மலக்குடலில் ஒரு கிலோ தங்கத்தை கடத்திய விமான பணிப்பெண்.. சினிமா பாணியில் அதிர்ச்சி!!

திரைப்படங்களில் மலக்குடல்களில் தங்கம், வைரம் கடத்தல் சீன்கள் காட்டப்படும். அவை எல்லாம் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி நடப்பதால் தான் திரையிலும் காட்டப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அடிக்கடி இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஓமன், மஸ்கட்டிலிருந்து, கேரளாவின் கண்ணூருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சர்வதேச விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் விமான பணியாளரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் என்ற பெண், அவரின் மலக்குடலில் 960 கிராம் அளவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருந்தார்.

தொடர்ந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இதுபோன்று தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கொச்சி விமான நிலையத்தில் தோஹாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரிடம் 560 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வயிறு வலியால் துடித்த இளம்பெண் பரிசோதனையில் அதிர்ச்சி : 2.5 கிலோ முடி அகற்றம்!!

இளம்பெண் ஒருவரது வயிற்றில் இருந்து சுமார் 2.5 கிலோ முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூடில் பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு திடீரென்று கடுமையாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் ஏதோ கட்டி போல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்து சுமார் 2.5 கிலோ அளவு முடி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவர்கள் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் தனக்கு முடி சாப்பிடும் பழக்கம் உள்ளதாக தெரிவித்தார்.

அதாவது, இந்த பெண்ணுக்கு பல வருடங்களாக முடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. தனது முடியை தானே கடித்து தின்று வந்துள்ளார். அது நாளடைவில் அவரது வயிற்றில் தங்கி அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முடி சாப்பிடுவது ஒரு disorder ஆகும். இந்த disorder உள்ளவர்களை Rapunzel Syndrome என்ற Trichophagia என்று சொல்லப்படும் மனநல பிரச்னை இருப்பவர்களாக கருதப்படுவர். இவர்கள் முடி, அழுக்கு உள்ளிட்ட உண்ணகூடாதவைகளை உண்ணுவர். இதன் விளைவு இவர்களது உயிர் போககூடிய அளவிற்கு இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இது போன்ற சம்பவம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினருக்கும் இந்த disorder இருக்கும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்று பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

10 ம் வகுப்பில் 10 முறை தோல்வி : மீண்டும் முயற்சித்து 11வது முறை தேர்ச்சிபெற்ற மாணவன்!!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்ற மாணவனை ஊர்மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ் முண்டே என்பவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இவர், கடந்த 2018 -ம் ஆண்டு 10 -வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர், மனம் தளராமல் தொடர்ந்து தேர்வுகளை எழுத ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வு எழுதி தேர்ச்சிபெற முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், 11 -வது முறை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா பொதுத் தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாகியுள்ளது. ஆனால், இந்த முறை அனைத்து பாடங்களிலும் மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த செய்தியை கேட்ட பெற்றோர் மகிழ்ச்சியில், மேளதாளத்துடன் மகனை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனை பார்த்த ஊர்மக்களும் மாணவனை தோளில் தூக்கிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு : உலக சாதனை படைத்த இந்தியர்!!

மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்த இளைஞர் 3-வது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 2023 -ம் ஆண்டு வினோத் குமார் சவுத்ரி (44) என்பவர் தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து முதல் முறையாக சாதனை புரிந்தார்.

இதையடுத்து, அதே ஆண்டில் 2 -வது முறையாக 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து தனது முதல் சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், மீண்டும் தனது மூக்கை கொண்டு 25.66 வினாடிகளில் தட்டச்சு செய்து முதல் 2 சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வினோத் குமார் சவுத்ரி பேசுகையில், “எனது தொழில் தட்டச்சு செய்வது தான். அதில் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் ஆர்வத்தை மட்டும் கடைசி வரை வைத்திருக்க வேண்டும்.

சில சமயம் மூக்கை வைத்து தட்டச்சு செய்யும் போது மயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், பயிற்சியால் சாத்தியமாகும்” என்றார். இவர், “இந்தியாவின் தட்டச்சு மனிதர்” என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலை தாய் கண்டித்ததால் வாழ்வை முடித்துக்கொண்ட யுவதி!!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.

மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் , யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற 2 வயது சிறுவனின் ஓவியங்கள்!!

ஜெர்மனியை சேர்ந்த லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். இந்த சிறுவன் குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்துள்ளான்.

சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் மகனின் படைப்புகளை வெளிப்படுத்த சமூக வலைத்தளத்தில் ஒரு தனி பக்கத்தை உருவாக்கியுள்ளார்.

அதில் குறித்த சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டதுடன் அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதி அறிவிப்பு!!

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

பரீட்சையில் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியதாகவும், அவர்களில் 3,87,648 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Master Chef Australia போட்டியில் இலங்கை யுவதிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

MasterChef Australia போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை வீராங்கனை சாவிந்திரி பெரேராவுக்கு நடுவர்களால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் 2024ஆம் ஆண்டு போட்டித் தொடரில் இணைவதற்கான வாய்ப்பைப் பெற்ற எட்டு போட்டியாளர்களில் சாவிந்திரி பெரேராவும் ஒருவராவார்.

நடுவர்கள் அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நேசித்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது மற்றும் இலங்கை யுவதி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்ததாக நடுவர்கள் குறிப்பிட்டனர்.

MasterChef Australia நடுவர்கள் சாவிந்திரி முந்தைய போட்டிகளில் அவர் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

தனது 18வது வயதில் அடிலெய்டுக்கு வரும் வரை இலங்கையின் கிராமிய சமையல் முறையும், காட்சிப்படுத்தலும் பாராட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் வரவிருக்கும் சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார்.

இந்த சுற்றுக்கு, அவர் இலங்கை மதிய உணவை வழங்கினார், அதில் பன்றி இறைச்சி கறி, மிளகாய் இறால், உருளைக்கிழங்கு பால் குழம்பு, வெங்காய இலை சம்பல், கத்திரிக்காய் உள்ளிட்ட பல வகையான உணவுகளை வழங்கியிருந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இலங்கை உணவின் அனுபவத்தைப் பெற்றதற்காக போட்டி நடுவர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகன் மீனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகியிருந்தன.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ (3A) சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை அன்பழகன் மீனுஜா 3ஏ (3A) சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கும் நிலையில் குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய 102 வருட கால வரலாற்றை மாற்றி அமைத்த மாணவிகள்!!

பாடசாலையின் 102 வருட கால வரலாற்றை வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவிகள் இருவர் மாற்றி அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதன் முறையாக பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் வழிகாட்டலில் இரு மாணவிகள் கலைப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் நஹார் பாத்திமா சுஹா என்ற மாணவி தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களை கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 12 ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.

மனாஸ் பாத்திமா அப்னா என்ற மாணவியும் தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 31 ஆவது இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர்களுடன் தாஜீதீன் மொஹமட் சபீக் ஏ,பி,சீ பெறுபேற்றைப் பெற்று 94 ஆவது நிலையையும், முஸ்தபா பாத்திமா 2ஏ,சி பெறுபேற்றைப் பெற்று 103 ஆவது நிலையையும், நியாஸ் அஸ்னப் 2ஏ,பி பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் 122 ஆவது நிலையையும், மாவட்ட மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களில் சித்தி பெற்றுள்ளதுடன், பாடசலையின் 102 ஆண்டு வரலாற்றில் கலைப் பிரிவில் பெறப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது சிறந்த பெறுபேறு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

யாழில் கலைத்துறையில் சாதித்த வஜினா.. கல்விக்கு வறுமை தடையல்ல!!

வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ்.மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது.

இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ.ஜிலோட்சன் என்ற மாணவன் பெற்றுள்ளார்.

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பௌதீக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த சிரத் நிரோதா முதலிடம் பிடித்துள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கினிகத்தேன மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஷெஹானி நவோத்யா நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உபனி லெனோரா, விஞ்ஞான பாடத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதேவேளை, கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த தசுன் ரித்மிகா முதலிடம் பிடித்துள்ளதுடன், பாணந்துறை பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷெஹாரா சிதுமினி, வர்த்தகப் பிரிவில் முடிலிடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 173,444 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 317 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 202 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்!!

ஐந்து வயது குழந்தையை விட்டு விட்டு மற்றொரு ஆணுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தற்கொலை செய்வது தொடர்பாக தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பாவி குழந்தைகள் அனாதைகளாகி வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான், சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியா மேரி. இவருக்குத் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபருடன் செல்ஃபியா மேரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் இருவருக்குமிடையே தகாத உறவாக மாறியது. தனியார் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணியாற்ற வந்த விஜய்க்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் இவர்கள் இருவரும் நெருக்கம் காட்டி வந்ததை இரண்டு வீட்டாரும் கண்டுபிடித்தனர். இதனால் விஜய், செல்ஃபியா மேரி ஆகிய இருவரையும் கண்டித்தனர். ஆனால், அதைப்பற்றி அவர்கள் இருவரும் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு தங்களது குழந்தைகளைத் தவிக்க விட்டு விஜய், செல்ஃபியா மேரி இருவரும் அதே பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் வாட்ஸ் அப் மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய குடும்பத்தினர் விஜயையும், என்னையும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் இருவரும் தற்கொலை செய்யப் போகிறோம்” என கூறியிருந்தார்.

இந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரேகா, உடனடியாக பெரும்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால், அங்கு விஜய், செல்ஃபியா மேரி வீட்டில் சடலங்களாக கிடந்தனர்.

வீட்டின் வரவேற்பறையில் விஜயும், படுக்கை அறையில், செல்ஃபியா மேரியும் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தினர். அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிக்கு அதிபரால் நேர்ந்த கதி!!

நிகவெரட்டிய கபல்லேவ பாடசாலை மாணவி ஒருவரை உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் நேற்று பிற்பகல் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய 17 வயதுடைய மாணவி ஒருவரே சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் மாணவியுடன் காதல் தொடர்பு வைத்து இவ்வாறு உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேகநபரான அதிபர் இன்று நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.