வெளிநாடொன்றில் இருந்து 03 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய பெண்ணொருவர் இடைநடுவே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த பெண் கடந்த மூன்று வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர் .
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்திருந்த நாடு திரும்பிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சேலத்தை அடுத்த நில வாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ரோஷினி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் நிதர்சன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ராஜா வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டார்.
அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரோஷினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தை ஆதரவற்று தவிக்கும் என கருதி அவர் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தை நிதர்சனுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்தார்.
பின்னர் தானும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், குழந்தை ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரோஷினிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதால் வரதட்சணை கொடுமை தற்கொலைக்கு காரணமா என்பது குறித்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பப் பிரச்னையில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை நாட்டாக்குடியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்த் இருவருக்கும் முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20ம் தேதி சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றதில் திடீரென குழந்தை இறந்ததாக கூறி அவர்களது குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தன்று மனைவி மஞ்சு தனது குழந்தையுடன் சிவகங்கை சென்றதாக கணவர் கூறினார். திரும்பி வரமாட்டேன் எனக்கூறியதுடன் குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே பையில் வைத்து விட்டு நாகர்கோவில் சென்று விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது குழந்தை சடலமாக இருந்ததைக் கூறினார். தனது தாயார் காளிமுத்து உடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
குழந்தையை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. குழந்தை யாருக்கு பிறந்தது என்பது குறித்து கணவன் மனைவிக்குள் சந்தேகமும், சண்டையும் தொடர்ந்தது.
இதனால் கணவனும் மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர். சந்திரசேகர், அவரது மனைவி மஞ்சு அவரது தாய் காளிமுத்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் திருமணமான இந்தோனேசிய ஆண் ஒருவர், தனது மனைவி பெண் வேடமிட்ட ஆண் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 26 வயதான கணவருக்கு திருமணமான 12 நாட்களுக்குப் பிறகுதான் தனது மனைவி ஆதிண்டா கன்சா என்ற ஆண் என்பதை கண்டுபிடித்தார்.
இருவரும் 2023 ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலம் ஆதிண்டா கன்சாவை சந்தித்ததாக ஏகே கூறுகிறார். அவர் அவளை விரும்பி நேரில் சந்திக்க முடிவு செய்தார். அவர்கள் சந்திக்கும் போது, ஆதிண்டா எப்போதும் தனது முழு முகத்தையும் மறைக்கும் பாரம்பரிய முஸ்லீம் உடையை அணிவார்.
ஆனால் ஏ.கே. ஆரம்பத்தில் அவரது மனைவிக்கு இப்படி ஹிஜாப் அணிய மனம் வரவில்லை. இஸ்லாத்தின் மீதான தனது பக்தியின் அடையாளமாக அவர் அதைக் கருதினார்.
இந்த உறவைத் தொடர, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அப்போது அவர் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பம் இல்லை என்று கூறவே, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஏ.கே. வீட்டில் எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகும், ஆதிண்டா தனது புதிய கணவரிடமிருந்து தனது முகத்தை மறைத்துக்கொண்டே இருக்கிறார், மேலும் ஏகே கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழக மறுக்கிறார்.
ஏ.கே.யுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க புதிய காரணங்களை கண்டுபிடித்து வருகிறார் மாதவிடாயில் இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை என்றும் பல்வேறு காரணங்களை கூறி விலகி இருந்துள்ளார்.
12 நாட்கள் நிலைமை தொடர்ந்ததால், ஆதிண்டாவின் சந்தேகத்திற்குரிய நடத்தைக்கான காரணம் என்ன என்று ஏகே விசாரித்தார். பின்னர், ஆதிண்டாவின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டது பற்றி எதுவும் தெரியவில்லை. மேலும் விசாரணையில், AK, ஆதிண்டா உண்மையில் ஒரு ஆண் என்பதையும் வெளிப்படுத்தினார். இதை அறிந்த அவர் உடனடியாக போலீசில் புகார் செய்தார். 2020-ம் ஆண்டு முதல் பெண் போல் ஆடை அணிய ஆரம்பித்து, பெண்ணாக நடந்து கொள்ள முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
குடும்ப சொத்துக்கு ஆசைப்பட்டு ஆதிண்டா ஏகேவை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் பேசும் போது ஆதிண்டாவின் குரல் பெண்ணின் குரல் போல் இருப்பதாகவும், இதை பயன்படுத்தி பெண் வேடம் போடுவதாகவும் போலீசார் கூறுகின்றனர். இவர்களது திருமண புகைப்படங்களை பார்த்தால், ஆதிண்டா நிஜமான பெண்ணாகவே தெரிகிறார்.
மென்மையான குரல் வளம் கொண்டவர், எனவே அவர் பெண் என்பதில் சந்தேகம் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்தோனேசிய சட்டப்படி, பெண் வேடமணிந்து ஏமாற்றிய அதிண்டாவுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மனநலம் குன்றியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இவரது மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெள்ளாறு பாலம் அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். செல்வியின் தம்பியான முத்துக்குமார் (27) இவர் தனது அக்கா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சுபஸ்ரீயும் அவரது தாய் மாமன் முத்துக்குமாரும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது . இதனிடையே, சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முத்துக்குமார் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று மதியம் அக்கா வீட்டில் முத்துக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வி, தனது தம்பி பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முத்துக்குமாரின் மரணம் குறித்து நர்சிங் கல்லூரி விடுதியில் படித்து வந்த சுபஸ்ரீக்கு தகவல் தெரிவித்து உறவினர்கள் அவரை அழைத்து வர சென்றனர்.
அங்கு முத்துக்குமார் இறந்ததை அவரது சித்தி மகள் சுபஸ்ரீயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுபஸ்ரீ கல்லூரி அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த விடுதி வார்டன் அறைக் கதவைத் தட்டினார்.
நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் சுபஸ்ரீ தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வெவ்வேறு இடங்களில் காதலனும், காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோடீசுவர ராவ். இவரது மனைவி பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). இவருடைய தந்தை முன்னாள் சிஆர்பிஎப் படை வீரர் ஆவார்.
2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடிந்ததும், வேலை தேடி வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு, இருப்பிடத்திற்கு திரும்பும்போது, சாலையை கடந்த அவரின் மீது விரைவாக வந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றது.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். விபத்து பற்றி அறிந்ததும், அவருடைய பெற்றோர் மனமுடைந்து போனார்கள்.
கடந்த 11-ம் தேதி சவுமியா பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக சவுமியாவின் தந்தை கோடீசுவரராவ் ஆடைகளை கொடுத்து இருக்கிறார். அவருடைய படிப்புக்கு செலவு செய்வதற்காக நிறைய போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
சவுமியாவின் உடலை தெலுங்கானாவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி அவருடைய குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஆசாமி, திருமணம் முடிந்த மறு நாளே புதுமணப்பெண், நகை, பணத்துடன் மாயமான சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்ததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இதனை அறிந்து கொண்ட கேரள மாநிலம், கொழிஞ்சம்பாறை பகுதியைச் சேர்ந்த திருமண தரகர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகியுள்ளார். அப்போது அவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காண்பித்துள்ளார்.
அந்த படத்தில் இருந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கும் பிடித்து விடவே உடனடியாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி தரகர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டார் அந்த பெண்ணுக்கு ஒன்றை சவரனில் நகை வாங்கி அணிவித்துள்ளனர்.
மேலும் தரகருக்கு ரூ.80 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணனுக்கும், அந்தபெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர்.
அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலிரவின் போது புதுப்பெண், ராதாகிருஷ்ணனிடம் “தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்” என்றும் கூறி நைசாக முதலிரவை தவிர்த்துவிட்டார்.
மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
பொள்ளாச்சிக்கு சென்றதும் கடைக்கு சென்று வருவதாக சொல்லி சென்ற கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை, பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஜா எல(Ja-Ela) பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கத்தை கொள்ளையடித்த பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல இரவு நேர விடுதி ஒன்றிற்கு அருகில் 11,200 மில்லி கிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களை 48 மணிநேரத்திற்குள் கைது செய்ய பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – பின்வத்த, உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்வத்த, உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதையடுத்து கடந்த 13 ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஜயநேதி ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மானந்தன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர் எனவும் நேற்று அதிகாலை லியனகேமுல்ல பிரதேசத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இரவு விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உஸ்கொட மனகே திசர மதுவந்தி என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவர் காலி மேற்கு படுவத்த நெலுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
6 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிக்காக வந்தவர், பின்னர் சீதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரியும் நபருடன் அந்தப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.
இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றின் அடிப்படையில், தங்கியிருந்த நபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவரும் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக குறித்த நபர் நடந்து செல்லும் காட்சி பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள வீதியிலேயே குறித்த பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் அவரது சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன் அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
7 வயதுடைய தனது மகன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய தாய் அது குறித்த காணொளியையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பிலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.
குவைத்க்கு தொழிலுக்காக சென்றிருந்தபோது உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருமாறு இளைஞனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீகிரியா இலுக்வல பகுதியில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற இளைஞன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சகோதரியான ஷஷினி மல்சானி, கடந்த 20ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் நேற்றைய தினம் (28.05) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக ஷஷினி மல்சனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மீண்டும் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும், வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் இளைஞன் எழுதிய கடிதம் ஒன்று இளைஞனின் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டதாகவும், உயிரை மாய்த்துக்கொள்வதாக தனது தாயாருக்கு அதில் எழுதியிருந்ததாகவும் வாட்ஸ்அப் ஊடாக குறித்த கடிதம் கிடைத்ததாகவும் சகோதரி தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,”எனக்கு அரபு மொழி நன்றாக பேசத் தெரியும். அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசினேன். உங்களது மகன் கார் விபத்தில் சிக்கி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.
அவருக்கு பாரிய சேதங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சனை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14 , 2023 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவரின் கல்லறையை சுத்தம் செய்து தினமும் விளக்குகளை ஏற்றி வரும் நிலையில், திடீரென சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று , முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த இராட்சத பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென் பருத்து வந்து துக்கி செல்ல முயன்றபோது அதனை கண்ட தந்தை கூக்குரலிட்டதை அடுத்து பருந்து சிறுவனை பொட்டு விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் பருந்து தூக்கியதால் காயமடைந்த சிறுவன் பொலனறுவை மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார். எனினும் சிறுவன் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை என பெற்ரோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பருந்தை விரட்ட வனஜீவராசிகள் திணைக்கள்த்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச வாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப்பெட்டியால் வாழைச்சேனையில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப் பெட்டியை லொறியில் இருந்து இறக்கும் போது தவறி விழுந்ததில் இளைஞன் ஸ்தலத்திலேயே மரணடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த இளைஞன் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மது றிமாஸ் என்பவராவார்.
இளைஞனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.