. இதில் ஏராளமான மலையேறுபவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் இந்த ஜோடியும் சிக்கியது. ஒரே நாளில் இவ்வுலகில் உயிருடன் பிறந்த இருவரும் ஒரே நாளில் ஒரே நொடியில் இறந்தனர்.

ஆம், இருவருக்கும் ஒரே தேதிதான் பிறந்தநாள்.. இப்போது இருவருக்கும் ஒரே நாள்தான் நினைவு நாள். காலம் எவ்வளவு கொடுமையானது. ஆரம்பத்தில், இந்த ஜோடி மலையேற்ற குழுவில் இடம் பெறவில்லை. செல்ல முடியாத இடத்திற்கு இந்த ஜோடி சென்றுள்ளது. இயற்கை சில சமயங்களில் நல்ல உள்ளங்களைத் தன் கொடூர முகத்தால் தண்டிக்கும்.

தம்பதியின் மரணம் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “பனிப்புயலில் சிக்கிய இருவரும், வாய்ப்பு கிடைத்தால், ஒருவரை ஒருவர் காப்பாற்றியிருந்திருப்பார்கள்.  ஆனால், அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்காது.

தம்பதியர் இருவரும் ஒரு மித்த கருத்தை கொண்டவர்கள், தீவிர சிவபக்தர்கள். ஒன்றாக இருவரும் அடிக்கடி சிவதலங்களுக்குச் செல்வார்கள் ” என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள். உயிரிழந்த தம்பதிகள் இருவரும் ஒரே தேதியில் பிறந்து ஒரே தேதியில் இறந்ததால், தம்பதியினரின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தாயாருடன் அலைபேசி அழைப்பு… அடுத்த நொடி வெடித்த துப்பாக்கி : அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பம்!!

கனடாவின் சர்ரே பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

மாணவர்களுக்கான விசாவில் கடந்த 2019ல் கனடாவுக்கு வந்தவர் யுவராஜ் கோயல். மிக சமீபத்தில் தான் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றார். 28 வயதான யுவராஜ் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

யுவராஜ் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர் என்றும், அவர் கொலைக்கான காரணம் விசாரணையில் உள்ளது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7ம் திகதி பகல் சுமார் 8.46 மணிக்கு சர்ரே பொலிசாருக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், இரத்தவெள்ளத்தில் கிடந்த யுவராஜை மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மூவர் இந்திய வம்சாவளி கனேடியர்கள் என்றும், ஒருவர் ஒன்ராறியோவில் குடியிருப்பவர் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது யுவராஜ் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து திரும்பியுள்ளார்.

அவரது காரில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடி துப்பாக்கியால் சுடப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதை தங்களால் நம்ப முடியவில்லை என்றும், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், குடும்பத்தில் அனைவரும் இதுவரை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது இந்தியாவில் இருக்கும் தாயாருடன் யுவராஜ் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு 30 நொடிகள் அல்லது ஒரு நிமிடம் பேசியிருப்பார் என்றும், அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று!!

அவுஸ்திரேலியாவில்(Australia) வசிக்கும் தனது மகளை பார்க்கச்சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை இந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த 74 வயதான தாய் ஒருவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதன்போது கடுமையான இருமல் மற்றும் ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  இதனையடுத்து, வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் முதலில் பக்டீரியாக்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நீண்ட பரிசோதனையின் பின்னர் பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து அவரது கையை அகற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்னிலங்கையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்!!

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன நகருக்கு அருகில் கட்டிட உபகரண உரிமையாளர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு 10 மணி முதல் 11 மணி வரை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த கடையின் உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடை நடத்தப்படும் கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். இறந்த தொழிலதிபர் கட்டிடத்தின் பின்னால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொழிலதிபருக்கு சொந்தமான லொறியில் பல தடவைகள் டீசல் திருடப்பட்டுள்ளதாகவும், லொறியை சோதனையிடச் சென்ற போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த வர்த்தகரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் இணைப்பு : ஹம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன நகருக்கு அருகில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

51 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம்!!

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்கிளிடம் கோரியுள்ளது.

காதலுக்கு வயதில்லை : 100 வயது நபரை திருமணம் முடித்த பெண்!!

பிரான்சில் காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்.

ஹரலட் டெரென்ஸும் ஜீன் ஸ்வெர்லினும் நேற்று முன்தினம் (ஜூன் 8) திருமணம் செய்துகொண்டனர்.

“இளையர்களுக்கு மட்டும்தான் காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமா? எங்களுக்கும்தான்” என்று திருமதி டெரென்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அன்பை எந்த வயதிலும் காணலாம், இந்த ஜோடி சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின் வீரரான 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது 96 வயது காதலியான ஜீன் ஸ்வெர்லினை சனிக்கிழமையன்று பிரான்சின் நார்மண்டியின் வரலாற்று சிறப்புமிக்க டி-டே கடற்கரைக்கு அருகில் ஒரு காதல் விழாவில் மணந்தார்.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் . புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.

சர்வதேச மேடையில் நெகிழ வைத்த இலங்கை இளைஞன் : மனைவிக்காக கண்ணீருடன் செய்த செயல்!!

தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று நெகிழ வைத்துள்ளது.

விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த மறைந்த மனைவி தொடர்பில் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவர் வெற்றிப் பதக்கத்தைப் பெறுவதற்காக இறந்த மனைவியின் புகைப்படத்துடன் மேடை ஏறியுள்ளார். அவரது மனைவி கார் விபத்தில் இறந்து விட்டார் எனவும் தான் பதக்கம் பெறுவதே மனைவியின் கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்து போன தனது மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து விஷ்வ தாருக கூறியதாவது,

“என் மனைவியே என்னை இந்த போட்டியில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரித்து உடலை கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ​​​​

கடந்த செப்டம்பரில் ஒரு மழை நாளில், அவர் என்னுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காரில் மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டுள்ளார்.

நான் வெற்றி பெறுவதற்காக என் மனைவி நீண்ட நாட்களாக காத்திருந்தார். நான் இந்த வெற்றியை மனைவிக்காக அர்ப்பணிக்கின்றேன்.

அவர் எப்போதும் என்னுடன் இருப்பேன் என கூறினார். அவர் உலகில் இல்லை என்றாலும் என்னுடன் இருப்பார்” என விஷ்வ தருக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் காணாமல் போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!!

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலமானது நேற்று(09.06.2024) மீட்கப்பட்டுள்ளது. இந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்ற வாகனம் கோர விபத்து : யுவதி பரிதாபமாக பலி!!

கேகாலை மங்களகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை மங்களகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த யுவதி படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதி ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், ரம்புக்கன, உடகல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த யுவதியின் நாயும் உயிரிழந்துள்ளது.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.