மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இன்றைய தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.  இலங்கையில் நேற்றைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.05.15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,638 ரூபாவாக காணப்படுகின்றது. அதன்படி 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் 8 கிராம் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் ஒரு கிராமின் விலை 22,990 ரூபாவாக பதிவாகியதுடன், 22 கரட் 8 கிராம் தங்கம் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை இராணுவச்சாவடி அகற்றம்!!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. கடந்தகாலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியாமாவட்டத்தின் ஓமந்தை உட்படபல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

அவற்றில் பல சாவடிகள் அகற்றப்பட்டநிலையில்
ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்குவருடங்களாக அகற்றப்படாமல் இருந்தது இந்நிலையில் நேற்றுமுன்தினம் அது அகற்றப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு : சம்பவம் இடம்பெற்ற விடுதி முகாமையாளர் கைது!!

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (15.05) தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதுச் சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர்,

குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிசாரால் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடுமை!!

19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் – மாவத்தகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதி நேற்று (13) பிற்பகல் குருணாகல் – மாவத்தகம பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்பு நிலையமொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இந்த மேலதிக வகுப்பு நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராக்களை கண்காணித்துக் கொண்டிருந்த நபர்கள் சிலர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பகுதியை அவதானித்துள்ளனர்.

இந் நிலையில் அதனைச் சோதனையிடச் சென்றப் போது யுவதி சந்தேக நபரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதை கண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைத்த நபர்கள் யுவதியைச் சந்தேக நபரிடமிருந்து காப்பாற்றி இது தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்த பொலிஸார் மேலதிக் அவிசாரணைகளி முன்னெடுத்துள்ளனர்.

16 ஆண்டுகளாக சாப்பிடவோ, துளி நீர் கூட சுவைக்காத பெண்… அவர் சொன்ன காரணம்!!

ஆப்பிரிக்க நாடு ஒன்றின் உள் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் நீண்ட 16 ஆண்டுகளாக உண்ணவோ துளி நீர் கூட பருகவோ செய்தது இல்லை என கூறி வருகிறார்.

திடீரென்று ஒருநாள்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்தவர் Muluwork Ambaw. இவருக்கு 10 வயதாக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் சாப்பிடுவதையும் தண்ணீர் பருகுவதையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கடைசியாக தாம் சாப்பிட்டது சிவப்பு பருப்பில் செய்த உணவு என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். குறித்த தகவல் பத்திரிகைகளில் கசிந்ததும், அமெரிக்க சமூக ஊடக பிரபலம் Drew Binsky அவரை நேரில் சந்தித்து, தாம் கேள்விப்பட்டது உண்மையா என வினவியுள்ளார்.

Muluwork Ambaw என்பவரின் கிராமத்திற்கே நேரிடையாக சென்ற Drew Binsky, அவரது குடியிருப்பைக் கண்டு வியந்துள்ளார். சக கிராம மக்களைவிடவும் பெரிய வீடு அவரது என்பதுடன், உயரமான சுற்று மதில்களுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அவரது குடியிருப்புக்குள் நுழைந்த Drew Binsky தாம் வேறொரு உலகத்தில் நுழைந்த உணர்வைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடியிருப்பு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கழிவறை ஆப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி இருந்ததாகவும்,

Muluwork Ambaw பல ஆண்டுகளாக கழிவறையை பயன்படுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது மகளும் சகோதரியும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை Muluwork Ambaw தமது தோட்டத்தை பராமரிப்பதில் செலவிடுகிறார். அதில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். விருந்தினர்களுக்காக நிறைய காய்கறிகளை விளைவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடவுளின் செயல்

சமையல் தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் சாப்பிடும் உணர்வு அல்லது பசி என்பது தமக்கு ஏற்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக இது தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் கட்டாயப்படுத்தியும் தம்மால் சாப்பிடவோ, நீர் அருந்தவோ பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், முலுவொர்க்கை எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆய்வுகள் மற்றும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், Muluwork Ambaw முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது உடலில் உணவு அல்லது நீர் என எதன் கழிவும் காணப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

இதனாலையே அவருக்கு சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் சூழல் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, துபாய் மற்றும் கத்தார் நாட்டின் மருத்துவர்களும் முலுவொர்க்கை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அவர்களும் இது விசித்திரம் என்றே பதிவு செய்துள்ளனர். முலுவொர்க் கர்ப்பமாக இருந்த போது வளரும் குழந்தைக்கு ஊட்டமளிக்க குளுக்கோஸ் உட்செலுத்துதல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

தமது இந்த நிலைக்கு காரணம் கடவுளின் செயல் என்றே முலுவொர்க் நம்புகிறார். பலர் இது பித்தலாட்டம் என விமர்சிக்க, வந்து என்னுடன் தங்கிவிட்டு அதன் பிறகு விமர்சியுங்கள் என முலுவொர்க் பதிலளித்துள்ளார்.

விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி : 60க்கும் மேற்பட்டோர் காயம்!!

இந்தியாவின் மும்பையில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த இந்த விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் , பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விளம்பரப் பலகை சட்டப்பூர்வ அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மதுபோதையில் அட்டகாசம் பிரபல பின்னனிப்பாடகர் வேல்முருகன் கைது!!

மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான பின்னணி பாடகர் வேல்முருகன் கைதான சம்பவம் ப்ரபரப்பிஅ ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில் , இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மே 12) அதிகாலை அந்த வீதியூடாக காரில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்து பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாது மதுபோதையில் இருந்த வேல்முருகன் மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளரை , ஆபாசமாகவும் பேசியுள்ளார் .

விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வேல்முருகன் மீது புகார் அளிகப்பட்ட நிலையில் விருகம்பாக்கம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வேல் முருகனை நேற்று இரவு கைது செய்தனர்.

இன்று, அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர் ஆடுகளம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடகராக வேல்முருகன் பாடியவர் என்பதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் குறிப்பிடத்தக்கது.

கடன் சுமையால் விபரீதம் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து கணவன், மனைவியும் தற்கொலை!!

சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (12). இவர், எம்.கே.பி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

ஜெகநாதனுக்கு மணலியில் சொந்த வீட்டு மனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜெகநாதன் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே, ஜெகநாதனிடம் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜெகநாத் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி, இன்று காலை மகள் காவியாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று உடலை படுக்கை அறையில் சாய்த்து வைத்துள்ளார். பின்னர், ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் படுக்கை அரையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஜெகநாதனின் தாயார் இன்று காலை தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜெகநாதனும், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மகள் காவியா படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்பம் தாங்காமல் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு!!

கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே காணப்படுகிறது. தற்போது அனைத்து பள்ளிகளும் ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீர் நிலைகளுக்கு படையெடுகத் தொடங்கி உள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், கரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் ஊராட்சி என்.புதூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 12), மாரிமுத்து (13), விஷ்ணு (13) நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்று மாலை குளிப்பதற்காக வீட்டிற்கு தெரியாமல் கிணற்று பகுதிக்குச் சென்றுள்ளனர்.

மூவரின் குடும்பத்தினரும், தங்கள் பிள்ளைகள் விளையாடச் சென்றிருப்பதாக நினைத்து இருந்துள்ளனர். பின்னர் இரவு நீண்டநேரமாகியும் சிறுவர்களை காணாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

அப்போது மாயமான மூவரும் அருகில் உள்ள கிணற்றிற்கு குளிக்கச் சென்றதால் வேறு சில சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகே சிறுவர்களின் காலணிகள், ஆடைகள் கிடந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி தேடியபோது மூன்று மாணவர்களும், இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மூவரின் உடல்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரிதாபமாக பறிபோன ஐந்து வயது சிறுமியின் உயிர் : எமனான கையடக்கத் தொலைபேசி!!

களுத்துறை – மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயது முன்பள்ளி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பேருவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதியவர் ஒருவர் பரீட்சை எழுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் விசேடமாக கணித பாட பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். கல்வியை பயில வயது ஒரு தடை இல்லையென பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்!!

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன. இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்புளூயன்சா A முதன்மையானது.

இருப்பினும், இன்புளூயன்சா B யும் பரவலாக உள்ளது. இந்த நிலைமையின் இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது.

இன்புளூயன்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்புளூயன்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய காய்ச்சல் நிலையத்திற்கு முன்னர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் : யுவதிகள் உட்பட 21 பேர் கைது!!

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பேஸ்புக் சமூக ஊடகங்கள் ஊடாக இணைந்துள்ளனர்.

அவர்கள் இணைந்து இந்தக் கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதியின்றி நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கணவனை கொலை செய்து ஆற்றில் வீசிய பெண் : இலங்கையில் பயங்கரம்!!

உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயகுமார என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய சந்தேக நபரான பெண், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை முதுகில் சுமந்து கொண்டுசென்று ஆற்றில் வீசியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம் : சந்தேக நபர்கள் பிடிபடாதது ஏன்?

யாழ் வடமராட்சி தாளையடிப் பகுதியில் ஜெயசீலன் சங்கீதா எனும் 44 வயதான 3 பிள்ளைகளின் தாயார் வல்லுறவுக்குள்ளான நிலையில் வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இதுவரை சந்தேக நபர்கள் பிடிபடவில்லை.

உயிரிழந்த பெண் மலசலகூடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நீர் நிரம்பிய பரல் ஒன்றில் தலை மூழ்கிய நிலையில் இறந்து காணப்பட்டார்.

கணவன் மீன்பிடிக்கச் சென்று அதிகாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவியைக் காணாமல் தேடியபோதே வீட்டின் மலசலகூடத்தின் அருகில் மனைவி சடலமாக காணப்பட்டார்.

அவரது மரணம் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் குறித்த வீட்டில் களவு ஏதாவது நடந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்துள்ளனர்.

பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் பெண்ணின் பெண் உறுப்பின் அருகில் நகக் கீறல்கள் காணப்பட்டுள்ளது. குறித்த கொலை ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் கருதுகின்றார்கள்.

குறித்த பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டு 3 நாட்களாகியும் இன்னும் சந்தேகநபர்கள் பிடிபடவில்லை என்பது மக்களிஞ் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.