குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள, 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்!!

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் திகதி படவுன் என்ற இடத்தில் நடைபெற்றது.

அனிதா என்ற 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் பன்னா லால் தாக்கி வயிற்றை வெட்டியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளது. இதனால், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று கணவன் லால் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

அதோடு, ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றால் விவாகரத்து செய்வேன் என்றும் கணவர் மிரட்டியுள்ளார். இந்நிலையில், உள்ளூர் பூசாரி ஒருவர் அனிதாவுக்கு ஆறாவதாக பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியதை நம்பி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர், வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய வயிற்றை கிழிக்கபோவதாக மிரட்டியுள்ளார். இதனால், தப்பிக்க முயன்ற அனிதாவின் வயிற்றை அரிவாளை வைத்து கணவர் வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த அனிதாவின் சகோதரர் சம்பவ இடத்திற்கு வந்த போது லால் தப்பிவிட்டார். இதையடுத்து, பொலிஸார் விரைந்து வந்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதன்பின்னர், பன்னா லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில், பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்தியதாக பன்னா லால் கூறினார். தற்போது, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

லண்டன் வீதிகளில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண்!!

லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.

ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதிலும் பெண்கள் ஆண்கள் அணியும் சேர்ட் மற்றும் ரீ சேட் போன்றஉடைகளை அடிவது பாக்ஷனாகி விட்டது.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்.

இந்நிலையில் அவரது வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். அவரின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு இன்று (26.05) பிற்பகல் வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த தாய்மார் சிலர் ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு மேலதிக பொலிசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு குறித்த தாய்மாரை வீதிக்கு இறக்க விடாது தடுக்கப்பட்டிருந்தனர்.

சிறிது நேரத்தின் பின் மாவட்ட செயலக வாயிலுக்கு செல்ல முற்பட்ட தாய்மாரை பொலிசார் வழிமறித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றி இருந்தனர். இதன்காரணமாக, மாவட்ட செயலகம் முன்பாக ஜனாதிபதியின் கூட்டம் முடியும் வரை பரப்பான நிலமை காணப்பட்டது.

 

வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றம் : பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும் : ரணில் உறுதி!!

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இன்று (26.05.2024) கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்.

இதற்கமைய, கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார்.

வவுனியாவில் இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலருக்கு மலர்மாலைகளை அணிவித்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்த மக்கள்!!

வவுனியா – கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இருந்து இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலர் ஒருவருக்கு அதிகளவிலான மலர்மாலைகளை சூட்டி மகிழ்வித்து, கண்ணீருடன் அப் பகுதி மக்கள் வழியனுப்பி வைத்த நிகழ்வு ஒன்று இன்று நேற்று (25.05) இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 6 வருடங்களாக திருமதி லெ.கௌசல்யா கிராம அலுவலராக பணியாற்றி வந்திருந்தார்.

கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து குறித்த கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காகவும், அம் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அவர் செயற்பட்டிருந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த கிராம அலுவலர் கந்தபுரம் பிரிவில் இருந்து நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு மற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அக் கிராம மட்ட பொது அமைப்புக்கள், கிராம மக்கள் என பலரும் மலர்மாலைக் அணிவித்து கிராம அலுவலரை மகிழ்வித்ததுடன், அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

இதன்போது குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரு மரநடுகையும் இடம்பெற்றது. மலர்மாலைகள் நிறைந்து கிராம அலுவலர் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், அயல் கிராம கிராமஅலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கத்தினர், பெண்கள் அமைப்புக்களின் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உறங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்!!

கர்நாடகாவில் சிலிண்டர் கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் வசித்து வந்தவர் குமாரசாமி (45). இவரது மனைவி மஞ்சுளா (39), மகள்கள் அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17).

சலவை தொழில் செய்து வந்த குமாரசாமி சிக்கமகளுருவின் கடூரைச் சேர்ந்தர் ஆவார். பல ஆண்டுகளுக்கு முன் மைசூரின் யரனஹள்ளியில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமியின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்துள்ளனர்.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது குமாரசாமியின் குடும்பத்தினர் உயிரிழந்த்தும், வீட்டில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

குடும்பத்தினர் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் குடும்பத்தினர் உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ அழைப்பில் பேசிய மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்!!

அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ காலில் பேசுவதாக சந்தேப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டம் சன்னபட்னா தாலுகாவில் உள்ள மதுகிரிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). இவருக்கும், அஸ்வினி(27) என்ற பெண்ணுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ரமேஷுக்கும், அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட ரமேஷ், யாரிடம் வீடியோ காலில் பேசுகிறாய் என்று அஸ்வினியிடம் சண்டை போட்டு வந்தார்.

இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான மேனேவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மேனேவுக்குச் சென்ற ரமேஷ், இனிமேல் சண்டை போடமாட்டேன் என்று உறுதியளித்தார்.

இதன் பேரில் கோபித்துக் கொண்டு சென்ற அஸ்வினி, கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில், அஸ்வினிக்கு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால், அவர் பலமுறை அழைத்தும் அஸ்வினி, பெற்றோர்களின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் அஸ்வினியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் நேற்று மாலை மதுகிரிஹள்ளி கிராமத்திற்கு வந்திருந்தனர். அப்போது வீட்டில் அஸ்வினி இல்லை. அதே போல ரமேஷும் வீட்டில் இல்லை.

இதனால் பதற்றமடைந்த அஸ்வினியின் பெற்றோர், தங்களது மகளைத் தேடத் துவங்கினர். அப்போது வீட்டின் பின்புறம் இலைகளால் ஒரு குழி மூடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த அஸ்வினியின் பெற்றோர், அதைத் தோண்டி பார்த்தனர்.

அந்தக் குழிக்குள் அஸ்வினி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து சன்னப்பட்டணா கிராமிய காவல் நிலையத்திற்கு அஸ்வினியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரித்த போது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் செல்போனில் வீடியோ காலில் அஸ்வினி பேசி வருவதாக ரமேஷ் சந்தேகப்பட்டு வந்தார். அதனால் அவரை அடித்துக் கொலை செய்து புதைத்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாகியுள்ள ரமேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சோகம்!!

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவில் விஷம் கலந்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கள் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம்.

இவர் தேவதானத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் சுக்கிவார்பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்கள் மகள் ஆனந்தவல்லி, மகன் ஆதித்யா, 2 மாத பேத்தி சசிகா ஆகியோருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, லிங்கம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் ஆனந்தவள்ளி, ஆதித்யா, சசிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன. ‘ லிங்கம், 40க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். மீண்டும் கடனை திருப்பி செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதை சரி செய்ய, தனக்கு வர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி, தந்தையிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அவரது தந்தை சொத்தை பிரிக்க மறுத்து விட்டார். இதனால், குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது’ என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடன் பிரச்சனையால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்த சோகம்!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கோகுல் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என்ற இரு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால், கோகுல் இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். மன உளைச்சலில் வீட்டில் இருந்து வந்த சுகமதி, இரண்டு சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையால் சுகமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் சிறுவன் உள்பட இருவர் கைது!!

பெங்களூருவில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த மே 15-ம் தேதி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரபுத்தா(21) என்ற மாணவி குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது கழுத்து மற்றும் கை வெட்டப்பட்டிருந்தது. அத்துடன் குளியலறையில் கத்தியும் கிடந்தது. பிரபுத்தா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் சந்தேகப்பட்டனர்.

இதையடுத்து பிரபுத்தா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தனது மகள் கொலை செய்யப்பட்டதாக, பிரபுத்தாவின் தாய் சௌமியா, போலீஸில் புகார் செய்தார்.

கொலை நடந்த போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டிருந்தாலும், பின்பக்க கதவு திறந்திருந்ததாக சௌமியா புகாரில் கூறியிருந்தார். அத்துடன் பிரபுத்தாவின் செல்போன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது திருடப்பட்டது என்றும், தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்று சௌமியா உறுதிபட கூறினார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பிரபுத்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் பிரபுத்தா கழுத்து, கை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியபூர் போலீஸார் விசாரணை நடத்திய போது, இக்கொலையில் ஒரு சிறுவன் உள்பட இருவர் ஈடுபட்டது தெரிய வந்தது. நண்பர்களான சிறுவனும், அவரது நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிறுவன் தாக்கியதில், அவரது நண்பரின் கண்ணாடி சேதமடைந்தது.

இதை பழுது நீக்க பணம் வேண்டும் என்பதற்காக, பிரபுத்தா வீட்டிற்குள் நுழைந்து சிறுவனும், அவரது நண்பரும் பணத்தை திருட முயன்றுள்ளனர். பேக்கில் இருந்து 2,000 ரூபாயை எடுத்த போது குளியலறையில் இருந்து பிரபுத்தா வந்துள்ளார். அதனால், தன்னை விட்டு விடும்படி பிரபுத்தாவின் காலைப் பிடித்து சிறுவன் கெஞ்சியுள்ளார்.

அப்போது பிரபுத்தா தவறி கீழே விழுந்ததில் அவரது தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் எழுந்தால் உண்மையைச் சொல்லி விடுவார் என்பதால், பிரபுத்தாவை கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்ததாகவும், செல்போனை திருடிச் சென்றதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவன் உள்பட இருவரையும் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிக்கப்பட்ட புதிய கிரகம்!!

வானியலில் முன்னணிவாய்ந்த சர்வதேச குழுக்கள் பூமி மற்றும் வீனஸ் கோள்களில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கண்கவர் கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் பூமியைப் போன்ற கிரகமாக கருதப்படுகிறது. நாசா நிறுவனமானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடத்திய ஆய்வின் விளைவாக இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்களில் Gliese 12bயும் ஒன்று என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Gliese 12b இன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 42 பாகை செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் வளிமண்டலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பலத்த காற்று தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை!!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (26.05) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (27.05) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையில் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

யாழில் பேரூந்திற்குள் காதல் ஜோடிகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!!

யாழில் காதல் ஜோடிகளுக்கு அந்தரங்க பகுதியாக பேருந்துகள் மாறிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பஸ்கள் பருவகால ரிக்கட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல்லாது, இவ்வாறான காதலர்களை பேருந்து நின்று ஏற்றி செல்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

குறிப்பாக மாலை வேளைகளில் யாழிலிருந்து செல்லும் பஸ்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது. குறித்த பஸ்களின் மாஸ் போட்டபடி காதலர்கள் , மற்றும் நடுத்தரவயதை தாண்டிய தகாத உறவில் உள்ளவர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து லீலைகள் புரிவதாகவும் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பஸ் நடத்துனர்கள், பொதுப்போக்குவரத்தில் எல்லைமீறும் காதலர்களை கண்டுகொள்வதில்லை எனவும், ஆதரவு கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதேவேளை காதல் ஜோடிகள் பஸ்சை மறித்தவுடன் பஸ் நின்று அவா்களை ஏற்றிச் செல்வதாகவும் , பருவகால ரிக்கட் வைத்துக் கொண்டு நிற்கும் பயணிகளை ஏற்றாது செல்வதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் கலாச்சாரத்திற்கும் , கல்விக்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் தற்போது சமூக சீகேடுகளும் குற்றங்களும் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் பெருமைகளை கொண்டாடும் தென்னிலங்கை மக்கள்!!

பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பல தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழர்களுக்கு எதிராக இனவாத சித்தாந்தங்களை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கும், சிங்கள ஊடகங்கள் கூட அவர்களை பெருமைப்படுத்தி முன்னிலையாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற மிகப்பெரிய சமையல் போட்டியில் மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை ஈழத்தமிழ் இளைஞன் வென்றுள்ளார்.

பிரின் பிரதாபன்

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்தவரும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவருமான பிரின் பிரதாபன் இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.

கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராக செயற்படும் பிரின் பிரதாபன் பிபிசி தொலைக்காட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியில் வென்றுள்ளார்.

பிரான்ஸில் கடந்த வருடம் நடைபெற்ற சிறப்புமிக்க பாண் தயாரிப்பில் வவுனியாவை சேர்ந்த தர்ஷன் செல்வராஜா என்பர் முதலிடம் பெற்றிருந்தார். இதன்மூலம் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கான உணவு வழங்கும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார்.

தர்ஷன் செல்வராஜா

இந்நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தர்ஷனுக்கு சிங்களவர்களும் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர்.

பல சிங்கள ஊடகங்கள் செவ்வி கண்டதுடன், ஹோட்டல் துறையில் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

புலம்பெயர் நாடுகளில் இலங்கையை சேர்ந்த பல தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதனையாளராக உள்ளதாக பல தென்னிலங்கைவாசிகள் சமூக வலைத்தளங்களில் பதவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைவிட்ட காதலி : செல்ஃபி எடுத்து உயிரை விட்ட இளைஞர் : அதிர்ச்சியில் தாய்!!

காலி மாவட்டத்தில் தெல்வத்த – மீட்டியாகொடை பகுதியில் வீடொன்றில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்துள்ள செல்பியை வைத்து இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று (23) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த இளைஞன் ஹிக்கடுவை தெல்வத்த மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்தவராவார். இந்நிலையில் இரவு நித்திரைக்கு சென்ற மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் தாயார் திறந்தபோது, சடலம் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதோடு உயிரிழந்த இளைஞனின் அருகில் இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயாரும் பாட்டியும் விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து பொலிஸார் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதோடு இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், காதலியால் காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டுக் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுப்பிடித்தனர்.

இந்நிலையில் காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வீரர் எதிர்ப்பு : இடைநிறுத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்!!

ஜப்பானில் (Japan) நடைபெற்றுள்ள உலக பரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் வீரர் ஆட்சேபனை வெளியிட்டதை அடுத்து போட்டி முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப்போட்டியில், கியூபாவின் கில்லர்மோ வரோனா கோன்சாலஸ் முதலிடம் பெற்றுள்ளார் எனினும் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கையின் பிரியந்த ஹேரத், கில்லர்மோ வரோனா கோன்சாலஸின் முடிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனையடுத்தே இந்த போட்டியின் முடிவை அறிவிப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் இந்தியாவின் ரிங்கு ஹடா (Rinku Hooda) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்