ஈழத்தமிழ் பெண்கள் இருவர் பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம்!!

ஈழத்தமிழ் பெண்கள் இருவருக்கு பிரித்தானியாவில் எம்.பியாகும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென்.கந்தையா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய தேர்தல் தொகுதியொன்றில் கிருஸ்னி யசீகரன் என்ற ஈழத்தமிழ் பெண் தொழிற்கட்சி சார்பாக போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொழிற் கட்சி மாத்திரமல்லாது பிரித்தானியாவிலுள்ள அனைத்து தமிழர்களும் அவருக்கு ஆதரவு வழங்குவார்கள்.

அவரை வெல்லச் செய்வதற்கு ஆவணம் செய்வார்கள். இது ஒரு கடினமான போட்டி. எங்களுடைய ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அவர்கள் முழுமனதுடன், எந்த கட்சியிலும் இணைய விரும்பவில்லை.

பிரித்தானியாவில் இந்த முறை வெல்லக்கூடிய ஒரு முக்கிய தொகுதி ஒரு தமிழ் பெண்ணுக்கு கிடைக்க இருக்கிறது. அதற்குரிய நல்ல செய்தி விரைவில் கிட்டும் என நம்புகிறோம் என கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் : இந்திய பெண் மகிழ்ச்சி!!

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24 வயதான இந்திய பெண் ஒருவர் நான்கரை லட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி மற்றும் அதன் பாகங்கள் அடங்கிய பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பையை கண்ட தொடருந்து பாதுகாப்பு அதிகாரி, குறித்த பெண்ணை தேடி ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் கபில மாரசிங் என்பவரே இந்த முன்மாதிரிகையான செயலை செய்துள்ளார்.

மாளிகாவத்தை தொடருந்து நிலையத்திற்கு புகையிரதத்தில் வரும் போது அதனை அவதானித்த அதிகாரி பையை கொண்டு வந்து மாளிகாவத்தை தொடருந்து நிலைய உப பொலிஸ் பரிசோதகர் நந்தன பெரேராவிடம் கையளித்துள்ளார்.

இந்திய பெண் பையைத் தேடி வந்த நிலையில் அவரிடம் குறித்த பை ஒப்படைக்கப்பட்டது. பையை ஒப்படைத்ததற்காக இந்திய அதிகாரி மாரசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பையை மீண்டும் கண்டுபிடிப்பேன் என ஒரு நொடிகூட நினைக்கவில்லை எனவும் அதிகாரியின் இந்த நேர்மையான செயலை பாராட்டியதுடன் தொடருந்து பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞன் எடுத்த விபரீத முடிவு : தமிழர் பகுதியில் சோகம்!!

திருகோணமலையில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் தனது நாடு திரும்பிய இளைஞர் இன்று அதிகாலை காலை விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த இளைஞர் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ள நிலையில், இளஞனின் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை. சம்பவத்தில் திருகோணமலை நகரப்பகுதியைச் சேர்ந்த றீகன் றேனீஸ்சான் வயது 20 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

டந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டிக்கு சென்று தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அண்மையில் விடுமுறையில் ஊர் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்நிலையில் சடலம் உடல் கூற்றுசோதனைக்காக திருகோணமலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

புத்தளத்தில் Hair Dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30) உயிரிழந்துள்ளார்.

Hair Dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார். இந்நிலையில் மாணவின் மரணம் அப்ப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் பாரிஸ் 2024 போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்பாணத்தைச் சேர்ந்த பெண்!!

யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமி யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார்.

‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும். இதில் வெற்றி வெற்றால், இல் து பிரான்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

காருக்குள் நீச்சல் தடாகம் : ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்த பொலிஸார்!!

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், முறையற்ற செயல் காரணமாக அவரது ஓட்டுநர் உரிமத்தை கேரள மாநில காவல்துறை ரத்து செய்துள்ளது.

இவர் கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர் மற்றும் பிரபல சமூக வலைதளங்களால் பின்தொடரப்படுகிறார்.

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஆவேசம்’ போன்று, குறித்த நபர் தனது காரில் சிறிய நீச்சல் குளம் அமைத்து, தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டே சாலையில் காரை ஓட்டி வந்துள்ளார்.

மேலும் கூறப்பட்ட காட்சிகளை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது, ​​காரில் நிரம்பிய தண்ணீர் கசிந்து, காருக்குள் இருந்த தண்ணீர் முழுவதையும் சாலையில் விட்டனர்.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி காட்சிகளை பார்த்த பலர் உடனடியாக ஆலப்புழா காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, உடனடியாக அவரது காரை நிறுத்திய போலீஸார், அந்த காரை பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

 

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம் : விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி!!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 24 வயதான குகதாஸ் ரம்மியா இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். குறித்த யுவதியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

700 இந்திய மாணவர்களை ஏமாற்றி கனடாவுக்கு அனுப்பிய நபர் : விசாரணையில் வெளிவந்த தகவல்!!

இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி சலுகை கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி சலுகை கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் நேற்று வான்கூவர் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, எனது தவறுகளுக்காக வருந்துகிறேன், கடந்த காலத்தை என்னால் மாற்றமுடியாது, ஆனால், இனி அந்த குற்றத்தை நான் செய்யமாட்டேன் என என்னால் உறுதியளிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

கனடாவில் வெறும் 19 மாதங்கள் மட்டுமே மிஸ்ரா சிறையில் செலவிடவேண்டும் என்றாலும், அதற்குப் பின் அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.

எனினும் இந்தியாவில் அவர் மனிதக்கடத்தல் முதலான குற்றச்சாட்டுகளை எதிகொள்ள வேண்டியிருக்கும் எனவும் அந்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என தெரவிக்கப்படுகிறது.

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை : புலனாய்வுப்பிரிவினர் விசாரணை!!

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் தனியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று (29) மாலை முதல் காணாமல்போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யக்கல பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்றுள்ளன.

காணாமல்போயுள்ளதாக கூறப்படும் மாணவிகளின் தாய்மார்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மூன்று மாணவிகளும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நண்பர்கள் எனவும், இவர்கள் மூவரும் நேற்று (29) இரவு வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போன மூன்று மாணவிகள் தொடர்பில் நேற்று (30) வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் யக்கல மற்றும் வீரகுல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றியவர்கள் இதில் 281,445 பாடசாலை மாணவர்களும் 65,531தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இன்று வெளியாகும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346 976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர். இதில் 281,445 பாடசாலைப் பரீட்சாத்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கைப் பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

நாசா நடத்திய செவ்வாய் கிரகத்தில் வாழ்வது தொடர்பான ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் (NASA’s Johnson Space Center) அறிவித்துள்ளது.

இந்த நால்வரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பியூமி விஜேசேகரவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பியுமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள NASA Ames ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.

பியுமி விஜேசேகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தையும், பென்னின் பிட்ஸ்பர்க், கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளதுடன், பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த குழு முதலில் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரக சூழலான மனித ஆய்வு ஆராய்ச்சி Human Exploration Research Analog (HERA) இல் 45 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, மே 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சி ஜூன் 24 ஆம் திகதி முடிவடைய உள்ளது.

விண்வெளி வீரர்கள் சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன், அவர்கள் தனிமைப்படுத்தல், ஒரு சிறிய இடத்தில் நீண்ட நேரம் மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு எவ்வாறு மாற்றியமைப்பது போன்றவற்ற சிறப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளனர்.

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை!!

2024 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் இரண்டாவது மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை(Sri Lanaka) பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்ட ஆசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலேயே இலங்கை இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

நாட்டின் தனித்துவமான கலாச்சார அனுபவங்கள், இயற்கை அழகு, செழிப்பான தேயிலை தோட்டங்கள், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் பலதரப்பட்ட வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு நாடாக இலங்கை அமைந்துள்ளது.

குறித்த பட்டியலில் இந்தோனேசியா முதலாவது இடத்தையும் இலங்கை இரண்டாவது இடத்தையும் தாய்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், மே மாதத்தில் இதுவரையில் 79,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் : யூன் 03 ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசயம்!!

எதிர்வரும் ஜூன் மாதம் 3ல், கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில், ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம் என வின்வெளி ஆய்வாளர்கல் கூறியுள்ளனர்.

அண்டத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால், தொலை நோக்கிகள் மூலம் தெளிவாக பார்க்கலாம்.

அதேவேளை நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோ மீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை.

அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது.

இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும்.

ஜூன் மாதம் 03 ஆம் திகதி சனிக்கோளுக்கு கீழேயும், 4ஆம் திகதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

வெளிநாட்டில் கணவன் – பிள்ளைகளை கொடுமைப்படுத்திய இளம் தாய் காதலனுடன் ஓட்டம்!!

குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு இரகசியமாக அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் வீட்டில் விடப்பட்ட 2 பிள்ளைகளையும் பாதுகாப்பிற்காக தங்களின் பொறுப்பில் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது 2 பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பின்றி விட்டு, கொடுமைப்படுத்தி, யாரிடமும் சொல்லாமல் முறையற்ற காதலனுடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் அவரது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு வீட்டுக்கு அருகில் வசிக்கும் இந்தப் பெண்ணின் உறவினர் தகவல் கேட்டதையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

2 பிள்ளைகளும் பட்டினியால் வாடி வந்ததாக கூறப்படுகிறது. 2 பிள்ளைகளின் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரும் அயலவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தை பயணிகளுடன் கடத்திய நபரால் பரபரப்பு!!

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தானது நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது, ​​குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி, அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும், மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று இரவு 12:00 மணியளவில் பலால வெவ ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ​​இப்பன்கட்டுவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர், ஹோட்டலை விட்டு வெளியேறி, பேருந்தில் ஏறி, அங்கிருந்த சாவியுடன் பேருந்தை இயக்கியுள்ளார். அத்துடன், பயணிகள் மற்றும் பேருந்துடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்குள் பேருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் சென்றதாகவும் பயணிகள் மரண பீதியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.