சாம்பார் சமைக்கவில்லையா? தந்தை திட்டியதால் இளம்பெண் விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் மிகச்சிறிய காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த நட்டேஸ் பூஜாரி என்பவர், தனது மனைவி பிரிந்து சென்ற நிலையில், 22 வயதான மகள் கவுசல்யாவுடன் வசித்து வந்தார். தந்தை மற்றும் மகள் இருவர் மட்டுமே அந்த வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, நட்டேஸ் பூஜாரி சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, சமைத்து வைக்குமாறு மகளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

சில மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, கவுசல்யா சமைக்காமல் இருந்ததைக் கண்டுள்ளார். குறிப்பாக, சாம்பார் வைக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைக் கடுமையாகக் கண்டித்துத் திட்டியுள்ளார்.

தந்தையின் வசவுச் சொற்களால் மிகுந்த மனவேதனை அடைந்த கவுசல்யா, அவர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார், கவுசல்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு சிறிய குடும்பத் தகராறு மற்றும் சாம்பார் வைக்காதது போன்ற எளிய காரணத்திற்காக ஒரு இளம் உயிர் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தத்தைக் கையாளும் திறன் குறைந்து வருவதையும், மிகச்சிறிய விமர்சனங்களைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.

குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான உரையாடலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையும் இத்தகைய விபரீத முடிவுகளைத் தடுக்க உதவும்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர்கள் அனைவரும் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் அதிகாலை 5.30 மணி அளவில் அவர்களுக்குத் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அப்துல்லாவின் இளைய மகள் ஷைனப் முதலில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அப்துல்லாவின் மனைவி நஸ்ரீன் மற்றும் மூத்த மகள் ஆயிஷாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அன்றே இரவில் அப்துல்லாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் சில மணி நேர இடைவெளியில் மரணமடைந்தது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுடன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், தர்பூசணி சாப்பிட்ட அப்துல்லா குடும்பத்தினர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தர்பூசணி பழம் விஷத்தன்மையாக மாறியிருக்கலாம் அல்லது உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த பயத்தையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து பாடசாலைப் பேருந்து : 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்!!

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடுமையாகக் காயமடைந்துள்ள 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைப்பதால் இத்தனை நன்மைகளா?

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுதும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

குறிப்பாக காலை வேளையில் ஆரோக்கியமான பழக்கங்களை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. காலையில் தினமும் ஒரு ஆரோக்கியமான பானத்தைப் பருகுவது மிக அவசியமாக கருதப்படுகின்றது.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிக்கும் பழக்கம், தற்போது மிகவும் பிரபலமான ஒரு ஆரோக்கியப் பழக்கமாக மாறி வருகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்ற எலுமிச்சை நீர் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கும்போது, ​​கல்லீரலின் செயல்பாடு தூண்டப்படுவதோடு,

உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளும் வேகப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, சருமம் தெளிவானதாகவும், பொலிவுடனும் திகழ்கிறது.

வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் (அமிலத்தன்மை) அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகளால் நீங்கள் அடிக்கடி அவதிப்படுபவர் என்றால்,

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் உங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். இது செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை விரைவாகச் செரிமானம் செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கூடுதல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு, இது ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக அமைகிறது.

எலுமிச்சை நீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்கச் செய்து, கொழுப்பை எரிக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது. இதைத் தினமும் தவறாமல் பருகி வரும்போது, ​​காலப்போக்கில் உடல் எடை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் C சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

சளி, இருமல் மற்றும் பல்வேறு வகையான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இது உதவுவதோடு, உடலை உள்ளிருந்தே வலிமையாகவும், உறுதியாகவும் மாற்றுகிறது. சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது

 

யாழில் நிதிமன்றம் சென்ற குடும்ப விவகாரம் : வீதியில் கணவன் அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி!!

யாழில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மறைந்திருந்த கணவன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து இருவர் மீதும் கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

79 வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர்!!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 79 வயதான திலக மாலனி ஜெயரத்ன என்ற மூதாட்டி 18ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தாயை பாலியல் சீண்டல் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காதை வெட்டி, இரண்டு தங்கக் காதணிகளும் திருடப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 67 வயதான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் காதை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தியும், அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகளும், கிரிந்திவெலயில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பில் நடந்த பயங்கரம் : வெளிநாட்டிலுள்ள தமிழ் கும்பல் ஒன்றின் மோசமான செயல்!!

கொழும்பில் 19 வயது இளைஞனை கடத்தி, கழுத்தை நெரித்து களனி ஆற்றில் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான பழனி ரிமோஷன் மற்றும் கொட்டஹேன அரவிந்த ஆகிய இருவரே திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர், கொழும்பு 14, புளூமண்டல் வீதியில் வசிக்கும் ஸ்ரீ கந்தன் பாத்திக்குமார் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் 22ஆம் திகதியன்று காரில் இளைஞரைக் கடத்தி, மட்டக்குளியிலுள்ள களனி ஆறு-தெல்கஹவத்த சந்திப்புக்கு அருகிலுள்ள ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று, கழுத்தை நெரித்துக் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்து ஜயவர்தனபுர முகாம் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாமுனுகம, பெலியகொட மற்றும் வெள்ளம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள், கொழும்பு 15 வந்திய உயான, மட்டக்குளிய மற்றும் புதுகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். இவர்கள் 23 முதல் 36 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 23 கிராம் ஐஸ், 750 மில்லிகிராம் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேராவின் அறிவுறுத்தல்களின் பேரில், மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பாசிரியர் டி.ஜி. குணரத்ன உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும் இலங்கை ரூபா!!

இலங்கை ரூபாவுக்கு எதிராக நேற்றையதினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322 ரூபாயை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை 321.87 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று 322.27 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல், வெள்ளிக்கிழமை 314.03 ரூபாவாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை, நேற்று 314.57 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 1.8 சதவீதம் சரிந்துள்ளது.

 

தங்கத்தின் விலையில் மாற்றம் : இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28.04.2026) சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்க பவுணொன்று நேற்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் குறைவடைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (28.04.2026) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியிருந்தது.

அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.

வெளிநாடொன்றில் இரு தொடருந்துகள் மோதி பயங்கர விபத்து : 14 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடருந்து இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும்

பெகாசி திமூர் தொடருந்து நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் தொடருந்து மீது மற்றொரு விரைவு தொடருந்து மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த 80இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் சடலமாக மீட்பு!!

வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று இரவு குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிசுவை 50000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்!!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில்நேற்றைய தினம் 25.04.2026 ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தருமபுர பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலும் தெரிய வருகையில்,

தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் விற்பனை செய்வதாகவும் கூறி உள்ளனர்.

இருப்பினும் அவர்களிடம் தற்பொழுது இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது தற்பொழுது விற்பனை செய்யப்பட்ட குழந்தை இவர்களுடையதா அல்லது வேறு யாருடைய குழந்தையா என மேலதிக விசாரணைகளை தர்மபுற பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஆண் ஒருவரும் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேக் பூசியதால் ஆத்திரம் : பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பறிபோன மூன்று உயிர்கள்!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், உத்தரப்பிரதேசம் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில் நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் நடைபெற்ற போது,

அவரது நண்பர்களான அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகியோர் விளையாட்டாக ஜீதுவின் முகத்தில் கேக் பூசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறுக்குப் பின்னர் அங்கிருந்து சென்ற ஜீது சைனி, சிறிது நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து நண்பர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இதில் மூன்று நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த அமர்தீப்பின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கிளிநொச்சியில் மகனை காணாது தேடிய தாய், தந்தைக்கு காத்திருந்த துயரம் : 19 வயது இளைஞனின் விபரீத முடிவு!!

கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவமானது நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர். எனினும் தமது மகன் நண்பர்களுடன் சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரியவருகின்றது. இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு உடனடியாக ஊரவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தாமதமாகவே பொலிஸார் அங்கு சென்றதாகவும், தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் துயரம் : விளையாட்டு வீரர் விபரீத முடிவு!!

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது.

இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த குறித்த இளைஞன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை.

தமிழர் பிரதேசங்களில் விபரீத முடிவால் பலியாகும் இளையோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்து வருகின்றமை சமூக ஆர்வலர்கள் இடியே கவலையை தோற்றுவித்துள்ளது.

 

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல் : வரப்போகும் புதிய மாற்றம்!!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகள் (Digital Motor Insurance Cards) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் இலங்கை காவல்துறையினர் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வாகனக் காப்புறுதி சேவைகளை நவீனமயமாக்குவதற்கும், வாகன உரிமையாளர்களுக்குக் காகிதமற்ற (Paperless) இலகுவான நடைமுறையை வழங்குவதற்கும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பதிப்புகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் (Environmental Sustainability) பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.