இலங்கை மக்களை ஏமாற்றி பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சிகிச்சையாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு குறித்த பெண் ஏமாற்றியுள்ளார்.

சோயா பொருட்களை பொதி செய்வதற்கு அதிக தொகை தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 59 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

41 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை, சூரியகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், நுகேகொட நாவல வீதியில் வாடகை அடிப்படையில் பெற்ற வீட்டில் வைத்து இந்த பாரிய மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பிரமிட் திட்டமாக இந்த வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு உயர்மட்டத்தில் இருப்பவர்கள் ஊடாக அதிக பணம் கிடைக்கும் எனவும் உறுதியளித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு பணம் வழங்கப்படும் கூறி வேலையை பெற்றுக் கொண்டதன் பின்னர் பணம் வழங்காமல் ஏமாற்றிவிடுவதாகவும் பின்னர் ஏமாற்றப்பட்ட நபரின் இடத்திற்கு வேறு ஒருவரை விளம்பரம் ஊடாக பணிக்கு வரழைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஏமாற்றுவதனை தொழிலாக இந்த பெண் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சமையல் போட்டியில் சாதனை படைத்த இலங்கையர்!!

அவுஸ்திரேலிய சமையல் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சமையல் போட்டியில் இலங்கையர் ஒருவர் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் போட்டியானது, மிகவும் ஆக்கப்பூர்வமான சமையல் கலைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் உணவின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது.

போட்டிக்காக ஐந்து பிரிவுகளில் போட்டியிட்ட இலங்கையைச் சேர்ந்த ரெமோல்ட் பெர்னாண்டோ என்ற இளம் கலைஞர் வெற்றி பெற்றார்.

போட்டியில் நடைபெற்ற ஐந்து பிரிவுகளிலும் பதக்கம் பெற்றமை சிறப்பம்சமாகும். அவர் மூன்று தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும், இலங்கையர் ஒருவர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு சிட்னியிலும், கடந்த ஆண்டு மெல்போர்னிலும் போட்டிகள் நடைபெற்றன.

பேருந்து மோதியதில் 10 வயது மாணவி பரிதாபமாக பலியான சோகம்!!

கண்டி – கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து மோதி பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று (22.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியே உயிரிழந்துள்ளார். பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தானது, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் மாணவி மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மாணவி குருந்துவந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிக்கு எமனான மரம்!!

சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது இன்று (23.05.2024) பிற்பகல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யுவதிகள் இருவரும் வில்பத்து பகுதியிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றினால் அவர்கள் மீது சரிந்து வீழ்ந்துள்ளது.

பிரதேசவாசிகள் மரத்தை அகற்றிய போது ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதுடன், மற்றைய யுவதி பலத்த காயமடைந்திருந்தார். இதேவேளை, இன்று காலை நிலவரப்படி, சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக மரங்கள், முறிந்து வீழ்ந்தமையால் வீடுகள் உட்பட உடைமைகளும் சோதமைந்துள்ளன.

கனமழையுடன் ஹங்வெல்ல – வகை பிரதேசத்தில் வீதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வகை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார்.

களு கங்கையின் அத்தனகலு வடிநிலம் மற்றும் குடா களுகங்கையின் உபகுளங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் நிலைமை : மறு அறிவித்தல் வரை வழங்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான வானிலை நிலவரம் தொடர்பில் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இக் கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருகோணமலையில் கார் விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, அவர்கள் பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு -மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பெரும் சோகம் : தந்தையும் மகனும் பரிதாபமாக மரணம்!!

இலங்கையில் வெசாக தினத்தை முன்னிட்டு தானசாலை ஏற்பாடுகளை செய்த தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தானசாலைகளை அமைந்து விட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் திடீரென இரவு மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால், மின் பிறப்பாக்கிமூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. தமது கடமைகளை முடித்துக் கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் நித்திரைக்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 40 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். திடீரென மின்பிறப்பாக்கி இயங்காமல் போனதால் இதை பார்ப்பதற்கு அங்கு உள்ள இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இதேவேளையில் நித்திரை கொண்டு இருந்தவரின் முகத்தில் கரப்பான் பூச்சி கடிப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அவரை தட்டி எழுப்பி உள்ளனர், ஆனால் அவர் மூச்சு பேச்சு அசைவும் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக புப்புரஸ்ஸ பன்விலதென்ன கிராமிய வைத்தியசாலைக்கு இருவரையும் கொண்டு சென்ற போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் இருந்து வெளியேறிய காபன்மொனக்சைட் என்ற நச்சுத்தன்மையுடைய வாயுவை சுவாசித்ததனாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைக்கு படிக்காமல் செல்போனில் அரட்டை மகளைத் தடியால் அடித்துக் கொலை செய்த தாய்!!

போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மகள், படிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்ததால் அவரை தடியால் தாக்கி அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடம் நடத்த துவங்கியதால், செல்போன் பயன்பாடும் அதிகமானது.

இதன் காரணமாக பலர், செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு இளம்பெண், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சீதா தேவி. இவரது மகள் நிகிதா(22). இவர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனால் தேர்வுக்காக அவர் படித்து வந்தார்.

ஆனால், படிப்பதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் நிகிதா அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், நிகிதா செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.

இதனால் அவரது செல்போனை சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துக் கொண்டனர். இனிமேல் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்தமாட்டேன் என்று நிகிதா உறுதியளித்த காரணத்தால், அவரிடம் மீண்டும் செல்போனை அவரது குடும்பத்தினர் தந்துள்ளனர். தன்னிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டதற்கு தனது தாய் சீதா தேவி தான் காரணம் என்று அவருடன் நிகிதா சண்டை போட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிகிதாவின் தந்தை, சகோதரி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் நிகிதாவுக்கும், சீதா தேவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதா, அவரது தாய் சீதா தேவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது நிகிதா கையில் இருந்த தடியைப் பறித்து சீதா தேவி சரமாரியாக தாக்கினார். இதில் நிகிதாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு சீதா தேவி, செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தாய், மகளுக்கு ஏற்பட்ட மோதலில் நிகிதா உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சீதா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்தக்கூடாது என்ற வலியுறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் மகளை தாயே அடித்துக் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!!

தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

குடும்பத்தின் மூன்றாவது மகளான ஜெனிஃபர், தனது அக்காவின் திருமணத்திற்கு முன்பே காதலரை கரம்பிடித்துள்ளார். அப்போது மார்ட்டின்ராஜ் வீட்டில் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், இரண்டாவது மகளின் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றோர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெனிஃபரின் சகோதரிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்துள்ளது. அங்கு ஜெனிஃபரின் மாமியாரும், நாத்தனாரும் உனக்கு ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அன்றிரவு தனது பெற்றோரிடம் செல்போனில் பேசிய ஜெனிஃபர், சீர்வரிசை செய்யாததை குறிப்பிட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ஜெனிஃபரின் சகோதரர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெனிஃபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தங்கள் மகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஜெனிஃபரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிஸார், உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்த அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களை கண்டு பதறி ஓடி ஒளியும் நபர் : விசித்திர நோயால் வியப்பு!!

பெண்களே வேண்டாம் என கூறி பதறி ஓடும் நபர் ஒருவர் தொடர்பில் தகவ்ல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் வசித்து வரும் கலிக்ஸ்டே நஸம்விதா. 71 வயது முதியவரான இவர் பல வருடங்களாக மக்களுடன் பெரிதாக பழகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்.

இவருக்கு இளம் வயதில் இருந்தே பெண்களை பார்த்தாலே பயம் ஏற்படும் மனநோய் இருந்து வருகிறது. இதனால் எந்த பெண்ணின் அருகிலேயும் இவர் செல்லவே மாட்டார். பெண்களோடு அதிகம் பேசக்கூட மாட்டார்.

வேறு வழியே இல்லை பேசி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் மட்டும் அவர்களிடம் பேசுவார். சுமார் 55 வருடங்களாக இவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்போது கூட ஏதாவது பெண் அதை விற்பனை செய்கிறார் என்றால் அதை அவரிடம் தூக்கி போட சொல்லி எடுத்து கொள்வாராம். அந்த அளவிற்கு பெண்கள் என்றாலே ஆகாது என்று வாழ்ந்து வருகிறார் இந்த விசித்திர மனிதன்.

தெருநாய்க்கடியால் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

சமீபகாலமாக தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நாய்கள் கடிப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியும் நாய் வளர்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருந்தபோதிலும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார். 15 நாட்களுக்கு முன் லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்தன.

இது குறித்த செய்திகள் புகைப்படங்கள் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாய்க்கடியால் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தார்.

இணைபிரியாத நண்பர்கள் வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள் மச்சக்காளை மற்றும் பிரபு. மச்சக்காளை டாடா ஏசி ஓட்டுநராகவும், பிரபு ஆட்டோ ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தனர். நண்பர்களான இருவரும் நேற்று இரவு செட்டியபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது நோட்டம்பட்டி அருகில் மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மச்சக்காளை, பிரபு என்ற இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். நண்பர்களாக கிராமத்தில் வலம் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் சாலை விபத்தில் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டாள் : தாயின் கதறலால் மாறிய வழக்கு!!

பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் புகார் கூறியுள்ள நிலையில், போலீஸார், தற்கொலை வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுப்ரமணியாபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15-ம் தேதி பிரபுத்தா(20) என்ற இளம்பெண் குளியலையில் இறந்து கிடந்தார். அத்துடன் அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

அதன் அருகில் குளியலறையில் கத்தியும் கிடந்தது. ஆனால், எந்த பொருளும் திருடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், பிரபுத்தா தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

ஆனால், பிரபுத்தாவின் வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தாலும், பின்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே, தனது மகள் பிரபுத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும்,

குளியலறையில் வைத்து கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாய் போலீஸில் புகார் கூறியுள்ளார். அத்துடன் பிரபுத்தாவாவின் முகம் மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுப்ரமணியபூர் காவல் நிலைய போலீஸார், 302 பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை தொடர்பாக சில நபர்களைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர். பிரபுத்தா பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ள தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து!!

கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடவடிக்கை CRS நடைமுறையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கொருமுறை, CRS தரவரிசையை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு வெளியிடுகிறது.

அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதி அட்டையைப் பெறுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நிர்ணயித்த CRS புள்ளிகள் 540 மற்றும் அதற்கும் அதிகம்.

மூன்று ஆண்டுகள் நீடிக்கும் post-graduate work permit வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த புள்ளியை எட்ட தகுதிபெறவில்லை என புலம்பெயர்தல் ஆலோசகரான Manan Gupta தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொடர்பான அமைச்சராக மார்க் மில்லர் நியமிக்கப்பட்ட போது, 2023இல் காலாவதியாகும் அனுமதிகள் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்தார்.

இதன்போது CRS புள்ளி வரம்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Manan Gupta தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை சுத்தியலால் அடித்து கொடூரக் கொலை : கணவர் கைது!!

மே 20ம் தேதி பிரபல திரைப்பட நடிகை வித்யா அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய,

கணவர் நந்தீஷால் சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 2018 ல் வித்யாவுக்கும் நந்திஷாலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் இருந்தே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இது குறித்த வாக்குவாதங்கள், தகராறுகள் தொடர்ந்து இருந்தபோதிலும் சமீபகாலமாக அதிகரித்தது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய கணவர் வித்யாவின் வீட்டிற்கே சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.

நடிகை வித்யா பஜ்ரங்கி, அஜித், வேதா, ஜெய் மாருதி 800 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் நடிகை வித்யா காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்து வந்துள்ளார்.