இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.
அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது. மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயல்பான கோடை வெயிலைக் காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில்,
கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் பதிவாகி உள்ளது.
கடந்த 26ம் தேதி வாக்குப் பதிவின் போது கூட கேரளாவில் பூத் ஏஜென்ட் உட்பட 10 பேர் வெயில் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கடும் வெயில் காரணமாக கேரளத்தில் 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் வெப்பம் காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதைப் போலவே கோட்டயத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஷமீர் (35) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் வெயில் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதி வீடொன்றில நேற்று (02.05.2024) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37 வயது லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகின்றது.
மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது. 2023 இல், நாசா ஒரு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. ஒரு விண்கலத்தை ‘சைக் 16’ என்ற சிறுகோள் நோக்கி அனுப்பியது.
இது முதன்மையாக உலோகத்தால் ஆனது என்பதுடன் நமது சூரிய குடும்பத்தில் அரிதானது. இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பெல்ட்டில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சைக் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (டிஎஸ்ஓசி) அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் பரந்த தொலைவில் லேசர் தகவல்தொடர்புகளை சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சைக் முதன்மையாக ரேடியோ அலைவரிசை தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தினாலும், ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது.
அதாவது குறிப்பிடத்தக்க சாதனையாக, லேசர் தகவல்தொடர்பு டெமோ வெற்றிகரமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பொறியியல் தரவை அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனசிக்கன் ரைஸில் அவரது பேரன் பகவதி தான் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றார். இந்த உணவைத் தான் தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட பகவதியின் தாத்தா சண்முகநாதன், தாய் நதியாவுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிக்கன் ரைஸை விநியோகித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
தாய் நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அளித்த வாக்குமூலத்தில் பகவதி கல்லூரி காலத்திலேயே அதிக தவறான பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளார். இதனை பகவதியின் தாயும், தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.
இதனால், கோபடைந்த பகவதி தான் வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து இருவருக்கும் கொடுத்துவிட்டார். பகவதியின் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி மரணத்திற்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், சென்னையில் உள்ள பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், மேலநீழிதநல்லூருக்கு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், அங்கேயே அடுத்த நாள் வளைகாப்பு நடத்துவதற்காகவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, கொல்லம் ரயிலில் சென்ற போது இரவு 8 மணிக்கு வாந்திக்கான அறிகுறி கஸ்தூரிக்கு ஏற்பட்டதால் கை கழுவும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர், உறவினர்கள் ரயிலில் இருந்து இறங்கி, கர்ப்பிணி விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர்.
ஆனால், கர்ப்பிணி அங்கு இல்லை. இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக வந்தது.
இதையடுத்து, பொலிஸார் கர்ப்பிணியை தேட ஆரம்பித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்துள்ளார்.
இதில் கஸ்தூரி ரயிலில் இருந்து கீழே விழுந்தவுடன் அந்த பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை உறவினர்கள் பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால், அடுத்த பெட்டிக்கு ஓடிச் சென்று அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன்பிறகே ரயில் நின்றுள்ளது. இதற்குள், கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் சென்று விட்டது.
உடனடியாக ரயில் நின்றிருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும், ரயிலானது கொல்லம் சென்றுவிட்டதால் பெட்டிகளில் அபாய சங்கிலிகள் வேலை செய்கிறதா என்று பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து படிக்க வைக்கிறார்கள்.
அந்தவகையில் தந்தை ஒருவர் 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து தனது மகனை மருத்துவர் ஆக்கியுள்ளார்.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் வசிக்கும் வாஹித் மூமின் என்ற மருத்துவர், தனது தந்தை 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து படிக்க வைத்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “எனது அப்பா இன்று முதல் பெட்டிக்கடையில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், அதற்கு அவர் மனதளவில் தயாராக இல்லை. அவர், 33 வருடங்களாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அவர் தனது கடின உழைப்பின் காரணமாகவும், பெட்டிக் கடையின் காரணமாகவும் பண நெருக்கடி இல்லாமல், கடன் வாங்காமல் என்னை மருத்துவர் ஆக்கியுள்ளார்.
2 பெருநாள் கொண்டாட்டத்திற்காக வருடத்திற்கு 2 நாட்கள் மட்டும் விடுப்பு கொடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கடையை நடத்தி வந்தார்.
எனது பெற்றோர் எனக்கு கல்வியை கொடுக்கவில்லை என்றால் நானும் பெட்டிக்கடையை தொடர்ந்திருப்பேன். அதனை நவீன முறையில் விரிவுபடுத்தியிருப்பேன்.
பெட்டிக்கடையில் இருந்து எனது அப்பா ஓய்வு பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. இனி அவர் நேரத்தை உற்சாகமாக செலவிடுவார். அவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.
இவர், கடந்த 26 -ம் திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வாக்களித்து விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது.
பின்னர், மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சரிசெய்ய இயலாது என்று மருத்துவர் கூறியுள்ளார். அப்போது, கங்கை நதியில் மோகித்தின் உடலை வைத்திருந்தால் விஷம் இறங்கிவிடும் என்று உறவினர்கள் தெரிவிக்கவே, இரு நாட்களாக உடலை கயிறு கட்டி கங்கை நதியில் வைத்துள்ளனர்.
பின்னர் , பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி மோகித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூட நம்பிக்கையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் கல்வி பயின்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4-வது மாடிக்குச் சென்ற அவர் திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் மாணவி பபிஷா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடைபெறுகிறது. மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 வயசு தான்… எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19 வயது மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பெருநகர காவல்துறையின் கூற்றுப்படி, சாஹில் ஷர்மா, 24, அக்டோபர் 29, 2023 அன்று போலீசாரை அழைத்து, தனது 19 வய்துடைய மனைவியான மெஹக்கை க்ராய்டனில் உள்ள ஆஷ் ட்ரீ வேவில் உள்ள தங்களின் வீட்டில் வைத்துக் கொன்றதாக ஷர்மா ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, போலீசாரை வரவழைத்தார். அந்த தொலைபேசியில், தனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
உடனடியாக ஒரு போலீஸ் குழுவினர் அவங்களின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அதிகாரிகள் மெஹக் சடலமாக கிடந்ததைப் பார்த்தனர். மெஹக் கழுத்தில் கத்தியால் காயம் அடைந்ததாகவும், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அக்டோபர் 31, 2023 அன்று நடத்தப்பட்ட சிறப்புப் பிரேதப் பரிசோதனையில், கழுத்தில் குத்தப்பட்ட காயமே மெஹக்கின் மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி, கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் மெஹக்கை கொலை செய்ததாக சாஹல் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் கொலைக்கான காரணத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கும் போது, அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இது ஒரு குடும்பத்தை முற்றிலுமாக சீரழித்த சோகமான வழக்கு. தனது மனைவியைக் கொன்றதில், ஷர்மா தனக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக ஒரு அன்பான மகளின் குடும்பத்தை சீரழித்துள்ளார் ” என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
“மெஹக், எதுவும் ஷர்மாவை அவர்களிடம் திரும்பக் கொண்டு வர முடியாது என்பதை நான் அறிந்திருந்தாலும், இந்த தண்டனை அவளது அன்புக்குரியவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்” என நீதிமன்றத்தில் ஷர்மா கூறினார்.
“எல்லாவற்றையும் விட நான் விரும்பும் ஒன்று என் மகளைத் திரும்பப் பெற வேண்டும், ஆனால் இது சாத்தியமற்றது. எவ்வளவு பிரார்த்தனையோ, பணமோ அல்லது ஆதரவோ அவளை என்னிடம் திரும்பக் கொண்டு வராது. நான் உடைந்து விட்டேன்.
சாஹில் மெஹக்கை மட்டும் கொலை செய்யவில்லை, என்னையும் கொன்று விட்டான்” என்று நீதிமன்றத்தில் கொலைச்செய்யப்பட்ட மெஹக் தந்தை கதறியழுதார்.
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான மனிஷா.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டார் சங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர். சம்பவத்தின் போது, அந்த பெண் லக்னோவில் உள்ள இந்திரா ஏரியில் தண்ணீருக்கு மிக அருகில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
அவர் தனது காதலி மற்றும் உறவினர்களுடன் இளம் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் ரீல்களின் ஆர்வத்தில் அந்த பெண் தண்ணீரில் மூழ்கியபோது, தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உதவி கேட்டு அலறினர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு குழுவினர் தொடர்ந்து பெண்ணை தேடி வருகின்றனர்.
மனிஷா நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மனிஷா தண்ணீரில் மூழ்கும் முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மனிஷாவின் உடலைத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெண்ணிலா (40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் குலதெய்வ கோவில் பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அங்குள்ள மூங்கில் வாழி அம்மன் கோவில் தான் இவர்களின் குலதெய்வ கோவிலாகும்.
இந்நிலையில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு இவர்கள் குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர்.
அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயன்றுள்ளனர்.
இருப்பினும், எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெயில் காலங்களில் குழந்தைகளையும், முதியவர்களையும் தனியே வெளியே அனுப்பாதீங்க. பருத்தியினால் ஆன ஆடைகளையே அணியுங்க. பகல் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு, அவசியமில்லாத நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்க.
காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள்.
ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து வந்த சந்தோஷம், திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே இல்லை என்கிறார்கள். தொடர்ந்து கணவன், மனைவிக்குள் சண்டை நீடித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருமஞ்சிறையை சேர்ந்த முத்துக்குமாருக்கும் சந்திராவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தற்போது சந்திரா திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் படிக்கிறார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி தகராறு ஏற்பட்டு சந்திரா ஊத்துக்குளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கணவர் முத்துக்குமார் தனது மனைவி சந்திராவை கருமஞ்சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாததால், அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குன்னத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்த காரும் முருகனின் காரும் நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களது மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த தம்பதியின் மற்றொரு மகள் நித்திஷா படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நித்திஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த 4 நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பவானிசாகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களின் காரும் கடும் சேதம் அடைந்தபோதும், அவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இதனையடுத்து ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட சிறப்பு பரிசோதனையில் அந்த பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி என்ற அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த மூக்குத்தியின் சிறிய பாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ‘கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நான் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பாகம் உடைந்து காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை.
அது தற்போது நுரையீரலில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது” எனக் கூறினார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ‘அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.
புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றிலிருந்து மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.