மடிக்கணினி சார்ஜ் செய்யும்போது நேர்ந்த விபரீதம் : பயிற்சி பெண் மருத்துவர் பரிதாபமாக மரணம்!!

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

அதேசமயம் M.D மேற்படிப்பு இறுதி ஆண்டை முடித்த சரணிதா, 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார்.

திருமணமான சரணிதாவுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சரணிதாவின் கணவர் போன் செய்துள்ளார்.

ஆனால் அவர் எடுக்காததால், விடுதியில் வேலை செய்யும் பெண்ணொருவரை செல்போனில் அழைத்து, மனைவியின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

குறித்த பெண் சரணிதாவின் அறைக்கு சென்று அவரை அழைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து பதில் வராததால், சந்தேகமடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து பார்த்தபோது சரணிதா மடிக்கணினி சார்ஜரை பிடித்தபடி இறந்து கிடந்தார்.

உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சரணிதா மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சார்ஜர் Wire-யில் மின்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு சலவை தொழிலில் ஈடுபடும் இளைஞன்!!

பீகாரைச் சேர்ந்த IIT பட்டதாரி ஒருவர், ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு, தற்போது தமது மனைவியுடன் இணைந்து ரூ 170 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பீகாரைச் சேர்ந்தவர் அனுரப் சின்ஹா. 8வது வகுப்பில் இருந்தே IIT பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ம் வகுப்பு முடித்ததும் மும்பை IIT-ல் அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஆனால் அவருக்கான கல்லூரி கட்டணம் செலுத்துவதில் அவரது குடும்பம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டது. ஒருவழியாக பட்டப்படிப்பை முடித்தவர், வெளிநாட்டில் வேலை தேடி சென்றார்.

அத்துடன் 2015ல் திருமணமும் செய்து கொண்டார். அதே ஆண்டில் ஹொட்டல் நிர்வாகத்துறையில் நுழைந்த அனுரப், பல எண்ணிக்கையிலான ஹொட்டல்களை நிர்வகிக்கத் தொடங்கினார்.

அப்போது தான் எவரும் கண்டுகொள்ளாத புதிய வாய்ப்பு ஒன்று அவர் பார்வையில் பட்டது. இதனையடுத்து அனுரப் மற்றும் அவரது மனைவி குஞ்சன் சின்ஹா ஹொட்டல்களுக்கான சலவை தொழிலை முன்னெடுக்க முடிவு செய்தனர்.

அத்துடன் தரமான சேவையை வழங்கவும் உறுதி அளித்தனர். ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளம் வாங்கி வந்த அனுரப், 2016ல் அந்த வேலையை விட்டுவிட்டு, ரூ 20 லட்சம் முதலீட்டில் 2017 ஜனவரி மாதம் UClean என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு என்பது ரூ 170 கோடி. இந்தியா முழுக்க 104 நகரங்களில் 350 UClean கடைகளை திறந்துள்ளனர். மட்டுமின்றி, வங்கதேசம், நேபாளத்திலும் கடைகளை திறந்துள்ள நிலையில்,

தற்போது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் கனடாவுக்கு பயணமானமாக இருந்த இளைஞன் பலி!!

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பனுஜன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

றீமால் புயலின் நிலவரம் குறித்து வெளியான தகவல் : இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும்!!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் (27.05.2024) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே 30 முதல் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வங்கக்கடலில் உருவான றீமால் புயல், நேற்றிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கக்கடலுக்கு இடையே கரையை கடந்திருக்கிறது. இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இக் கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கல்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றும் பலத்த காற்றுடன் மழை : கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

கணவனுக்கு விசம் வைத்து கொன்ற மனைவி : இறுதிக்கிரியையின் பின் தெரியவந்த அதிர்ச்சி!!

பெலியத்த, கொஸ்கஹாகொட பிரதேசத்தில் விஷம் கலந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனைவி நேற்று முன் தினம் (25) மாலை பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், அதே பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணின் கணவரான 45 வயதுடைய பி.கயான் சந்திம குமார வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது அவரது மனைவி தங்க முலாம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் “போரம்” என்ற இரசாயனத்தை கலந்து அவரை குடிக்க வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மது அருந்திய கணவர் சுகயீனமடைந்ததாகவும், தானே கணவரை பெலியத்த வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட சுகவீனத்தால் கணவர் இறந்ததில் சந்தேகம் இல்லை என்றும், உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உடலை அவசர பிரேத பரிசோதனை செய்து, குடும்ப உறுப்பினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் முடிந்துள்ளன.

இந்நிலையில் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்களை , பின்னர் பரிசோதனை செய்ததில், மதுவுடன் “போரம்” என்ற விஷ ரசாயனத்தை உட்கொண்டதே இந்த நபரின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதனடிப்படையில், பெலியத்த பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம் : நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு!!

நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது.

வருமான வரி சட்டத்தின் 123 (8) சரத்திற்கு இணங்க வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையை செயற்படுத்துவது மாத்திரமே இதன் மூலம் இடம்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியசாலையில் மாயமான குழந்தை : கொந்தளிக்கும் உறவினர்கள்!!

மாத்தறையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் சிசுவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எனினும் குறித்த தாயிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட போதும், குழந்தையின் சடலத்தை தமக்கு காண்பிக்கவில்லை என அந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுஷானி அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் அதற்கு முன்னர் தனியார் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்ததற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம் செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் குழந்தையின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் நேற்று முன்தினம் (25.05) இரவு வரை வைத்தியசாலையில் காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் எவரும் அதுற்கு பதில் அளிக்கவில்லை.

நடு வானில் திடீரென குலுங்கிய விமானம் : 12 பேர் காயம்!!

கத்தார் ஏர்வேஸ்-க்கு நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. QR017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்ற நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விமானத்தில் காயமடைந்த 12 பேருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவசர சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது விமானம் பலத்த குலுங்களுக்கு உள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கிய போது அதில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எவரெஸ்ட் சிகரத்தில் 2 வாரத்தில் 3 முறை ஏறி சாதனை படைத்த பெண்!!

உலகின் மிக உயரம் கொண்ட சிகரமான எவரெஸ்ட்(Everest) சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பெண்ணொருவர் படைத்துள்ளார்.

நேபாள(Nepal) மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளரான பூர்ணிமா ஷ்ரேஸ்தா(Purnima Shrestha) என்ற பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

சுமார் 8,848.86 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை இவர் முதலில் மே 12 ஆம் திகதி அடைந்தார்.

இதனையடுத்து, மீண்டும் அவர் மே 19 ஆம் திகதி பசாங் ஷெர்பாவுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம்(25) காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை பூர்ணிமா அடைந்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ள நிலையில், இது அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் நான்காவது முறை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை படைத்த காளை!!

உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது.

அமெரிக்காவின்(America) ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்ட ரோமியோ என பெயரிடப்பட்ட காளை ஒன்றே இந்த சாதனையை படைத்துள்ளது.

கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி, இதற்கு முன்னர் டாமி என்ற காளை இந்த சாதனையில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ காளை புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை குறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில்,

“ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது. இந்த காளையை வளர்ப்பதற்காகவே தற்போது உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இளம் மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்க முயற்சி தோல்வியடைந்ததால் போலீசில் சிக்கிய கணவன்!!

இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, கொலையை மறைப்பதற்காக துண்டு துண்டாக்க முயற்சி செய்த கணவன், துண்டாக்க முடியாததால் பதற்றத்தில் போலீசில் சிக்கியுள்ளான்.

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும், பாலியல் தொல்லைகளும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் அப்படியானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், பசுபள்ளியில் வசிப்பவர் நாகேந்திர பரத்வாஜா. இவரது மனைவி மதுலதா. தபதி இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் நாகேந்திரன் தனது மனைவியை கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.

ஆத்திரத்தில் மனைவியைக் கொன்றவர், அதை மறைக்க அவரது உடலை துண்டு துண்டாக வெட்ட முயன்றார். துண்டு துண்டாக வெட்ட முடியாதததால் கியாஸ் கசிவில் தான் மனைவி உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைக்க முயற்சித்துள்ளார்.

இவை அனைத்தும் தோல்வியடைந்து அங்கிருந்து வெளியேறினார். அப்போது அக்கம்பக்கத்தினர் இவரது பதற்றத்தையும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தையும் பார்த்து போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில் நாகேந்திரனின் திடுக்கிடும் செயல் தெரிய வந்தது. அதன் பின்னர் நாகேந்திரன் மறைத்து வைத்திருந்த லதாவின் உடலை மீட்ட அதிகாரிகள்,

லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீச்சல் கற்றுக்கொடுத்த போது சோகம் : தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தனது மகள் தமிழ்செல்வியையும் (15), அண்ணன் மகள் புவனாவையும் (13) அழைத்துக் கொண்டு, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள குட்டைக்கு அழைத்து சென்று நீச்சல் சொல்லிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வியும், புவனாவும் நீச்சல் பழகிய நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.

இருவரையும் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் அந்த பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகள்களை அழைத்துக் கொண்டு குளிக்க சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மணிகண்டனின் மனைவி, குட்டைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கரையில் இவர்களது செருப்புகள் மட்டுமே இருந்ததால், சந்தேகம் அடைந்த அவர், ஊர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் குட்டையின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த மூன்று பேர் உடல்களையும் மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் 37 வயது ஷனிபா பாபு . இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதனால் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 19வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் போலீசாருக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணை முடிவில் தான், ஷனிபா பாபு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்மான் பகுதியில் ஒரு கட்டிடத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் குந்தாறை பகுதியில் வசித்து வரும் 17 வயது ரூபன் பவுலஸ் என்ற 12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு நாட்களில் திருமணம்.. காதலரை கரம் பிடிக்க எஸ்கேப் ஆன இளம்பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும், மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரியான செல்வகுமார் (24) என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால், ஜோதிபிரியாவை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஜோதிபிரியா குடும்பத்தினர் முடிவு செய்தனர். இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம் நடைபெற இருந்ததால், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். இதற்கிடையே கடந்த 23ம் தேதி காலை மருதாணி வாங்க கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஜோதிபிரியா வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் மகள் கடையில் இருந்து வராததால், தந்தை செல்வக்குமார் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி, மகளைக் கண்டுபிடித்து தரகோரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஜோதிபிரியா தனது காதல் கணவர் செல்வகுமாருடன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பிடிக்கவில்லை என்றும்,

நேற்று மருதமலை முருகன் கோவிலில் காதலன் செல்வகுமாரை திருமணம் செய்ததாகவும், செல்வகுமாருடன் தான் வாழ்வதாகவும், உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜோதிப்ரியா புகார் அளித்துள்ளார்.

அதன்பின் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி ஜோதிப்ரியாவை அவரது காதல் கணவர் செல்வகுமாருடன் போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அதேசமயம், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

99 ரூபாய் சலுகையால் வந்த வினை : திருமணத்தை கொண்டாட சென்ற பெண், கணவர், சகோதரியுடன் தீயில் கருகிய துயரம்!!

குஜராத்தில் நடந்த தீவிபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோரை அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் தனது திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவருடன் தீயில் கருகி இறந்து போன சம்பவமும் தற்போது வெளிவந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டு நாள்களுக்கு முன்பு விளையாட்டு மையத்தில் மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

இதனால் ஒவ்வொரு உடலையும் டி.என்.ஏ.பரிசோதனை நடத்தி அடையாளம் காணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தீவிபத்து ஏற்பட்ட டி.ஆர்.பி.கேம் சோன் பங்குதாரர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் யுவராஜ் சிங் என்பவர் உட்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எஞ்சியவர்களை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 15 பேர் ஆண்கள் ஆவர். 6 பேர் பெண்கள் ஆவர். 3 குழந்தைகளும் அடக்கம். இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் அக்‌ஷய் மற்றும் அவரது மனைவி கியாதி மற்றும் மைத்துனி ஹரிதா ஆகியோருடம் அடங்கும்.

அக்‌ஷயிக்கும் கியாதிக்கும் கடந்த வாரம் சனிக்கிழமைதான் நீதிமன்ற உத்தரவு மூலம் திருமணம் நடந்தது. அக்‌ஷய் கனடாவை சேர்ந்தவர் ஆவார். கோர்ட் மூலம் திருமணம் செய்து கொண்டாலும் இந்த ஆண்டு இறுதியில் பெரிய அளவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

அவர்கள் தங்களது திருமணத்தை கொண்டாட விளையாட்டு மையத்திற்கு சென்ற போது இந்த தீவிபத்து நடந்திருக்கிறது. இதில் அக்‌ஷய் உடல் அவர் அணிந்திருந்த மோதிரம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்ற இருவரது உடலும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அனைவரின் டி.என்.ஏ.பரிசோதனையும் முடிய ஒரு வாரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தீவிபத்தில் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை செய்ய ஒரு வாரம் வரை உறவினர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாள் தினத்தில் விளையாட்டு மைய நிர்வாகம் திடீரென ஆஃபர் அறித்திருந்தது.

அதாவது கட்டணத்தை ரூ.99 ஆக குறைத்து உத்தரவிட்டது. இதனால் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்தது. அதோடு வெளியில் வர குறுகலான ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. நுழைவு வாயிலில் தற்காலிக கட்டுமானம் ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது.

தீவிபத்தால் அதுவும் விழுந்துவிட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அருகில் வெல்டிங் நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீக்கனல் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.