2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது குறித்த தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தற்போது இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தக் கடன் வட்டியில்லாதது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ருவாண்டா என்ற இந்த ஆபிரிக்க நாட்டை அவர்கள் திறந்த சிறை என்று விபரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன.
கையொப்பமிடப்படாத இராஜதந்திர குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்களை வெளியிடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், பிபிசி ருவாண்டாவுக்கு சென்று அங்குள்ள புலம்பெயர்ந்த நான்கு தமிழர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இருந்து அனுப்பப்பட்ட தமக்கு சிக்கலான மருத்துவத் தேவைகள் ருவாண்டாவில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குறித்த நால்வரும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்திற்கு 50 டொலர்கள் வழங்கப்படுகின்றன. எனினும், அவர்கள் ருவாண்டாவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
தாம் நான்கு பேரும் தெருவில் துன்புறுத்தல் மற்றும் தேவையற்ற பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். தம்மை பொறுத்தவரையில் தாம் “சுய சிறையிலடைக்கப்பட்டவர்கள்” என்று குறித்த நால்வரும் கூறியுள்ளனர்.
வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ளது. இந்தநிலையில் தமக்கு நிரந்தரமாக இங்கிலாந்தில் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்று காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
தவறகன முடிவு முயற்சிகளுக்குப் பின்னரே இந்த நான்கு இலங்கைத் தமிழர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்கள் இப்போது இராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறி, தலைநகர் கிகாலியின் புறநகரில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரித்தானிய அதிகாரிகளால் பணம் செலுத்தப்படும் குடிமனையில் வாழ்கின்றனர்.
இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு செல்ல முயற்சித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் மூன்று பேரில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளடங்குகிறார்
நான்காமவர் குறித்த பெண்ணின் தந்தையாவார். தமது மகளுடன் ருவாண்டாவில் தங்கியிருக்க அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும் ருவாண்டாவுக்கும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த இலங்கை தமிழர்கள் ருவாண்டாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையிலும் டியாகோ கார்சியாவிலும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த தமிழ் பெண் கூறியுள்ளார்.
ருவாண்டாவில் தமக்கு தொந்தரவுகள் இருக்கின்றபோதும், பொலிஸாரின் உதவிக்கு அணுகவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், துஸ்பிரயோகத்தின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சீருடை அணிந்த சட்ட நடைமுறைப்படுத்தலை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்
எனினும், டியாகோ கார்சியா முகாமில் இருந்ததை விட ருவாண்டாவில் தங்களின் வாழ்க்கை நிலைமை சிறப்பாக இருப்பதாக கார்திக் மற்றும் லக்சானி என்ற பெயர்களை கொண்ட இந்த இலங்கை தமிழர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் தவறான முடிவு முயற்சியைத் தொடர்ந்து டியாகோ கார்சியாவிலிருந்து விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது தமிழர், இன்னும் இராணுவ மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாம் இலங்கைக்கோ இங்கிலாந்துக்கோ செல்லமுடியாது என்றநிலையில், ருவாண்டாவில் இருக்க விரும்பவில்லை என்றால்,பாதுகாப்பான மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை டியாகோ கார்சியா முகாமுக்குத் திரும்பலாம் என்று அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இலங்கையர் குழுவினரை நிரந்தரமாக மீள்குடியேற்ற ருவாண்டா “பாதுகாப்பான மூன்றாவது நாடாக” கருதப்படுகிறதா என்ற பிபிசி கேள்விகளுக்கு இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் பதிலளிக்கவில்லை.
இது இவ்வாறிருக்க மேலும் சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னும் டியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாங்கள் டியாகோ கார்சியாவிற்கு வந்தபோது தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக பிரித்தானியாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது எங்கள் வாழ்க்கையை முடக்கியதற்காக அவர்களுடன் கோபப்பட வேண்டுமா என்று ருவாண்டாவில் வசிக்கும் மயூர் என்பவர் அவரின் ஆதங்கத்தை பிபிசியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவோரால், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி கிராமப் புற இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஏமாற்றப்படும் இளைஞர்களிடம் இருந்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியம் என ஜெகத் நிஷாந்த மேலும் கூறியுள்ளார்.
அத்துடன், அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (2024.06.08) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கடந்த புதன்கிழமை (5)அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர் வீதியுலாவும் நடைபெற்றது. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் மகிமையினையும் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் விளங்கி வருகின்றது.
ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகை தந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட நிலையில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து கடவையில் மோட்டார் வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் தொடருந்து தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்களையடுத்து வீதியில் பயணிக்கும் போது கட்டாயம் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் அல்லது ஹைட்பிரிட் வாகனங்களுக்கு மட்டும் 3 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் கனரக வாகனங்களுக்க 5 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.
ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல் (புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்), வாகன காப்பீட்டு சான்றிதழ், வாகன உமிழ்வு சான்றிதழ் ஆகியவை கட்டாய ஆவணங்களாகும்.
மேலும் கனரக வாகனங்களுக்கு மட்டும் வாகனத் தகுதிச் சான்றிதழ் தேவையாகும். வாகனத்தில் பயணிக்கும் போது சிலர் வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனத்தை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் அது அவசியம் என தவறாகத் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
டீசல் எண்ணெய் குழாய் மீது பயணித்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – நவகமுவ வைத்தியசாலை வீதியில் வசிக்கும் முப்பது வயதுடைய இட்டமல்கொட தசநாயக்கவைச் சேர்ந்த ஜனித் சாருகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (07) காலை 6.30 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது, கீழ் பொமிரிய பகுதியில் வீதியில் இருந்த எண்ணெய்க்குழாய் தட்டு வழுக்கி வீதியில் விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் நவகமுவ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
நவகமுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பி.ஓ.பி. லயனல் சேனநாயக்க அவர்களின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்துப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.ஓ.பி. சந்திரசேன, PO (51887) நிஹால், PO (56992) ரோஹிதா, போ. எஸ்.ஏ (44861) பண்டார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியா கடற்கரையில் மிகப்பெரிய ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது.
அது குறித்த உண்மைத் தன்மையானது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதொன்றாகும்.
ஜூன் 4, 2024 அன்று, ஒரு பெரிய ஆக்டோபஸ் இந்தோனேசிய கடற்கரையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் வைரலானது.
X இல் உள்ள பல பதிவுகளில் படம் இந்தோனேசியாவின் பாலியில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அந்த புகைப்படத்தில் ஐந்து புலப்படும் நீண்ட கூறுகளும் ஆக்டோபஸின் உடலையும் காட்டியது, உள்ளூர் கடற்கரைக்கு செல்பவர்கள் அதைச் சுற்றி நின்று கொண்டும், தூரத்தில் அதிகமான பார்வையாளர்கள் இருக்கும் விதமாக அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் போலியானது. கூகுளின் reverse-image தேடல் கருவியைப் பயன்படுத்தி, மேலே உள்ள படத்திற்கான உண்மையான ஆதாரத்தினை தேடினோம்.
ஆனால் எந்த செய்தி நிறுவனங்களும் இதைப் பற்றி அறிவிக்கவோ அல்லது இந்த படத்தை எடுத்ததாகக் கூறும் எந்த புகைப்படக்காரரையோ நாங்கள் காணவில்லை.
எவ்வாறாயினும், “வெவ்வேறு AI engines, themes and styles” பரிசோதனை செய்யும் “Digital Creator” என்று சுயமாக விவரிக்கப்படும் best_of_ai_ ஆல் Instagram இல் பகிர்ந்த படத்தைக் கண்டறிந்தோம்.
X இல் வைரலாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நாம் காணக்கூடிய படத்தின் ஆரம்ப உதாரணம் இதுவாகும்.
கடற்கரையில் பல்வேறு கோணங்களில் ஆக்டோபஸ் என்று அழைக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோவில் குறித்த படம் பகிரப்பட்டுள்ள்ளது.
குடிநீர் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தண்ணீர் அருந்தும் போதும் உணவு உண்ணும்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பச்சை காய்கறிகள் மற்றும் மூலிகைகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என்று அவர் கூறினார்.
எந்த காரணத்திற்காகவும் நீரை சூடுபடுத்தாமல் பருக வேண்டாம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுமாறும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த கிணறுகளை பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கீதிகா ரத்னவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
தினமும் கணினி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நம்பில் பலருக்கு கண் பராமரிப்பை பற்றி தெரியாமலே இருக்கின்றது அவ்வாறு கண் பார்வையை பாதுகாக்க தினசரி செயல்பாடுகளின் போதும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிய குறிப்புகள் என்ன என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
போதுமான அளவு தூக்கம் கண்ணுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தினமும் 7 – 8 மணித்தியாலங்கள் தூங்க வேண்டும் என்பது கட்டாய தேவை. நீங்கள் விழித்திருக்கும் வரையில், உங்கள் கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதால், உங்கள் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.
போதுமான தூக்கம் இல்லாமை, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள், கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் UV பாதுகாப்பு சன்கிளாஸ்களைப் பயன்படுத்த மறக்க கூடாது. அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாஸின் லென்ஸ்கள் 99% முதல் 100% UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கக்கூடிய அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்று உண்டு செய்யலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும் போது அது கிழியவும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கைகால்களை சுத்தம் செய்யவேண்டும். உங்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி துகள் ஏதேனும் இருப்பின், அவை உங்கள் கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு அது கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும்.குறிப்பாக ஒமேகா- 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மற்றும் லேப்டாப் திரைகள் உங்கள் கண்களில் இருந்து ஒரு கை தூரத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் கண் மட்டத்திலிருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும்.
கணினியில் நீங்கள் பணிபுரியும் போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும். விளக்கு வெளிச்சத்தில் பணிபுரிவதாக இருந்தால், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக திரைநேரம் இருப்பதாக தோன்றும்போது தவறாமல், 20-20-20 விதியைப் பின்பற்றவும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், உங்கள் கணினியிலிருந்து பார்வையை விலக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது 20 வினாடிகள் பார்வையை நிலைநிறுத்தவும்.
வறட்சியைத் தடுக்க அடிக்கடி கண் சிமிட்டவும். அதேபோல ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்துகிறது.
உங்கள் கண்களை குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் பரிசோதிக்க வேணும். சில சமயங்களில் கண் கோளாறுகள், அறிகுறிகள் இன்றி உருவாக கூடும் என்பதால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.
அதே போன்று கண்ணாடி அணிபவராக இருந்தாலும் லென்ஸ் அணிந்தாலும் கண்களின் பவர்-ஐ அவ்வப்போது பரிசோதித்து கொள்வதும் கண் பார்வை குறைபாடு தீவிரத்தை தடுக்க உதவும்.
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர்.
இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்து படகை செலுத்தியோர் அதனை திருப்பும்போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த படகில், ஒரு ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளார்கள். படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில், தகவலறிந்து வந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை மீட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டவில்லை என கூறப்படுகிறது.
2001ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் உள்நாட்டு யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த 2வது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தரபாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோ பொலிஸ் உயர் அதிகாரி டொமினிக் மேர்பி இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் உள்ளவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்களை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம் நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித்தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் – பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது 2001 இன் பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்எனவும் தெரிவித்துள்ளனர்.
2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.எனவும் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டியாவில் போலி முறைப்பாடு செய்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கட்டாய சிறைத்தண்டனையை நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் விதித்துள்ளார்.
உயர்கல்வி கற்கும் பன்னல பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளான தனஞ்சனி பஸ்நாயக்க மற்றும் சுகந்திகா முன்னிலையில் தான் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக யுவதி அளித்த வாக்குமூலத்திற்கமைய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் நீண்ட நாட்களாக காதல் தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததையடுத்து, குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
காதலனுடன் தனிமையில் இருந்தமை வீட்டுக்கு தெரிய வந்த நிலையில், அதிலிருந்து தப்பிக்க போலி முறைப்பாடு மற்றும் தகவல்கள் யுவதி வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள மொரட்டுவை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ‘குடு ஜயனி’ என்ற பாரிய போதைப்பொருள் கடத்ததில் ஈடுபடும் பெண் கைது செய்யப்பட்டதாக வளன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 50,720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனைக்காக அவரால் பணியமர்த்தப்பட்ட அவரது பிரதான கூட்டாளிகளில் ஒருவரும் எகொட உயன கடற்கரையில் 3,520 மில்லிகிராம் போதைப்பொருள் ஐஸ் உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை மற்றும் கொரளவெல்ல பிரதேசங்களை மையமாக கொண்டு பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் குறித்த பெண் தொடர்பில் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட போதைப்பொருள் மொரட்டுவை, மோதரை, கொரலவெல்ல மற்றும் லுனாவ பிரதேசங்களில் இப்பெண்ணால் பணியமர்த்தப்பட்ட கூட்டாளிகளால் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் மற்றும் 3 சகோதரர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டு மஹர மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.