வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது!!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (26.04) தெரிவித்தனர்.

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது,

குறித்த வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), திலீப் (61461), திசரட்ட (3419) பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ் விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிதம்பரபுரம் (வயது 35), மதவுவைத்தகுளம் (வயது 35), சிறிராமபுரம் (வயது 34) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அபகரிக்கப்பட்ட மூன்று அரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பறித்து செல்லப்பட்ட மோட்டா ர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதைவிட இரண்டு பென்ரன் மற்றும் மடிக்கணணிகள் என்பனவும் குறித்த மூவரிடம் இருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளது. இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் அரிசி வாங்க சென்று வீட்டை இழந்த குடும்பம்!!!

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வகுகவ்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் நேற்றைய (25) தினம் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த அனர்த்தில் வீட்டின் சொத்துக்கள் அனைத்தும் சேதமாகி அனைத்தும் இழந்த குடும்பம் நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் (25) கணவர் வேலைக்கும் மகள் பாடசாலைக்கும் சென்றிருந்த வேளையில் மனைவி அரசாங்கத்தால் வழங்கப்படும் அரிசியினை பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதன்போது மின்னொழக்கு ஏற்பட்டு வீடு முற்றாக தீக்கிரையாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் கிராம சேவகருக்கும் கம்பளை உடபளாத்த பிரதேச செயலகத்திற்கும் புஸ்ஸல்லாவ பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை.. கதவைத் திறக்க முடியாததால் மூச்சுதிணறி பலியான சோகம்!!

சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே, பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும் அவனது 5வயது சகோதரியும், கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சஜித் முகமது ஷேக் மற்றும் அவரது சகோதரி முஸ்கன் ஷேக் இருவரும் கடந்த ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சியோன் கோலிவாடா, செக்டார் 5, சிஜிஎஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றுள்ளனர்.

தங்களது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையில் ஓரத்தில் பழுதடைந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக் கொண்டனர். உள்ளே ஏறியதும் தானாக கதவு சாத்திக்கொண்டது. திரும்ப கதவைத் திறக்க முயற்சித்து முடியாமல் போயிருக்கலாம்.

காரில் இருந்து வெளியே வர அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதற்கான வியர்வை மற்றும் போராட்ட அடையாளங்கள் கார் கண்ணாடிகளிலும் கதவிலும் இருந்துள்ள நிலையில், குழந்தைகளின் உடல்கள் சில மணிநேரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரியும் குழந்தைகளின் தந்தை மொஹபத் ஷேக் கூறுகையில், “ஜித்தும் முஸ்கானும் அவர்களது தாயார் கூறியதன் பேரில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால், தாயார் அவர்களைத் தேடி வெளியே வந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. என்னை அழைத்ததில் நானும் வீட்டிற்கு வெளியே சென்று குழந்தைகளைத் தேடத் தொடங்கினேன். என்னாலும் அவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அவர்களைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

இரவு 10 மணிக்கு போலீசார் வந்து எங்கள் தெருவிலேயே குழந்தைகளை தேடத் தொடங்கினர். இறுதியில், கைவிடப்பட்ட காரில் குழந்தைகள் கிடப்பதைக் கண்டனர், அந்த கார் வீட்டினருகே விளையாட்டு மைதானத்தின் மூலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

பல நாட்களாக உபயோகமின்றி தூசி நிறைந்து மூடப்பட்டு இருந்தது. காரையும் புதர்கள் சூழ்ந்திருந்ததால், யாரும் அதன் அருகே செல்லவில்லை. “போலீசார் டார்ச் லைட் உதவியுடன் உள்ளே எட்டிப்பார்த்தபோது காரில் குழந்தைகள் கிடப்பதைக் கண்டனர்” என கூறினார். குழந்தைகளின் உடைகள் முற்றிலும் வியர்வையில் நனைந்து வாயில் நுரை தள்ளி இருந்தது.

“நாங்கள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். டாஷ்போர்டு மற்றும் கதவில் உள்ள அடையாளங்களில் இருந்து அவர்கள் காரில் இருந்து அவர்கள் வெளியே வர முயற்சித்தது தெளிவாகத் தெரிந்தது.

சிசிடிவி பதிவுகளில் இருவரும் தாங்களாகவே காரை நோக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்களுடன் வேறு யாரும் காணப்படவில்லை எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

காதலிக்காக வாங்கிய பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்.. நண்பனை சுட்டுக் கொன்ற காதலன்!!

பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம் தேதி கராச்சியின் பாதுகாப்பு கட்டம் 5 பகுதியில் நடந்தது. இதில் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் அலி கெரியோ. அவர் ஒரு செஷன்ஸ் நீதிபதியின் மகன்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் டேனியல். இவர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) நசீர் அகமது மிர்பாஹரின் மகன் ஆவார். சம்பவத்தன்று டேனியல் தனது காதலி ஷாஜியாவை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அன்று அலி கிரேயோவும் தன் தம்பி அஹ்மருடன் டேனியலின் வீட்டிற்கு வந்தான். அப்போது வீட்டில் இருந்த பர்கரை சாப்பிட எடுத்துள்ளார் அலி கெரியோ. இதனால் ஆத்திரமடைந்த டேனியல், தன் காதலிக்கு ஆர்டர் செய்த பர்கரை சாப்பிடுகிறாயா என்று அலி கீரியோவிடம் கோபமடைந்தார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த டேனியல், அங்கிருந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து அலி கெரியோவை சுட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அலி கெரியோஉடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், அலி கெரியோவின் மரணத்துக்கு டேனியல் தான் காரணம் என, உயர் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை அறிக்கை சமர்பித்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள டேனியல் நீதிமன்ற விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இளம்பெண்.. கதறும் தாய்!!!

சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மும்பையில் இருந்து வந்த பெண்ணின் தாயார் மாதுரி மித்ரா, “முகமது புஜைல் – ஹர்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் பெயரை பாத்திமா என மாற்றி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் செய்துள்ளார்.

மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் ஃபுசைல் டிஃபின் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஹர்ஷதா ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. பப்ஜியில் சந்தித்த பிறகு ஃபுசைலும் ஹர்ஷதாவும் நெருங்கி பழகினாலும் அவரின் தாய், இவர்களின் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹர்ஷதாவின் தாயாரிடம், ஹர்ஷதா தன்னை அடித்ததாக ஃபுசைல் குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ஃபுசைலும் தனக்கு போன் செய்து, ஹர்ஷதா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தாகவும்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக ஹர்ஷதாவின் அம்மா கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஹர்ஷதாவின் தாய், மகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அழுது கொண்டே கூறினார்.

இது குறித்து அவரின் தாய், “நான் காட்கோபரில் வசித்து வருகிறேன். என் மகளுக்கு முதல் திருமணம் செய்து சில நாட்களிலேயே விவாகரத்து செய்துவிட்டாள். PUBGல் இருந்த போது ​​ஃபுசைலைக் காதலித்தாள்.

ஆரம்பித்திலேயே இதெல்லாம் ஒத்து வராது எனக் கூறினேன். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. பின்னர் என் மகள் ஃபுசைலை திருமணம் செய்து கொண்டாள் என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறிய போது மருத்துவமனையில் தான் மீண்டும் அவளை பார்த்தேன்.

அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

போதையில் மணமேடையில் வரதட்சணை கேட்டு தகராறு செய்த மணமகன்.. மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர்.

காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன் பணத்தாசைப் பிடித்தவனாக இருந்தால் எப்படியிருக்கும்? மத்தியப் பிரதேச மாநிலத்தில் செஹூரில் மணமகன் வீட்டார் ரூ.15 லட்சம் வரதட்சணை மற்றும் கார் கேட்டதால், மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

அதே நேரத்தில் மணமகனும், அவரது நண்பர்களும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமண கொண்டாட்டத்தில் மணமகனும் அவரது உறவினர்களும் மணமகளின் குடும்பத்தினருடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

மணமகனும் அவரது தரப்பினரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில், தனக்கு வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என்று மணமகன் தகராறு செய்திருக்கிறார்.

திருமண சடங்கின் போது, ​​சடங்குகளின் ஒரு பகுதியாக, மணமகளின் குடும்பத்தினர் ரொக்கமாக ரூ.12 லட்சம் கொடுத்தனர். இந்த பணம் பத்தாது ரூ15 லட்சம் ரொக்கமாக தந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என மணமகன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையில் மணமகள் குடும்பத்தினர் பெரும் குழப்பமும், கவலையும் அடைந்தனர். உடனே மணப்பெண் பெரியா மணமகனின் குடும்பத்தின் பேராசையை தனது குடும்பத்திடம் விளக்கமாக கூறி திருமணம் வேண்டாம் என தைரியமாக முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகனும், அவரது உறவினர்களும் ஆத்திரமடைந்து மணமகளின் தரப்புடன் சண்டையிட்டனர்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையால் மணமகன் குடும்பத்தில் பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு திருமணத்தின் போது குழப்பம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டி, பிரியா தனது தந்தையுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிவாளால் மனைவியின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அடுத்து செய்த விபரீத செயல்!!

ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60). இவரது மனைவி தீப்தி(50). அவர்களுக்கு ஐந்து மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு முற்றிய நிலையில், அடுப்படியில் இருந்த தீப்தியை ஷாஜி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தீப்தியின் தலை துண்டானது. இதன் பின் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஷாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாஜி வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தீப்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். படுக்கை அறையில் ஷாஜி தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து ஷாஜி, தீப்தி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி தீப்தியை, ஷாஜி வெட்டிக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனைவியைக் கொலை செய்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது அசிட் வீசிய இளம்பெண்!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்(26). இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது.

அப்போது மணமகள் போல ஆடை அணிந்து வந்த ஒரு இளம்பெண், திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மணமகன் ராகேஷ் பந்த் மீது வீசினார். இதில ராகேஷ் பிந்த் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த மணமகனின் குடும்பத்தினர், அந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரிய வந்தது. ராகேஷ் பிந்தை தான் விரும்பியதாகவும், அவர் வேறு திருமணம் செய்வதை ஏற்க முடியாததால் ஆசிட் வீசியதாகவும் லட்சுமி கூறினார்.

இதையடுத்து அவரை அடித்து, ராகேஷ் பிந்த் குடும்பத்தினர் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பன்ஸ்டிஹ் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற ராகேஷ் பிந்த், திருமண இடத்திற்கு வந்து மணமகளை திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முல்லைத்தீவு நபர்!!

சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின் தந்தையுமான குணசிங்கம் கசேந்திரன் 07 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர்.

இலங்கையின் மிக உயரமான நபர் தாம் என நம்புவதாக அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். அதோடு தனது உயரம் காரணமாக தாம் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும் சமூகத்தில் தனக்கு கிடைத்த எதிர்வினைகள் குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

“நான் உயரமாக இருப்பதால் இங்குள்ள செருப்புகளை பயன்படுத்த முடியாது. அவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். முச்சக்கர வண்டி சாரதியாக இருப்பதால்,சிரமமாக உள்ளது என்கிறார். அதற்குக் காரணம் அவருடைய உயரம்.

இந்த உயரத்தினால் பேருந்துகளில் பயணிக்கும் போது தான் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாவும் அவர் கூறியுள்ளார். பேருந்தில் நிற்க முடியாது, ஆசனத்தில் உட்காருவதும் சிரமமாக இருப்பதாக குணசிங்கம் கசேந்திரன் கூறுகிறார்.

மேலும் தாம் வாழும் பிரதேசங்களில் தனக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் சிங்களப் பிரதேசங்களில் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார்.

வைத்தியசாலையில் இளம் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி : வைத்தியரின் மோசமான செயல்!!

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் தனது தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை வைத்தியர் போல நடித்து ஏமாற்றி திருடிச் னெ்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

இதன்போது, தன்னை வைத்தியர் எனக் கூறிய நபரொருவர் சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போடுமாறு கூறியுள்ளார்.

அதன்பின்னார் வைத்தியசாலையில் உள்ள கதிரையில் சிறுவனை அமரச் செய்து தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

ஹொரண – வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொரண – வீதியகொட பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபர் ஒருவரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய காணொளி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

காணி தகராறு காரணமாக சந்தேகநபர் இவ்வாறு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபரின் காணியை 60 இலட்சம் ரூபாவிற்கு சில காலத்திற்கு முன்னர் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை 80 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ய ஒருவரை சந்தேகநபர் கண்டுபிடித்துள்ளார்.

இதன்படி குறித்த கொள்வனவாளர் காணியை கொள்வனவு செய்வதை உறுதி செய்து காணிக்கு சொந்தமான சந்தேக நபருக்கு 3 இலட்சம் ரூபாவை முன்பணமாக வழங்கியுள்ளார்.

இதன்பின்னர், 80 இலட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்த நிலத்தை,60 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப் போவதாக, பக்கத்து உயிரிழந்த பெண் காணியை வாங்கியவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, வாங்குபவர், காணி உரிமையாளரை சந்தித்து, அவர் மீது குற்றம்சாட்டி, நிலத்துக்கான முன்பணத்தை மீளப்பெற்றுள்ளார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த காணியின் உரிமையாளர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு செ்ன்று தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத்தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பிரிவு விசேட புலனாய்வுப் பிரிவினரும், மொரகஹேன பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் ATM இயந்திரத்தில் பணம் பெறச் சென்று உறங்கிய வர்த்தகருக்கு நேர்ந்த பரிதாபம்!!

கொழும்பு, நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட விஜேராம சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஏ.டி.எம் இயந்திரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று அட்டையை இயந்திரத்தில் காட்டிய பின், பின் குறியீட்டை சரியாக உள்ளிட முடியாததால், அட்டை இயந்திரத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

அட்டை வெளியே வரும் வரை வர்த்தகர் காத்திருந்ததாகவும், தன்னையறியாமல் அங்கேயே உறங்கிவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் அதிகாலை 5.30 மணி வரை உறங்கியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண் முழித்து பார்த்த போது தனது 2 கையடக்க தொலைபேசிகளும் காணாமல் போயுள்ளது. வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் சீசீடீவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர். அங்கு இருவர் கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழில் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய்!!

யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்று நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யாழில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் விபத்து : ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி : பலர் காயம்!!

முல்லைத்தீவு (Mullaithivu) மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளதுடன் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் சாரதி பார ஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர். இதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி விகிதம் விநியோகம்!!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெறுவதுடன் இதற்காக அரசாங்கம் 4,676,474,300 ரூபாவை செலவிட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம் : பல்பொருள் அங்காடி!!

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (25.04.2024) மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திரவினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

காய்கறிகள், பழவகைகள், சமையலறை உபகரணங்கள், கைவினைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள், தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை நேரடியாக சந்தப்படுத்தும் வாய்ப்பு இவ் அங்காடியின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.