இலங்கையில் ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க (Madusanka Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது.
இதேவேளை இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இணைய சேவை வசதிக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும்.
இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், கடற்றொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள வசதி பெரும் வசதியாக அமையும் எனவும் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி உற்ற நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளத்தில் கம்புருபிட்டிய அக்குரகொட பிரதேசத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
20 வயதுடைய தரிந்து சம்பத் மற்றும் 17 வயதுடைய நவிந்து ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் சிறுவயதில் இருந்தே உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் திகதி, தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, அங்கு வசிப்பவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் போது மாலை, 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரது உடல்களும் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டா நாகமங்கலாவைச் சேர்ந்தவர் மதுமிதா(20). பெங்களூரு எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் படித்து வந்த மதுமிதா தனது தம்பி ரஞ்சனை(18) கல்லூரியில் விட்டுவிடக் கூறி அழைத்துள்ளார்.
இருவரும் ஒன்றாக கிளம்பிய நிலையில், தனது தம்பியைப் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை மதுமிதா ஓட்டிச் சென்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மதுமிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இருவர் மீதும் லாரிச் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி மதுமிதாவும், ரஞ்சனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுமிதா, ரஞ்சன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மதுமிதா, ரஞ்சன் ஆகிய இருவர் மீதும் வேகமாக மோதி லாரி விபத்து ஏற்படுத்திய காட்சி பதிவாகியிருந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
மனைவியின் கல்விக் கடனை அடைப்பதற்காக கணவன் வெளிநாடு சென்ற நிலையில், இளம்பெண் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(எ) சிட்டிசன் என்பவரது மகன் திருமலைக்குமார். இவருக்கும் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவரது மகள் சுமித்ரா (30) என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு வரை படித்துள்ள மனைவி சுமித்ரா கல்லூரி சென்று படிக்க போவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத கணவனர், மனைவி சுமித்ராவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இதில் சிறிது கடன்சுமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் மனைவி சுமித்ரா குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். அப்போது வீட்டில் மாமியாருடன் வசித்து வந்த சுமித்ரா எப்போதும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் மூழ்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில் தான் மதுரையைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கணவர் வெளிநாடு சென்ற நிலையில், இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபருடன் இண்டாகிராம் மூலம் மிக நெருக்குமாக பழகிவந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக மாமியாரிடம் கூறிவிட்டு சென்ற சுமித்ரா இரண்டு நாட்கள் ஆகியும் திரும்ப வரவில்லை.
இதனை மாமியார் வெளிநாட்டில் இருக்கும் தனது மகனிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது வெளிநாட்டில் இருந்த கணவர் தனது மனைவின் செல்போன் எண்ணிற்கு அழைத்தபோது போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கணவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மனைவி சுமித்ரா குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை பார்த்த கணவருக்கு அதிர்ச்சி கார்த்திருந்து. அதில் மனைவி சுமித்ரா வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் இருந்துள்ளது.
இதனை பார்த்த கணவர் மனைவியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் எண் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து போன் வந்துள்ளது.
இதனை ஆண் செய்தபோது எதிர்முனையில் மாமியார் பேசியுள்ளர். எனது மகளை நீங்கள் இனிமேல் தொடர்பு கொள்ள வேண்டாம் அவள் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி விட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார்.
அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது மாமியார் செல்போன் எண் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வெளி நாட்டில் இருக்கும் கணவர் திருமலைக்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் தனது தாயாரின் செல்போன் எண்ணிற்கு அழைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் தாயார் சொக்கம்பட்டி காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில், காவலர் புகார் மனு வாங்காமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என்று கூறி அந்த மூதாட்டியை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தாயும், வெளிநாட்டில் இருக்கும் மகனும் தவித்து வருகின்றனர்.
மேலும் தன்னை படிக்க வைக்க பெற்ற கடனை அடைக்க வெளிநாடு சென்ற கணவரை பற்றி சற்றும் சிந்திக்காமல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாலிபரை திருமணம் செய்து கொண்டு ஓட்டம்பிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கால்கரியில் இருந்து மெக்சிகோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பலங்கால ரயில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
1930 ஆண்டு நீராவி இன்ஜீன் கொண்டு உருவாக்கப்பட்ட பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது.
குறித்த ரயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.
இந்த நிலையில், பேரரசி ரயில் மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியிருந்துள்ளனர்.
அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரயில் முன்பு செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். ரயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.
அப்போது, ரயிலின் எஞ்ஜீன் இளம்பெண்ணின் தலையில் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
MEXICO – In Hidalgo, a famous train that comes from Canada and travels all the way to Mexico City, attracting locals, struck a woman who was trying to take a selfie as the train approached. She passed at the scene. Article in comments. pic.twitter.com/32XdsCehEB
— The Many Faces of Death (@ManyFaces_Death) June 5, 2024
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மாலிங்க தற்போது ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
லசித் மாலிங்காவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், ஒரு இளவயது வேகப்பந்துவீச்சாளரின் காணொளியை வெளியிட்டு ”இந்த வீரரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவானாக கருதப்படுகிறார்.
மாலிங்கவின் தனித்துவமான பந்துவீச்சு பாணி உலகெங்கிலும் உள்ள அதிகமான கிரிக்கெட் ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்த முக்கிய காரணியாகும்.
சர்வதேச கிரிக்கெட் களத்தில், முன்னரை விட அவரது தனித்துவமான ‘ஸ்லிங்கா’ பந்துவீச்சு பாணியைப் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் ஆட்டத்தில் இத்தகைய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய சிறப்பான திறமையே அதற்குக் காரணமாகும்.
தற்போதைய சர்வதேச கிரிக்கெட் களத்தில் ‘ஸ்லிங்க’ நிலையில் பந்து வீசும் இரு வீரர்கள் இலங்கை அணியில் இருப்பதும் சிறப்பான விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில் லசித் மாலிங்க அதேபோன்ற ஒரு பந்து வீச்சாளர் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
குறித்த பந்துவீச்சாளர் பாடசாலை மாணவர் என்பதால் இன்னும் 05 முதல் 07 வருடங்களில் இலங்கை கிரிக்கெட்டுக்கு இந்த வீரர் மதிப்புமிக்க வீரராக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடன் கேட்டு நிதி நிறுவனத்திற்கு சென்ற போது, காதல் வயப்பட்டு காதலனுடன் காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சமடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் வசித்து வருபவர் அனுஷ்வர்யா (24).
இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ்குமார் (33) என்பவரை காதலித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அனுஷ்வர்யா கடனுக்காக இந்த நிதி நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது மகேஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர், இந்த விஷயம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்ததும், பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இருவரது வீட்டாரையும் போலீசார் அங்கு வரவழைத்தனர். அப்போது அவர்களை அழைத்துச் செல்வதாக வாலிபரின் பெற்றோர் தெரிவித்தனர். அதன் பிறகு பெண்ணின் பெற்றோர்கள் எங்களுக்கும் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். பின்னர் காதல் ஜோடியை இளைஞரின் வீட்டார் அழைத்து சென்றனர்.
தென்னிலங்கையில் 14 வயது சிறுவன் ஒருவர் 9 வயது சிறுவனை 7 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (05) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயல் வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்களும் நண்பர்களாவர்.
கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
9 வயதுடைய சிறுவனின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவன் வீடியோ கேம்களுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வயதுடைய சிறுவனின்ன வீட்டில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 14 வயது சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலனுக்கும் நிதியமைச்சில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாததையடுத்து, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதிப்போரின் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டத்தரணி ஆர். சுதா (R. Sudha) இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
மயிலாடுதுறையில் அளிக்கப்பட்ட 10,88,182 வாக்குகளில் 5,18,459 வாக்குகளை பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளையும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆர்.சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் வழக்கறிஞர் சுதா பங்குபற்றியிருந்தார்.
மேலும், அவர் இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது, காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காதல் உறவுக்கு பெற்றோர் சம்மதிக்காத காரணத்தினால் காதலர்கள் இருவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஸ்ஸல்லாவ ரொச்சில்ட் வத்தையைச் சேர்ந்த இளைஞனும், பெரட்டாசி மேமலை பகுதியைச் சேர்ந்த யுவதியுமே நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17 வயது நிரம்பிய இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்த இளைஞன் காயங்களுடன் அருவியில் இருந்து மேலே வந்து நடந்த சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு கம்பளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பிற்காக சென்ற வேளையில், இரண்டு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் வில 20 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலொன்று கோடரியினால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.